இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுவர் பகுதி
தொடர் கதைகள்

துரத்துவது யார்?

பாரதி தேவராஜ்


6. குமாருக்கு விருது?

மணி எட்டாகியிருந்தது. சுந்தரின் வீட்டு முன்பாக அந்த கார் நின்றது. கோமளத்தம்மாவும் ரம்யாவும் பதறியபடி வெளியே வந்தனர்.

“இதுதானே சுந்தர் வீடு.” காரில் வந்த பெரியவர்.

“ஆமா. சுந்தர் இல்லையே”. இருவரும் பயந்தபடி.

“பயப்படாதிங்க. ஒண்ணுமில்லே. நீங்க ரெண்டு பேரும் உடனே புறப்படுங்க.சுந்தருக்கு கால்லே லேசா அடி. ஆஸ்பத்திரிலே சேத்திருக் கோம்.” ஒன்றும் செய்வதறியாமல் காரில் ஏறினர். அடுத்த சில மணித் துளிகளில் ஆஸ்பத்திரி முன்பாக கார் நின்றது.இருவரும் பதறியபடி அவரை பின்பற்றிப் போனார்கள்.

சுந்தர் கை கால்களில் பெரிய கட்டு போட்டி ருந்தனர் கண்களை முடிய நிலையில்மயக்கமாய் படுத்திருந்தான் சுந்தர். கோமளத்தம்மா ஆஸ்பத்திரி என்று கூடபாராமல், “ என் மகனே சுந்தர் உனக்கென்னப்பா ஆச்சு” என்று அழுது கதறினாள்.

அதற்குள் நர்சுகள் இரண்டு பேர் வந்து “அம்மா நீங்க அழாதிங்க. பயப்படும்படியா ஏதுமில்லே எல்லாம் சாதாரண காயங்க தான். விபத்து நடந்ததாலே மயக்கமாயிருக்கான். அவ்வளவுதான். சீக்கிரம் முழிப்பாயிடும். பயப் படாம இருங்க.” என்று ஆறுதல் கூறினார்கள்.

அவனுக்குப் பக்கத்தில் கீர்த்தீயன் நெற்றிக்காயங்களோடு படுத்திருந்தார். விழா ஏற்பாடு செய்தவர் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தார்.

சுந்தருக்கு லேசாய் மயக்கம் தெளிந்திருந்தது. கண் விழித்துப் பார்த்தான். அவன் அம்மா அக்கா எல்லோருமிருந்தார்கள். மெல்ல தலையை அசைத்தான். பேச முயற்சித்தான். சிரமமாகத் தெரியவில்லை.



“அம்மா இப்ப மணிஎன்ன?” என்றான்.

“ஏம்பா மணிக்கு என்ன?”

“இல்லம்மா மணி என்னன்னு சொல்லு?”

“மணி பத்தாச்சுப்பா.” என்றதும்

“அம்மா யாராச்சும் ஒருத்தர கிருபா தியேட்டருக்கு அனுப்புங்கம்மா.”

“எதுக்கு?” - என்று கோமளத்தம்மா கேட்ட அதே நேரத்தில்,

“அவசியமில்லை சுந்தர்.”-என்று குமார் நொண்டியபடி முன்னே வந்து நின்றான்.

“என்ன சுந்தர்னா கூப்பிட்டே?”

“ஆமா சுந்தர்னு கூப்பிட்டேன்”

“என்னை உனக்கு முன்னேயே தெரியுமா?”

“உன்னைத் தெரியாட்டாலும் உங்கப்பாவ எனக்குத் தெரியும்.” என்று சொன்ன குமார் சுந்தரின் அம்மாவைப் பார்த்தான்.

“ஆமா சுந்தர். நீ இன்னிக்குக் காலையிலே சாப்பிட்டுப் போனதும் வாத்திய கோஷ்டியோடு இந்த பிள்ளையாண்டான் நம்ம வீட்டுக்கு வந்து உன்னை விசாரிச்சான். உங்கப்பா சொல்லியனுப்பிச்சதா சொன்னான். நான்தான் நீ லாட்ஜூக்கு போன விசயத்தை சொன்னேன்.”-என்று சொன்னதைக் கேட்ட சுந்தர்,

“அதுசரி நான் அடிபட்டதும், இந்த ஆஸ்பத்திரிக்கு வந்ததும் எப்படி தெரிஞ்சது?”

