இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
பொதுக்கட்டுரைகள்

இசையால் இணைவோம்...!

எஸ். எஸ். பொன்முடி


இசைத்துளிகள் நம் காதுகளை எட்டும் வினாடிகளில் நமது மூளை தூங்குவதற்கு எத்தனிக்கின்றது, இதயமோ விழித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றது. இசை என்பது பதின்ம வயதினருக்கானது, திரைப்படத்துறை சார்ந்தது அல்லது திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் டிசம்பர் மாத கச்சேரிகள் சம்பந்தப்பட்டது என்று சந்தைக் கலாச்சாரத்தில் வாழப் பழகிக்கொண்ட நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், உண்மையில் இசை என்பது தமிழர் வாழ்வில் மொழியோடு சேர்ந்து பிறந்து இரண்டறக் கலந்து வளர்ந்து வந்த ஒரு வாழ்வியல் நடைமுறை ஆகும். உண்பதில், உடுப்பதில், வசிப்பதில், வாழ்க்கை முறையில் உலகின் பிற கலாச்சாரங்களுக்கு நாம் முன்னோடிகளாய் இருப்பது போலவே இசையை உருவாக்குவதிலும், அதை ரசிப்பதிலும், இசையை வாழ்வின் ஒரு அங்கமாக இணைத்துக் கொள்வதிலும் நாம் சிறந்து விளங்கியுள்ளோம்.

இந்திய திரைத்துறையைப் பொறுத்த அளவில் பாடல்கள் இடம் பெறாத படங்களை எவ்வளவு எதார்த்தமாகக் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் நம் ரசிகர்கள் நிராகரித்து விடுகின்றார்கள். இதற்குக் காரணம் எந்தக் கலை வடிவத்தையும் இசையோடு சேர்த்தால்தான் நம் இந்திய மனம் ஒத்துக்கொள்ளும், இதை ஒரு நீண்ட பண்பாட்டு தொடர் சங்கிலியின் ஒரு கண்ணியாகவே காண வேண்டும். பெண்ணின் கற்பு, மானம், நாணம், குறித்து நீண்ட வசனம் பேசிய படநாயகி அடுத்த காட்சியில் அரைகுறை ஆடையுடன் ஆபாச அசைவுடன் ஒரு கூட்டத்தோடு பாடி ஆடுவதை நாம் ரசித்துப் பார்க்கின்றோம். இந்த நகைமுரணை நாம் ஒரு நாளும் சிந்தித்துப் பார்த்ததில்லை, இதற்குக் காரணம் பாடலின் இசை தரும் மயக்கம் நம்மை அறியாமலேயே நமக்குள் வீழ்ந்துவிடுவதுதான்.



நம் சமூகத்தின் பிறப்பு, வளர்ப்பு, உழைப்பு, திருமணம், விழாக்கள், சடங்குகள், கொண்டாட்டங்கள், வெற்றி, தோல்வி, இறப்பு என ஒவ்வொரு நிகழ்விலும் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள, சமூகத்தோடு இணைத்துக்கொள்ள ஆதிமனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்ட இயற்கையான வழிமுறைதான் இசை என்னும் கலையாகும். பெரும்பாலும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களை இசை நீட்டிக்க வைக்கின்றது. அதே வேளையில் சோகங்களை இசை பகிர்ந்து கொண்டு குறைத்து விடுகின்றது. உலகில் தோன்றிய பிற நாகரீகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது நம் தமிழ் இனம் மட்டுமே சார்ந்து வாழ்தல், கூட்டாகக் குழுவாக இணைந்து வாழ்தல் போன்ற கலாச்சாரக் கூறுகளை ஆரம்பம் முதல் இன்று வரை கொண்டுள்ளது. தனித்தனியே வாழும் மனிதர்களை கூட்டமாக்கவும், கூட்டமாக வாழும் மனிதர்களை தனித்தனியாக உணர வைக்கவும் மொழியாலும், இசையாலும் மட்டுமே இயலும் என்பதை நாம் உணர்ந்தே வந்துள்ளோம். கற்கள், பாறைகள், மரத்துண்டுகள், மணற்துகள்கள், விலங்கின் நரம்புகள், தோல்கள், எலும்புகள் போன்றவற்றை தனித்தனியாகவும், ஒன்றையொன்று சேர்த்தும், கலந்தும் ஒழுங்கற்ற வடிவில் ஓசைகளை இசையாக மாற்ற முயற்சி செய்துள்ளான் தமிழன். சிரிப்பின், அழுகையின், வியப்பின் மனித ஒலிகளைக் கூர்ந்து கவனித்துள்ளான். இடையில் தற்செயல் நிகழ்வாய் குரலின் ஒலியையும், இயற்கை வழங்கிய திடப்பொருள்களின் ஒலியையும் ஒருங்கிணைக்க ஆரம்பித்து இசையை வடிவமாக்கி, இலக்கணம் கண்டு, வளர்த்து விஞ்ஞானம் தந்த தொழில்நுட்பத்தோடு இயைந்து, வளர்த்து இந்த நொடியில் டிஜிட்டல் ஓங்காரத்துடன் காற்றில் கலந்து விரிய வைத்துள்ளான்.

