இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

பெண் என்னும் கட்டமைப்பு

முனைவர் த. விஜயலட்சுமி
தமிழ்த்துறைத் தலைவர்,
கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம்.


1792 இல் அமெரிக்காவில் மேரி உல்ஸ்டன்க்ராப்ட் பெண்களின் உரிமைகளை நிறுவுதல்‘என்ற நூலை எழுதி வெளியிட்ட காலத்தைப் பெண்ணியத் தொடக்கக்காலம் என்று நாம் கூறுவதாக இருப்பின் இன்றைக்கு நீண்ட 225 ஆண்டுகள் கடந்தும் பெண்ணியம் தொடக்கக் காலத்தில் முன் வைத்த அதே கோரிக்கைகளையும் தேவைகளையும் முன் வைத்து நகர்கிறது என்பது ஒரு கோட்பாட்டின் வளர்ச்சி என்று கூற முடியாது.

பெண்ணியம் எங்கு தொடங்குகியதோ அங்கேயே அதே நிலை முடிந்து வளர்ச்சியற்றது. ஆனால், உயிரோடு இருக்கிறது என்பதுதான் உண்மை. இவ்வாறு கூறியதால் பெண்ணியம் எதையும் சாதிக்கவில்லை என்ற பொருள் அல்ல. இன்னும் சஞ்சரிக்க வேண்டிய பாதைகள் நிறையவே இருக்கின்றன என்பதே இதன் பொருள். ஆண்மை,பெண்மை ன்பவை உயிரியல் ரீதியானவை அல்ல. அது சமூக ரீதியில் கட்டமைக்கப்படுபவை என்னும் சீமோன் தெபூவாவின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டதாகினும் இந்தக் கட்டமைப்பை, அதாவது, சமூக ரீதியான ’பெண்’ கட்டமைப்பை முற்றிலும் அகற்றி, பெண்ணிற்கான சுயமான கட்டமைப்பை உருவாக்கப் பெண்ணியம் இன்னும் போராடவேண்டியுள்ளது’

அடையாளம் என்று இயல்பிலேயே எதுவுமில்லை அது கட்டமைக்கப்படுவதே’ என்ற அமைப்பியலின் கண்டுபிடிப்பு அனைத்திற்கும் பொருந்துவதாகவே அமைகிறது. இதன் அடிப்படையில் பெண் எவ்வாறு உடல், உளரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளாள் என்பதைக் கண்டறிந்து அந்த ஒரே வகை மாதிரிகளை (Steriotypes) உடைத்து, பெண்ணிற்கான சுய கட்டமைப்பை உருவாக்கப் பெண்ணியம் இன்னும் உழைக்க வேண்டியுள்ளது. இந்தப் புரிதல் தமிழில் பெண்ணிய ஆய்வாளர்களுக்கு இன்னும் சென்று சேரவில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. பெண்ணுக்கு எதிராகச் செய்யப்படும் கொடுமைகள், பிரச்சனைகள், சிக்கல்கள், புறக்கணிப்பு, போன்றவற்றைத் தொகுத்துக் கொடுப்பதுதான் பெண்ணிய ஆய்வு என்று புரிந்து கொள்ளப்பட்டு அதன் அடிப்படையிலேயே பல ஆய்வுகளும் செய்யப்படுகின்றன.

பெரிய அணைக்கட்டில் விரிசல் வழியாக வெளியே ஒழுகும் நீரை வெளியில் இருந்து அடைக்க முனைவதை ஒத்த ஒரு முயற்சியாகும் இது. உண்மையான காரணத்தைக் கண்டறிந்து அதை நிவர்த்தி செய்ய முயற்சிகள் செய்யப்பட வேண்டும்.

பெண் உளஅடிப்படையில் அச்சம், மடம், நாணம் என்ற அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளாள். அதாவது, அவள் இயல்பிலேயே அச்சம் உடையவளாக எதையும் பயப்படுபவளாக, இருக்க வேண்டும். நாணம் அவளது அணிகலன், நாணமற்ற பெண்ணைச் சமூகம் பெண்ணாகக் கருதுவது இல்லை. இவற்றில் மிக முக்கியமான அடுத்த குணம் என்பது ‘மடம்’ அதாவது அறிவார்த்த அடிப்படையில் அவள் முட்டாளாக, தெரியாதவளாக, பிறர் சொல்லித் தெரிந்து கொள்பவளாக, சொந்தமாகச் சிந்திக்கத் தெரியாதவளாக முடிவெடுக்க இயலாதவளாக நெடுனோக்கு அற்றவளாகக் கட்டமைக்கப்பட்டுள்ளாள்.


இந்த மூன்று பெருங்சுவர்களை, தடைகளை இன்றும், படித்து வேலைக்குப் போகும் சிந்தனை செய்யும் பெண்களால் கூடக் கடக்க முடிவதில்லை அல்லது போராட வேண்டியுள்ளது என்பதுவே யதார்த்தம். 20 ஆம் நூற்றாண்டின் கல்வி வளர்ச்சியின் காரணமாகப் பல பெண்கள் கல்வி கற்று சிந்தனையாளர்களாகப் பெரும் பதவி வகிப்பவர்களாக வளர்ந்த போது சமூக அறிவு மையத்தில் பெண்ணின் இருப்பு ஆங்காங்கே தென்படத் தொடங்கியது.

