இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
இலக்கியம்

திருவிளக்கும் தீபமும்

கிருஷ்ணன், சிங்கப்பூர்


தீப விளக்கு பண்டைய காலந்தொட்டே தமிழர்களிடையே இருந்து வருகிறது.அது நமது வாழ்விலும், தாழ்விலும் நமது சடங்குகளிலும், விழாக்களிலும் பெரும் பங்கு பெற்று வருகிறது.

நம் பண்டைய தமிழர்கள் ஒளியின் உயர்வை அறிந்து அதனை நம் வாழ்வோடு இணைத்துள்ளார்கள்.

பண்டைய முறைப்படி விளக்கேற்றுவதே சிறப்புடையது. முற்காலத்தில் ஒரு நாளில் ''விளக்கிடு நாள்'' என்னும் பெயரால் எல்லாக் கோயில்களிலும் தீபம் ஏற்றும் திருநாள் கொண்டாடப்பட்டதாக தெரிகிறது. விளக்கு தமிழர்களுக்கு நிற்பச் செல்வங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது.

விளக்கு என்னும் சொல் தூய தனித் தமிழ்ச் சொல். விளக்கு மங்களகரமானது என்பதால் அடை மொழியாக 'திரு' என்னும் சொல்லுடன் 'திருவிளக்கு' என்று சிறப்பாக கூறப்படுகிறது. விளக்கு,பதம், தண்டு, அகல் அல்லது தாழி, மொட்டு என்று பல அங்கங்களை கொண்டுள்ளது திருவிளக்கு. அகல், எண்ணெய், திரி, தீபம் முதலியன பல தத்துவ நுட்பங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பதாக நமது பெரியோர்கள் கூறுகிறார்கள்.

விளங்கச் செய்வதே விளக்கு என்கிறார்கள் தமிழறிஞர்கள். இருப்பதைக் காட்டுவதே விளக்கு. மறைப்பதை நீக்கி மறைபட்டதை மக்களுக்கு காட்டுவதே விளக்கு. வீட்டில் எழில் குத்து விளக்கு ஏற்றி வழிபடுவது நமது தமிழர் மரபு. விளக்கே இறைவன். ஆகையால் கலை அம்சமும், எழிலும் நிறைந்த விளக்கை இறைவனைக் காட்டும் வழிகாட்டி என்கிறார்கள்.



மக்களிடத்திலுள்ள அறிவு ஒளியே விளக்கு. எனவே விளக்கு வழிபாடு அறிவை குறிக்கொண்டதாக ஆன்றோர்கள் கண்ட முடிபு. திருவிளக்கு கார் இருளை அகற்றி இன்பகரமான ஒளியைத் தருகிறது. இறைவனாகிய அருட்பெருஞ்சோதி, உலகில் நிறைந்துள்ள அஞ்ஞானமாகிய இருட்டை அகற்றி மெய்ஞானத்தை உணர்த்தும் ஒப்பற்ற உயரிய தத்துவ நுட்பத்தை புலப்படுத்தும் அருட்சோதி

கற்காலம் மாறி உலோகக் காலம் அரும்பியதும் செம்பு, பித்தளை உலோகங்களில் கைவிளக்குகள், தூக்கு விளக்குகள், தூண்டாமணி விளக்குகள், தீவர்த்திகள், நிலை விளக்குகள், குத்து விளக்குகள், சர்விளக்குகள், தீபலட்சுமி விளக்குகள், கிளை விளக்குகள், பூசை விளக்குகள் என்று தோன்றின.

பண்டையத் தமிழர் ஒளியை இறைவனாக கண்டனர். ''சோதியே'' சுடரே, சூழ் ஒளி விளக்கே' என்று புகழ்ந்து பாடியுள்ளனர். இறைவனை 'விறகில் தீயினன்' என்றும், 'மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்' என்றும் இறைஞ்சுகிறார்கள்.

''அருள் ஒளி விளங்கிட ஆணவ மெனுமோர்
ஆருளற என்னுளத் தோற்றிய விளக்கே
துன்புற த்ததுவத் துரிசெலாம் நீக்கிநல்
இன்புற என்னுள் தேற்றிய விளக்கே
மயலற வழியா வாழ்வு மேன்மேலும்
இயலுற வென்னுளத் தேற்றிய விளாக்கே
இடு வெளி யனைத்தும் மியலொளி விளங்கிட
நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
கரு வெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
உருவெளி நடுவே ஒளிதரு விளக்கே''

என்று அருட்பாவில் வள்ளலார் பாடுகிறார்.