“ விபத்துநடந்த இடத்திலே நான் அங்கேதான் இருந்தேன். கூடவே ஆஸ்பத்திரிவந்து அட்மிட் பண்ணிட்டு உங்க வீட்டுக்குப் போய் தகவல் சொல்லி அவங்கள கூட்டிட்டு வந்ததும் நான்தான்” பேசிக்கொண்டிருந்த போதே போலிஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு கான்ஸ்டெபிள்களோடு உள்ளே வந்தார்.

சுந்தர் அப்போதுதான் கால்சட்டைப் பையைத் தொட்டுப் பார்த்தான். பகீரென்றது.பொட்டலத்தைக் காணவில்லை.



குமார் பேசத் தொடங்கினான், “ சார் ஊருக்கு வெளியே மார்க்கபந்து என்பவர் உடல் ஊனமுற்றவர் இல்லம்னு ஒண்ணு வச்சிருக்கிறார் ஆனா உண்மையிலே அது உடல் ஊனமுற்றவர் இல்லமாக இல்லாம கடத்தல் கூடாரமா பண்ணிட்டிருக்கார். இத நேரடியா போலிஸ்க்குத் தகவல் சொன்னா மிச்சமுள்ளவங்க உசாராவதோட கடத்தல் பொருளும் முழுசா கைக்கு கிடைக்காம போகலாம். அந்த வீட்லே சமையல் செய்யற சண்முகம் சுந்தரோட அப்பா. அவருடைய உதவியால்தான் இந்த தங்கக்கட்டியுள்ள பொட்லத்தை நீங்க நம்பரதுக்கொசரம் கொண்டாந்தேன். நாளைக்கு ஒரு கடத்தல் நடக்கயிருக்கு. நா அங்கே போய் சேர்ந்துடுவேன். கூடிய மட்டும் அவங்க புறப்படறத தாமதப் படுத்த முயற்சிக்கிறேன் அதுக்குள் நீங்கவந்திடலாம்.

*****


7 மணி ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது குண்டு குப்பு விரக்தியோடு உள்ளே வந்து சுவற்றோரமாய் பைக்கை நிறுத்தினான்.

நல்லவேளை இன்னமும் பாஸ் வரவில்லை.

“என்ன சண்முகம் அந்தபயல காணலையே என்ன பண்றது.”

“அடே போப்பா நம்ம ரெண்டுபேரையும் ஏமாத்திட்டாம்பா. அவன் அங்கேயேதான் படுத்திட்டிருக்கான். நம்மள ஏமாத்தறதுக்கோசரம் அப்படி பண்ணிபோட்டு பக்கத்திலேயேதான் படுத்திட்டிருந்திருக்கான். நாமதான் கவனிக்கலே.” குப்பு உற்சாகமாய் உள்ளே ஓடிப்போய் பார்த்தான்.



சண்முகம் சொன்னது நிஜம்தான் குமார் அதேயிடத்தில்தான் கிடந்தான். கோபத்தில் குப்பு எல்லா பையன்களையும் ஒரு தட்டுதட்டி எழுப்பினான். சிறுவர்கள் அனைவரும் கிணற்றடிக்குச் சென்று தொட்டியிலிருந்த தண்ணிரை வாரிவாரி ஊற்றிக் கொண்டனர். அவர்கள் உள்ளே வருகையில் டிபன் தயாராயிருந்தது. எல்லோரும் தட்டை எடுத்து வந்து உட்கார்ந்தனர்.

சமையல்கார சண்முகம் எல்லோருக்கும் டிபனைப் போட்டார்.

“எல்லோரும் ஒழுங்கா சாப்பிடுங்கடா. மத்தியானம் சாப்பிட எந்நேரமாகுதோ?” கார் சத்தம் கேட்டது. பாஸ் வந்துவிட்டார்.

குப்புவும், சண்முகமும் உஷாரானார்கள். குண்டுகுப்பு ஷெட்டிலிருந்த வேனை கிளப்பி போர்டிகோவில் நிறுத்தினான். குமாருக்கு மனசெல்லாம் திக்திக் என்று அடித்துக் கொண்டது. வாத்தியங்களோடு சிறுவர்களையும் வேனில் ஏற்றினார்.

காரை ஸ்டார்ட் செய்து முன்னே கிளப்ப பின்னால் வேனும் புறப்படத் தயாரானது. சிர்ரென்று போலிஸ் ஜீப் வந்து நின்றது. அவ்வளவு தான் அடுத்த சில வினாடிகளில் பாஸ் என்கிற மார்க்கபந்துவும் வாத்தியங்களிலிருந்த தங்கக்கட்டிகளும் போலிஸ் ஜீப்பில் பயணம் செய்தன.

அந்த ஆண்டு வீர சாகச விருதிற்காக குமார் சிறுவனின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

முடிவுற்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/children/story/serial/p1f.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License