இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மருத்துவ மாற்றங்களின் வலிகள்

எஸ். எஸ். பொன்முடி


பாம்பாட்டிகளும், சாமியர்களும், தொற்று நோய் யானைகளும் நிறைந்திருக்கும் நாடு இந்தியா என்று ஒரு காலத்தில் மேற்கத்தியர்களால் வர்ணிக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில் ஐந்து நட்சத்திர விடுதி வசதிகளோடும், உலகின் உச்சபட்ச மருத்துவ வசதிகளோடும், மருத்துவமனைகள் இப்பொழுது கட்டப்பட்டு வருகின்றன. இங்கே தங்கி மருத்துவ அறுவை சிகிச்சை செய்து குணமான பின் ஒரு வாரத்திற்கு மத்திய அரசு வழங்சி சிறப்பு சலுகை கட்டணத்தின் கீழ் தேசம் முழுக்க சுற்றி வரலாம். நோயாளிகளைக் கவனிக்க உடன் வரும் உறவினர்களுக்கும் இதே போன்ற சலுகைகளும், வசதிகளும் வழங்கப்படும். வரும் நிதியாண்டில் இச்சேவைகளுக்கான கட்டமைப்பை உயர்த்த மத்திய அரசு கணிசமான நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளது. ஆனால் இவ்வசதிகள் இந்திய குடிமக்களின் பயன்பாட்டுக்கு அல்ல. இது வெளிநாட்டு மருத்துவ சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் பொருந்தும். காரணம் என்னவென்று கேட்டு முடிப்பதற்குள் அந்நியச் செலவாணி ஈட்டல் என்ற பதில் வரும். அது சரி. "ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குடிசைகளும நட்சத்திர விடுதிகளும் சம அளவில் பெருகிக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதாக இருக்குமா?" என்பதும் "சமச்சீரற்ற கல்வி முறைகள் போல சமச் சீரற்ற மருத்துவ வசதிகளும் பெருகி வழிவது ஒரு தேசத்தின் குடிமக்களுக்கிடையே உளவியல் ரீதியான பதட்டத்தை ஏற்படுத்தி விடாதா?" என்பதும் மில்லியன் டாலர் கேள்விகள்.

கடந்த நிதியாண்டில் ஒட்டு மொத்த தனியார் மருத்துவமனைகளின் லாபம் 62,000 கோடி ரூபாய் என்ற தகவல் வெளி வந்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் இந்த லாப விகிதம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று நம்பப்படுகின்றது. ஆகையால் அடுத்த ஆண்டு வாக்கில் போர்டில் ஹைல்த்கேர் 1970 கோடி ரூபாய்க்கும் அப்போல்லோ 800 கோடி ரூபாய்க்கும் மருத்துவமனைகளில் முதலீடு செய் உத்தேசித்துள்ளது. இங்கு மிக முற்றிலும் மாறுபட்ட, இதுவரை கேள்விப்பட்டிராத , அதிநவீன மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், அரபு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து முக திருத்தம் ( Cosmetic ) இதய நோய் அறுவை சிகிச்சைகள், மூட்டு மாற்று சிகிச்சை மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்ய இந்தியாவிற்கு வந்துள்ளனர். மருத்துவ காப்பீடு பெற முடியாதவர்கள், நீண்ட காத்திருத்தல்களுக்கான நோய் எதிர்ப்பு திறன் இல்லாதவர்கள் குறைந்த செலவுடன் உடனடி மருத்துவத்தை விரும்புபவர்கள் மற்றும் இவற்றோடு வெளிநாட்டு சுற்றுலாவை திட்டமிடுபவர்கள் ஆகியோர் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கின்றனர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் சுற்றுலா மருத்துவ துறையில் நூறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.



