இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

கம்பராமாயணத்தில் உடலும் உயிரும்

முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.


கட்டுரையின் தொடர்ச்சி - பகுதி 2

உடம்பு பதறி, உயிர் விடுதல்

அந்த அயோத்தி என்னும் பெரிய நகரம் தன்னை விட்டுப் பிரிதல் இல்லாத உயிர்கள் யாவும் பெருமூச்சுடன் உடம்பு பதறி, நிலைகுலைந்து வருந்துதலாலும், இயல்பாக அமைந்துள்ள சிறந்த அழகு சிதைந்து போனதாலும், கலங்கச் செய்யும் துன்பம் மிகுதலாலும், முற்றிலும் அழியாத ஐந்து பொறிகளும் கலங்குதலாலும், தசரதனைப் போலவே உயிர் விடுகின்றதை ஒத்திருந்தது. (நகர் நீங்கு படலம் 502)

உடலில் தங்கிய உயிரைப் பற்றிக் கொள்ளுதல்

சுமந்திரன், இலட்சுமணனிடம் கேட்ட போது, நல்ல புதல்வனான இராமன் காட்டை அடைந்து, காய் முதலானவற்றை உணவாக உண்ண, தான் நாட்டிலே கிடைக்கும் சிறந்த உணவை விரும்பி உண்கின்ற பொய்யாத அரசனுக்கு, உடலில் தங்கிய உயிரைப் பற்றிக் கொண்டு, இன்னமும் இறந்து போய் மேல் உலகத்தை அடையாதிருக்கும் வன்மையை எடுத்துக் கூறுக என்றான். (தைல மாட்டு படலம் 567)


உயிரில் கலந்த உறவு

வாலி இறந்த செய்தியை அறிந்த தாரை, போர்க்களம் வந்து இறந்து கிடக்கும் கணவன் வாலியைப் பார்க்கிறாள். அவனது உடலிலிருந்து ரத்தம் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது. அப்படியே அவனது உடலில் விழுந்து கட்டிப் புரள்கிறாள். (வாலி வதைப் படலம் 387)

பெருக்கெடுத்து வரும் இரத்தம் தாரையின் உடலையும், கூந்தலையும் நனைத்து விடுகிறது. மலைகள் போன்ற வலிமையான உன் தோள்களிடையே நாள்தோறும் நான் தங்குகின்ற போது, இதனால் வரையிலும் எப்போதும் என்னோடு மாறுபடாத குணத்தை உடையவனே, உனக்கு நேர்ந்த துன்பத்தைக் கண்டதும், இந்நேரம் என் உயிர் பிரிந்திருக்க வேண்டும். அவ்வாறு பிரியாது உன் முன் நின்று கொண்டிருக்கிறேனே, உயிர் துறக்கையில் உடல் இன்பம் அடைவது என்பது உலகத்தில் இல்லை. ஆனால் உலகத்தில் நடக்காத செயலை நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று வருந்தி பேசுகிறாள். என்னை நோக்கி மிக்க அன்புடன் நீயே என் உயிர் என்றாயே, உன் உயிரான நான், இங்கு துன்பமடைய உன் உடல் மட்டும் எப்படி இன்பமடைய முடியும்? அப்படியானால் நீ கூறியது பொய்யோ...

“செருவார்தோள் நின் சிந்தை உளேன்எனின்
மருவார் வெஞ்சரம் எனையும் வவ்வுமால்
ஒருவேனுள் உளை ஆகின்உய்தியால்
இருவேமுள் இருவேம்இருத்திலேம்" (வாலி வதைப் படலம் 396)

இறந்து கிடக்கும் வாலியை நோக்கிப் பேசுகிறாள், நாம் இல்லறத்தை இனிதே நடத்திய போது, என்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்றாய். நானும், உன்னை நோக்கி உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறிமாறிக் கூறினோம். நாம் பேசியது உண்மை என்றால், உன் உடலில் பாய்ந்த இராமனின் அம்பானது என் இதயத்தைத் தொலைத்து, என் உயிரைப் போக்கியிருக்க வேண்டும். ஆனால், இறந்திருப்பது நீ தானே. அப்படி என்றால் பொய் பேசினோமோ என்று வருந்தி, அழுது புலம்புகிறாள்.


கூடு கண்டிலது

கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற ஓர் உயிர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது, கூட்டைக் காணவில்லை எனில், அவ்வுயிர் எவ்வாறு திகைக்குமோ அவ்வாறு சீதையைத் தேடி வந்த இராமன் திகைத்து நின்றான்.

