இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தம்முன் தாம் வரும் எண்ணுப் பெயர்கள்


முனைவர் த. கண்ணன்
பேராசிரியர், அரிய கையெழுத்துச்சுவடித்துறை
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர் – 613010.


தொல்காப்பியம் எண்கள் புணரும் நிலையை மூன்று நிலைகளில் நோக்கியுள்ளது.

1. மிக்க எண்ணுடன் குறைந்த எண் புணர்தல்

2. குறைந்த எண்ணுடன் மிக்க எண் புணர்தல்

3. சமஅளவிலான எண்கள் புணர்தல் (தம்முன் தாம் புணர்தல்)

இவற்றுள் மிக்க எண்ணுடன் குறைந்த எண்கள் புணர்வதையும் அந்நிலையில் அப்புணர்ச்சியானது உம்மைத்தொகையாக அவ்விரு எண்களின் மதிப்பு கூடுதல் முறையில் அமைவதும் அறியப்படுகிறது. குறைந்த எண்ணுடன் மிக்க எண் புணருமிடத்து அது பண்புத் தொகையாகவும் அந்த எண்ணின் மதிப்பு பெருக்கல் மதிப்பாக அமைவதும் அறியப்படுகிறது.


ஒரே எண்கள் தம்முன் தாம் புணர்வதைத் தொல்காப்பியம் சுட்டுகிறது.

தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய புணரியல் நிலையிடை உணரத் தோன்றா” (தொல்.எழுத்.482: 8-11)

என்று சுட்டுகிறது. இதனை விளக்கும் இளம், “ஓரொன்று என இது, தம்முற்றாம் வந்த எண். இது நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அன்மையிற் புணர்க்கப்படாதாயிற்று. இது தானே ஓரொன்றாகக் கொடு என்புழிப் புணர்க்கப்படும்” என்றுரைக்கிறார் நச்சர், “இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன்றென்பதும் அது. அதுதானே ஓரொன்றோரொன்றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும்” என்றுரைக்கிறார். இவற்றால் ஓரொன்றாகக் கொடு எனும் சான்றின் வழி ஓரொன்று என்பது ஒன்று + ஒன்று என நிலைமொழியாகவும் வருமொழியாகவும் அமைந்த சொல்லாகப் பிரிந்து நின்று ஓரொன்று எனப் புணர்ந்தவை அல்ல என்பதும் இவை ஒருசொல் நீர்மைத்தாய் ஓரொன்று என நின்கிறது என்பதும் விளங்கும். எனினும் ஓரொன்று என்பதனுள் ஒன்று என்னும் எண்ணுப்பெயர் தம்முன்தாம் வந்தனவாக அமைந்த போதும் அச்சொல் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் அமைந்து புணர்ந்த புணர்ச்சியல்ல என்பதைச் சுட்டுகின்றனர் உரையாசிரியர். இவ்வாறே பத்து எனும் எண்ணுப்பெயர் தம்முன் தாம் வந்து ஒருசொல் நீர்மைத்தாய் நிற்பதையே நச்சர், “பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது, பப்பத்தெனவும், பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க“ என்றுரைக்கிறார்.

மேற்சுட்டிய சான்றுகளின் அடிப்படையில் எண்ணுப்பெயர்கள் தம்முன்தாம் வந்த போதும் அவை நிலைமொழி வருமொழி எனப் பிரிந்து நில்லாது ஒருசொல் நீர்மைத்தாக நிற்கும் என்பதை அறிகிறோம்.


இவ்வாறு ஒரு சொல் நீர்மைத்தாக அமைவதற்கான காரணம் இவ்விரு சொற்களிலும் நிலை மொழியின் திரிபு வரையறையின்றி அமைவதால் அதனை புணர்மொழியாகக் கொள்ள இயலாது என்பதை ச.பாலசுந்தரம் விளக்குகிறார். இதனை, “ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நன்னான்கு, அவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, ஒன்னொன்பது, பப்பத்து என அளவைப்பொருட்டாய் வழக்கின்கண் தம்முன் தாம்வரும் எண்ணுப்பெயர்களின் நிலைமொழி வரையறையின்றித் திரிந்து நிற்றலின் அவையும் பிரித்துப் புணர்க்கப்படா என்றார்” எனும் உரைப்பகுதியால் அறியலாம்.

தம்முன் தாம் வந்து புணர்க்கப்படும் எண்ணுப்பெயர்களின் மதிப்பு என்ன என்பது வினாவாக எழுகின்றது. ஒன்று முதல் பத்து வரையிலான எண்கள் தம்முன் தாம் வருவதை உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டினர். இவை அளவைப்பொருட்டாய் வழக்கின்கண் தம்முன் தாம் வருவன என்பதை ச.பாலசுந்தரம் குறிப்பிடுகிறார். இதனால், இந்த எண்களின் அளவை மதிப்பு என்பது வழக்கில் உள்ளது என்பது விளங்குகிறது.

