இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

50. தமிழ் இலக்கியத்தில் பண்பாட்டுச் சிந்தனை


வெ. சுதா
முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,
அரசு கலைக்கல்லூரி, தருமபுரி..

முன்னுரை

பண்பாடு என்ற சொல்லின் அறிமுகமும் விளக்கமும் முதலில் அறிந்திட வேண்டிய ஒன்று. சற்றேறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரசிகமணி டி. கே. சி அவர்களால் ‘பண்பாடு” என்ற சொல், “Culture“ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக அறிமுகம் செய்யப்பெற்றது. ‘உலக நடைமுறையினையும் சமுதாயம் ஒத்துக் கொண்ட நெறிகளையும் பொருத்தி நடந்தலே ‘பண்பாடு” என்று எண்ணப்பெற்றது. பண்பாடு என்னும் சொல், சமுதாயத்தில் ஓர் உறுப்பினர் என்ற முறையில் மனிதரால் ஈட்டப்பெறும் அறிவு, நம்பிக்கை, கலை, நீதி, விதிமுறை, நடைமுறை என்பனவும், ஏனைய ஆற்றல்களும், தொடர்ச்சியாக அமையும் செயல்களும் ஆகிய ஒட்டு மொத்தமான பண்பாட்டுச் சிந்தனைகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

புதின இலக்கியத்தல் இலட்சியப் பெண்கள்

பொதுவாக மு. வ. அவர்களைக் குறிக்கோள் உடைய புதின ஆசிரியர் என்றும், அவருடைய புதினங்களை ‘அறன் வலியுறுத்தும் நோக்கில் எழுந்த நீதி நூல்கள்” என்றும் கூறுவர். மு. வ வின் அகல்விளக்கில் கைம்பெண்ணாகப் படைக்கப்பட்டுள்ள பாக்கியம் அம்மையார், கல்வியில் நாட்டம் செலுத்தி அறிவை வளர்த்துக் கொண்டு கல்வி கற்பிக்கும் தொண்டில் ஈடுபடுவதாகப் படைக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் குறிக்கோளிலாது கெடுவதைத் தடுத்து, ஏதேனும் ஒரு குறிக்கோளைப் படைத்து வாழ வேண்டும் என்ற அறிவுரையைச் சமுதாயத்திற்குத் தருகிறார் மு. வ. இவ்வாறு மனித சிந்தனையின் பிரதிநிதியாக இலட்சிய நோக்குடைய மாந்தராகப் படைக்கும் திறனைப் பின்பற்றுப் பலரும் தத்த்ம புதினங்களில் பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

பெண்களின் உரிமைகளைப் பெறுவதற்காக அவர்கள் போராடுவதை மையமாகக் கொண்டு புதினங்களைப் படைத்தவர் சு. சமுத்திரம். சோதனைகளைத் தாங்கி வெற்றி காணும் தலைமைப் பண்போடு கூடிய இலட்சியப் பெண்களைப் பாத்திரங்களாகப் படைத்துள்ளார். இவருடைய ‘வேரில் பழுத்த பலா” எனும் தொகுப்பைச் சார்ந்தது. ‘ஒரு நாள் போதுமா? என்னும் குறும் புதினம். இதில் வரும் அன்னவடிவை சமுத்திரத்தின் இலட்சியப் பெண்களுக்குச் சான்றாகக் குறிப்பிடலாம். அவர்களுடைய கணவன் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் மரணமடைகிறான். நீதிமன்றம் சென்று இதற்கு நியாயங்கேட்க வேண்டுமென்று கட்டிடத் தொழிலாளர் சங்கம் தீர்மானிக்கிறது. இவர்களைப் புதின இலக்கியத்தின் இலட்சியப் பெண்களாகப் பண்பாட்டு சிந்தனை மூலமாக அறிய முடிகின்றது.



பண்பாட்டுச் சிந்தனை

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களுள், கலித்தொகை, நற்றினை, குறுந்தொகை, புறநானூறு, பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை ஆகியவை பண்பாட்டுக் கூறுகளைப் பதிவு செய்துள்ளன. கற்றறிந்தோர் ஏந்தும் கலித்தொகையில், தலைவலியை மறந்த தலைவன் ஒருவனுக்குத் தோழி கூறும் அறிவுரை பல்வேறு பண்புகளுக்கு விளக்கம் தருவதாக அமைவது சிறப்பிற்குரியது.

