பொன் குலேந்திரன்

இலங்கை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் பரியோவான் (St John’s College) கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்று, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறையில் சிறப்பு பட்டம் பெற்றவர். இலங்கை தபால் தந்தி திணைக்களத்தில் சிரேஷ்ட அத்தியட்சகராக கடமையாற்றி, அதன் பின்னர் துபாய், அபுதாபி, சார்ஜா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொலை தொடர்புத் (Telecommuniqatiuons and Marketing) துறையில் சிரேஷ்ட பொறியியலாளராக வேலை செய்தவர். பின்னர் கனடா “டெலஸ்” (Telus) தொலைதொடர்பு ஸ்தாபனத்தில சிரேஷ்ட முகமையாளராகக் (Senior Manager) கடமையாற்றி ஓய்வு பெற்றவர்.
கனடா குடியுரிமை பெற்ற இவர் தற்போது கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் வசித்து வருகிறார். பத்து வயது முதற் கொண்டே எழுதத் தொடங்கியவர். “குவியம்” என்ற இணையத்தள சஞ்சிகையை நடத்திய இவர் கனடா, ஒன்றாரியோ மாகாணத்தில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கு நல்லூரான், விஸ்வாமித்திரன், பொன், சாணக்கியன் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவருகிறார். பீல் மிசிசாகா, முது தமிழர் சங்கத்தில் ஐந்து வருடங்கள் தலைவராக இருந்த இவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி வருகிறார்.
ஆங்கிலத்தில்
1. Short Stories from Sri Lanka,
2. The Dawn (Novel)
3. Sufferings of Innocent Souls ( Stories on HR Violations in Sri Lanka)
4. Hinduism a Scientific Religion
5. Strange Relationship
ஆகிய நூல்களையும்,
தமிழில்
1. விசித்திர உறவு (சிறுகதைத் தொகுப்பு)
2. அழகு (சிறுகதைத் தொகுப்பு)
3. அருவி (கவிதைகள்)
4. வளரும் வணிகம் (சந்தைப் படுத்தல்)
5. அறிவுக்கோர் ஆவணம் (கட்டுரைகள்)
6. கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
இவரது “முகங்கள்” எனும் 21 கதைகள் அடங்கிய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.
கதை - சிறுகதை

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.