இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஜோதிடம்
பொதுத் தகவல்கள்

இருபத்தியேழு நட்சத்திரங்களில் சுரம் ஏற்பட்டால் மருந்து இல்லாமல் அவற்றின் பலன்கள்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


தொடர்ச்சி... (2)

ஆயில்யம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பதாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபது நாட்கள் இருக்கும். மூன்றாம் பாதமாகில் இருபது நாட்கள் சென்று குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஒரு மாதம், ஆறு நாட்கள் சென்ற பின்பு தான் குணமாகும்.

“ஆயில்ய முதற்சுரமே யொன்பதானா ளடுத்திரண்டு மிருபதுநா ளாகுமென்ப
மேகியமூன் றருபதுநாள் சுத்தமாகும் மேவுகால் நாலுக்கு மெய்யே சொன்னோம்
தோகையே சொல் மாதமொன்று நாளுமாறு சொல்லு நாளிதுசுகமே சுத்தமென்க
ஆகமுடன் சொல்லியது சுரத்தின்மாலை யடவிதனை யறிந்தறிந்து ஆய்ந்துகொள்ளே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

மகம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஆயுளைப் போக்கும். இரண்டாம் பாதத்தில் இருபது நாட்கள் இருக்கும். மூன்றாம் பாதமாகில் எண்பத்தைந்து நாட்கள் சென்ற பின் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐந்தாவது நாள் தீரும்.

“மகத்திடையீர் முதற்காலே மரிக்குமிரண்டா வதுதானே யிருபதுநாள் வாறுமென்க
இகத்துடையீர் கால்மூன்றுக் கெண்பத்தஞ்சு தினமானால் விடுக்கும் நாலுதானே
சுகத்துடனே அஞ்சானாள் சுத்தமாகும் சொல்லுமென முந்நுாலின் தொகுதிகாண்க
முகத்துடையீர் வதனமலர் மாதேகண்ட முறையில்வரு மறையிலிது முயன்றநாளே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

பூரம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் இருபத்தைந்தாவது நாள் தீரும். மூன்றாம் பாதமாகில் முப்பத்தாறாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் எண்பத்தொன்று நாட்கள் சென்ற பின் தான் குணமாகும்.

“பூரமதில் வெப்புதிக்கில்முத்தக்கால் சாவாம்
பொறுத்திரண்டு மிருபத்தஞ்சுநாளே செல்லுந்
தீரமுள்ள மூன்றேகால் முப்பத்தாறு
தினமாகிவிடுமிதனைத் தேர்ந்து கொள்க
பாரமுட னாலாங்கா லெண்பத்தொன்று
பத்தியநோ யதுதீரும் படியே சொன்னோம்
நாரணியாள் கேட்டருள அரனே சொல்ல
நட்சத்திர ரமாலை நாடுங்காலே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.


உத்திரம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் எட்டாவது நாளில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் ஐம்பத்திரண்டாவது நாள் தீரும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளியைக் கொல்லும்.

“உத்திரநாள் முதற்பாதம் நாளெட்டாகும்
முடனிரண்டு இருபதுநாள் செல்லுமென்க
அத்திரமே மூன்றேகா லன்பதாகு
மதனொடு நாளிரண்டு மானதேகாண்
குத்திரமா நாலாங்கால் குணமேயில்லை
சொல்லுமிது சுரமீறில் கோதையகே
ளத்தனுரை செய்திடவே உமையாள்கேட்ட
யாயுள்மறை யின்பயனை யறிவதாமே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

அஸ்தம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் தீர எட்டு மாதங்களாகும். இரண்டாம் பாதத்தில் இருபத்தைந்தாம் நாள் தீரும். மூன்றாம் பாதமாகில் இருபத்தெட்டு நாட்கள் சென்ற பின் தான் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐம்பத்திரண்டு நாட்கள் ஆகும்.

“அத்தத்தில் தோன்றுசுர முதற்காலெட்டு
மாசசெல்லு மிருபதாமஞ் சேனாளுகுஞ்
சுத்தமுள்ள மூன்றாங்கா லிருபத்தெட்டு
செல்லுகுண மாமீது சுரமேநல்ல
நற்றநிழால் நாலாங்கா லன்பத்திரண்டு
நாட்சென்று விட்டுவிடும் நாரிகேளாய்
சுத்தமு டனுரைத்த சுர நுால்மாலை
சொல்லியநாள் முறைமீறாத் தொகுதியாமே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

சித்திரை நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் அது ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினைந்து நாட்களாகும். மூன்றாம் பாதமாகில் நாற்பத்திரண்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியொன்பது நாளில் தான் தீரும்.

“சித்திரைசேர் பாதமுத லொன்பதேநாட்
சொல்லுமிரு காலுக்குப் பதினைந்தாகும்
பத்தியுடன் மூன்றேநாற் பத்திரண்டு
பண்புடனே சொல்லுநாள் பார்த்துச் செல்லி
மெத்தநலம் நாலாங்கால் நாற்பத்தொன்
பதுமீ றாறுகுண முண்டாய்விடு
மெய்யெனவேற் கணமாதே கேளாயென்று
விமலருரை சுரநுாலின் வேதமாமே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.


சுவாதி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் பன்னிரண்டாவது நாள் தீரும். இரண்டாம் பாதத்தில் அது பிணியாளியைக் கொன்று விடும். மூன்றாம் பாதமாகில் நாற்பத்தெட்டு நாட்கள் சென்ற பின் தான் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் பன்னிரண்டாவது நாளில் தீரும்.

