இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

109.கொடைத் துறைகளும் புறப்பாடல்களும்


முனைவர் சி. சிதம்பரம்
உதவிப்பேராசிரியர், தமிழ், இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் பள்ளி,
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் - 624302.

முன்னுரை

சங்க காலத்தில் தோன்றிய நூல்களில் எட்டுத்தொகை நூல்களுக்குத் தனியிடம் உண்டு. அவற்றுள் புறநானூறு குறிப்பிடத்தக்கது. எட்டுத்தொகை நூல்களில் குறிப்பாக புறநானூறு, பதிற்றுப்பத்து முதலான புறப்பாடல்கள் வரலாற்று ஆவணமாகவும், தமிழ்ப் பண்பாட்டின் சின்னமாகவும் அமைந்துள்ளன. சங்க காலத்தில் ஈகையாகிய கொடை செய்யும் மாண்பு மேம்பட்டு விளங்கியதைத் தமிழரின் தலைச்சிறந்த பண்பாடாகப் போற்றப்பட்டதைப் புறப்பாடல்களின் வழி காணமுடிகிறது. அறங்கள் பலவற்றுள்ளும் ஈகையாகிய கொடையறம் முதன்மையானது ஆகும். கொடை என்பது பொருள் அற்றவர்களுக்கு பொருள் தந்து உதவுவதாகும். புறத்திணை பற்றிப் பேசும் நானூறு பாடல்களில் கொடைத்துறையில் அமைந்த பாடல்கள் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. சங்கத் தமிழர் காதலையும், வீரத்தையும் இரு கண்களாகப் போற்றிப் பாதுகாத்தனர். எனினும், புறப்பாடல்கள் வீரத்திற்கு இணையாகக் கொடையைச் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன. சங்ககால மன்னர்களின் கொடைச் சிறப்பை வெளிப்படுத்தத் தொல்காப்பியம், புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணங்கள் குறிப்பிடும் கொடை தொடர்பான புறத்துறைகள் எவ்வாறு புறநானூற்றுப் பாடல்களுக்கு நிலைக்களன்களாக அமைந்துள்ளன என்பதை அறியும் நோக்கத்தில் இவ்வாய்வு அமைகிறது.

கொடை என்ற சொல் ‘கொடு’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்தாகும். கொடுத்தல் என்னும் செயல் மனிதர்களிடத்தே நிகழ்வது. கொடுப்பவை பொருளாகவோ, பணமாகவோ, உணவாகவோ, குருதியாகவோ, நிலமாகவோ எனப் பல்வேறு வகைகளுள் அமையும். கொடை செய்யும் உயர்ந்த பண்பைப் பண்டைக் காலத்தில் தமிழர்கள் போற்றி வளர்த்தனர். கொடுத்தல் பண்பில்லாத அரசர்களை கொடுக்க வேண்டும் எனப் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் வலியுறுத்திப் பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்கள் பாடிய கொடைத்துறைகள் பற்றிய விளக்கமும், இயல்பும் இவ்வாய்வு எடுத்து இயம்புகிறது.



கொடையின் இயல்பு

தொல்காப்பியர் கொடையின் பெருமையைப் பொருளதிகாரத்தில் எண் வகை மெய்ப்பாடுகளில் ஒன்றான பெருமிதத்தில் விளக்குகின்றார். இதனை,

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே” (தொல். 1203)

என்று குறிப்பிடுகிறார். தனி மனிதன் ஒருவன் கொடை செய்வதால் ஏற்படும் பெருமிதத்தை விட அரசுரிமை பெற்ற மன்னன் கொடை செய்வதைப் பெருமையாகக் கொள்வது வியப்பு ஒன்றும் இல்லை.

சங்க காலத்தில் தோன்றிய பாடல்கள் அனைத்தும் உதிரிப்பாடல்களே. சேர சோழ, பர்ணடிய நாடுகளில் ஆங்காங்கே புலவர்கள் பாடிய பாடல்களைப் பிற்காலத்தில் தொகுத்து வைத்தனர். அவ்வாறு பாடல்களைத் தொகுத்த பிறகு அப்பாடல்களுக்குரிய திணை துறைகளையும் குறித்து வைத்தனர். அவ்வாறு திணை, துறைகளை எழுதிய புலவர்கள் பாடல்கள் எழுந்த சூழலில் அவற்றைக் குறிக்கவில்லை. எனவே, அப்பாடல்களுக்கு வகுத்த திணைத் துறைகள் முழுவதும் பொருந்துவதாக இல்லை. கொடை பற்றிய துறைகள் அமைந்த புறநானூற்றுப் பாடல்களின் திணை, துறைகளை ஆராய்வது வேண்டத்தக்கது.

