இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
தொடர் கதைகள்

துரத்துவது யார்?

பாரதி தேவராஜ்


2. எழுத்தாளராக ஆசை

சுந்தர் அந்த பெரிய மாமிச மலை போன்ற மனிதனைக் கண்டதும் பயந்து விக்கிப் போய் நின்றான்.

“ஏய் இங்க வந்த பையன் எங்கே?” என்று அலறினான்.

பயத்தில் வார்த்தைகள் வாயிக்கு வராமல் பாத்ரூமை நோக்கிப் பார்வையை வீசினான். அதற்குள் அந்தப் பையன் டிரவுசரை தூக்கி பட்டன்களை மாட்டியபடி வெளியே வந்தான். அவனைப் பார்த்ததும் அந்த பயங்கர மனிதன் தன் சிவந்த முட்டைக் கண்கள் உருட்டியபடி, “இங்கே என்னடா பண்ற கேடி?” கர்ச்சித்தான்.

அந்தப் பையனோ கொஞ்சம் கூட பயப்படாமல், “ஒண்ணுக்கு அவசரமா வந்துடுச்சு போகமலிருக்க முடியலே” என்று சொல்லிவிட்டு டிரம்ஸைத் தூக்கித் தோளில் மாட்டிக் கொண்டான்.

“ஓகோ பெரிய துரை லாட்ஜ் ரூம்லேதான் ஒண்ணுக்கு போவாரோ. ரோட்டோரமா இருக்க வேண்டியதுதாண்டா. உங்களையெல்லாம் கொண்டாந்து சேத்தரதுக்குள்ளே இருக்கு நடநட.” -என்று பிட்றியைப் பிடித்துத் தள்ளாத குறையாய் நகர்த்திக் கொண்டு போனான்.

அவன் நகர்ந்ததும் சுந்தர் மெல்ல கதவில் எட்டிப் பார்த்தான். குண்டன் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். டிரம்ஸைத் தூக்கிய சிறுவன் டிரவுஸர் பட்டனை சரி செய்வது போல தயங்கிபடி நின்றான்.

அவன் தயங்கியதைக் கண்டதும் மீண்டும் மீன் நழுவி விடக்கூடாதே என்று, “ஏண்டா பயலே?”

“டிராயர் பட்டன் எட்டமாட்டிங்குதுய்யா”.

“எட்டாதுரா”.

“எட்டு எட்டு எட்டிருச்சு” என்றவன் சுந்தரைப் பார்த்து,“எட்டுமணி” என்று கத்தினான்.

அதற்குள் அந்த பெரிய ஆள் கீழே இறங்கியிருந்தான். மேலும் நிற்காமல் விடுவிடு என அந்த பையனும் இறங்கிப் போய்விட்டான்.



வாத்தியக் கோஷ்டி அதற்குள் கொஞ்சம் தூரம் நகர்ந்து போயிருந்தது. அவர்களோடு அந்தச் சிறுவனும் அந்தக் குண்டனும் சேர்ந்து கொண்டனர். சுந்தர் சுற்றும் முற்றும் பார்த்தபடி அறைக் கதவைத் தாளிட்டுக் கொண்டு உள்ளே கட்டிலின் மேல் அமர்ந்தான். பயத்தில் நெஞ்செல்லாம் லேசாய் நடுங்குவது போலிருந்தது. பையன் கொடுத்த பொட்டலத்தில் என்ன இருக்கும், என அறிய ஆவலாயும் இருந்தது.

