இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுவர் பகுதி
கட்டுரை

மனித உரிமைகள்

முனைவர் கு. சிதம்பரம்


மனித உரிமைகளைப் பற்றிய அறிவும் ஆய்வும் இன்றையக் காலத்தின் கட்டாயமாகும். ஒரு மனிதன் தன்னுடைய உரிமைகளைப் பற்றித் தெரிந்து கொள்வதன் மூலம் மற்றவர்களின் உரிமைகளை மதிக்கக்கூடியவனாக மாறுகிறான். “மனித உரிமை (Human Rights) என்பது தன்னுடைய திறமையை வளர்க்கவும், வெளிப்படுத்தவும், வாழ்க்கையில் பொருளாதார மேம்பாடு அடையவும், இயற்கையின் வளம் மற்றும் செல்வங்களை நாட்டின் சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு நேர்மையான முறையில் அனுபவிக்கவும், கண்ணியமாக, அமைதியாக வாழவும் மனிதன் தன்னகத்தே பெற்ற தனித்தன்மையாகும்”

மனித பரிணாமத்தின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவனுடைய உரிமைகள் மறுக்கப்பட்டும் மீறப்பட்டும் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற நாடு பிடிக்கும் மற்றும் பொருளாதாரப் போட்டிகளால், உலக நாடுகள் இரு பெரும் போர்களைச் சந்தித்தன. இவ்வுலகப் போர்களினால் உலக நாடுகளின் அமைதி சீர்குலைந்தது. பல நாடுகளின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டன. மனித உரிமைகள் அத்தனையும் மறுக்கப்பட்டு மீறப்பட்டு பல இலட்சம் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதன் விளைவாக 1945 ஆம் ஆண்டு உலக நாடுகளிடையே அமைதியை ஏற்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும், உலக நாடுகளின் பொதுச் சபை அல்லது ஐக்கிய நாடுகளின் சபை (United Nations) அமெரிக்காவின் அன்றைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட், இங்கிலாந்தின் அன்றைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், ரஷ்யாவின் அன்றைய அதிபர் ஸ்டாலின் ஆகிய பெரும் தலைவர்களின் முயற்சியால் நிறுவப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் இருந்து வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ளது.



இன்றைய காலக்கட்டங்களில் மனித உரிமை மீறல்கள் பல்வேறு உருவங்களிலும் வடிவங்களிலும், செயல்களிலும் காணப்படுகின்றன. அவை:

* தீவிரவாதச் செயல்களால் ஏற்படக்கூடிய கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், விமானக் கடத்தல், வெடிகுண்டு வைத்தல் மற்றும் இதனால் ஏற்படும் உயிர்ச்சேதம், பொருள் சேதம்

* அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் சுரண்டல், இலஞ்சம். இதனால் பொதுமக்களின் பொருளாதார மேம்பாட்டில் பின்னடைவு.

* காவல்துறை அதிகாரிகளின் அத்து மீறல்கள், அராஜகம், கற்பழிப்பு, சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்துதல்.

* சாதி, மதம், இனம், மொழி , நிற வேறுபாடுகளால் ஏற்படும் வன்முறைகள், படுகொலைகள்.

* கருக்கலைப்பு, சிசுக்கொலை, பெண்கல்வி மறுத்தல், சிறுவர் சிறுமியரை வேலைக்கு அமர்த்துதல், விபச்சாரத்தில் ஈடுபடுத்துதல், பிச்சை எடுக்க வைத்தல்.

* மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை என்ற பெயரில் நோயாளிகளின் சிறுநீரகத்தைத் திருடுதல், தவறுதலான அறுவைச் சிகிச்சைகள், தவறுதலான மருந்து மாத்திரைகளைக் கொடுத்தல்.

* கல்வி நிலையங்களில் பகடி வதை, கேலி செய்தல், சார்புத் தன்மை, பாராபட்சம்.

* பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினரைக் கொடுமைப்படுத்துதல், அவர்களின் புராதன அறிவான இசை, மருத்துவம், நாட்டுப்புறக் கலைகள் ஆகியவைகளைத் திருடி தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளுதல்.

* சட்டம் என்ற பெயரில் தூக்குதண்டனை வழங்கி மனித உயிர்களைப் பறித்தல்

என்பது போன்ற மனித உரிமை மீறல்கள் பெரும்பாலான நாடுகளில் நாள்தோறும் அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. இத்தகைய மனித உரிமை மீறல் செயல்கள் தனிமனித வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. ஒட்டுமொத்த மனித சமூகத்தின் வளர்ச்சியினையும் பாதிக்கின்றன.