“ஆற்றுதல் என்பது அலந்தார்க்கு உதவுதல்
போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொழுதல்
அன்பெனப் படுவது பேதையார் சொல் நோன்றல்
செறிவெனப் படுவது மறைபிறர் அறியாமை
முறையெனப் படுவது கண்ணோடாது உயிர் வவ்வல்
பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” (கலி - 133)

என்னும் பகுதியை, மனித குலத்திற்கு நீதியைப் புகட்டும் இனியதொரு பண்பாட்டு சிந்தனைகளை உள்ளடக்கியது எனலாம்.

நற்றிணையிலும் இது போன்ற பதிவு இடம் பெற்றுள்ளது.

யாவர்க்கும் இனிமைதரும் பாங்கில் நடத்தல் நயன், வேறுபாடின்று யாவரிடமும் அன்பு பாரட்டுதல் நண்பு, குற்றம், தீமை இவற்றைக் கண்டு மனம் கூசுதல் நாணம், சமுதாயத்திற்குப் பயன்பட இருத்தல், நற்பண்புகள் நிரம்பப் பெறுதல், உலகத்தோடியைதல் ஆகிய பண்பாட்டுக் கூறுகளை எடுத்தியம்பும் நற்றிணைக் காட்சி இங்குக் குறிக்கத் தக்கது.

“நயனும் நண்பும் நானும் நன்குடைமையும்
பயனும் பண்பும் பாடறிந் தொழுகலும்
நும்மினும் உடையேன் மன்னே” (நற் - 160)

என்னும் பகுதி நற்றிணை காட்டும் பண்பாட்டுச் சித்திரமாகும். சங்க இலக்கியம் காட்டும் இத்தகையப் பண்பாட்டுப் பதிவுகளுள் தனிமனித வளர்ச்சிக்குத் துணைபுரியும் காதலைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

பகுத்துண்ணுதல்

பசி என்று வந்தோருக்குப் புசி என்று ஒரு பிடியாவது கொடுக்கும் நம் பண்டைய மரபு இன்றும் நிலவி வருகிறது. இலக்கியம் காட்டும் இனிய நெறிகளுள் ஒன்றான பகுத்துண்ணும் போக்கு தமிழ்ச் சமுதாயத்தின் உயிர் நாடி அறமாக விளங்குகிறது. கீறல்கள் என்ற புதினத்தில் அமையும் ‘அருவாமனைச் சட்டத்தில் ஒரு காலை ஊன்று எடுத்துச் செதிள் எடுத்தாள், தலையை வெட்டிச் சட்டியில் போட்டாள், வாலை வெட்டிப் பூனைக்கு எறிந்தாள், மீனின் உடலை இடையில் வெட்டி, உள்ளே கையிட்டுக் குடல் பகுதியை எடுத்துக் கோழிக்கு எறிந்தாள்” என்னும் பகுதி, பகுத்துண்ணும் அறத்தை எடுத்தியம்புவதாக அமைகிறது.



பண்பாட்டுச் சீர்குலைவு

நம் பண்பாட்டைச் சீர்குலைத்து, மேற்கத்திய ஒழுக்கக்கேடன கலாச்சாரத்ததை இன்று திரைப்படங்களும், பத்திரிக்கைகளும் பரப்பி வருகின்றன. உழைப்பை மதித்து அதற்கு நன்றி சொல்லும் திருவிழாவான பொங்கலுக்கு அனுப்பப்படும் வாழ்த்து அட்டையில் கூடத் தற்போது திரைப்பட நடிகர், நடிகையரின் படங்களே இடம் பெறுகின்றன. இத்தகைய பண்பாட்டுச் சீர்குலைவை, ‘பொங்கலோ பொங்கல்” என்னும் சிறு கதையில் கடுமையாகச் சாடுகிறார் அகிலன். இதனை ‘குடியானவனையும் தொழிலாளியையும் வருசத்திலே ஒரு நாளாவது மனுஷன் நினைச்சுப் பாக்கிறதுக்குஏற்பட்ட பொங்கல்டா இது, கறவை மாட்டுப்படத்தையோ, காளை மாட்டுப்படத்தையோ நீ வாங்கியிருந்தா, நீ சோத்திலே உப்புப் போட்டுத் திங்கறதுக்கு அது நியாயமா இருந்திருக்கும்.

