Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Verse
கவிதை

மறுமையில் ஏது…?


பலமுறை கண்களில் பட்டதனால்
நெஞ்சம்
“தீ”யென ஆகிப்பற்றியதே…
நல்லவர் என்னும் போர்வையினுள்ளே
தீயோர்
வாழ்வதை எண்ணிப் பாடுகிறேன்…

ஒரு முறைதான் இவ்வுலகென்று தெரிந்தும்
பாவிகள்
பல முறை பாவங்கள் செய்வது ஏனோ?

தொழுவது கூட சுமையென எண்ணி
வாழ்வதும் ஒரு சுகமா…?
தர்மத்திலேது சுகந்தமென்று
இரு கரங்களை மூடுதல் நியாயமா?

வறுமைக்குப் பயந்தாய்
தருமத்தை மறந்தாய்…
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?,
மனிதா!
மார்க்கத்தை மறந்தாய்
கடமையைத் துறந்தாய்
சொர்க்கத்தை அடைதல்
இலகென நினைத்தாயோ?

சொகுசினில் மிதந்தாய்
கருணையைத் தொலைத்தாய்
கொடுமைகள் இழைத்தாய்…
மானுட மதிப்பென்ன அறியாயோ?

உண்மையை மறைத்தாய்
உயர் மார்க்கத்தை மறந்தாய்
இப்படியே (நீ) இறந்தால்
மறுமையில் ஏது பண்ணிடுவாய்…?

-ஜுமானா ஜுனைட், இலங்கை.




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p856.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்