ஆகவே, மனிதச் சமூகத்தை இத்தகைய தீயச் செயல்களில் இருந்து காப்பாற்றுவதற்காக 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள், உலக நாடுகளின் மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration of Human Rights) ஐக்கிய நாடுகளின் சபையால் ஏற்படுத்தப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகின்றது. அதன் காரணமாக, ஐ.நா சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும் இந்தச் சட்டத் திட்டங்களை மதிக்கவும் செயல்படுத்தவும் கடமைப்பட்டவைகளாக உள்ளன. ஆகையால் 1993 ஆம் ஆண்டு இந்தியாவில் மனித உரிமை ஆணையம் (National Human Rights Commission) இந்திய அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டு நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

அகில உலக மனித உரிமை பிரகடன உடன்படிக்கையில்,

1. குடிமை மற்றும் அரசியல் உரிமைகள்

2. பொருளாதார, சமூக, பண்பாட்டு, உரிமைகள்

ஆகிய இரு பிரிவுகளின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட தனிமனித மற்றும் குழுக்களின் அடிப்படை உரிமைகளைக் கீழ்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றது.

I. தனிமனிதனுக்கு உரிய உரிமைகள் (Individual Rights)

அ) குடிமை உரிமைகள் (Civil Rights)

உயிர்வாழ்வதற்கான உரிமை, சட்டத்தின்முன் சமமாக நடத்தும் உரிமை, தேசிய இனத்திற்கான உரிமை, நீதி மன்றத்தை அணுகுவதற்கான உரிமை, குற்றமற்றவர் என நிரூபிக்க உரிமை, இலவச சட்ட உதவிக்கான உரிமை, குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் விசாரணை நடத்தவும், அவரே எதிர் வாதாடவும் உள்ள உரிமை, மதம் மற்றும் அரசியல் நம்பிக்கைகள் கொண்டிருக்க உரிமை, கௌரவமும் நற்பெயரும் காக்கப்படுவதற்கான உரிமை மற்றும் பல.

ஆ) அரசியல் உரிமைகள் (Political Rights)

கருத்துகளை வெளியிட உரிமை, கூட்டம் கூடுவதற்கான உரிமை, சங்கத்தில் சேர்வதற்கான உரிமை, வாக்களிப்பதற்கான உரிமை, அரசியலில் பங்கேற்புக்கான உரிமை, பொதுப் பணிகளில் சம வாய்ப்பு பெற உரிமை மற்றும் பல.

இ) பொருளாதார, சமூக (ம) பண்பாட்டு உரிமைகள் (Economical,Social and Cultural Rights)

வேலைக்கான உரிமை, வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமை, சொத்து வைத்திருப்பதற்கான உரிமை, கல்வி பெறுவதற்கான உரிமை, குடும்பம் அமைத்துக்கொள்வதற்கான உரிமை, சமூகப் பாதுகாப்புக்கான உரிமை, ஆயுள் காப்பீட்டுக்கான உரிமை, சமூக மருத்துவ உதவிப் பெறுவதற்கான உரிமை, அறிவியல் முன்னேற்றங்களின்பலன்களை அனுபவிக்க உரிமை, சுகாதாரப் பாதுகாப்பு உரிமை மற்றும் பல.


II. குழுக்களின் உரிமைகள் (Workers Rights)

ஆண்,பெண் இருபாலருக்கும் சமமான ஊதியத்திற்கான உரிமை, தொழிற்சங்கங்களை அமைப்பதற்கும், சங்கங்களில் சேர்வதற்குமான உரிமை, போராட்ட உரிமை, சம்பளத்துடன் கூடிய விடுப்புக்கான உரிமை, நியாயமான ஊதியத்திற்கான உரிமை, வரையறுக்கப்பட்ட வேலை நேரத்திற்கான உரிமை (வாராந்திர ஓய்வுக்கான உரிமை), பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்னறிவிப்பு பெறும் உரிமை, பதவி உயர்வில் சம வாய்ப்பும், பாதுகாப்பான, சுகாதாரமான சூழலில் பணியாற்றுவதற்கான உரிமை மற்றும் பல.

III. பழங்குடி மக்களின் உரிமைகள் (Indigenous people’s Rights)

வாழ்வுரிமை, தேசிய மற்றும் பண்பாட்டு அடையாளத்திற்கான உரிமை, வசிப்பிட உரிமை, பொருளாதார மற்றும் நாகரீக முன்னேற்றம் அடைவதற்கான உரிமை, இயற்கை வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான உரிமை, கலை, பண்பாடு, மருத்துவம், இசை போன்ற புராதன அறிவுகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை, அவர்களின் தாய்மொழியைப் பயன்படுத்த உரிமை, கல்வி உரிமை மற்றும் பல.

உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இன்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியா போன்ற ஜனநாயக நாடுகள் அவற்றில் வெற்றியும் கண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் நாளை மனித உரிமைகள் நாளாகவும், உலக நாடுகள் முன்னெடுக்கின்றன. மனித உரிமைகள் குறித்தான விழிப்புணர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் கல்வி நிலையங்கள், தன்னார்வ அமைப்புகள், ஊடகங்கள் ஆகியன முக்கியப் பங்காற்றி வருகின்றன. மனித உரிமைகளுக்குக் குரல் கொடுப்போம்! மனித வளத்தைக் காப்போம்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/essay/p11.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License