இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மலபார் மாவீரன் பழசிராஜா கேரளவர்மா

எஸ். எஸ். பொன்முடி


ஒவ்வொரு தனி மனிதனும் பிறந்து, வாழ்ந்து மறைவதற்குள் எதையாவது சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றான். எதிர்காலத்தில் தன் குடும்பத்தினருக்கு வீடு, வாசல், நில புலன்கள், தொழில் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்னும் உந்துதல் தவிர்க்க முடியாத கட்டாயமாக மாறி அதுவே சாதனை என்று தன் சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடுகின்றான். நம் தேசத்தின் மீது அளப்பறிய காதலும், இறையாண்மை மீது அக்கறையும் கொண்ட மிகச்சிலர்தான் தன்னை உயர்த்திக் கொள்வதை விட தன் தேசத்தை உயர்த்துவதே வாழ்நாள் கடமை என்று தீர்க்கதரிசனமாக சிந்திக்கின்றார்கள். இவர்கள்தான் கால வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படாமல் காப்பாற்றப் படுகின்றார்கள். மதம், மொழி, இனம், பழக்க வழக்கம் என வெவ்வேறு காரணங்களுக்காகப் பிரிந்து கிடந்த நமது தேசத்தை சரியாகக் கணிக்க முடிந்த காரணத்தால்தான் ஆங்கிலேயர்கள் நம்மைக் கொண்டே நம்மை பிரித்து நம்மை ஆளத் தொடங்கினார்கள்.

இந்திய தேசிய காங்கிரஸ் என்னும் நாடு தழுவிய விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே நமது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் ஆங்காங்கே ஆங்கிலேயர்களை எதிர்த்து சில குறுநில மன்னர்கள் கிளர்ச்சியை உருவாக்கினர். அவர்களில் ஒருவர்தான் கேரளாவின் மலபார் பகுதியை மையமாகக் கொண்டு கிளம்பிய கேரளவர்மா என்று அழைக்கப்படும் பழசிராஜா அவர்கள். நமது நாட்டை ஹைதர் அலி ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது மலபார் பகுதியின் தலைச்சேரி என்னும் ஊரை தலைநகராகக் கொண்ட நாயர் சமூகத்தைச் சேர்ந்த குறுநில மன்னர்தான் பழசிராஜா கேரளவர்மர. தங்களுக்குள் சிறு சிறு சண்டையிட்டுக் கொண்டும் யார் பெரியவர் என்னும் ஈகோ யுத்தத்துக்குள்ளும் மூழ்கிக் கிடந்த வசதி மிக்க நாயர் குடும்பத்தினர் மெல்ல மெல்ல ஹைதர் அலியின் வரிக் கொடுமையை தாங்கிக் கொள்ள முடியாமல் கோட்டயம் பகுதிக்குக் குடியேறினர். அச்சூழலில் மலபார் பகுதியில் மக்களை காக்கும் அரணாக பழசிராஜா கேரளவர்மா விளங்கினார்.



தன் வசதி மிக்க சூழலையும், தன் உடல் நலத்தையும் உயிரையும் பொருட்படுத்தாமல் ஒரு சிலர்தான் இந்த தேசத்தைக் காக்கும் அறப்போரில் முன் நிற்கின்றார்கள். இவர்களின் செயல்பாடுகளை, சாதனைகளை ஆவணப்படுத்த நாம் தவறி விடுகின்றோம். கேரளவர்மாவைப் பற்றிய ஒழுங்கமைக்கப்பட்ட ஆவணங்கள் கேரளாவிலேயே இல்லை என்பதுதான் மிக சோகமான விஷயமாகும். நாட்டுப்புற பாடல்கள், தெரு நாடகங்கள், வாய்வழிச் செய்திகள் ஆகியவற்றை கொண்டு கேரளவர்மாவின் சந்ததியினர் ஆவணங்களை உருவாக்கி கொண்டுள்ளனர். கேரள வர்மாவின் உருவ அமைப்பு கூட "ஜானத்தான் டங்கன்" என்னும் ஆங்கிலேயரின் டைரிக்குறிப்பில் தான் காணக் கிடைக்கின்றது. "தன் மக்களால் கடவுளுக்கிணையாக மதிக்கப்பட்ட கேரளவர்மாவை சமாதான உடன்படிக்கைக்காக நான் சந்தித்த பொழுது நிரந்தரமாக முகத்தில் வீற்றிருக்கும் புன்சிரிப்பும், சிறிய உடம்பும், ஒளி பொருந்திய கண்களும், நீண்ட தலைமுடியும், உயர்த்திக் கட்டிய கொண்டையும், தாடியும் என்று கம்பீரமாக காட்சியளித்தார்" என்று எழுதியுள்ளார்.