இந்தியாவின் ஒரு வருடத்திய மருந்துப் பொருட்களின் விற்பனை சுமார் இருபத்தி ஐயாயிரம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. நமது நாட்டு ஏழை மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள எழுபது சதவீதம் பேர் வருடத்திற்கு சுமார் ஐந்நூறு ரூபாய்க்கும் கீழ்தான் மருந்துப் பொருட்களுக்காக செலவிடுகின்றார்கள். மீதியுள்ளவை நடுத்தர, உயர் நடுத்தர பணக்கார குடும்பங்களால் வாங்கப்படுகின்றன. நம் நாட்டில் மருத்துவ சேவை துறை சமச்சீரற்ற முறையில் இயங்குகின்றது என்பதை மேற்கூறிய புள்ளி விவரம் மூலம் எளிமையாக புரிந்து கொள்ளலாம். இச்சூழலில் நமது அரசு மருத்துவ சுற்றுலா என்ற பெயரில் நட்சத்திர அந்தஸ்துடன் கூடிய மருத்துவமனைகளை கட்ட தனியாரை ஊக்குவிக்கின்றது. இதனால் ஏற்படும் எதிர்கால விளைவுகளை ஆராய்வது நம் கடமையாகும். தேவைக்கதிகமான, நுணுக்கமான மருத்துவ பழக்கங்களை ( Treatment Habits ) இந்தியர்களுக்கு புகுத்துதல், சாதாரண தட்ப வெப்ப மாறுதல்கள் மற்றும் உணவு பழக்க மாறுதல்களாக ஏற்படும் எளிய தற்காலிக நோய்களை கூட பூதக் கண்ணாடி கொண்டு பார்க்கும் கலாச்சாரத்தை ஏற்படுத்துதல் போன்றவை நம் இந்தியர்களுக்கு தேவையில்லாததும், பெரும் செலவை உண்டாக்கக் கூடியதுமாகும். பன்னாட்டு மருத்துவமனைகளின் பெருக்கம் இவை போன்ற உளவியல் பதட்டங்களை நடுத்தர வர்க்கத்தினரிடையே உருவாக்கி விடுமோ? என்ற அச்சம் உருவாகியுள்ளது.

நமது நாட்டின் அறுபது சதவீதம் பேருக்கு சாதாரண அடிப்படையான மருத்துவ வசதிகள் கூட உடனடியாக பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் இல்லாத சூழல் நிலவுகின்றது. தமிழ்நாடு, கேரளா போன்ற ஓரளவு முன்னேறிய மாநிலங்களைத் தவிர மீதியுள்ள பகுதிகளில் பெண் குழந்தை இறப்பு, மகப்பேற்றின் பொழுது தாய் இறந்து விடுதல் ஆகியனவற்றை எவ்வளவு போராடியும் முப்பது சதவீதத்தில் இருந்து இன்னும் குறைக்க முடியவில்லை. கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் மலேரியா, சிக்குன்குனியா மற்றும் ஜப்பானிய மூளைக் காய்ச்சல் ஆகியவற்றின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதியவர்களுக்கு நோய் அறியும் திறன், சிகிச்சை முறைகள் மற்றும் ஆலோசனைகள் ஆகியவற்றில் நாம் இன்னும் ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளோம். தரம் குறைந்த, போலியான மருந்துகள் கட்டுப்பாடுகள் இன்றி சுலபமாக சந்தையில் கிடைக்கின்றன. மெத்தப் படித்தவர்களே உண்மையான மருந்துகளுக்கும் போலிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றார்கள். மருத்துவ ஆய்வகங்கள், பரிசோதனைக் கருவிகள், அறுவை சிகிச்சை வசதிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் நிறைந்த பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில்தான் இயங்கிக் கொண்டுள்ளன.



நிறுவன மயமாக்கப்பட்ட மருத்துவமனைகள் அனைத்தும் பெரும்பாலும் மருத்துவக் காப்பீட்டு நோயாளிகளை நம்பியே நடத்தப்படுகின்றது. நம் நாட்டில் மூன்றிலிருந்து ஐந்து சதவீதம் பேர்தான் மருத்துவ காப்பீடு வசதியை பெற முடிந்திருக்கின்றது. சாதாரண பருவ கால நோய்களுக்கான மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளுக்கு கூட காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவமனைகளுக்கு பணம் செலுத்துகின்றன. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் மருத்துவமனைகள் காப்பீட்டு நோயாளிகளின் உடம்பை ஏ.டி.எம். இயந்திரங்களைப் போல பார்க்க ஆரம்பித்து விட்டன. ஒரு குறிப்பிட்ட நோய் அறிகுறிகளுடன் குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வருகை புரியும் நோயாளிகள் ஏற்றத் தாழ்வுடன், வெளிப்படையாக, கூச்சமின்றி மருத்துவ வசதி பெறுகின்றனர். மருத்துவ காப்பீட்டு நிறுவனங்களும், மருத்துவமனைகளும், பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களும் நோய் குறித்த போலியான , மிகைப் படுத்தப்பட்ட அச்சுறுத்தல்கள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டுகின்றன .

