இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

மழைத்துளிக்குள் மனிதன்

எஸ். எஸ். பொன்முடி


கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு, கன்னத்தில் குழியழகு, கார்கூந்தல் பெண்ணழகு என்று வகைப்படுத்தும் கவிஞர் வைரமுத்துவின் அழகழகான கவி வரிசைகள், ரசனைகள் ஆளுக்கு ஆள் வேறுபடும். ஆனால் அதன் தொடர்ச்சியாய் வரும் “மழை நின்ற பின்னாலும் இலை சிந்தும் துளியழகு” என்னும் கவிதைவரி அழகை காட்சிப்படுத்துகின்றது. மழை பெய்வதற்கு முன்னால் மற்றும் மழை ஓய்ந்து முடிந்து கொண்டிருக்கும் வேளையில்தான் கவிஞனின் கவிதை மனம் ரசனையென்னும் மேகவெளியில் மெல்ல சிறகடித்துப் பறக்கின்றது. ஆங்காரமாய், ஓங்காரமாய் ஊழிப்பேயின் விசையோடு மழை சுழன்றடிக்கும் பொழுதுகளை காப்பியங்களும், கவிதைகளும் விவரித்திருக்கின்றன.

சூரிய வெப்பத்தினால் பூமியிலும் கடலிலும் உள்ள நீர் ஆவியாகி மேகங்களாகத் திரண்டு மழையாக பொழிகின்றது என்று எழுத ஆரம்பித்தால் இது பள்ளிக் குழந்தைகளுக்குக் கூடத் தெரியுமே என்று பதட்டப்பட வேண்டாம். ஆனால் சூரிய வெப்பம், கடல், ஆவி , மேகங்கள், மழைத்துளி ஆகியவை பற்றி இன்னும் கொஞ்சமே கொஞ்சம் விரிவாய் தெரிந்து கொண்டால் யாரும் கோபித்து கொள்ளப்போவதில்லை.

பூமியில் உள்ள தண்ணிரில் 97 சதவீதம் கடலாக உள்ளது. மீதியுள்ள 3 சதவீதம் பனியாக, பனிமலையாக, நிலத்தடி நீராக, ஏரிகளாக, குளங்களாக உள்ளது. அதைப்போல சூரியன் வெப்பத்தை நேரடியாக பூமிக்கு அனுப்பவதில்லை. அகச்சிவப்பு கதிர்கள் வழியாக வெப்பம் அனுப்பப்படுகின்றது. எந்தப் பொருளின் மீது பட்டாலும் அப்பொருளை சூடாக்கிவிடும் குணம் படைத்த அக்கதிர்கள் காற்றைச் சூடாக்கி அடர்த்தி குறைத்து மேலே அனுப்பிவிட்டு பின் பூமிக்கு வருவதால் பூமி சூடாகின்றது.

இந்த அகச்சிவப்பு கதிர் தண்ணீரை முட்டி ஆவியாக்கி, மேலே சென்று நீர்த்துளிகளாகி மேகமாகின்றது என கன்னங்கரேல் அல்லது கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும், மழையை உருவாக்கும் மேகத்திற்கு “கியூமுலோ நிம்பஜஸ்” என்று பெயர். இடி மின்னலை உருவாக்கும் மேகத்திற்கு “ஸ்ட்ரேட்டஸ்;” என்றும் “ஸிர்ரெஸ்” என்றும் பெயர். சுருக்கமாகச் சொன்னால் ஆவியாகி துளிகளாகி, மேகமாகி, துளிகள் அதிரித்து, கனத்துப் பெரிதாகி மழையாக விழத்துவங்குகின்றன.



