இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை


28. பித்தனின் புதுமைகள்

முனைவர் வே. நிர்மலர்செல்வி

புதுமைப்பித்தனின் புதுமைச் சிந்தனைகளையும் ஆளுமையையும் அவரின் சிறுகதைகளைக் கொண்டு விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகின்றது. புதுமைப்பித்தன் என்னும் தமிழ்நாட்டு மாப்பசான் இவரை விட்டு நாம் சிறுகதை பற்றிச் சிந்திக்கவோ பேசவோ முடியாது. சமுதாய நிகழ்வுகள் பற்றிய அவரின் கேலியும் கிண்டலும், குத்தலும் குமுறலும், சொல்லோவியங்களும் குறிப்பிடத்தக்கன. இவரின் முன்னுரை கொண்டே வாசகன் சிறுகதையின் பன்முகத் தன்மையை உணர முடியும். சிறுகதை உலகில் தமக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டவர். தன் சொந்த வாழ்வில் அல்லலுற்ற இவர் சமுதாயத்தின் இருளடைந்த பகுதிகளை அவற்றின் இழிநிலைகளை வாழ்க்கை அனுபவம் தோன்றத் தீட்டிடும் திறமையர். மூட நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் எள்ளி நகையாடுபவர். இவரது ஒவ்வொரு படைப்பும் ஒரு தத்துவத்தையோ ஒப்பரிய கருத்தையோ பதிவு செய்வதாகவே அமைந்திருக்கும். அவர் நூறு கதைகளுக்கு மேல் எழுதியிருந்தாலும் அவரின் ஒரு சில சிறுகதைகளைக் கொண்டு அவரின் புதுமைச் சிந்தனைகளை நாம் கண்டு கொள்ளலாம். புதுமைப்பித்தன் காதல், இறப்பு, வறுமை, கற்பு, பசி, பயம், சிறுமை, சீரழிவு, சோகம், குழப்பம், கொந்தளிப்பு, மந்திரம், புராணம் என்று பலவற்றைக் கதைக் கருவாக எடுத்துக் கொண்டுள்ளார். அவரின் கதாப்பாத்திரங்கள் எல்லாம் நிழல்கள் அல்ல நிஜங்கள். வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றம், வெறுப்பு, துன்பம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். உலக வாழ்வின் மீது நம்பிக்கை இழந்தவர்கள், நண்பர்களை நம்பி மோசம் போனவர்கள், காதலால் தோல்வியடைந்தவர்கள், சமூகத்தை எதிர்க்கத் துணிவில்லாதவர்கள் மற்றும் துணிந்தவர்கள், சமயப் போர்வையில் உலா வரும் சாத்தான்கள், மனத்தால் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்கள் என்று பலவிதமாக அக் கதாப்பாத்திரங்கள் அமைந்துள்ளன.



சாப விமோசனம்

புதுமைப்பித்தன் கதைகளில் கற்பு பற்றிப் பேசும் சாபவிமோசனமும், பொன்னகரமும் பலராலும் விமர்சிக்கப்பட்டவை. சாபவிமோசனம் என்ற சிறுகதையில் புராண நிகழ்ச்சியைக் கதைக் கருவாகக் கொண்டு அக்கதையில் ஒரு எதிர்பாராத தீர்ப்பையும் பதிவு செய்கிறார். அக்கால கட்டத்தில் அச்சிறுகதை பலராலும் ஏற்றுக் கொள்ளப்படாமல் பல விமர்சனங்களுக்கு உட்பட்டது. இந்திரனால் மாசுபட்ட அகலிகை, கணவன் கௌதமனால் சபிக்கப்பட்டு கல்லாகிறாள். இராமனின் பாதம் பட்டு சாபவிமோசனம் பெறுகிறாள் அகலிகை. இராமனாவது தன்னைப் புரிந்துகொண்டானே என்று ஆறுதலடைகிறாள். ஒரு நாள் சீதையை ராமன் தீக்குளிக்கச் சொன்னான் என்று கேள்விப்படுகிறாள். கொதித்தெழுகிறாள்! அகலிகைக்கு ஒரு நீதி! அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? என்று கதறுகிறாள். அகலிகை மீண்டும் கல்லாகிறாள். கௌதமன் துறவியானான் என்று கதை முடிகின்றது. புதுமைப்பித்தன் தாமே நுழைந்து இந்தத் தீர்ப்பைத் தருகிறார். அதாவது கடவுளானாலும் இராமன் கொடுத்த சாபவிமோசனத்தைத் தேவையில்லை என்று தூக்கியெறிந்துவிட்டு மீண்டும் தன்னைக் கல்லாக்கிக் கொண்டாள் அகலிகை என்று ஒரு புதுமையான தீர்ப்பைச் சற்றும் எதிர்பாராத ஒரு முடிவை புதுமைப்பித்தனைத் தவிர வேறு யாரால் தர முடியும். இக்கதை அவரின் புதுமைச் சிந்தனைக்கு ஒரு சிறந்த சான்று.