பொதுக்கல்வி மட்டங்களிலும் உயர்கல்வித் துறைகளிலும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விடக் கூடுதலாக ஆனது. ‘மனப்பாடக்கேசுகள்’ என்று தொடக்கத்தில் கேலி செய்து பெண்களை ஒதுக்கியவர்கள் கூட இன்று பொது வேலைவாய்ப்புகளிலும் பெண்கள் முன்னிலையில் இருக்கும் நிலையைக் கண்டு சற்று அதிர்ந்துள்ளனர்.

பெண்ணை அடக்கி ஆளப் பயன்படுத்தப்பட்ட‘ மடம்’ என்ற ஆயுதம் இன்று பழுதுபட்ட நிலையில் இனி அறிவின்மையைக் கூறிப் பெண்ணை ஆளமுடியாது என்பதையும் அவளோடு போட்டியிட்டுக் கல்வி வட்டத்தில் அல்லது வேலைவாய்ப்புகளில் வெற்றி பெற்றுதனது. ஆளுமையை எல்லா ஆண்களும் நிலைநாட்டுவது கடினம் என்பதையும் உணர்ந்த ஆண் ஆதிக்க சமூகம் மற்ற இரண்டு ஆயுதங்களான அச்சம், நாணம் இவற்றை மிக வக்கிரமாகப் பயன்படுத்தி வருகிறது.

பெண்ணை அறிவால் வெல்ல முடியாது அவளை உடல் பலத்தால் வென்று அடக்குதல் அதாவது உடல் அடிப்படையில் ஆணுக்கு வலிமையும் பெண்ணுக்கு மென்மையும் பண்டு காலந்தொட்டே கட்டமைக்கப்பட்டுள்ளதால் இந்த மென்மையைத் தாக்கி அச்சமூட்டிப் பெண்ணை இரண்டாம் நிலையிலேயே தக்க வைத்தல் என்பதுதான் 21 ஆம் நூற்றாண்டின் ஆணாதிக்கக் கருத்தியல். இதன் வெளிப்பாடாக நாம் பல உதாரணங்களைக் கூறலாம்.

ஊடகங்களில், குறிப்பாகத் திரைப்படங்களில் நன்றாகப் படித்துக் கல்லூரியில் பணிபுரியும் கதாநாயகி டிகிரி கூட தேர்வு பெறாத கதாநாயகன், ஆனால் அவன் உடல் ரீதியில் வலுவானவன் எதிரிகளிடமிருந்து கதாநாயகியைக் காப்பாற்றுபவன். ஈந்த உடல்வலு என்ற ஒரே அறிவார்த்தத்தைப் பின்னுக்குத் தள்ளி அவளை மணக்கச் செய்கிறது. (பாஸ் என்கிற பாஸ்கரன்) குண்டாத்தலைவன், படிப்பறிவற்ற கதாநாயகன் படித்த, பண்புள்ள கதாநாயகி, உடல் வலிமையைக் கண்டு காமுற்று மணத்தல் (ஆறு). இப்படிப்பட்ட பல திரைப்படங்கள் இன்று புற்றீசலாக வந்து பெண்களின் மனதை மூளைச்சலவை செய்கின்றன. குண்டாத் தலைவனை மணம் புரிவதோடு படம் முடிகிறது. இவர்களின் குடும்ப வாழ்வு எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்க்க யாரும் முன்வருவதில்லை. எனவே இது ஒரு வகையான ஆணாதிக்கக் கட்டமைப்பு, அதாவது, பெண்ணின் அறிவார்த்த நிலையை ஆணின் உடல் வலிமையால் வெல்லமுடியும் என்ற கட்டமைப்பு.


இதே போல பல வடிவங்களில் இக்கட்டமைப்பு சமூகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இன்று பெருகி வரும் வன்புணர்வுகள் இதற்கு ஒரு உதாரணம். வன்புணர்ச்சிக்கு உட்படுத்தபட்ட பெண்களில் அதிகப்படியானவர்களும் அறிவார்ந்த பெண்கள் என்பது குறிப்பிடத் தகுந்த செய்தியாகும். என்னதான் அறிவார்ந்தவளாக இருப்பினும் அவள் உடல் அளவில் பலவீனமானவள். அவள் பிச்சைக்காரனான ஒரு ஆணைக் கூட அஞ்சி நடக்க வேண்டியவள் என்பது இவ்வன்புணர்ச்சிகள் சமூகத்திற்குக் குறிப்பாகப் பெண்ணினத்திற்குத் தரும் பாடம். பெண்களின் உள்ளக்கட்டமைப்பு அச்சம், மடம், நாணம் என்றிருப்பின் உடல் கட்டமைப்பு யதார்த்தத்திற்குப் புறம்பானதாகவே உள்ளது.