“ஓடி வந்தனன் சாலையில் சோலையின் உதவும்
தோடு இவர்ந்த பூஞ்சுரி குழலாள் தனைக்காணான்
கூடு தன்னுடையது பிரிந்தா ருயிர் குறியா
தேடி வந்து அது கண்டில தாம் என்றேன் என நின்றான்" (சடாயு உயிர் நீத்த படலம் 957)

இராமன் - உயிர், சீதை - கூடு. கூடு என்றால், உடம்பு பிரித்து வைத்துவிட்டுச் சென்ற உயிர் மீண்டும் வந்து உடலைத் தேடிய போது காணவில்லை.

உடல் நீ, உயிர் அவன்

14 வருடங்கள் சென்ற பின்னும் இராமன் திரும்பி வராததால், பரதன் தீக்குளித்து இறக்க முயன்றான். அப்பொழுது அனுமன் வந்து பரதனை நோக்கி, எல்லா உலகங்களுக்கும் தலைவனானவன் வந்தான். அனைவராலும் பூசிக்கத் தக்கவன் வந்தான். மெய்ம்மைக்கு உடல் போன்ற நீ, அவன் வருவதற்கு முன் இறப்பாயானால் அவன் வந்து உயிர் வாழ்ந்திருப்பானோ? என்று சொல்லி அக்கூட்டத்தில் நுழைந்து மூட்டிய நெருப்பை அவித்துக் கரியாக்கினான்.

“அய்யன் வந்தனன் ஆரியன் வந்தனன்
மெய்யின் மெய்அன்ன நின் உயிர் வீடினால்
உய்யுமே அவன்? என்றுரைத்து உள்புகா
கையினால் எரியைக் கரி ஆக்கினான்" (மீட்சிப் படலம் 4130)

தம் உயிர் உடம்பொடு பொருந்தப் பெற்றவர்

சஞ்சீவி மலையின் காற்று வந்து வீசிய அளவில் தேவர்களால் போற்றப்பட்டு, இதுவரையடையாத புதிய துன்பம் அடைந்தவர்களாகிய இராமன், சேனை வீரர்கள், இதற்கு முன் இல்லாத, மிக்க வலிமையும், அழகும் உடையவர்களாக எழுந்தார்கள். நமனை வென்று தம்முயிர் உடம்பொடு, பொருந்தப் பெற்றவரும் ஆயினர்.

“ஏற்றமும் பெருவலி அழகொடு எய்தினார்
கூற்றினை வென்று தம் உருவும் கூடினார்" (மருத்துமலைப் படலம் 2744)

உடம்பை விட்டுப் பிரியாத உயிர்

நிகும்பலை யாகப் படலத்தில் இந்திரசித்தோடு போர் புரிய இலட்சுமணனை அனுப்பிய இராமன், தன்னை விட்டுப் பிரிதலில்லாத தம்பியாகிய இலட்சுமணன் மிக்க வேகத்தோடு சென்று, உடம்பை விட்டுப் பிரியாத உயிரைப் போல மறைந்த அளவில், அதைக் கண்டு வருந்தின இராமன், முன்பு விசுவாமித்திர முனிவருடைய யாகத்தைக் காக்கும் பொருட்டு, தான் சென்றபொழுது, வருந்திய தன் தந்தையாகிய தசரதனை ஒத்தான்.

"தான் பிரி கின்றிலாத தம்பி, வெங் கடுப்பின் செல்வான்,
ஊன்பிரி கின்றிலாத உயிர் என, மறைதலோடும்" (நிகும்பலை யாகப் படலம் 2888)

உயிர், உடம்பைப் பாதுகாத்து வருகிறது

சரயு நதி, பூமியின் பல பாகங்களிலும் பாய்ந்து அவற்றைக் காத்து வருகிறது. உயிர், உடம்பைப் பாதுகாத்து வருவதைப் போல ஆறும், ஒவ்வோர் இடத்திலும் பாய்ந்து, அந்த இடங்களை எல்லாம் செழிப்பாக்கிக் காத்து வருகிறது.

“மாதவி வேலிப் பூக வனம்தோறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர் என உலாயது அன்றே" (ஆற்றுப்படலம் 32)


வெற்று உடல்

இராவணன் மந்திரிமார்களிடம் கூறும் போது, ஒரு சிறிய குரங்கு வந்து, நமது பெரிய நகரத்தைச் சுட்டு எரித்தது. அக்கினி சூறையாட, நமது நகரம் அழிந்துவிட்டது. அதுவுமின்றி என் உறவினர்களும், நண்பர்களும் இறந்தார்கள். இந்த அவமானம் உலகெங்கும் பரவிற்று. இந்தச் சிம்மாசனத்தில் இராவணனா இருக்கிறான். என் வெற்றுடலன்றோ இருக்கிறது என்றான். (இராவணன் மந்திரப்படலம் 23)

உயிரை விட்டு உடலைத் தூக்கிச் சென்றானே

தசரதன் இறந்து விட்டான் என்பதை இராம, இலட்சுமணர்கள், சடாயுவிடம் கூறினர். உலகிற்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் கொற்றக்குடையை உடையவனே, நீயாளும் பூமி ஆள்வாரற்றுக் கிடக்கவும், நான் வருந்தவும் விட்டுப் பிரிந்தனையோ? என்னை விட்டுப் பிரிந்தது, என்னுடைய நட்பின் தீரத்தை அறிவதற்கோ? நீவிர் இறந்தமையைக் கேட்ட பாவி, இன்னும் உயிர்த் துறக்கவில்லை. நான் ஒரு விலங்கு ஆதலின் நான் விலகி நிற்கிறேன்.

