இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

ஙப்போல் வளை

முனைவர் நா. சுலோசனா
உதவிப் பேராசிரியர், தமிழ் மொழி (ம) மொழியியல் புலம்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை-113.


பள்ளிக்காலங்களில் ஔவையின் ஆத்திச்சூடி “ஙப்போல் வளை” என்பது பொருளே தெரியாமல் ஏதோ ஆசிரியர் கற்றுக் கொடுத்தார். அந்த வகையில் மனனம் செய்தோம் என்ற நிலைப்பாடே நீண்டது. அதற்குப் பிறகான காலக்கட்டங்களில் ’ங’வைப்போல் சமுதாயத்தில் வளைந்து கொடுத்துப் போகவேண்டும் எனும் புரிதல் வந்தது. ஙவின் பயன்பாட்டைப் பார்க்கும் போது மிகக் குறைந்த எண்ணிக்கையில் தான் சொல் பயன்பாடு இருக்கிறது. ஆத்திச்சூடிக்குப் பல்வேறு விளக்கங்கள் கொடுத்திருந்தாலும் பாவேந்தர் பாரதிதாசனின் 'மானுடம் போற்றுதும்' எனும் கட்டுரைத் தொகுப்பை வாசிக்கும் போது பாவேந்தர் ஙகரப் பயன்பாட்டைப் பயன்படுத்தி 12 உயிர் மெய்யெழுத்துக்களையும் உள்ளடக்கி ஒரு புதுவிதமானப் பாடலைப் பதிவு செய்துள்ளார். அவரின் நோக்கம் அனைவரையும் சுயமரியாதை இயக்கத்தில் இணையச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தும் பாடலாக அமைந்துள்ளது. இருப்பினும் இப்படியெல்லாம் ’ங’ கரத்தைப் பாடலில் புகுத்தமுடியும் என்பது ஒரு புதுவிதமானப் போக்கைச் சுட்டிக்காட்டுகிறது.

ஆத்திசூடி ‘ஙப்போல் வளை’ என்கிறது. பலரும் ‘ங’ என்ற எழுத்து எப்படி வளைந்திருக்கிறதோ அப்படி உடம்பை வளைக்க வேண்டும் என்பதாகப் பொருள் சொல்வார்கள். உண்மையான பொருள் அதுவல்ல.

‘ங்’ என்ற எழுத்தும் ‘ங’ என்ற எழுத்தும் மட்டுமே சொற்களில் பயின்று வரும். பிற எழுத்துக்கள் வராது. ஆக, ஒரு தனி எழுத்து, தன் இனக்குடும்பத்தையே காப்பாற்றுகிறது. அது போன்று ஒவ்வொருவரும் நொடித்துப் போகாது தன் இனத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது பொருள். ‘வளை’ என்றால் சூழ்ந்துகொள், காப்பற்று என்று பொருள். ”ஸ்ரீ ரெங்கத்தில் அடைய வளஞ்சான் தெரு என்று ஒன்றுண்டாம். எல்லோரையும் சேர்த்துக் காப்பாற்றிய தெரு என்பது அதன் பொருளாம். அப்பர் பெருமான் ‘ஙகர வெல் கொடியான்’ (‘ங’வைப் போன்றிருக்கும் எருதை கொடியாகக் கொண்டவன்) என்று சிவபெருமானைப் புகழ்வதின் வழி இந்த ஆத்திச்சுடிப் பெருமைக்கு வழி வகுத்துக் கொடுத்திருக்கிறார்” என்று சேக்கிழார் அடிப்பொடி தி. ந. ராமச்சந்திரன், தென்றல் இதழில் குறிப்பிட்டுள்ளார்.


“ஙங்ஙஃ”

“ஙங்கலந்தன ஙேதிஙேவலல்
ஙங்கலந்தன ஙாஙிஙாவரம்
ஙுங்கலந்தன ஙூஙௌஙோரிது
ஙெங்கலந்தன ஙேரிஙீத்தலே” (பாவேந்தர் பாரதிதாசன், மானுடம் போற்று, பக்.169-170)

‘ஙங்ஙஃ’ என்றால் பாடல் என்பது பாரதிதாசன் கண்டுபிடித்த பொருளாகும்.

ஙங்கலந்தன- கடவுளைப்பற்றி, ஙேதி - கவலைப்படுகிறவர்கள், ஙேவலல் - கடந்தெடுத்த, ஙங்கலந்தன - முட்டாள்களேயாவர், ஙாஙி - நீ, ஙாவரம் - முன்னேற, ஙுங்கலந்தன - விரும்பினால், ஙூஙௌ - சுயமரியாதை, ஙோரிது - இயக்கத்தில், ஙெங்கலந்தன - சேர்ந்து, ஙேரி - அதை (முன்னேற்றத்தை), ஙீத்தலே - அடைவாயாக என்று ஒவ்வொன்றிற்கும் பொருள் குறிப்பிட்டு ஙகரத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்.

“கடவுளைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் கடைந்தெடுத்த முட்டாள்களாவர். நீ முன்னேற்றமடைய விழைந்தால் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து அதைப் பெறுவாயாக என்று பாவேந்தர் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தால் முன்னேற்றம் கிட்டும் என்பதை இப்பாடலின் வழி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் எழுத்தான ‘ங’ என்னும் எழுத்தைப்போல் மற்றவரையும் இணைத்துக் கொண்டு வாழவேண்டும் என்னும் கருத்தும் நிலவுகிறது. (ஙப்போல் - ஙகரம் போல், வளை- உன் இனத்தைத் தழுவு)

‘ங’ என்னும் எழுத்தானது தான் பயனுடையதாயிருந்து, பயனில்லாத ‘ஙா’ முதலிய தன் வருக்க எழுத்துகளைத் தழுவிக் கொள்ளுதல் போல், நீ பயனுடையவனாயிருந்து உன் இனத்தார் பயனில்லாதவராயினும் அவரைத் தழுவிக்கொள் என மானுடச் சமுதாயத்திற்கு விழுமியமாக ஙகரம் விளங்குகிறது.

‘ஙா’ முதலிய பதினோரெழுத்தும் எந்தச் சொல்லிலும் வருவதில்லை. ஙகரத்தின் பொருட்டே அவற்றையும் சுவடியில் எழுதுகிறார்கள். இனி இதற்கு ஙகர ஒற்றானது அகரவுயிர் ஒன்றையேத் தழுவுவது போல் நீ ஒருவனையே தழுவு என மாதர்க்குக் கூறியதாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. இது பெண்ணை மையப்படுத்திக் குறிப்பிட்டிருந்தாலும் ’ங’ மெல்லினமாதலால் (மெல்லின எழுத்துள் வருவதால்) இப்படியும் கருதமுடிகிறது.


Be as the letter ’ங’ supporting all your kin. ஆத்திச்சூடியின் காலம் 12 ஆம் நூற்றாண்டு. ங இந்த எழுத்து பல கோணங்களைக் கொண்டது. அதன் கோணத்தின் ஒவ்வொன்றிற்கும் நிமிர்ந்திரு, எதிர்ப்பு வந்தால் சாய்ந்துவிடு என்றும் பொருள் கொள்வதுண்டு. ‘ஙே’ என்று முழிப்பதற்கும் அடுத்தவனை திட்டும் முதல் எழுத்தாக இன்னும் அழியாமல் இருக்கிறது. தவறு செய்யும் போது தலையில் ’னங்’ எனக் கொட்டுவதும் உண்டு. தொப்புள் கொடியிலிருந்து விடுபட்ட குழந்தை இவ்வுலகுடன் ஏற்படுத்தும் முதல் ஒலித் தொடர்பு ‘ங்கா’ என்பதாகும். தமிழின் சிறப்பு எழுத்து ‘ழ’ வைப்போல் இன்னொரு எழுத்து ‘ங’ இந்த எழுத்தை கூர்ந்து கவனித்தால் ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வதுபோல் இருப்பதாகவும் கொள்ளமுடிகிறது.

மொழி இலக்கணப்படி ஙகரம் மொழி முதலில் வராது. அதன் சொந்த மெய்யான ’ங்’ எனும் எழுத்தைத் தொடர்ந்தே வரும். ஙகர மெய்யெனா ’ங்’ உயிரெழுத்தையும் உயிர்மெய் எழுத்தையும் தொடர்ந்துதான் வரும். அங்கு, இங்கு, எங்கு, தங்கு, பங்கு, வாங்கு, தங்கம், சங்கம், பங்கம், கலிங்கம், பாங்கு, தாங்கு, ஏங்கு, மூங்கில், தூங்கு, நுங்கு, சுங்கம், குரங்கு, இறங்கு, போன்றவற்றைச் சான்றாகக் குறிப்பிடலாம். அங்ஙனம், எங்ஙனம், இங்ஙனம் எனும் வழக்கும் அரிதாகிவிட்டது. மேலை நாடுகளின் இடப் பெயர்களான ஹாங்காங், பாங்காங், சீனப்பயணியின் பெயரான யுவான்சுவாங் போன்றவற்றிலும் குடும்பப் பெயர்களாக யுவராஜ் சிங், மன்மோகன்சிங் என இறுதியில் ‘ங்’ எனும் மெய்யெழுத்து வருவதைப் பார்க்க முடிகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p135.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License