இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

57.தமிழர்களைப் பேணிக்காப்பதில் சமய நூல்களின் பங்கு


முனைவர் இரா. செல்வராஜூ
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்

முன்னுரை

மனிதன் தன் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இயற்கையை வழிபடத் தொடங்கிய வழிபாடே ‘ஆதிவழிபாடு’ ஆகும். இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதன் ஆண்டுகள் செல்லச் செல்ல இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒரு ஆற்றலை உணர்ந்தான். அதனைக் கடவுள் என்றான். அதற்கென ஒரு மரத்தை நட்டான். அதனையே ‘கந்துநிலை’ அல்லது ‘கந்தழி’ எனக் குறிப்பிட்டார் தொல்காப்பியர். ஓரிடத்தில் நிலையாக வாழத்தொடங்கிய மனிதன் தான் வாழும் நிலத்திற்கு அடையாளமாக ஒரு தெய்வத்தை வழிபடத் தொடங்கினான். இவ்வாறு இறைவனை உருவாய் அருவாய் அருவுருவாய் அமைத்தனர். உருவங்களைக் கல்லிலும் செம்பிலும் வடித்தனர். பின்னர் அச்சிலைகளைக் காக்கும் பொருட்டு கூரை அமைத்தனர். இவ்வாறாக மனிதனிடம் மெல்ல வழிபாடு தோன்ற ஆரம்பித்தது. சங்க இலக்கியங்களில் கடவுளைப் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. காலம் செல்லச் செல்ல தோன்றிய அரசுகளால் வலிமையான கோயில்கள் நிறுவப்பட்டன. பகவத் கீதையையும் திருக்குறளையும் இந்து சமயத்தின் புனித நூலாகக் கொள்ளலாம். எனவே திருக்குறளில் வாழ்க்கை அறமாகக் கூறப்பட்டுள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டு அதன்வழி சமய நூல்கள் கூறும் கருத்துக்களை ஆராய்வதே இக்கட்டுரையின நோக்கமாகும்.

தமிழர்களைக் காத்தல்

தமிழர்களுக்குச் சமய நூல்கள் அவர்கள் வாழும் வழிமுறைகளை வகுத்துக் காட்டியுள்ளன. இராமாயணம் படிக்கிறான் ஒருவன். என்ன தெரிந்து கொள்கிறான்? இராமனைப் போல் வாழ வேண்டும் இராவணனைப்போல் வாழக்கூடாது என்று உணர்கிறான். அன்பு அறம் போன்றவற்றை அறிவுறுத்துவதன் மூலம் அவர்கள் எவ்வாறு குற்றமற வாழ முடியும் என்ற வழியையும் காட்டுகின்றன.

அன்பே சிவம்

அன்பு எல்லா உயிர்களிடத்தும் இயல்பாக அமைந்த ஒரு குணம். ஆன்பு என்பது மனிதன் பிறக்கின்ற போதே கூடப்பிறந்து வளர்கின்ற இயற்கைப் பண்பாகும். பிற பண்புகள் யாவும் அன்பின் அடித்தளத்திலேயே வளரும் பண்புகள். அந்த அன்பினை முதன் முதலில் நமக்கு ஊட்டுபவள் தாய். தாய்ப்பாலில் கலந்து முதன் முதலாகச் சேய்க்கு அன்பை ஊட்டுபவள் தாய் என்னும் தெய்வம். அந்தத் தாயை எவ்வாறு போற்ற வேண்டும் என்பதை வலியுறுத்த பக்தி இலக்கியங்கள் தெய்வத்திற்கு ஈடாகத் தாயைப் போற்றி வந்துள்ளன. தாயை நேசிப்பவன் தாய் நாட்டையும் நேசிப்பான். எனவே தாயை நேசிக்க வேண்டும் என்பதைப் பக்தி இலக்கியங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்தி வந்துள்ளன.

“தாயினும் நல்லன் தாழ்சடையோனே”

என மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலரும்

“தாயவனை தாயவன் காண்”

என அப்பர் பெருமானும்,

“தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து”

என மாணிக்கவாசகரும் போற்றுகின்றனர்.



பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் அன்பை விளக்கப் புகுந்த நூலாகும். அது அன்பினால் செயற்கருஞ்செயல்கள் செய்த அடியார்கள் வரலாற்றினைக் கூறுகின்றது. அறுபத்து மூன்று தனியடியார்களுள் அந்தணர் பன்னிருவர், அரசர் பதினொருவர், வேளாளர் பதின்மூவர், வணிகர் ஐவர், ஆதி சைவர் நால்வர், இடையர் இருவர், நுயைர் சான்றார், வேடர், வாணியர், மாமத்திரர், ஏகாலியர், சாலியர், புலையர், குயவர், பாணர் இவர் ஒவ்வொருவர். இவ்வாறு குலத்தால் வேறுபட்டவராயினும் அவர்களனைவரும் அன்பால் ஒன்றுபட்டவர். அந்தணரான சுந்தரர் அடியார்களனைவரையும் ஒரே நிலையில் வைத்துப் பாடிய திருத்தொண்டத்தொகையில் ‘அடியார்க்கு அடியேன்’ என்று போற்றினார். மேலும் அந்தணரான சம்பந்தர் வேளாளரான அப்பரை அடிபணிந்து வணங்கினார். அந்தணரான அப்புதியடிகளும் நாவுக்கரசர் பெயரையே தன் அறச்சாலைகளுக்கும் மக்களுக்கும் சூட்டியதோடு அவரையே தம் கண்கண்ட தெய்வமாக வணங்கினார். திருநாளைப் போவாரை தில்லைவாழ் அந்தணர் மூவாயிரவர் தொழுது போற்றி தில்லை அம்பலத்துள் அழைத்துச் சென்றனர்.

“அங்கமெலாம் குறைந்து அழுகுதொழுநோயரேனும்
ஆவுரித்துத் தின்கின்ற புலையரேனும்
கங்கை வார் சடைக்கரந்தார்க்கன்பராகில்
அவர் தாமே யாம் வணங்கும் கடவுளாரே”

என்று அப்பர் குல வேறுபாடின்மையை வலியுறுத்திப் பாடியுள்ளார்.

தன்னால் பாராத அன்பு உயர்ந்தது. அதற்கு இவ்வுலகில் ஈடு இணையே இல்லை எனலாம். பெரியபுராணம் முழுவதும் இந்நிலையையே விளக்குகின்றது. எனினும் அவற்றிலெல்லாம் குறிப்பிடத்தக்கது. கண்ணப்பரின் அன்பு, பிறருக்கு ஒரு துன்பம் என்று தெரிந்ததும் தன்னை வதைத்து அத்துன்பத்தைப் போக்கும் குணம் கொண்டால் இவ்வுலகில் சண்டை என்னும் சொல்லுக்கே பொருள் இருக்காது.

அறம்

‘அறம்’ என்னும் சொல் விரிந்த பொருளுடையது. மனிதன் புரியும் நற்செயல்கள் அனைத்தையும் இதில் அடக்கிக் கூறலாம். தமிழர் வாழ்வில் அகம் - புறம் இருநிலையிலும் அறம் கடைபிடிக்கப்பட்டு வந்ததைத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பாகவும் தெளிவாகவும் புலப்படுத்தியிருப்பதைக் காணலாம். அறம் என்ற சொல் நீதியைக் குறிக்கும். அறம் என்ற சொல் இடத்திற்கேற்பப் பல பொருள்களில் வழங்கப்படுகின்றது. எனினும் அவையெல்லாவற்றுக்கும் அடிப்படியாக உள்ள அதன் சொற்பொருள் ‘அற்றது’ என்பதே. அதாவது பற்றற்ற நிலை தன்னலமற்ற தூய்மை. மேலும், அறம் என்னும் சொல்லுக்கு நேர்மை குணம், நன்மை, கடமை எனப் பலபொருள் காணலாம். இத்தகைய அறம் என்னும் சொல் பல கிளைகளாக விரிந்து பொருள் தருவதைக் காணலாம்.

செய்நன்றி அறிதல்

அறநெறியில் நின்று வாழ்க்கை நடத்தும் போது அறத்தின் ஒரு கூறாகிய செய்ந்நன்றி அறிதல் என்பதையும் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்யாவிட்டால், உலக வாழ்க்கை நடைபெறாது. அவ்வாறு செய்த உதவியை நினைத்து வாழ்ந்தால் ஒற்றுமை குறையாது. இதைத்தான் திருவள்ளுவரும்,

“காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது”

என்கிறார்.