கனத்த முலைகள் சிறுத்த இடை, பெருத்த பிட்டம், தடித்த தொடை, மெலிந்த தோள்கள் மென்மையான வாகு என்பதே அழகான பெண்ணின் அங்க அடையாளங்கள் இதற்கான உதாரணங்களைப் பழங்கால இலக்கிய வருணனைகளிலும் சிற்ப ஓவியங்களிலும் காணலாம். இந்த உடல் கட்டமைப்பு இன்றைய ஊடகங்கள் வரைதொடர்கிறது என்பதைக் கவனித்தால் புரிந்து கொள்ள இயலும்.

பெண்ணைக் கேசாதிபாத, பாதாதி கேசவருணனைகள் செய்து இஞ்சு இஞ்சாக நுகரும் மரபை நாம் பழங்காலந்தொட்டே காணலாம். பெண்ணின் பாதங்களுக்கு ஓடிக் களைத்த நாயின் நாக்கை உவமை கூறி மகிழ்ந்த தந்தைவழிச் சமூகம் ஆணின் தோளுக்கும் வலுவான கைகளை மட்டும் வருணனை செய்ததன் பின்னணியைச் சிந்திக்க வேண்டும். நுகர்பொருளான பெண் உடலைச் சுமந்து திரிவதற்கு மட்டுமே அவளுக்கு உரிமை உள்ளது. அந்த உடல் அவளுக்குச் சொந்தமானதல்ல. எதிர்காலத்தில் அவளை மணக்கும் ஆடவனுக்குச் சொந்தமானது. அந்த ஆடவனுக்காக அவள் தனது விலைமதிப்பற்ற நுகர்பொருளான உடலைத் தூய்மையாக, புனிதமாகப் பாதுகக்க வேண்டும். அதில் தவறினால் அவள் சமூக மதிப்பீடுகளில் இருந்து நீக்கப்படுவாள். பொதுமகளிர் என்று முத்திரை குத்தப்பட்டு ஆண்களின் காம இச்சை போக்கும் கருவியாகப் பயன்படுத்தப்படுவாள். எனவே ‘உடல் புனிதம்’ என்பது பெண் உடலுக்கு வகுக்கப்பட்ட முக்கியமான கட்டமைப்பாகிறது.

தந்தை வழிச் சமூகத்தின் இந்தப் பெண் உடல் கட்டமைப்பை உணர்ந்து கொண்ட பெண்ணிய எழுத்தாளர்கள், முதலில் பெண் உடல் புனிதத்தை உடைத்து, பெண் உடல் பெண்ணிற்குச் சொந்தமானது, அதை அனுபவிக்கும் உரிமை பெண்ணுக்கு மட்டுமே சொந்தமானது என்று நிறுவினர். அதன் அடிப்படையிலேயே பெண்ணின் உடல்மொழிக் கவிதைகள் ஏராளம் வெளிவந்தன. அக்கவிதைகளில் வரும் யோனி, முலை, தீட்டு போன்ற பாலியச் சொற்களை மட்டும் தொகுத்து பெண்ணியக் கவிதை அல்ல பாலியல் கவிதை என்று ஆதிக்க ஆண் எழுத்தாளர்கள் எள்ளி நகையாடி வருகின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பெண் மீதான அவள் உடல் மீதான அவர்களின் அதிகாரம் நழுவிப் போனதன் ஆதங்கமே இது.


அச்சம், மடம், நாணம், உடல் புனிதம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் பெண் அனைத்து இடங்களிலும் ஒடுக்கப்படுகிறாள். இக்கட்டமைப்பால்தான் பெண் சார்ந்து வாழ வேண்டியுள்ளது. இச்சார்புத் தன்மை அவளை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடுகிறது. பெண்ணியத்திற்கு ஆதரவாகசிதிக்கும் அனைவரும் இந்த மூலகாரணத்தைப் புரிந்து கொண்டு இதிலிருந்து எவ்வாறு வெளிவரலாம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டும். அனைத்துப் பெண்ணியச் சிக்கல்களுக்கும் பெண்ணிற்கு எதிரான கொடுமைகளுக்கும் இக்கட்டமைப்புதான் காரணம் என்பதை உணர வேண்டும்.

பெண்ணிய ஆய்வுகளும் சிந்னைகளும் இப்பெண் கட்டமைப்பை உடைக்க வழிவகை செய்வதாக அமைய வேண்டும். அவ்வாறு நடந்தால் மட்டுமே பெண் விடுதலை, சமத்துவம் என்ற கனவுகள் நனவாகும்.

பயன்பட்டநூல்கள்

1. Mary Wollstone Craft - Windication of right of women

2. Simone de Beauvoir - The Second Sex

3. தொல்காப்பியர்- தொல்காப்பியம்

(குறிப்பு: துணை நூல் பட்டியலுக்கான நூல்களைப் பட்டியலிடும் போது நூலின் பெயர், நூலாசிரியர்(கள்), வெளியீட்டாளர் (பதிப்பகம், ஊர்), பதிப்பித்த ஆண்டு, பதிப்பு ஆகியவற்றை வரிசையாகக் குறிப்பிடுவது கட்டுரைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் - ஆசிரியர், முத்துக்கமலம் இணைய இதழ்)


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p141.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License