இன்றைய மனிதன் சுதந்திரமாக வாழ்வதற்கு ஆசைப்பட்டு மாயங்கள் நிரம்பிய இன்னொரு திறந்த வெளிச்சிறையில் அகப்பட்டுக் கொள்கின்றான். அனுதினமும் வெவ்வேறு முகமூடிகளை அணிந்து கொண்டே வீட்டில் இருந்து வெளியே காலடி எடுத்து வைக்கின்றான். பெரும்பாலானவர்களுக்கு முகமூடிகளே முகமாகிப் போகும் அவலங்கள் நிகழ்வதுண்டு. சுயவிருப்பங்களுக்கும் திணிக்கப்படும் விருப்பங்களுக்கும் இடையே நடைபெறும் தினப்போராட்டங்களில் சீக்கிரமே அலுத்துப்போகும் மனிதனுக்கு எங்கிருந்தோ எட்டிப்பார்க்கும் இசை மிகப்பெரிய ஆறுதலை அளிக்கின்றது. பெரும்பாலான நேரங்களில் பாடகனின் குரலும் வெவ்வேறு இசைக்கருவிகள் எழுப்பும் இசைவடிவங்களும் மனிதனின் உள் உடல் உறுப்புக்களாய் பரிணாமம் பெற்று புதுப்புது இரசாயன மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயுள்ளது.



நாடாண்ட மன்னர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு அமைச்சர்களை அமர்த்தியிருந்தது போலவே கலையை வளர்ப்பதற்கு இசைக்கலைஞர்களையும், கவிஞர்களையும் தேர்ந்தெடுத்து அரசவையில் பராமரித்து வந்துள்ளனர். அரச நிர்வாகத்துக்கான விவாதங்களும் மனதை ஈர்க்கும் இசையும் மொழியை வளர்க்கும் இலக்கியமும் அரசவைகளில் இணையாகவே வளர்ந்து வந்துள்ளன. அதைப்போலத்தான் இறைவனை இசையின் மூலம் தொடவும் உணரவும் முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றான் பக்தன். சைவர்கள் திருவாசகம், திருமந்திரம் மூலமாகவும், வைணவர்கள் ஆண்டாள், திருப்பாவை பாசுரங்கள் மூலமாகவும், இவை பற்றியெல்லாம் கவலைப்படாத இல்லறத்துவாசிகள் அம்மன் பாடல்களையும் காலங்காலமாக இசைத்துக்கொண்டே வந்துள்ளனர். உழைப்பவர்களின் வியர்வைத்துளிகளை தெம்மாங்குப் பாடல்களே விசிறியாய் மாறி துடைத்து விட்டு வந்துள்ளன.

இந்தியப் பண்பாட்டில் இன்னும் இளைத்துப் போகாத கூட்டுக்குடும்ப வாழ்க்கையில் இசையின் ரசனை காலங்காலமாய் கலந்தும் வளர்ந்தும் வந்துள்ளன. குடும்ப நிகழ்வுகளில், சடங்குகளில் பெண்கள் பாடல்களை பாடும் வழக்கம் இன்றுவரை தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மணமகள் முதன்முதலாய் புகுந்த வீட்டிற்குள் நுழையும்வேளையில், வளைகாப்பு வைபவத்தின்பொழுது, முதல் குழந்தை பிறந்தப்பிறகு, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு நுழையும்பொழுது, குழந்தையை தொட்டிலில் இடும்பொழுது, இறந்தவரை நினைத்து அழும்போது என மனித வாழ்வின் முக்கிய திருப்பு முனைகளில் பாடல்கள் நம் பெண்களால் பாடப்பட்டு வந்தது. தன் சொந்த வாழ்வின் சோகங்களை, நிறைவேறாத ஆசைகளை, கனவுகளை, எதிர்பார்ப்புகளை, தாலாட்டுப் பாடல்களின் வடிவில் ஒப்பாரிப் பாடல்களின் வடிவில் பெண் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றாள். ஒப்பாரிப் பாடல்களில், தாலாட்டுப் பாடல்களில், தெம்மாங்குப் பாடல்களில், நாடோடிப் பாடல்களில் வாழும் பகுதியின் வரலாற்று நிகழ்வுகள், வாழ்க்கைமுறைகள், கலாச்சாரம், பெண்களின் நிலை, பொருளாதாரச் சூழல் போன்றவை இயல்பான வடிவில் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.



இசையை உருவாக்குபவரும் பாடல் புனைபவரும், பாடுபவரும் இதை ரசிப்பவரும் ஒரே மையப்புள்ளியில் ரசனையாய் இணையும் வித்தை வேறு கலைகளில் நடப்பதில்லை. இசை சில நேரங்களில் நம்மிடம் இருந்தே உருவாகி நம்மையே நமக்கு அடையாளம் காட்டுவது மட்டுமல்லாமல் நம்மையே அதில் தொலைந்து போகவும் வைக்கின்றது. குத்துப்பாடல்கள், வெறும் சத்தப் பாடல்கள், சத்தற்ற பாடல்கள், கானாப்பாடல்கள், மேற்கத்திய, கா;நாடக, தமிழிசை இந்துஸ்தானி பாடல்கள் போன்றவற்றை துள்ளிசையாய் இருந்தாலும் மெல்லிசையாய் இருந்தாலும் நாம் கேட்டு, ரசித்துப் பழக வேண்டும். பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வியையும், பாடல்களையும் இணைத்து கற்றுத் தர வேண்டும். இசைத்தலும், கேட்டலுமாய் வாழும் வாழ்க்கை முறையில்தான் மரணத்தை வெல்ல முடியும். மனிதனைக் காற்றின் வழியே பிரபஞ்சத்தோடு இணைக்க இசையால் மட்டுமே முடியும். திடப்பொருள்களும், திரவப்பொருள்களும் அழிய நேர்ந்தால் இறுதியில் ஒலியும், ஒளியுமே பிரபஞ்சத்தின் வடிவங்களாய்க் காட்சி அளிக்கும். ஆதலால் இசைப்போம்... ரசிப்போம்... உலகோடு இசையால் இணைவோம்...

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/general/p57.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License