காதலர்களும், புதுக்கவிதை எழுதுபவர்களும், சிறு குழந்தைகளும், சினிமா டைரக்டர்களும், மொட்டை மாடிக்குச் செல்லும் வாய்ப்புள்ள நகரத்துக்காரர்களும், ஊட்டி, கொடைக்கானல் இளம் தேனிலவு தம்பதிகளும் மிக விரும்பும் “தூறல்” உருவாகும்விதம் சற்று வித்தியாசமானது. வானவெளியில் வெப்பக்காற்றும் குளிர்காற்றும் எதிரெதிரே உரசிக்கொள்ளும் சந்திப்பின்போது குளிர்காற்று மண்டலத்தை வெப்பம் உறிஞ்சிக் கொள்கின்றது. இதன்மூலம் ஒருவகை வெப்பமுகப்பு உருவாகின்றது. மேற்கிலிருந்து கிழக்காக வெப்பக்காற்று வீசும் பொழுது சக்தியிழந்த குளிர்காற்று பூமியை நோக்கி வரும் பொழுது நேரே விழுவதற்குப் பதில் சற்று சாய்வான கோணத்தில் விழுகின்றது. இது போன்ற சாய்வான, லேசான மழைத்துளிகளின் பொழிவை ஜலதோஷம் பிடிக்கும் வரை நனைந்து கொண்டே சந்தோஷமாய் “தூறல்” என அழைக்கின்றோம்.

தமிழகத்தில் பெய்யும் மழையில் தென்மேற்கு பருவ மழையின் பங்கு 33 சதவீதமாகவும், வடகிழக்கு பருவ மழையின் பங்கு 49 சதவீதமாகவும் மீதமுள்ள 18 சதவீதம் கோடை மற்றும் அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் உண்டாகும் மழையாகும். தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு மேற்கண்ட எந்தவகை மழையும் பெய்யாத பொழுது கடும் பஞ்சம் ஏற்படுகின்றது. அந்த காலகட்டங்களில்தான் ஊர்விட்டு ஊர் பஞ்சம் பெயர்தலும், பட்டினிச் சாவுகளும் மிகுந்து காணப்படுகின்றன. அக்காலக் கட்டங்களில் நம் தமிழகத்தில்,

பூமியை நம்பியல்லோ, புள்ளைகளை பெத்துபோட்டோம்
ஐயோ வருணதேவா
பூமி செழிக்கவில்லை, புள்ளை வயிறு வாடறதே
ஐயோ வருணதேவா

என்று புலம்பிக் கொண்டு மழைக்கஞ்சி காய்ச்சுகின்றனர். அரிசி, சோளம், கம்பு ஆகிய தானியங்களை இடித்து மாவாக்கி உப்பில்லாமல் பொது இடத்தில் காய்ச்சிய மழைக்கஞ்சியை உண்டால் வருணதேவன் மனமிறங்கி மழை பொழிய ஏற்பாடு செய்வார் என நாட்டுப்புறங்களில் அழுத்தமான நம்பிக்கை நிலவுகின்றது.


இந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழை தொடர்ச்சியாக அதிக வேகத்துடன் பெய்ததால் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெளியுலக தொடர்பிழந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. “வைகை பெருக்கெடுத்ததால் வைகை நின்று போனது” (ஆறு/ரயில்) என்று நாளிதழ்கள் தலைப்பிடும் அவலநிலை, தென் மாவட்டங்கள் முற்றிலும் தலைநகர் சென்னையோடு அனைத்து தரைவழிப் போக்குவரத்து மார்க்கங்களிலும் துண்டிக்கப்பட்டது நீண்ட வருடங்களுக்குப்பின் இதுவே முதன்முறை. இதுபோன்ற வெள்ள அபாயங்கள் நமக்கு பலப்பல படிப்பினைகளை ஏற்படுத்தியுள்ளது.

பேரிடர் மேலாண்மை இயற்கை சீற்றங்களின் போது அரசு அதிகாரிகளும், மக்களும் செயல்படும் முறை, அது சம்பந்தமான பயிற்சிகள், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் இனிமேல் வடிவமைப்புகளையும் உத்திகளையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம். பேரிடர் நேரங்களில் அல்லலுறும் மக்களுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கிடையே சுமூகமான, நல்லிணக்க உடனடி நடவடிக்கைகள் இனிவரும் காலங்களில் மிகவும் அத்தியாவசியமானதும் அவசியமானதுமாகும்.

மனித சமுதாயம் தழைத்தோங்க இடைவிடாத, ஒழுங்கான தண்ணீர் சுழற்சி தேவைப்படுகின்றது. மனிதர்களின் கண்ணீர்த் துளிகள் காணாமல் போக வேண்டுமெனில் இந்த மண்ணுக்கு மழைத்துளிகள் கட்டாயம் தேவை. அளவுக்கு மீறி நஞ்சாய் அல்ல, அளவுடன் அமிர்தமாய் வேண்டும் மழைத்துளிகள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p29.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License