இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

தமிழ்த் தொலைக்காட்சியும், தொடர்களும் பருந்துப் பார்வை

இரா.விஜயராணி


தொலைக்காட்சி கண்டுபிடிப்பு

இன்று உலகத்தின் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகவும் முக்கியப் பங்கு வகிப்பது தொலைக்காட்சிகளே. இன்றைய நாகரீக உலகில் தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை எனும் அளவிற்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏழை, பணக்காரன், குடிசை, மாடி என்ற எந்தவிதமான பாகுபாடுமின்றி அனைத்து வீடுகளிலும் தனக்கான இடத்தை ஏற்படுத்திய பெருமை இந்தத் தொலைக்காட்சியையே சாரும்.

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பல வடிவங்களில், வண்ணங்களிலும் இருக்கும் தொலைக்காட்சி முதன்முதலில் கருப்பு - வெள்ளையாகவே கண்டுபிடிக்கப்பட்டது. அப்பொழுது இந்தக் கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சி மிகப்பெரும் புரட்சியாகவே கருதப்பட்டது.

முதன்முதலில் கருப்பு - வெள்ளை தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் ரஷ்யாவைச் சேர்ந்த ஹோவன்னேஸ் அடமியான் (Hovannes Adamian) ஆவார். இவர் முதன் முதலில் கருப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிமுகப்படுத்தினார். முதன்முதலில் இதனைப் பார்த்த சில மக்கள் இதில் எப்படி மனிதர்களைப் பிடித்து இப்படி அடைத்தனர் என்ற அதிர்ச்சியுடனே பார்த்தனர். பிறகுதான் இது ஒரு பொழுதுபோக்குச் சாதனம் என்று தெரிய வந்தது.

கருப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்த ஹோவன்னேஸ் பிறகு வண்ணத் தொலைக்காட்சியைக் கண்டுபித்தார். முதன்முதலில் கண்டுபிடித்த தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரிதாகவே இருந்தன. இவற்றில் சேனல்களை மாற்ற எண்ணினாலும் அல்லது சத்தத்தைக் கூட்டவோ குறைக்கவோ நினைத்தாலும் எழுந்து சென்றே மாற்றினர்.

அப்பொழுது ‘ரிமோட்’ என்ற ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை. ஒவ்வொரு முறையும் எழுந்து எழுந்து சென்று மாற்றுவது சிரமத்தை ஏற்படுத்தின. இதற்கு மாற்றுவழி ஒன்றினைத் தர எண்ணிய அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் அட்லேர் (Robert Adler) என்பவர் தொலைக்காட்சியை உட்கார்ந்த இடத்திலிருந்தே இயக்கும் ரிமோட்டைக் கண்டுபிடித்தார். இவர் இயற்பியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் தொலைக்காட்சி

இந்தியாவில் தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் கடந்த முப்பது ஆண்டுகளையொட்டியே அமைகிறது. இதன் முதல் பதினேழு ஆண்டுகளில் கருப்பு - வெள்ளையில் வளர்ச்சி மெதுவாக நிகழ்ந்தது. காரணம் இந்தியாவின் “கலாச்சாரக் காவலர்களும்” ஏன்...? ஒரு சில “அறிவு ஜீவிகளும்” கூட. அது ஒரு ஆடம்பரம் என்றும், அதன் தேவை இன்றியே இந்தியர்கள் வாழ முடியும் என்றும் கருதினர். 1977-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தொலைக்காட்சிப் பெட்டிகளின் விற்பனை 676615 தான். ஆனால், இந்தியாவில் தொலைக்காட்சி முன்னிலை பெற்றது கடந்த 25 ஆண்டுகளாகத்தான். இன்னும் சரியாகச் சொல்வதானால், கடந்த இருபது ஆண்டுகளில் அதிக வளர்ச்சியைக் காட்டியது இந்தியத் தொலைக்காட்சித்துறை.

இரண்டு மிக முக்கியமான நிகழ்வுகள் இத்திருப்பத்திற்குக் காரணமாக அமைந்தன.

1. 1982-ல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தூர்தர்ஷன் வண்ணத்தில் ஒளிபரப்பியது. இதற்கென நாடு முழுவதும் தரைத்தள நிலையங்கள் விரைவாக நிறுவப்பட்டன.