வைணவ நூலான இராம கதையில் செய்ந்நன்றியறிதலைப் பற்றி அனுமன் பேசுகின்றான். இராமனுக்கு உதவுவதாகக் கூறிச் சென்ற சுக்ரீவன் சிற்றின்பத்தில் மூழ்கி விடுகின்றான். சினத்துடன் இந்த இலக்குவன் தாரையின் சந்திப்பினால் தணிகிறான். அப்போது அனுமன் இலக்குவனிடம்

“சிதைவகல் காதல் தாயைத்
தந்தையைக் குருவைத் தெய்வப்
... ... ... ... ...
உதவி கொன்றோர்க்கு ஒன்றேனும்
ஒழிக்கலாம உபாயம் உண்டோ”

இதில் பெரிய பாவங்கள் அனைத்திலும் கொடியது இச்செய்ந்நன்றிக் கொலை என்று செய்ந்நன்றி மறத்தலின் கொடுமையை அனுமன் வாக்கில் காணலாம்.

“செஞ்சோற்றுக் கடன் கழித்தல்” ஒரு வகையில் செய்ந்நன்றி அறிதலுக்கு ஒப்பாகும். இதனை வில்லி பாரதத்தில் காணலாம். கண்ணனின் தூண்டுதலால் குந்திதேவி கர்ணனிடம் வருகின்றாள். பாண்டவர்களோடு வந்து சேருமாறு அழைக்கின்றாள். அதற்குக் கர்ணன், “அன்னையே என்னைப் பெற்ற நீ அன்பு இல்லாமையாலோ, அல்லது பெரும்பழி நாணியோ என்னைக் கைவிட்டீர் அற்றைநாள் தொடங்கி என்னைத் துரியோதனன் இன்றளவும் ஆருயிர் துணை எனக் கருதுகின்றான்.



பொறுமை

பொறுமை என்பதை வள்ளுவர் பொறையுடமை என்கிறார். இல்லறத்தார்க்கு மட்டுமின்றி துறவறம் பூண்டோர்க்கும் இருக்க வேண்டிய குணங்களும் இதுவும் ஒன்று. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்பது பழமொழி. பொறுமைக்கு இலக்கணமாகக் காட்டப்படுபவன் பஞ்சபாண்டவர்களில் மூத்தோனான தருமன் வில்லிபாரத்தில் ஓரிடத்தில் கண்ணனோடு பாண்டவர்கள் கலந்து யோசிக்கின்றனர். சந்து செய்து அருளுமாறு வேண்டுகிறான் தருமன். இதனை,

“முந்து ஊர் வெம்பணிக்கொடியேன் மூதூரில்
நடந்து உழவர் மூன்றில் தோறும்
நந்து ஊரும் புனல்நாட்டின் திறம்வேண்டு
நாடு ஒன்றும் நல்காண் ஆகில்
ஐந்து ஊர் வேண்டு அவை இல்எனில் ஐந்து இலம் வேண்டு”

அவை மறுத்தால் அடுபோர் வேண்டு என்று விளக்குகிறார். இதில் தருமன் நாடு கேட்டு தராவிட்டால் ஊரும், அதுவும் தராவிட்டால் ஐந்து இல்லமும், அதுவும் தராவிட்டால் பின்பே போர் செய்ய அழைத்திடு என்று கூறுகிறான். தனக்கு உரிமையானதைப் பெறக்கூட தருமன் எவ்வாறு பொறுமையுடனும், பெருந்தன்மையுடனும் நடந்து கொள்கிறான் என்பதை மக்கள் இங்கே ஆழ்ந்து நோக்குதல் வேண்டும்.

முடிவுரை

இருண்டகாலம் எனப்படும் களப்பிரர் காலத்தில் நாயன்மார்களும், ஆழ்வார்களும் தோன்றி சமயமறுமலர்ச்சியை ஏற்படுத்தினர். இவர்கள் பல்வேறு தலங்கள் தோறும் இறைவனைப் பற்றிய சிறப்புகள் குறித்து பக்திப்பனுவல்களை இயற்றினர். சமயச் சான்றோர்கள் இயற்றிய பக்தி இலக்கியங்களில் மக்கள் வாழும முறைகள் பற்றியும், நீதி நெறிகள் பற்றியும் நிரம்பக் கூறியுள்ளனர். திருக்குறளில் மனித வாழ்க்கைக்குத் தேவையான அறங்கள் பல கூறுப்பட்டுள்ளதைப் போன்றே சமயம் சார்ந்த இலக்கியங்களிலும் வாழவேண்டிய முறைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. சமயம் சார்ந்த தமிழ்நூல்கள் மக்கள் வாழ வேண்டிய முறைகளை எடுத்துக்காட்டுகின்றன.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p57.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License