மருத்துவத் துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீடு, நிறுவனமயமாக்கப்பட்ட மருத்துவமனைகள் அதிகரிப்பு, தனியார் மருத்துவ கல்லூரிகள் அதிகரிப்பு ஆகியவற்றில் திறமையான மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பணியமர்த்தப் படுவதால் அரசு மருத்துவமனைகளை வெறுக்கும் சூழல் உருவாகிக் கொண்டுள்ளது. சமச்சீரற்ற மருத்துவ வசதிகள் பொது மக்களிடையே இனம் புரியாத ஏக்கத்தையும், ஏமாற்றத்தையும் உருவாக்கும். தங்களுக்கு இதுவரை கிடைத்து வந்த மருத்துவ முறைகள் மற்றும் மருத்துவ வசதிகள் மீது நம்பிக்கை இழக்கச் செய்யும்.



சமச்சீரற்ற மருத்துவ முறைகளைக் களைந்து உணவு, உடை, இருப்பிடம் போல மருத்துவ வசதியையும் அடிப்படை உரிமையாக நமது தேசத்தின் குடிமகன் பெற்றாக வேண்டும். நோயின் அறிகுறிகள், நோய் தடுப்பு முறைகள், மருந்துப் பொருட்களின் சேர்மானங்கள், அறுவை சிகிச்சை அவற்றுக்கான கட்டணம், உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலை ஆகியவை பற்றி நம் தேசத்தின் குடிமக்கள் விழிப்புணர்வு பெற, நேரடியாக நுகரும் உரிமை பெற வழி வகை காண வேண்டும். இவை குறித்து கண்காணிக்க பாராளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட வேண்டும். மேலும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு நிகராக உயர்த்துதல், தாலுகா அளவில் அறுவை சிகிச்சை வசதிகளுடன் ( இதயம், சிறுநீரகம், புற்றுநோய் வரை ) மருத்துவமனைகளை உருவாக்குதல், முழு நேர பட்டதாரி மருத்துவர்களுடன் ஊராட்சி அளவில் சிறு மருத்துவமனைகளை உருவாக்குதல் ஆகியவை குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும் சூழல் உள்ளது. பெரும் மருத்துவமனைகள் குறிப்பிட்ட அளவிற்கு இலவச அறுவை சிகிச்சைகளை ஏழைகளுக்கு வழங்குவதை கட்டாயமாக்குதல், அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சலுகை கட்டணத்தில் குறைத்தல் மற்றும் கட்டாயமாக்குதல் ஆகியவற்றில் மத்திய அரசு உடனடி கவனம் செலுத்துதல் வேண்டும். பொருளாதார தாராளமயமாக்குதல் மற்றும் உலகமயமாக்கலின் நெருக்கடியில் மாட்டிக் கொண்ட நம் தேசம் விளைவுகளைப் பற்றி கவலை ஏதுமின்றி மருத்துவ சோசலிஸத்தையாவது உடனடியாக அமுல் படுத்திட வேண்டும்.

மருந்தும், மனமும் சேர்ந்தால்தான் நோய் தீரும் என்று எல்லா மருத்துவ முறைகளும் (நம் பாரம்பர்ய மருத்துவம் உள்பட) நம்புகின்றன. நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க மனிதர்களின் மனம் ஒப்பீடு செய்துதான் எதையும் ஒத்துக் கொள்ளும். உணவு விடுதிகளைப் போல, கல்விச் சாலைகளைப் போல மருத்துவமனைகளும் சமச்சீரற்று, ஏற்றத்தாழ்வுடன் உருவாக ஆரம்பித்தால் நோய் குணமடையும் திறன் குறைய ஆரம்பிக்கும். ஆகையால் அரசு கவனமாகவும், உடனடியாகவும் மருத்துவ துறைகளில் அக்கறை செலுத்திட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் மீது நம்பிக்கை குறைத்திட அரசே காரணமாய் இருந்து விடக் கூடாது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p21.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License