இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

மணிமேகலை கால சமயங்களும் அவற்றின் முற்கால நிலையும் பிற்கால நிலையும்


15. மணிமேகலைக் கால மக்களின் நம்பிக்கைகள்

முனைவர் சபா. அருணாசலம்

காப்பியம் என்பது கதை நிகழ்ந்த காலச் சமூகத்தைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடியாகும். நாம் எறத்தாழ 2000 ஆண்டுகள் பின் நோக்கிப் பயணம் செய்து அன்றைய பூம்புகாரில் வாழ்ந்த மக்களை அவர்களின் எண்ண ஓட்டத்தை காலம் காலமாக மக்கள் மனத்தில் ஊறியிருந்த நம்பிக்கைகளை அறிந்து கொள்கிறோம்.

வழிபாடும் பயமும்

மணிமேகலைக் காப்பியம் ‘விழாவறை காதை’ யோடு தொடங்குகிறது. காலம் காலமாக மனித மனத்தில் தோன்றும் பய உணர்வும் விழா எடுப்பதற்கு வழிபாட்டுக்கு ஒரு காரணமாக அமைகிறது. இந்திரவிழாக் கொண்டாடாவிட்டால் பூதங்கள் ஊரை அழித்துவிடும் என்ற பய உணர்வு இருந்தமையை மந்திரச் சுற்றத்தார் கூற்றின் வாயிலாக ஆசிரியர் காட்டுகிறார். ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் மந்திரச் சுற்றமும் சமயக் கணக்கரும் ஒன்று கூடி இந்திர விழாவை நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கின்றனர்.

ஓங்குவர் மலயத்து அருந்தவன் உரைப்பத்
தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன்நின்று
மண்ணகத் தென்றும் வான்பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக்கோள் எடுத்த
நாலேழ் நாளினும். . . . . . .

என்றும்

கொடித் தேர் தாளைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்
மடித்த செவ்வாய் வங்ஙெயிறு கிவங்க
கிழக்குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்துத் தொல்பதி நரகரைப்
புடைத்துணும் பூதமும் யொடுந்தாது ஆயிடும்

என்றும் சீத்தலைச் சாத்தனார் பாடும் பாடலில் ஆகத்திய முனிவன் ஆணையின்படி தூங்கெயிலெறிந்த தோடித்தோன் செம்பியன் இந்திரனை வேண்டி அவன் உடன்பாடு பெற்று இருபத்தொட்டு நாள் அந்நகரிலேயே நிகழத்தியதும், அதன் பின் சோழமன்னர்கள் தொடர்ந்து நடத்தியதுமான இந்திரவிழாவை நடத்த எண்ணி சமயக் கணக்கர் முதலானோர் ‘இந்திரவிழாச் செய்தலை மறப்பின், முசுகுந்தன் துயரைப் போக்கிய நாளங்காடிப் பூதம் இடுக்கண் செய்யும், நரகரைப் புடைத்துண்ணும் சதுக்க ஓதமும் பொருந்தாது ஒழியும். ஆதலின் விழாச் செய்வோமாக’ என்று முரசறையும் முதுகுடிப் பிறந்தோனுக்கு அறிவித்தனர். அச்சத்தின் காரணமாகத் தெய்வ வழிபாடு நிகழ்ந்தமையை இது காட்டுகிறது.



சிறுதெய்வங்கள், பேய், பிசாகு நம்பிக்கையும் கதைகளும்

காவிரிப்பூம்பட்டினத்தில் சக்கரவானக் கோட்டம் என்றொரு பகுதி இருந்தது. அதன் ஒரு பகுதியில் சுடுகாடு இருந்ததால் அதனைச் சுடுகாட்டுக்கோட்டம் என்றழைப்பர். அங்கு ஏராளமான சிறுதெய்வங்களுக்குக் கோயில்கள் இருந்தன. பேய் பிசாசுகளும் நடமாடுவதாக மக்கள் நம்பினர்.

மணிமேகலைக்கும் சுதமதிக்கும் மணிமேகலா தெய்வம் சக்கரவானக் கோட்டம் பற்றி எடுத்துரைத்தது. கோதமை மகன் சாரங்கலன் என்னும் சிறுவன் வழி தவறி இங்கே வந்துவிட்டான். அங்கே பிணந்தின்று களித்தாடும் பேய் ஒன்றைக் கண்டு பயந்து கதறியவாறு ஓடிவந்து உயிர் துறந்தான். அவன் உடலை ஏந்தியவாறு சக்கரவானக்கோட்டம் வந்த கோதமை கம்பாபதித் தெய்வத்திடம் சென்று தன் மகன் உயிரை மீட்டுத் தருமாறு வேண்டினாள்.

‘‘வேறு ஒரு துணையில்லாது எனக்கு ஒரே துணையான இவன் உயிரைப் பறித்தல் நியாயமாகுமா? இவனுக்குப் பதிலாக என் உயிரைப் பெற்றுக்கொண்டு இவனை உயிர்ப்பிக்க வேண்டும்’’ என்று முறையிட்டாள். அதற்குச் சம்பாபதி ‘‘உயிர் மீட்டுத் தரும் தெய்வம் இங்கில்லை. ஒரு உயிருக்குப் பதிலாக வேறு ஒரு உயிரை வாங்க முடியுமானால் இத்தனை அரசர்கள் இறந்து போக விடுவாரோ? ஆதலின் நியதியை ஏற்று நிம்மதியாக வாழ்வாயாக!” என்று கூறியது.