புறத்துறை விளக்கம்

உலக வாழ்வில் கொடை, வீரம், அரசியல் எனப் பொது வாழ்வியல் யாவும் புறமாகும். கொடை, அளித்தல் (கருணை), செங்கோல், வீரம் பற்றியன புறம் ஆகும். பொதுவாகக் காதல், குடும்ப வாழ்வு அல்லாதவை புறம். பலரும் அறிய நுகர்வதும் இன்னதென வெளிப்படக் கூறக் கூடியதுமாகிய இன்பம் புறம் என்பர் தொல்காப்பியர். இதனை,

“அவ்வவ மாக்களும் விலங்கும் அன்றிப்
பிறஅவண் வரினும் திறவதின் நாடித்
தத்தம் இயலான் மரபொடு முடியின்
அத்திறத்தானே துறை எனப் படுமே” (தொல். 1465)

என்ற நூற்பா விளக்கும். இதற்கு ச. வே. சுப்பிரமணியன், “ஏழு திணைக்கும் உரிய மக்களும், விலங்கும் ஏனைய கருப்பொருள்களும் தெளிவாக ஆராய்ந்து தத்தம் இயல்புக்கு ஏற்ப மரபொடு பொருந்தி வரின் அத்திரம் தானே துறை” என்று விளக்கம் தருகிறார். இத்துறை அகத்துறை, புறத்துறை என இரண்டு வகைப்படும்.



புறம் பற்றிய துறைகளில் கொடை பற்றிய பொருண்மை கொண்ட துறைகள் பன்னிரெண்டு ஆகும், அவையாவன,

1. இயன்மொழி

2. கடைநிலை

3. கடைநிலை விடை

4. கையறு நிலை

5. பரிசில் கடாநிலை

6. பரிசில் விடை நிலை

7. பரிசில் நிலை

8. பெருஞ்சோற்று நிலை

9. மகற் கொடை மறுத்தல்

10. பாணாற்றுப்படை

11. புலவராற்றுப் படை

12. விறலியாற்றுப்படை

இவ்வாறு 12 துறைகள் கொடைத்துறைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன.

கொடைத்துறைகளின் விளக்கம்

கொடை என்பது இல்லாதவர்களுக்குக் கொடுப்பது. சங்ககால மன்னர்கள் கொடையில் சிறந்து விளங்கியதால், கொடையின் திறத்தினைப் புலவர்கள் வியந்து பாடியுள்ளனர். கொடை என்ற பாடுபொருளைப் பாடலாகக் கொண்டு பல்வேறு கொடைத்துறைகள் நிலைக்களன்களாகப் பயன்பட்டுள்ளன. பாடான்திணையில் தொல்காப்பியர் குறிப்பிடும் துறைகள் பதினொன்று அவற்றுள், கொடை பற்றிய துறைகள் ஏழு. புறநானூற்றில் இடம்பெறும் கொடைத்துறைகள் பதின்மூன்று அவற்றுள், பாடாண் திணையில் அமைந்துள்ள துறைகள் எட்டு. வஞ்சித்திணையில் ஒரு துறையும், காஞ்சி திணையில் ஒரு துறையும், நொச்சித்திணையில் ஒரு துறையும் ஆக அமைந்துள்ளன. இதனைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் மற்றும் புறப்பொருள் வெண்பாமாலை இலக்கண நூல்களின் வழி அறியமுடிகிறது.

முடமோசியாரின் இறக்க நிலை

முடமோசியார் ஆய் அண்டிரன் இறந்த பின், அவனை இந்திரன் வரவேற்பதாகக் கவிநயம் விளங்க (புறம். 241) பாடியதால் இது கையறுநிலைத் துறையையும், பொதுவியல் திணையையும் பெற்றுள்ளது. புலவர் ஏணிச்சேரி முடமோசியார் ஆய் அண்டிரன் நாடும், அவனின் கொடைச்சிறப்பும் மற்ற நாட்டைப் போல் இல்லாமல் மேம்பட்டு விளங்கப் (புறம்.127) பாடுகிறார். பரிசில் வேண்டி தலைவனின் வாயிலில் நின்று பாடுவதால் கடைநிலைத்துறையும், பாடாண்திணையையும் பெற்றுள்ளது.



ஆயின் பண்பு நலன்கள்

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புலவர் இரவலர்களை ஆய் அண்டிரனைக் காணச் சென்றால் நீ வேண்டிய கொடைப் பரிசிலை அளிப்பான் (புறம். 133) என்று பாடலின் மூலம் ஆற்றுப்படுத்துவது விறலியாற்றுப் படைத் துறை என்பதும் கொடைத் தன்மை குறிப்பிட்டதால் பாடாண் திணையும் பெற்றுள்ளது. பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை தோன்றிய சோழ நாட்டில் விறலியாற்றுப்படையும் தோன்றியிருக்கிறது. ஆயின் பண்பு நலன் கூறியதால் பாடாண் திணையாயிற்று. இப்பாடலை, “இளம்பூரணரும், நச்சினார்கினியரும்”விறலியாற்றுப்படைக்கு மேற்கோளாகக் காட்டுகின்றனர்.