மலபார் பகுதியில் திப்புசுல்தானுக்கும், கேரள வர்மாவுக்கும் நிலவிய பனிப்போரை பயன்படுத்திக் கொள்ள நினைத்த பிரிட்டிஷார் மிகவும் தந்திரமாக ஒரு பிரதிநிதியை அப்பகுதிக்கு அனுப்பினர். திப்பு சுல்தானை எதிர்ப்பதற்கு ஆரம்பத்தில் ஆங்கிலேயர்களைப் பயன்படுத்த ஆரம்பித்த கேரள வர்மா இறுதியில் அவர்களுடனேயே மோத ஆரம்பிக்கின்றார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் மன்னர்கள், திப்புசுல்தான், ஹைதர் அலி, ஆங்கிலேயர்கள் என தொடர்ச்சியாக மாறி மாறி போரிட்ட கேரள வர்மா மலபார் பகுதியில் இருந்து இறுதியாக ஆங்கிலேயர்களால் விரட்டியடிக்கப்பட்டார். அவர் கடைசியாக நிர்வாகம் செய்த கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கியதோடு மட்டுமல்லாமல் அதன் மீது சாலையையும் அமைத்து அடையாளங்களை அப்புறப்படுத்தினர். சாலையை ஒட்டி உள்ள சிறுகுளம் மட்டுமே வரலாற்றைச் சுமந்து கொண்டு நம்மிடம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.



மலபாரிலிருந்து கோட்டயத்திற்கு விரட்டப்பட்ட கேரளவர்மா ஆங்கிலேயர்களுடன் போரிட்ட முறையும் நிகழ்வுகளும் ஒரு விறுவிறுப்பான மர்ம நாவலுக்கு நிகரானவையாகும். 1793-ல் வயநாட்டின் மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு கோட்டயம் பகுதிக்கு வந்து பிரிட்டிஷாரோடு மோதி தாக்குதல் நடத்த ஆரம்பித்தார் வர்மா. கொரில்லா போர்முறையைக் கையாண்ட முதல் தேசபக்தர் கேரளவர்மா ஆவார். அவரின் போர் தந்திரங்களையும், யுக்திகளையும் கண்டு மிரண்டு போன ஆங்கிலேயர்கள் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களையும், காயங்களையும், உயிரிழப்புகளையும் கணக்கில் கொண்டு காலனெல் ஆர்தர் வெல்லஸ்லி என்பவரைக் கோட்டயம் பகுதிக்கு வரவழைத்தனர்.

உலகில் இதுவரை வெளியான திரைப்படக் கதைகளை ஆய்வு செய்தால் அவற்றை ஒரு குறிப்பிட்ட ஐந்து பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்று கூறப்படுவதைப் போல உலகெங்கும் உலவிய, நடைமுறைப் படுத்தப்பட்ட கிளர்ச்சிக்காரர்களின் யுக்திகள் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியமில்லை. மைசூர் மலைப்பகுதிகள், மலைவாசியினர், அரசாங்கம், சந்தனமர வீரப்பன், உளவாளி , கடைசியில் வீரப்பனின் மரணம் என்று நாம் சமீபத்தில் பரபரப்பாக எதிர் கொண்ட நிகழ்வுகளில் பெரும்பாலானவை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே அதே பகுதிகளில் பிரிட்டிஷாரை எதிர்த்துக் கேரள வர்மாவால் அரங்கேற்றப்பட்டன என்று கேள்விப்படும்போது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட "மரபியல் தகவல் பரிமாற்றம்" என்னும் உயிரியல் கண்டுபிடிப்பு உண்மையாகின்றது.



மலையகப் பகுதியில் இருந்து கேரளவர்மாவின் தொடர் தாக்குதல்களை சமாளிக்க முடியாத பிரிட்டிஷார் "பழைய விட்டில் சண்டு" என்னும் உளவாளியைக் காட்டுக்குள் அனுப்பி கேரள வர்மாவுடன் நெருங்கி பழக விடுகின்றனர். அந்த உளவாளியின் மூலமாக மைசூர் மலைப்பகுதியில் அவர் ஒளிந்திருந்த பகுதியைக் கண்டு பிடித்து சப்-கலெக்டர் "தாமஸ் ஹார்வி பபேர்" தலைமையில் முற்றுகையிடுகின்றனர். 1805-ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று மாவிலத்தோடு ஆற்றங்கரையில் அதிகாலையில் அமைதியாக தன் அம்மாவின் நினைவு நாளுக்கான சடங்குகளை கண்மூடி அமர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருந்த கேரளவர்மாவையும் அவரின் படையினரையும் சுற்றி வளைத்து சுட்டுத் தள்ளுகின்றனர் பிரிட்டிஷார். தன் அம்மாவையும் தங்களது குல தெய்வமாகிய ஸ்ரீபொற்கழியையும் நம் தேசத்தையும் பிரார்த்தித்துக் கொண்டே உயிர் விடுகின்றார் மலபாரின் மன்னன் பழசிராஜா கேரள வர்மா.

குறு நில மன்னனாக இருந்து வசதியை அனுபவித்துக் கொண்டு சாக விரும்பாமல் பிரிட்டாஷாரை எதிர்த்துக் கானகங்களில் ஒளிந்து கஷ்டப்பட்டு இந்த தேசத்திற்காக உயர்விட்ட பழசிராஜா கேரள வர்மாவை நினைக்கும் போது

"நீ மாலையாக இருந்தால்
அதில்
மலர்களாய் இருக்க மட்டுமல்ல,
நீ பாலையாக இருந்தால்
அதில்
மணல் துகள்களாக இருக்கவும்
சம்மதமே"

என்னும் புதுக்கவிதை வரிகள் நம் நெஞ்சில் நிழலாடுகின்றன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p18.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License