பொன்னகரம்

பொன்னகரத்தில் வாழ்பவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள். அது வேறு உலகம், அதன் தர்மமும் வேறு, குதிரை வண்டி ஓட்டும் முருகேசன், அவன் மனைவி அம்மாளு முருகேசனின் தாயார், தம்பி என ஒரு ஏழ்மைக் குடும்பம். ஒரு நாள் குடிபோதையில் அடிப்பட்டு உயிருக்குப் போராடுகின்றான் முருகேசன், அவனுக்கு நினைவு திரும்புகின்றது, பசிக்குப் பால் கஞ்சி கேட்கின்றான், அம்மாளு ஒரு மில் தொழிலாளி, வீட்டிலோ வறுமை, செய்வதறியாது விழிக்கிறாள். வறுமையின் பிடியில் வாழ்பவர்களுக்கு கற்பு பெரிய விசயமல்ல. அம்மாளு தன் கணவனுக்காக சற்று பாதை மாறுகிறாள். கணவனின் ஆசையை நிறைவேற்றுகிறாள். தன் கணவனுக்காகத் தன் கற்பை விற்கிறாள். அம்மாளுவின் இந்நிலைமைக்கு சமூகமே பொறுப்பு என்கிறார் புதுமைப்பித்தன். அதோடு கற்பு! கற்பு! என்று கதைக்கிறீர்களே இதுதான் ஐயா பொன்னகரம் என்று தன் கதையை முடிக்கிறார்.


பொன்னகரத்தில் கற்பு படும் பாட்டை எரிமலையாகக் கொட்டுகிறார். ஒரு பக்கம் கற்பு! கற்பு! என மிரட்டும் பணக்காரச் சமூகம், மறுபக்கம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி நாள்தோறும் வாழ்வுக்குப் போராடும் சமூகம்! இங்கு ‘பொருளாதாரம்’ என்ற கருவிதான் கற்பை நிர்ணயிக்கின்றது. வறுமை எல்லாவற்றையும் எல்லை தாண்ட வைக்கின்றது என்று சமூகத்தின் யதார்த்த நிலையை உள்ளது உள்ளபடி ஒளிவு மறைவின்றி உரைக்க புதுமைப்பித்தனால் மட்டுமே முடியும்.

வாடா மல்லிகை

ஒரு இளம் விதவையின் வேதனையைச் சொல்லும் சிறுகதை வாடா மல்லிகை. இச்சிறுகதையில் வரும் சரசு, ஒரு அந்தணப் பெண். பதினேழு வயதில் தன் கணவனை இழந்தவள். ஓர் உலாவும் விடை தெரியாத விடுகதை, அவள் சமூகத்தில் மறுமணம் என்பது பெண்களுக்கு ஆகாத சொல், ஒரு சூழ்நிலையில் தன்னை விரும்பும் ஒருவனிடம் பாசத்தை நாடுகிறாள். அவன் அவளின் செயலை பரத்தையின் செயல் என்கிறான். அதற்கு அவள் நான் பரத்தையன்று, இயற்கையின் தேவையை நாடுகிறேன்! என்று சொல்லி இறுதியில் கையில் கடிதத்துடன் தற்கொலை செய்கிறாள். மனைவி இறந்தால் கணவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று கூறும் சமுதாயம் கணவன் இறந்தால் மனைவி மறுமணம் செய்துகொள்ள மறுக்கின்றது. புதுமைப்பித்தன் காலத்தில் இக்கொடுமை காணப்பெற்றது. ஆணுக்கு ஒரு சட்டம், பெண்ணுக்கு ஒரு சட்டம் எனச் சமூகம் வரையறை செய்துள்ளது. இதன் காரணமாகவே, சரசு அவள் காதலனை இயற்கையின் தேவைக்காக மட்டுமே நாடுகின்றாள் என்று எழுதுகின்றார் புதுமைப்பித்தன். ஒரு பெண்ணின் தேவையை உணராத கட்டுப்பாடுகள் அவசியமற்றது என்றும் உரைக்கின்றார்.

புதுமைப் பித்தன் ஆளுமை

இப்படிச் செல்லும் அவரின் சிறுகதைப் பயணத்தில் பல நிழல்கள் உயிர் பெறுகின்றன. பால்வண்ணம் பிள்ளை என்ற சிறுகதையில் பிடிவாத குமாஸ்தாவையும், பனை மரத்து அடியிலிருந்து கனவு காணும் பரமசிவம் பிள்ளையை கயிற்றரவு என்னும் சிறுகதையிலும், ஒரு ஏழை குடும்பத்தின் ஒரு நாள் பொழுது எப்படிக் கழிகின்றது என்பதை ஒரு நாள் கழிந்தது என்னும் சிறுகதையிலும், வாழ்வின் நிலையாமையை நினைவுப்பாதை என்னும் சிறுகதையிலும், கடவுளுக்கே நாம் மனிதனை விட்டு எட்டி நிற்பதே சாலச்சிறந்தது என்ற சிந்தனையை உருவாக்கிய சிறுகதை கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், இப்படி புதுமைப்பித்தன் அவரின் சிறுகதைகளில் தொட்டுச் செல்லாத அவலங்களே இல்லையென்று கூடச் சொல்லலாம்.


ஒவ்வொரு சிறுகதையிலும் அவரின் முடிவுகள் அவரின் தனிப்பட்ட ஆளுமையை எடுத்துரைக்கின்றன. புதுமைப்பித்தனால் சிறுகதைகள் தமிழிலக்கிய வடிவம் பெற்றன என்றே சொல்ல வேண்டும். கதைச் சொல்லும் முறைகளிலும் அனைவரில் இருந்து வேறுபட்டே இருந்தார். அவரின் சிறுகதைகள் நேற்றைய பாதையை ஆராய்வதோடு நில்லாமல், இன்றைய சாலையைச் செப்பனிட்டு பண்படுத்துவதோடு நாளைய வழிமுறைகளையும் நமக்கு வகுத்துத் தரும் என்பது திண்ணம்.

துணை நூல்கள்

1. புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பு - மீ.ப. சோமு

2. இக்கால இலக்கியம் (தொகுப்பு) - பல்கலைக்கழக வெளியீடு

3. தமிழ் இலக்கிய வரலாறு - மது.ச.விமலானந்தம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s2/p28.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License