தோழனே, சம்பராசுரனை வதைத்த அந்நாளில் என்னைப் பார்த்து, நீ உயிர், நான் உடல் என்று சொன்னீரே, இப்போது இங்கே உயிர் கிடக்கிறது, உடல் போயிற்று. அந்தப் புத்திக் கெட்ட எமன் உயிரைப் போட்டுவிட்டு உடலைத் தூக்கிச் சென்றானே என்று புலம்பினான்.

“செயிர் கிடத்தல் செய்யாத திரு மனத்தாய்
செப்பினாய் திறம்பா நின் சொல்
உயிர் கிடக்க உடலை விசும்பு ஏற்றினார்
உணர்வு இறந்த கூற்றினரே" (சடாயு காண் படலம் 197)

உடம்பு, உயிரைத் தொடர்வது போல

திருமணத்தின் போது இராமன், சீதையின் கையைப்பற்றித் தீ வலம் வந்தான்.

“நெய்அமை ஆவதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்" (கடிமணப் படலம் 1195)

“மடம்படுசிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள்" (கடிமணப்படலம் 1196)

ஓமத்தீயை வலம் வரும் போது இராமனைப் பின் தொடர்த்து சீதை சென்றாள். அக்காட்சி வேறுவேறாக எடுக்கும் பிறவிகளில் உயிரானது, உடம்பைத் தொடர்வதற்கு மாறாக, ‘உடம்பு, உயிரைத் தொடர்வது போல இருந்தது’ என்று கம்பர் குறிப்பிடுகிறார்.

உயிரைத் தேடி நிலை தளரும் உடலைப் போல

பூக்கொய்ப் படலத்தில் தன் மனைவியிடம் காதல் கொள்வதில் மன்னராக விளங்கிய ஓர் இளைஞன், தான் பிரிந்ததால் மயிலின் சாயலோடு நடந்து வரும் தன் மனைவியின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைக் கண்டறிவதற்காக, சோலையிலிருந்த மாதவிப் பந்தலில் நுழைந்து மறைந்து கொண்டான். எப்போதும் அவனோடு இணைந்து பழகும் இயல்புடையவளும், கணவனை ஒரு கணமும் பிரிந்து அறியாதவளுமான அந்த மனைவி, மணவாளனைக் காணாமல் துடித்தாள். உயிரைத்தேடி நிலை தளரும் உடலைப்போல மனம் சுழன்று துன்புற்றாள். (பூக்கொய்ப்படலம் 853)

உடல் உயிர்

இராமன் காடு செல்ல இருப்பதை சுமத்திரையிடம் கூற, அவள் வருந்த இராமன் அவளைத் தேற்றினான். அன்னையே, நம் நாட்டில் கடலில், ஆகாயத்தில், வசிப்பதனாயினும் சரி, அங்கெல்லாம் நான் அயோத்தியில் வசிப்பதைப் போலவே வாழ்வேன். என்னைத் துன்புறுத்துபவர்கள் எவரும் இல்லை. ஆகையால் எதற்காக வருந்துகிறாய் என்று இராமன் சுமித்திரையைத் தேற்றினான். சுமித்திரையின் துயரம் முதலில் உடலில், பின் உயிரில் பாய்ந்து கடைசியில் அறிவிலும் பாய்ந்தது.

“யான்புக்கது ஒக்கும், எனை யார்
நலிகிற்கும் ஈட்டார்
ஊன் புக்கு உயிர் புக்கு உணர் புக்கு
உலையற்க என்றான்" (நகர் நீங்கு படலம் 433)


உடலும், உள்ளமும் சேரத் தழுவல்

தன்னை வணங்கின பரதனை, இராமபிரான் தழுவி நின்றான். தான் முன்பு கொடுத்தப் பாதுகைகள் இரண்டையும், அன்பையும் பாத காணிக்கையாகத் தந்து தாமரை மலர் போன்ற தனது பாதங்களைப் பணிந்து நின்ற பரதாழ்வானை இராமபிரான் தேம்பி, விம்மி, நாவினால் சொல்வதற்கு ஒன்றும் இயலாதவனாகி கண்ணீர் சோர அழுது, தன் ஆவியும் உடலும், அவனது ஆவியும் உடலும் ஒன்றென்று ஆகும்படியாக இறுகத் தழுவி நின்றான்.