டிரம்ஸிலிருந்து எடுத்த சதுரமான காகிதம் சுற்றிய பொட்டலம் கட்டிலுக்கடியிலிருந்த குப்பைக் கூடையில் பத்திரமாயிருந்தது. அந்தப் பொட்டலத்தை எடுக்கக் குனிந்த போது கூடவே அழைப்பு மணியின் ஒலியும் கேட்டது. சுந்தர் பதறிப் போனான். அந்தப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் போனான். எங்கே ஒளிப்பது என்று யோசித்தான். முகம் பார்க்கும் கண்ணாடிக்குப் பின்னால் ச்சேச்சே கீழே விழுந்து மானத்தை வாங்கலாம். அழைப்பு மணி மறுபடியும் ஒலித்தது. மேலே இருந்த வெண்டிலேட்டரைப் பார்த்தான். அதுதான் பத்திரமான இடம் ஆனால் வைப்பது எப்படி? குழாயின் மேல் கையைப் பிடித்து காலையூன்றி கஷ்டப் பட்டு வைத்தாகி விட்டது. அழைப்பு மணி விடாமல் ஒலித்தது. ஓடிப் போய்க் கதவைத் திறந்தான். எழுத்தாளர் கீர்த்தீயன் மாலையும் கையுமாய் நின்று கொண்டிருந்தார் அவருடன் கூட ஒருவரும் நின்று கொண்டிருந்தார்.

“என்ன சுந்தர் இவ்வளவு நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?”

“பா…பா…பாத்ரூ…”

“பாத்ரூம் போயிருந்தயா? அதற்கு ஏன் இப்படி திணருகிறே முகமெல்லாம் ஒரே வேர்வையாய் வேர்க்கிறது”

“ அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க.” கீர்த்தீயன் உள்ளே வந்தார்.

மாலையை கோட் ஸ்டேண்டில் மாட்டினார். சட்டையைக் கழற்றி விட்டு கட்டிலில் அமர்ந்தார். கூடவந்தவர் தயங்கி நின்றார். “மிஸ்டர் ராம்ராஜ் நீங்க கூட இருக்க வேண்டிய அவசியமில்லை இந்தப் பையன் இருக்கான் நீங்க வேறே ஏதாவது வேலையிருந்தா பாருங்களேன்” என்றதும் அந்த ஆள் சரிங்க என்று கிளம்பினான்.



சுந்தர் இப்போது சகஜ நிலைக்குத் திரும்பியிருந்தான்.

கீர்த்தீயன் அவனைப் பார்த்து சிரித்தபடி, “சுந்தர் நீ ரொம்ப நேரத்திலேயே வந்துட்டயா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லிங்க... சார் கொஞசம் முன்னாலதான் வந்தேன்.”

அப்போது அழைப்புமணி கேட்டது.

சுந்தர் ஓடிப்போய் கதவைத் திறந்தான.

ரூம் பையன் இரண்டு காபியுடன் வந்திருநதான். ஒன்றைத் தான் எடுத்துக் கொண்டு சுந்தரையும் பருகச் சொன்னார். சுந்தர்க்கு தானும் கீர்த்தீயன் மாதிரி ஒரு பெரிய எழுத்தாளராகி விட வேண்டும் என்று நெடுநாளைய கனவு கண்டு கொண்டிருந்தான் வழிதான் புலப்படவில்லை.

இன்று அவரையே கேட்டுவிட வேண்டியதுதான் என்று,

“ஐயா நானும் உங்கள மாதிரி ஒரு எழுத்தாளராகனும்னு ஆசை. அதுக்கு என்ன வழின்னு நீங்க சொல்லணும்.”

அதைக் கேட்டதும் பலமாய் ஒரு முறை சிரித்துக் கொண்டு, “இது சாத்தியம்தான் ஆனால் பொறுமையோடு கொஞ்சம் போராட வேணும். தினசரி எதையாவது எழுத வேணும் எழுதுவதை எல்லா பத்திரிகைகளுக்கும் மாற்றி மாற்றி அனுப்ப வேணும் கதை திரும்பி வருகிறதே என்று சோர்ந்து போகாமல் சலிக்காமல் ஒரு வருஷம் எழுது. அடுத்த வருஷம் என்ன மாதிரி என்பதை நீயே புரிஞ்சுக்க முடியும் இவ்வளவுதான்" என்றதும் ஒரு மாபெரும் வித்தையை கற்றுக் கொண்ட சுந்தரின் மனது ஒரேயடியாய் துள்ளியது.

அப்போது ஒட்டடைக் குச்சியோடு ஒட்டடை அடிப்பவன் அறையுள் நுழைந்து பாத்ருமைத் திறந்தான் வெண்டிலேட்டர் ஓரமாய் ஏராளமாய் ஒட்டடைகள் தொங்கின.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/serial/p1b.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License