சமூகப் பண்பாட்டின் அடையாளமாகக் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டுச் சீர்குலைவைக் கண்டிருக்கிறார் ஆசிரியர். இதன் மூலம் உழைப்பைப் போற்றும் உண்மையான பண்பாட்டு விழாவாகப் பொங்கல் திருவிழா அமைய வேண்டும் என்னும் எண்ணத்தைச் சமுதாயத்தில் விதைக்கிறார் அகிலன் என்றே கூறத் தோன்றுகிறது.

பண்பாட்டில் கல்வி

ஒரு நாட்டின் சமுதாய, பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளுக்கு அடிப்படையாக அமைவது கல்வி. இத்தகைய கல்வி இன்று தரம் குறைந்து வருவது இன்றிமையாத சிக்கலாகும். படித்த பட்டதாரிப் பெண் ஒருத்தியை, ‘பகத்சிங் யாரு?” என்று கேட்கத் தூண்டும் கல்வியைப் பற்று, ‘நீங்க படித்த கல்விமுறை அப்படி, மூளையை விழித்தெடுத்துவிட்டு களிமண்ணை அடைக்குற கல்வி” என்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் அவலத்தை எடுத்துக் காட்டுகிறது. சுயசிந்தனையையும் முயற்சியையும் மழுங்கடிக்கச் செய்யம் இத்தகைய கல்வி முறை மக்களிடையே மூடநம்பிக்கை வளர்வதற்கும் காரணமாக அமைகின்றது.

விருந்தோம்பல்

தமிழர்களின் சிறந்த பண்புகளில் ஒன்றாகிய விருந்தோம்பலைப் புறநானூறு சிறப்பாகக் குறிப்பிடுகிறது. விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” என்பது தொல்காப்பியம். (செய்யுளியல் 231) முன்பு புதியவர்களைக் குறித்த இச்சொல், நாளடைவில் வீட்டிற்கு வரும் பழைய நண்பர்களையும் உறவினர்களையும் சுட்டுவதாயிற்று.

தலைவியின் இல்லறக் கடமைகளில் விருந்தோம்புதல் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. இது மனையறமாகப் போற்றப்பட்டது. மனைவியர் விருப்பத்துடன் விருந்தோம்பியமையைப் புறம் கூறுகின்றது.



மன்னனின் பண்பு

‘கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொந்தி விளைவிறகு ஈமத்து,
ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி”

என்ற பாடலின் தலைவி மேலுலகம் சென்று விட்டார். அவளோடு நானும் உயிர்விடவில்லையே என மனம் கசிந்து வாடுகிறான் மன்னன். இவை புறநானூற்றின் மூலமாக மன்னனின் பண்பு நலனை வெளிப்படுத்துகின்றன.

முடிவுரை

நிலம் கீழ் மேலதாக ஆவதாயிருப்பினும், ஒருவன் செய்த நன்றியை மறத்தலாகாது என்று அறநூல் கூறுவதாகப் புறநானூறு தரும் செய்தி. மனித சமுதாயத்திற்குத் தேவையான பண்பாட்டுச் சிந்தனை எனலாம். சமுதாயத்தின் அங்கமான தனிமனிதன் மேம்பாட்டை வலியுறுத்தும் இத்தகைய பண்பாட்டுச் சிந்தனைகள், சங்க இலக்கியத்தில் பரவலாகக் காணக்கிடக்கின்றன. இலக்கியம் எல்லா நிலையிலும் வளர்ச்சியுற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட சங்க இலக்கியம் சிந்தனைகளைப் பின்பற்றினால் இன்றைய இலக்கியம் ஏற்றம் பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதே இதன் நோக்கமாகும்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p50.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License