”சோதிநாட் முதற்பாதம் பனிரண்டே
நாட்சொல்லு மிருகால்மரிக்குமென்க
மேதினியில் முப்பதாம் பதினெட்டேநாள்
விடுசுரமே தப்பாது விளம்பினோம்காண்
ஆதியே நாலாங்கால் பனிரண்டேநா
ளாறிவிடு வெப்பகலு மாதலால் நீ
நீதிசே ருமைதானே உரைத்தநாளே
நெறியுடனே சேர்ந்தறிந்த நீதிதானே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

அனுடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளி இறப்பான். இரண்டாம் பாதத்தில் இரண்டாவது மாதம் தீரும். மூன்றாம் பாதமாகில் தொண்ணுாறு நாட்களில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்திரண்டாவது நாளில் தீரும்.

கேட்டை நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளி இறப்பான். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் தீரும். மூன்றாம் பாதமாகில் முப்பத்தொன்றாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் எண்பத்தியிரண்டாவது நாளில் தீரும்.

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது. ”அனுடமுதற் கால்மரிக்கு மிரண்டிருமதாகு
மன்புடனே மூன்றாங்கால் தொண்ணுாறாறு
மனுவுடையீர் சதுர்பாத மிருபத்திரண்டு
மறுமே சுரமதுவு மானே கேளாய்
தனுவான கேட்டைமு தற்கால்சாவாம்
தனித்திரண்டு மிருபதுநாட் சாந்தமாகும்
பனுவாலாய மூன்றாங்கால் முப்பத்தொன்று
பார்நாலு காலெண்பத் திரண்டு மென்பதாமே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

மூலம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் மூன்று நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் பத்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஏழாவது நாளில் குறையும்.

பூராடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் நோயாளியை மரிக்கச் செய்யும். மூன்றாம் பாதமாகில் பத்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஐந்தாவது நாளில் தீரும்.

“மூலமுதற் கால்மரிக்கு மிரண்டாம்பாத
மூன்றுநா ளில்விடு மூன்றாங்காலே
நானாட்பத் துசெல்லு நாலாம்பாதம்
சத்தகமா னாட்சென்று சாந்தமாகு
மால்விழியாய்ப் பூராட மாகியநாள்
முற்பக்க மொன்பதாகுங்
கால்மரிக்கு கொல்விரண்டாங் மூன்று கூறியநாள்
பத்தில்விடும் நாலாங்கா லஞ்சுசென்றே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.


உத்திராடம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழு நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் இருபதாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் முப்பதாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியிரண்டாவது நாளில் தீரும்.

திருவோணம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் பதினோறாம் நாள் தீரும். இரண்டாம் பாதத்தில் பத்தாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் எட்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் ஆயுளைப் போக்கும்.

“உத்திராட முதற்கால்சத் தனாளா முதித்திரண்டு
மிருபதுநாள் மூன்றுமுப்பதே சொல்லும்
பத்தியிராய் நாலுக்கு நாற்பத்தி ரண்டுபாங்
காகுந்திரு வோணம்முதற் கால்பதினோர்நாள்
சுத்தியிரா யிருகாலில் பத்தே செல்லும்
சொல் மூன்றாங் காலுக்கு எட்டேசொன்னாய்
மெத்தீராய் நாலாங்கால் மரிப்பதாகும்
மெய்நுாலின் படியிதனை விளம்புவோமே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

அவிட்டம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஒன்பது நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினைந்தாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் இருபத்தியிரண்டாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியொன்பது நாளில் தீரும்.

சதயம் நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதம், இரண்டாம் பாதம் ஆக இரண்டிலும் சுரம் ஏற்பட்டால் பதினொன்றாம் நாளில் தீரும். மூன்றாம் பாதமாகில் பதினைந்தாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் இருபத்தியிரண்டாவது நாளில் தீரும்.

“நீலமவிட் முதற்சுரநா ளொன்பதாகும்
நேரிருகால் பதினஞ்சு மூன்றாங்காலே
விதப்படியே மிருபதுவு மிரண்டுநாளே
மீறாதே நாலாங்கா லிருபத்தொன்பதேகேள்
பதத்துடைய சதையமுதற் பதினொன்றேசொல்
பலமிரண்டிற் பதினொன்றா நாளதாகும்
மிதப்படியே மூன்றுமேவே ழெட்டேசெல்லு
மீறாது நாலுங்காலிருபத்து ரெண்டுமாமே.

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

பூரட்டாதி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் நோயாளியைக் கொல்லும். இரண்டாம் பாதத்தில் பதினாறு நாட்களில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் எழுபத்தொன்றாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நாற்பத்தியொன்றாம் நாளில் தீரும்.

உத்திரட்டாதி நட்சத்திரம்

இந்த நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்தில் சுரம் ஏற்பட்டால் ஏழு நாட்களில் தீரும். இரண்டாம் பாதத்தில் பதினெட்டாவது நாளில் குணமாகும். மூன்றாம் பாதமாகில் ஏழாவது நாளில் குணமாகும். நாலாம் பாதத்தில் சுரம் ஆரம்பித்தால் நோயாளி பிழைக்க மாட்டான்.

“பூரட்டா திமுதற்கால் மரிப்பதாகும்
பொருந்திருகால் பதினாறில் தீரும்
நேரிட்ட மூன்றுக்கெழு பத்தோர் நாளாகிற்
செயமே நாற்கால் நாற்பத்தொன் றேதீருஞ்
சீரிட்ட உத்திரட்டாதி முதற்காலேழில்
செல்லுமிரு கால்பதினெட் டில்தானாகும்
சேரிட்ட திரிவிதக்கா லேழில் தீர்ந்து
செல்லும்நாற் கால்மரிப்ப தென்றுநுாலே”

எனும் பாடல் இதனை மெய்ப்பிக்கின்றது.

தொடரும்


*****




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/astrology/general/p55a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License