“சேவடி இரண்டும் அன்பும் அடியுறையாகச் சேர்த்தி
பூ வடி பணிந்து வீழ்ந்த பரதனைப் பொருமி விம்மி
நாவிடை உரைப்பது ஒன்றும் உணர்ந்திலன் நின்ற நம்பி
ஆவியும் உடலும் ஒன்றத் தழுவினன் அழுது சோர்வான்" (மீட்சிப்படலம் 4219)

உடலின் அழிவு

இராமனைக் காண பரதன் படைகளுடன் கங்கை நதியைக் கடக்கும் போது, தேர்களின் உறுப்புகளாகிய கொடி, கொடிஞ்சு, தட்டு, அச்சு, ஆழி முதலிய உறுப்புகள் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு நாவாய்களில் ஏற்றப்பட்டு அக்கரையைச் சென்றடைந்தன. இந்நிகழ்வை உடல் அழிந்த பின் உயிர்களை வெவ்வேறு உடம்பில் சேர்விக்கின்ற வினை போல, வெவ்வேறு நாவாய்கள் ஏற்றிச் சென்றன என்பதை,

“விடும் சுவல் புரவியோடும் வேறு வேறு ஏற்றிச்சென்ற
மடிஞ்சபின் உடம்பு கூட்டும் வினை என வயிரத்தோள்" (கங்கை காண் படலம் 1035)

அறிய முடிகிறது.

முடிவுரை

மன்னனை உயிராகவும், மக்களை உடலாகவும் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. ஆனால், கம்பராமாயணம் மன்னனை உடலாகவும், மக்களை உயிராகவும் பேசுகிறது. இராமனும், சீதையும் ஒருவரை ஒருவர் பார்த்த போது, இரண்டு உடலுக்கு ஓர் உயிர் அமைந்தது போல மனம் ஒன்றுபட்டார்கள் என்பதையும், வாலி இறந்தவுடன் தாரை, ‘நீ என் உயிர் என்றாயே, உன் உயிரான நான் இங்கு துன்பமடைய, உன் உடல் மட்டும் எப்படி இறந்திருக்கும். உன் இதயம் என்னிடத்தில் உள்ளது என்று மாறி மாறி பேசினோமே அப்படி என்றால் இராமனின் அம்பானது, என் இதயத்தைத் தொலைத்து என் உயிரை அல்லவா எடுத்து இருக்க வேண்டும்’ என்று கூறி வருந்தினாள் என்பதையும், பர்ணசாலையில் சீதையைக் காணாத இராமன், ‘கூட்டை விட்டுப் பிரிந்து சென்ற ஓர் உயிர், மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது கூட்டைக் காணாமல் அவ்வுயிர் வருந்தியது போல வருந்தினான்’ என்பதையும், சடாயு, தசரதன் இறந்த செய்தியை அறிந்தபோது, ‘தோழனே சம்பராசுரப் போரில் அவனை வதைத்த அந்நாளில் என்னைப் பார்த்து நீ உயிர், நான் உடல் என்றாயே, இப்போது உயிர் கிடக்கிறது உடல் போயிற்று’ என்று வருந்திப் புலம்பியதையும் அறிய முடிகிறது. இதிலிருந்து உடலுக்கும், உயிருக்குமான தொடர்பினைக் கம்பர் பல இடங்களில் அழுத்தமாகவேப் பயன்படுத்தியுள்ளார் என்பதனை அறிந்து கொள்ள முடிகிறது.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முக நோக்கில், அ.ச. ஞானசம்பந்தன், சாரு பதிப்பகம், சென்னை, 2016.

2. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

3. கம்பன் புதிய தேடல், அ. அ. ஞானசந்தரத்தரசு, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன், வள்ளி பதிப்பகம், சென்னை, 2019.

5. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.

6. கம்பர் கவியும் கருத்தும், கருத்திருமன். பி. சி., வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2018.

7. கம்பரும் திருத்தக்கதேவரும், காசி. ஆ, தமிழ்ச்சோலைப் பதிப்பகம், சென்னை, 2010.

8. காலமும், கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி), கபிலன் பதிப்பகம், புதுச்சேரி.

9. கம்பரின் கை வண்ணம், சக்தி நடராசன்.க, சரசுவதி பதிப்பகம், ஆர்க்காடு, 2017.

10. காலத்தை வென்ற கம்பன், பழனிவேலு. தா, பல்லவி பதிப்பகம், ஈரோடு. 2021.

11. கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8, பூவண்ணன், வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

(நிறைவுற்றது)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p315a.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License