2. தொண்ணூறுகளின் முற்பகுதியில் சி.என்.என்., ஸ்டார் டிவி போன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்களும், ஜீ டி.வி, சன் டிவி முதலிய உள்நாட்டுத் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களும் இந்தியாவில் ஒளிபரப்பைத் துவங்கின.

இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்தியர்கள் இதுவரை பார்த்தறியாத பார்வை இன்பத்தைத் தொலைக்காட்சி எனும் காட்சி ஊடகத்தில் அளித்தன.

1991-ல் நடைபெற்ற வளைகுடா போரைக் காண இந்திய மேட்டுக்குடி மக்களின், மொட்டை மாடிகளில் டிஷ் ஆன்டெனாக்கள் முளைத்தன. ஆனால், இது மக்களிடம் பரவலாவதற்குத் தடைகள் இருந்தன. அதற்குக் காரணம் அறிவியல் வளர்ச்சியில் உருவாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் அல்லது தொழில் நுணுக்கமும் அதன் செயலாக்கம் என்பது அரசின் சட்ட திட்டத்தை ஒட்டி அமைவதுதான்.



இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலும் இதுதான் நிகழ்ந்தது. 1990-களில் தொடங்கிய செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் சிறப்பாகச் செயல்படத் தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகள் ஏதுவாக இருந்தாலும் அரசின் கொள்கைகள் சில தடையாக இருந்தன. எப்படி? செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டாலும், செயற்கைக் கோளிலிருந்து (Sattelite) நேரடியாக இணைப்புப் பெற்று (Up Link) நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் இவை தமது நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு அனுப்பி அங்கிருந்து தரைநிலையங்கள் மூலம் செயற்கைக்கோள் இணைப்புப் பெற்று இந்தியாவில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.

இந்த வகையில் சன், ஏஷியா நெட், ஈநாடு, என்.இ.பி.சி. போன்ற தொலைக்காட்சிகள் இண்டல்சாட் எனும் செயற்கைக் கோளில் 13 டிரான்ஸ் பாண்டர்களை வாடைகையாகப் பெற்றும், விஜய், ராஜ், ஸ்டார், ஜி, எம்., சோனி, டிஸ்கவரி தொலைக்காட்சிகள் தாய்காம், ஏஷியாநெட், ரிம்சாட், பிஏஎஸ் எனும் நான்கு செயற்கைக்கோள்களிலிருந்தும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பின.

இதனால் மிகுந்த அந்நியச் செலவாணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் அதிகக் காலதாமதமும் ஏற்பட்டு வந்தது. தனியார் தொலைக்காட்சிகள் எப்போதாவது சிறப்பு அனுமதி பெற்று வி.எஸ்.என்.எல் மூலம் முக்கியமான செய்தி அறிக்கைகளை அந்தந்த செயற்கைக் கோளுக்கு அனுப்பி, மீண்டும் அவை கேபிள் முகவர்களின் டிஷ் ஆன்டனாவில் பெறப்பட்டு ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆயினும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தூர்தர்ஷன் மட்டும் எந்தவிதச் சிக்கலும் இடையூறுமின்றி இத்துறையில் ஆதிக்கம் செலுத்தியது. கிரிக்கெட் மட்டும் தேர்தல்காலச் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளை வி.எஸ்.என்.எல் மூலம் நேரஞ்சல் செய்வதற்கான ஏகபோக உரிமையை அது பெற்றிருந்தது.

இத்தகைய வசதியும் வாய்ப்பும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படாததால் வெளிநாடுகளுக்கு அனுப்பி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதன்மூலம், அவற்றிற்கான அந்நியச் செலவாணி விரயமும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் பெரும் காலதாமதமும் ஏற்பட்டன.

பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து இந்திய அரசு தனது ஒளிபரப்புக் கொள்கைகளை மாற்றி அமைக்க முன் வந்தது. இதன்படி, அக்டோபர் 1988-ல் புதிய ஒளிபரப்புக் கொள்கைகள் அறிவிக்கப்பட்டன. புதிய ஒளிபரப்புக் கொள்கையின் படி, இந்தியர்களின் பங்கு 80 சதவீதத்திற்கும் குறையாமல் இருக்கும். இந்திய ஒளிபரப்பு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்தே, செயற்கைக் கோளுடன் நேரடி இணைப்புச் செய்ய அனுமதிக்கப்பட்டது. தொலைக்காட்சி வரலாற்றில் நிகழ்ந்த இந்த மாபெரும் மாற்றத்தின் மையத்தளமாக சென்னைதான் விளங்கியது.