புலவர்கள் பாடும் பாடல்களின் வகைகள்

* தலைவன் முன் சென்று அவனைப் புகழ்ந்துரைத்து வாழ்த்திப் பாடுதல்

* வாயிலில் சென்று நிற்றலைக் கூறிப் பாடுதல்

* வாயிற்கடை நின்று விடை கூறுதல், பெறுதல், பரிசில் விடை பற்றிப் பாடும் முறை

* இறந்த அரசனைக் குறித்து அவரும் அவனைச் சார்ந்தோரும் வருத்தம் தெரிவித்து அவன் புகழை நினைத்துக் கையற்றுப் பாடுதல்

* பரிசில் நாடிப் புரவலன் பாற்சென்று உரைத்துப் பாடுதல்

* அரசன் முன்னே தாம் பெறக்கருதிய பரிசை உரைத்தல், பெற்றப் பரிசினைப் பாராட்டிப் பாடுதல்

* பரிசில் பெற வந்தவன் அரசனைப் போற்றிப் பாடுதல், அதிக அளவு பரிசில் கொடுத்தல் பற்றிப் பாடுவது

* இரவலரைப் புரவலனிடம் வழிப்படுத்திப் பாடுவது

* பாணனை மலை வழியில் வழிப்படுத்திப் பாடுவது

* அதிக அளவு சோற்றை வீரர்களுக்கு அளிப்பது பற்றிப் பாடுவது

* அரச மகளிரை கொடுக்க மறுத்துப் புலவர் பாடுவது

* தலைவனை வாழ்த்திப் பாடுவது (வீரம், கொடை)

* அரசனுடைய புகழைப் பாடும் பாடினியை வழிப்படுத்திப் பாடுவது

இவ்வாறு ஐம்பத்தாறு புலவர்களும் பாடல்களைப் பாடுகின்றனர். பரிசில் வேண்டியே அதிக அளவில் பாடல்களைப் பாடுகின்றனர்.

புறநானூற்றுப் பாடல்களில் நூற்றி முப்பத்தைந்து பாடல்கள் (135) கொடையின் பொருண்மையைப் பற்றி விளக்குவதாக அமைந்துள்ளது. நூற்றி ஐம்பத்தைந்து (155) புலவர்கள் கொண்ட புறநானூற்றில் நாற்பத்தெட்டு புலவர்கள் கொடைத் துறைகளைப் பற்றிப் பாடியுள்ளனர்.

புறநானூற்றில் இடம்பெற்றுள்ள அறுபத்து ஐந்து துறைகளில் பதின்மூன்று துறைகள் மட்டுமே கொடைத் துறைகளாக அமைந்துள்ளன.



கொடையின் வகைகள்

1. பொன் தாமரை கொடுத்தல்

2. ஊரையே தருதல்

3. அணிகலன்கள் தருதல்

4. யானைகள் கொடுத்தல்

5. பொன்னால் செய்த ஆரம், பொற்கடகம் கொடுத்தல்

6. மணிமாலை பூண்ட யானைகள் பொன்னால் செய்யப்பட்ட மாலை கொடுத்தல்

7. நீலமணியை வெள்ளி நாரில் தொடுத்த ஆரம் கொடுத்தல்

8. மாமிசம் கலந்த உணவுகள் கொடுத்தல்

9. பொன் ஆபரணங்கள் தருதல்

10. உணவு கொடுத்தல் (நெய் கலந்தது)

11. விளை நிலங்கள் தருதல்

12. புத்தாடைகள் தருதல்

13. மதுபானங்கள் தருதல்

14. பாம்பு உரித்த தோல் போன்ற பூவேலை செய்யப்பட்ட ஆடைகள் தருதல்

15. வெள்ளி நாரால் கோர்க்கப்பெற்ற தாமரைப்பூ மாலையைப் பரிசாகத் தருதல்

ஆகியவற்றை கொடை அரசர்கள் பரிசுகளாகத் தன்னை நாடி வந்த புலவர்களுக்கு தந்தனர்.

முடிவுரை

சங்க இலக்கியங்களில் உள்ள புறப்படல்கள் தொல்காப்பியத்தின் அடிப்படையிலும், புறப்பொருள் வெண்பா மாலை அடிப்படையிலும் திணை, துறைகள் வகுக்கப்பட்டாலும் பெரும்பாலான துறைகள் பொருத்தமுடையதாக இல்லை. இதற்குக் காரணம் அவை பாடப்பட்ட காலம், தொகுக்கப்பட்ட காலம், திணை, துறை வகுக்கப்பெற்ற காலம் என்பது மாறுபட்ட நிலையில் அமைந்ததால் இவ்வாறான குழப்பங்கள் எழுவது இயல்பே. எனவே தொல்காப்பியச் சிந்தனை மரபைப் பின்பற்றி சங்க இலக்கியப் புறப்பாடல்கள் அமைந்தாலும் அவை புதிய சிந்தனை மரபு மாற்றத்துடன் திகழ்வதை அறியமுடிகிறது. இன்றைய சூழலில் புறப்பாடல்களை மறுவாசிப்பிற்கு உட்படுத்திப் புதிய சிந்தனைகளைப் புகுத்தித் தொகுக்க வேண்டிய நிலையில் புறப்பாடல்கள் அமைந்துள்ளன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p109.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License