நமது இலக்கியங்களில் சான்றோர்கள், இறைவனின் ஒளியை, விளக்கினைப் பற்றி நிறைய கூறியுள்ளார்கள்.

''தூண்டாவிளக்கின் சுடரணையாய்''

-என்பது சுந்தரமூர்த்தியின் மொழி

''ஞானச் சுடர் விளக்காய் நின்றவன்''

'' விறகிற றீயினன் பாலிற் படு நெய்யோன்''

'' மறைய நின்றுளான் மாமணிச் சோதியான்"

- என்று சம்பந்தாரும்

ஒளி வளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்குத் திரள் மணிக்குன்றே
சித்தத்துட் தித்திக்கும் தேனே ''

- என்று திருமாளிகைத் தேவரும்

"அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்"

- என்று சேக்கிழாரும்

சிந்தாதேவி செழுங்கலை நியமத்து
நந்தா விளக்கே... பாவாய்
வானோர் தலைவி மண்ணோர் முதல்வி

- மணிமேகலையும்

"சுடரிற் சுருட்டும் திருமூர்த்தி"

-என்று சிந்தாமணியும்

''திங்களைப் போற்றும்! திங்களைப் போற்றுதும்!
கொங்கலர் தார் சென்னி குளிர் வென்குடை போன்றின்
வங்க ணுல களித்தலான்;
ஞாயிறு போற்றும்! ஞாயிறு போற்றுதும்!
காவிரி நாடன்றிகிரிபோற் பொற்கோட்டு
மேரு வலந் திரிதலான்;



- என்று சிலப்பதிகாரமும்,

முந்நீர் மீமிசை பலர் தொழத் தோன்றி
யேமுற விளங்கிய சுடர்''

- என்று நற்றிணையும்

''விளக்கினை ஏற்றி
வெளினய அறிமின்
விளக்கின் முன்னே
வேதனை மாறும்
விளக்கை விளக்கும்
விளக்குடையார்கள்
விளக்கின் விளக்கும்
வுளக்கவர் தாமே ''

-என்றும் பாடியுள்ளார்கள். உலகமெங்கும் முச்சுடர் வழிபாடு பரவி இருந்தாலும் சிறப்பாக கொண்டாடியவர்கள் நம் தமிழர்கள்.

'' சோதியே சுடரே சூழ்ஒளி விளக்கே
சுரி குழற் பணமுலை மடந்தை
பாதியே பரனே பால் கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனும் மாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள்
நிறைமலர்க் குருந்த மேவிய சீர்
ஆதியே யடியேன் ஆதரித்தழைத்தால்
அதந்துவே என்றருளாயே '' (மணிவாசகர் திருவாசகம்)

'' உள்ளம் பெருங் கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரரனார்க்கு
வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச்
சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலளைந்தும்
காளா மனிவிளக்கே'' (திருமூலர் திருமந்திரம்)

பண்டைத் தமிழகத்தில், இன்று கொண்டாடப்பட்டு வரும் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி போன்ற பண்டிகைகளில் எதுவும் கொண்டாடப்பட்டதாக தெரியவில்லை. தீபாவளி கூட கொண்டாடியதாகத் தெரியவில்லை.

பங்குனி மாதம் பாரதப்போர் நடைபெற்றதால் அம்மாதத்தில் நல்ல காரியங்கள் எதையும் செய்யார். ஆடி மாதத்தில் சிவபக்தனான ராவணன் இறந்து விட்டதால் அம்மாத்தில் திருமணம் போன்ற மங்களகரமான காரியம் செய்யப்படுவதில்லை.

தை மாதம் தமிழ் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடி வந்தார்கள்.பண்டைக் காலம் தொட்டே இது ஒரு பெரும் பண்டிகையாக மிளிர்கிறது. அடுத்து சிறப்பாக தமிழர்கள் கொண்டாடி வரும் பண்டிகை தீபத்திருநாளாகும். இது கார்த்திகைத் தீப திருநாள் என்றும் கொண்டாடுகிறார்கள். கேரளத்திலும் ஆந்திராவிலும் இத்திருநாள் இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. பண்டைத் தமிழர்கள் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு களி கொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு.

'அறுமீன் பயந்த அறஞ்செய் திங்கள்
செல்சுடர் நெடுங்கொடி போல் '

-என்று நற்றிணை கூறுகிறது.

கார்த்திகை நாள் பெயரலே பெற்ற அறஞ்செய்தற்குரிய திங்களில் எடுக்கப்பட்ட விசும்பிலே செல்கின்ற 'ஒளியையுடைய நீண்ட விளக்குகளின் வரிசை போல்' என்று உரை கூறப்படுகிறது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/literature/p48.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License