தமிழ்நாட்டில் அரசு தொலைக்காட்சி நாடகங்கள்

அரசு தொலைக்காட்சியில் கால் மணி, அரை மணி, முக்கால் மணி, ஒரு மணி, ஒன்றரை மணி என ஒளிபரப்புக் கால அளவை அமைத்துக் கொண்டு நாடகங்களை ஒளிபரப்பினார்கள். தொழிலாளர் நிகழ்ச்சி, குடும்ப நிகழ்ச்சி, கிராமத்து நிகழ்ச்சி முதலானவற்றில் இவை இடம் பெற்றன. சமூக நாடகங்கள், துப்பறியும் நாடகங்கள், இலக்கிய நாடகங்கள், நகைச்சுவை நாடகங்கள், வரலாற்று நாடகங்கள் என்று தூர்தர்ஷன் பலவகையாக ஒளிபரப்பு நிகழ்த்தியுள்ளது.

சாதிக் கொடுமை, வரதட்சணைக் கொடுமை, குடும்ப உறவில் ஏற்படும் சிக்கல்கள், இலட்சியக் கருத்துகள், ஒழுக்க நெறிகள் முதலான பல செய்திகளை உள்ளடக்கிய நாடகங்களை ஒளிபரப்பியுள்ளது. தெனாலிராமன் கதை, விக்கிரமாதித்தன் கதை முதலான கதைகளையும் அலையோசை, சித்திரப்பாவை முதலான புதினங்களையும் நாடகங்களாக்கி ஒளிபரப்பியிருக்கிறது.

முதல் நாடகம்

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் ‘நேற்று இன்று நாளை’ என்பது இதன் ஆசிரியர் மௌலி. இதில் யு.ஏ.ஏ. நாடகக் குழுவைச் சேர்நத ஒய்.ஜி. பாரத்தசாரதி, ஒய்.ஜி. மகேந்திரன், ஏ.ஆர். சீனிவாசன் முதலானவர்கள் நடித்தனர். அது தற்கால, எதிர்கால இளைஞர்களின் நடையுடை பாவனைகளைச் சித்திரித்தது. அது அரைமணி நேரம் ஒளிபரப்பானது.



வண்ண நாடகம்

சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணத்தில் தயாரிக்கப்பட்ட முதல் நாடகம் ‘திருமலை நாயக்கர்’ என்னும் வரலாற்று நாடகம். இதன் ஆசிரியர் ஆறு. அழகப்பன். ஹெரான் நாடகக் குழுவினர் இதில் நடித்தனர். இந்நாடகம் 1.30 மணி நேரம் ஒளிபரப்பானது. தேசிய அலைவரிசையிலும் இது ஒளிபரப்பப்பட்டது.

தனியார் தொலைக்காட்சி

1992 முதல் தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகள் தனது சேவைகளைத் தொடங்கின. திரைப்படக் காட்சிகள் அன்றி ஒரு மணி நேரம் நிகழ்ச்சி நடத்த இயலாத இந்நிறுவனங்கள், பணம் சம்பாதிப்பது என்ற ஒரே குறிக்கோளுடன் இயங்குவது மட்டுமன்றி, முடிந்தவரை தமிழ்க் கொலை செய்வதில் ஒன்றுக்கொன்று போட்டிப்போட்டு செயல்பட்டன.

தனியார் தொலைக்காட்சியின் வருகையின் காரணமாக சில தனியார் தயாரிப்பு நிறுவனங்கள் தோன்றலாயின. தனியார் தொலைக்காட்சியின் மூலம் விளம்பரதாரர்கள் தங்களின் தயாரிப்புப் பொருட்களை விளம்பரம் செய்து இதன்மூலம் அதிக இலாபத்தைப் பெற்றனர்.

தனியார் தொலைக்காட்சிகள் மக்களின் முழுநேர பொழுதுபோக்காக மாறின. தனியார் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை அடுத்து தொடர்களை ஒளிபரப்பினர். முதன்முதலாக கே.பாலசந்தர்தான் இந்த தொடர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அவர் ஆரம்பித்த இந்த சிறுதொடர்களே இன்று மெகாத் தொடர் உருவாகும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p48.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License