ஒவ்வொன்று என்றவழி ஒன்றும் ஒன்றும் என்று உம்மையாக அமைவதில்லை. அவ்வாறு அமைந்தால் அதன் மதிப்பு வேறுபட்டுவிடும். இவ்விரண்டு என்பதும் அவ்வாறே உம்மைத் தொகையாக அமைவதில்லை. முன்மூன்று என்றவழி உம்மைத்தொகையாக அமைவதில்லை என்பதுடன் அவை பண்புத்தொகையாகவும் அமைவதில்லை.

இந்நிலையில் இந்த எண்ணுப் பெயர்களின் மதிப்பு, அதன் மதிப்பிலிருந்து மாறுபடாத ஒன்றாகவே அமைகின்றன என்பதும், பத்து என்பதும் பப்பத்து என்பதும் அளவில் மாறுபடுவதில்லை என்பதும் அளவை முறையில் பத்துப் பத்தாக அளவிடுதல் என்ற முறையில் இந்த எண்ணுப்பெயர்கள் இவ்வாறு சுட்டப்படுகின்றன என்பதும். இந்த எண் மதிப்பில் இரண்டு எண்களின் எண் மதிப்பு அடங்கவில்லை என்பதும் ஒரே எண் அடுக்கிய போதும் அவை ஒரு சொல் நீர்மைத்தாகவும் அந்த எண்ணிற்கான மதிப்பளவாகவே நிற்பதும் நன்கு விளங்குகிறது.

தம்முன் தாம் நிற்கும் எண்கள் உறழச்சிப்பொருளாக அமைவதை ச.பாலசுந்தரம் குறிக்கிறார். “ஓரொன்று ஈரிரண்டு, மும்மூன்று, நானான்கு, ஐயைந்து, எனவரின் புணர்க்கப்படும். இவை உறழ்ச்சிப்பொருள்பற்றி நிற்கும்” (ப.318) என்றுரைக்கிறார். இவற்றால் ஒன்று x ஒன்று, இரண்டு x இரண்டு, மூன்று x மூன்று, நான்கு x நான்கு, ஐந்து x ஐந்து என நின்று இவற்றின் மதிப்பு பெருக்கல் முறையில் அமைகின்ற பொழுது, அச்சொற்கள் நிலைமொழியாகவும் வருமொழியாகவும் புணர்க்கப்படும் என்பதும் அந்நிலையில் அச்சொற்களின் மதிப்பு பெருக்கல் மதிப்பாக உறழ்ச்சிப் பொருளில் அமையும் என்பதையும் அறியமுடிகிறது.


முடிவுரை

இரண்டு எண்கள் இணைந்த எண்ணுப்பெயர்களும் அதன் மதிப்பும் மிக நுட்பமாக ஆளப்பட்டுள்ளன. மிகுந்த எண்ணுடன் அதன் மதிப்பில் குறைந்த எண் தொடர்ந்த மதிப்புக் கூட்டலாக அமைகிறது. இந்நிலையில் அதன் எண்ணுப்பெயர் உம்மைத் தொகையாக அமைகிறது. குறைந்த மதிப்புடைய எண்ணுடன் மிகுந்த மதிப்புடைய எண் தொடர்கின்ற பொழுது அதன் மதிப்பு பெருக்கல் மதிப்பாக அமைகிறது. இந்நிலையில் அதன் எண்ணுப் பெயர் பண்புத்தொகையாக அமைகிறது. சம அளவிலான எண்கள் தொடர்ந்து அமைவதைத் தொல்காப்பியம் தம்முன் தாம் வருதல் என்றுரைக்கிறது. இந்நிலையில் அதன் மதிப்பு மேற்சுட்டிய இரண்டில் இருந்தும் மாறுபட்டு அமைகின்றன. அவ்விரு சொற்களின் சேர்க்கையும் நிலைமொழி வருமொழி எனக் கொள்வதற்கு இயலாதன என்பதையும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். தம்முன் தாம் வரும் எண்கள் பெருக்கல் முறையில் அமைவதும் உண்டு என்பதை ச.பாலசுந்தரம் விளக்குகிறார்.

ஆய்வுத்துணை நூல்கள்

* இளவழகம்.கோ.(ப.ஆ), (2003), தொல்காப்பியம் பொருளதிகாரம், பேராசிரியம் – 2, தமிழ் மண் பதிப்பகம், சென்னை. * இளவழகம்.கோ. (ப.ஆ), (2003), தொல்காப்பியம் எழுத்ததிகாரம், இளம்பூரணம், தமிழ் மண் பதிப்பகம், சென்னை. * இளவழகம்.கோ.(ப.ஆ), (2003), தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியம், தமிழ் மண் பதிப்பகம், சென்னை. * கோபாலையர்.தி.வே, தமிழ் இலக்கணப் பேரகராதி, தமிழ் மண் பதிப்பகம், சென்னை. * பாலசுந்தரம்.ச. பாவலரேறு, தொல்காப்பியம், தொகுதி -1, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் -11. * பாலசுப்பிரமணியன்.க, (2016), தொல்காப்பியச் சொற்பொருளடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p252.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License