இரு மாத்திரை கொண்டது. இது இலகு இரண்டு கொண்டது. நிமிடம் அறுபத்து நாலு கொண்டது.
இது சூரியனைச் சுற்றியோடும் கிரகத்தில் ஒன்று. எல்லாக் கிரகங்களினும் பெரிது. இஃது அவ்வளவு பெரிதாயினும் நமக்கு அதிக தூரத்தில் இருப்பதால் பிரகாசமுள்ள ஒரு நட்சத்திரம் போல் காணப்படுகிறது. இது சூரியனை ஒரு முறை சுற்றி வர 12 வருடமாகிற படியால் ஒரு ராசியை ஒரு வருட கால வரையில் கடந்து செல்லுகிறது. இதற்கு, 4.5, உபகிரகங்களுண்டு. இதனைப் பிரகஸ்பதி, குரு என்று கூறுவர். கர்ப்பாதான முதலிய கிரியைகளைச் செய்வித்து ஜீவனோபாயத்தைக் கற்பிப்பவன். (மநு-அத்-1.)
வியாழன் பெயர்
பிரகஸ்பதி, வியாழன். அடிகள், அத்தன், ஆசாரி, ஆசான், ஆத்தன், ஆரியன், இறைவன், ஈசன், ஐ, ஐயன், கடவுள், குரவன், கோமான், சாமி, தலைவன், தீர்த்தன், தேசிகன், பகவன், பட்டாரகன், பண்ணவன், பதி, புங்கவன், பெருமான். குரு, வருடம், வியாழன். பிருகஸ்பதி, வியாழம். அடிகள், அத்தன், ஆசாரி, ஆசாஆத்தன், பட்டாபண்ணவன்.
அந்தணன், அமச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிகன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வ மந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன், மறையோன், வேதன், ஆக 18.