‘‘தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றினம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
முதியோர் என்னான் இளையோர் என்னான்
கொடுந் தொழிலாளன் குகான்றனன் குவிய்யஇங்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழியெடுஞ் செல்வம் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்கனிற் இறந்த மடவார் உண்டோ?

என்று மணிமேகலா தெய்வம், மக்கள் இயல்பைப் பேசுகிறது.

பசுவழிபாடு- பசுவைப் போற்றுதல்

தமிழகத்தில் தொன்று தொட்டுப் பசு போற்றப்பெறுவதை மணிமேகலை காட்டுகிறது.

ஆ காத்தோம்பி ஆப்பயன் அளிக்கும்
கோவலர் வாழ்க்கைவர் கொடும்பாடில்லை

எனச் சிலப்பதிகாரம் பசுவைப் போற்றுவோரைப் பாராட்டும் . மணிமேகலையில் ஆபுத்திரன் என்ற பாத்திரத்தையே ஆசிரியர் படைக்கிறார். பெற்றோரை இழந்த சிறுவனைப் பசு பால்தந்து வளர்க்கிறது.

‘‘நோவன செய்யன்மின் நொடியன கேண்மின்
விடுநிலம் மருங்கில் படுபுல் ஆர்த்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தழு நெஞ்சத்தோடு அருள்சுரந்து ஊட்டும்’’

எனப் பசுவைப் போற்றுகிறார் சாத்தனார்.



அறத்தால் இந்திரப் பதவி கிட்டும்

அறத்தின் மேன்மையை விளக்க, அறம் செய்வோர் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வது மட்டும் அல்லது தேவர் தலைவனாம் இந்திரப் பதவியும் பெறுவர் என மக்கள் நம்பினர்.

ஆபுத்திரனுக்குக் சிந்தாதேவித் தெய்வம் அமுதசுரபி பாத்திரம் வழங்கியது. எடுக்க எடுக்க உணவு பெறும் அப்பாத்திரம் கொண்டு ஆபுத்திரன் இயலா மக்கள் எல்லோர்க்கும் உணவு அளித்தான். ஆபுத்திரனின் அறச்செயலால் இந்திரனின் யாண்டு கம்பளம் நடுங்கியது, இந்திரன் ஒரு அந்தணன் வடிவில் கையில் தண்டு ஊன்றியவாறு வந்தான். வந்தவன், ‘‘நீ செய்த அறப்பயன் துய்க்க இந்திர உலகத்துக்கு வருக’’ என்று அழைத்தான்.

ஆபுத்திரன், ‘‘இந்திர லோகம் வந்து நான் இன்பம் அனுபவிக்க விரும்பவில்லை. வருந்தி வந்தவர்கள் தம் பசியை நீக்கி அவர்களது முகம் மலர்ந்திருப்பதைக் காண்பதுவே பேரின்பமாகும். இந்த இன்பம் இல்லாத தேவர் உலகத்திற்கு வருவதால் என்ன பயன்?’’ எனச் சொல்லி மறுத்துவிட்டான். ஆபுத்திரன் தன்னை அவமதித்தாக கருதிய இந்திரன் நாட்டில் மழைவளம் பெருகச் செய்து வளம் பெருகச் செய்தான். ஆபுத்திரன் அளிக்கும் உணவை வாங்க வருவோர் இல்லையாம்.

இருவேறு பிணிகள்

மணிமேகலை தீராய் பிணிகள் இரண்டு எனப் பேசுகிறது. ஒன்று பிறவிப் பிணி, மற்றொன்று பசிப்பிணி

பிறந்தார் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது. பின்னது
அற்றோர் உறுவது அறிக

என மாதவி வாயிலாகச் சாத்தனார் பேசுகிறார்.

பசிப்பிணி பற்றியும் அதனைத் தீர்ப்போர் பெருமையையும் மணிமேகலை போல் வேறு எந்த நூலும் பேசவில்லை.

குடிப்பிறப் பழிக்கும் விழுப்பம் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும்
பூண்டுவை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பசிப்பிணி என்றும் பாவிது நீர்ந்தோர்
இசைச்சொல் அளவைக்கு என்நா நிமிராது
‘‘மண்திணி காலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’

என்றும் மணிமேகலை கூறுகிறது.



தவம்-தவத்திறம்

உயிராற்றலை மிகுதிப்படுத்தலே தவம். உயிர் சார்ந்துள்ள உடம்பின் மனம், மொழி, மெய் ஆகியவற்றில் தோன்றும் குற்றம் கடியும் சாதனையே தவம் என மணிமேகலை பேசும்.

ஆய்தொடி நல்லாய் அங்கது கேளாய்
கொலையே தகளவு காமத் தீவிழைவு
உலையா உடம்பில் தோன்றுவ மூன்றும்
பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில்
சொல்லெனச் சொல்லில் தோற்றுவ நான்கும்
வெட்கம் வெகுளம் பொல்லாக் காட்சி என்று
உள்ளந்தனில் உருப்பன மூன்றும்...
காமம் வெகுளி மயக்கம் காரணம்

என்றும் அறவண அடிகள் கூறக்கேட்டு மணிமேகலை தவத்திறம் பூண்டு தருமம் கேட்டுப் பவத்திறம் அறுகென நோற்றனன் எனச் சாத்தனார் கூறுகிறார்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s1/p15.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License