இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

75.திருக்குறளில் சமுதாயச் சிந்தனைகள்


முனைவர் மு. பெரியசாமி
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

சமுதாயம் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகளும் அணுகுமுறைகளும், நிறை, குறைகளும் சமுதாய முன்னேற்றம் அடையத் தடையாக இருப்பனவற்றையும் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளையும் கண்டறியப்பட வேண்டியது இன்றைய காலக்கட்டத்தின் தேவையாகும்.

திருவள்ளுவரும்-திருக்குறளும்

திருவள்ளுவர் தாம் வாழும் உலகத்தைத் தம்முள் கொண்டு இந்த உலகுக்காகத் தம் வாழ்வையே ஒப்படைத்த பெருமகனார் ஆவர்.

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

உலகத்தில் எவர் ஒருவர் அறநெறியில் நின்று வாழ்கின்றாரோ அவர் வானுலகத்தில் உள்ள தேவர்களொடு ஒப்பிடப்படுவர்.

சான்றோர்க்கு எந்நாடும் தம் நாடே என்றும், எவ்வூரும் தம் ஊரே என்றும் அறிவார்ந்த நன் மக்கட்பேறு பெற்றோர் பெற்றிடினும் அவை இப்பேருலகுக்கும் பெருநலம் செய்யுமென்றும் உலகளாவிய பெருநெறி காட்டியவர் வள்ளுவர்.

திருவள்ளுவர் - மதம் விளக்கம்

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் எல்லாச் சமயத்திற்க்கும் பொதுவான கருத்துக்களை எடுத்துரைத்துள்ளார். தனியொரு சமயத்தையுஞ் சாராத அவரைச் சமயத்துக்குள் அடக்க ஒவ்வொரு சமயத்தாரும் முனைந்து உள்ளனர். சமய நூலான நீலகேசிக்கு உரை எழுதிய சமய திவாகரவாமண முனிவர் தம் உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி

“இது எம் ஒத்து ஆதலின்”

எனத் திருவள்ளுவரைச் சமணர் என்று மொழிகின்றார். இவரைப் பலறும் பலசமயத்தினராக கூறுகின்றனர்.



திருவள்ளுவரின் பெருமைகள்

ஆண்டவனையும் அரசர்களையும் புலவர் பாடிக் கொண்டிருந்த காலத்தில் மக்களைப் பற்றி பாடிய ஒரே புலவர் வான் புகழை எய்தியுள்ள வள்ளுவப் பெருந்தகையரே என்று புத்தர், இயேசு, நபிகள் நாயகம் தத்தமது நிலையில் நின்றவாறு கருத்துக்களைக் கூறியுள்ளார்கள்.

“வள்ளுவன் தன்னை உலகினுக்கேதந்த வான்புகழ்
கொண்ட தமிழ்நாடு”

என்று வள்ளுவரின் புகழைப் பறைச் சாற்றுகின்றார் பாரதி. வள்ளுவரை உலகினுக்கே அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு. அத்தகைய வள்ளுவரால் தமிழ் நாட்டிற்கும் பெருமை, தமிழ் மொழிக்கும் பெருமை.
சமுதாயச் சிந்தனை

சமூகம் என்பது மக்கள் ஒரு குழுவாகவும், கூட்டமாகவும் ஒன்றிணைந்து கூடி வாழ்பவர்களைக் குறிப்பதாகும். உணவு, உடை, இருப்பிடம், வாழ்க்கைமுறை, பண்பாடு, கலாச்சாரம், தொழில், திருமணம், விழாக்கள் போன்றவைகள் நிறைந்து ஒருங்கே பெற்று மக்கள் வாழ்வதே சமுதாயம் என்று அழைக்கலாம்.

வள்ளுவரின் சமுதாயப் புரட்சி

மனித குலத்தைப் பற்றிப் பாட வேண்டுமென்று கருதியவர் திருவள்ளுவர். ஒன்றே முக்கால் அடியில் ஏழு சீரில், குறளை வெண்பாவடியில் வடித்துத் தந்து பெரும் புரட்சியை விளைவித்தார். ஓலைச் சுவடியில் எழுதியமையாலும் தமிழ் மொழியில் தந்தமையாலும் வள்ளுவப் பெருந்தகையாரை வண்டமிழ் மக்கள் உரிமையுடன் சொந்தம் கொண்டாடினர்.

ஆயிரத்து முந்நூற்று முப்பது குறளிலும் எங்கேனும் ஓரிடத்திலும், தமிழ் இனத்தைப் பற்றியோ, தமிழ்மொழியைப் பற்றியோ, தமிழ் பண்பாட்டைப் பற்றியோ எங்குமே சிறப்பித்துக் கூறவில்லை. சமுதாயம், மக்கள், உலகம் என்றே கூறுகின்றார். புத்தருக்கு அடுத்ததாக அவர் நெறியில் சீர்திருத்தக் கருத்தைக் கொண்ட சமுதாயப் புரட்சியை மனிதனுக்காகச் செய்தவர் திருவள்ளுவர்.

வாழ்க்கை

மனித வாழ்க்கை என்பது இயற்கையோடும், சமுதாயத்தோடும், குடும்பத்தோடும் ஒன்றி வாழ்தல் ஆகும். மனிதவாழ்க்கை இன்பமும், துன்பமுமும் நிறைந்தது. அத்தகைய வாழ்க்கை குறித்து வள்ளுவர் திருக்குறளில்,

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது”

அறநெறி கண்டுணர்த்திய வாழ்வியல் நெறியில் இல்லற நெறி தலையாயது. அன்பின் விரிவுக்கும் சமூக வரலாற்றின் நீட்சிக்கும் துணை செய்யக் கூடியது இல்வாழ்க்கையேயாம்.

அரசியல்

ஜனநாயகம் அல்லது மக்களாட்சி எனும் அரசாங்கம் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவது மக்களாட்சி என்று அமெரிக்கா முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் குறிப்பிட்டுள்ளார். இன்றைய ஜனநாயகம் என நாம் குறிப்பிடுவது அரசாங்கத்தைத்தான். சாதாரணக் குடிமகன் ஒரு பிரதிநிதிக்கோ அல்லது ஒரு கட்சியின் கொள்கைக்கோ சாதகமாகத் தனது வாக்கை அளிக்கும் போது ஜனநாயக அமைப்பில அவன் ஐக்கியமாகிறான். ஆரசியல் குறித்து சிலப்பதிகாரத்தில்,

“அரைசுகோல் கோடினும் அறங்கூறு அவையத்து
உரைநூல் கோடி ஒரு திறம் பற்றினும்”

அரசவையில் பொறுப்புடையவர் தம் செங்கோலாட்சியிலே நீதி நெறி தவறி நடப்பினும் அறம் கூறுகின்ற நியாயமான சபைகளிலுள்ளவர்கள் அறநூல்களுக்கு மாறுபட்டு ஒரு பக்கமாக சார்ந்து நீதி வழங்குதல் தவறு என் அரசியல் குறித்து சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.


சமயச்சிந்தனை

சமயம் என்பது மக்களின் நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம் போன்றவற்றோடு நெருங்கிய தொடர்புடையது ஆகும். மனித வாழ்வின் ஓர் அங்கமாகும். மக்களின் இறையுணர்வை வெளிப்படுத்துகின்றன. மக்கள் இறையுணர்வுடனும், வழிபாட்டுடனும், ஒற்றுமையுடனும் வாழ்வதற்குச் சமயங்கள் வழிவகுக்கின்றன.

இந்தியாவில் வாழும் மக்கள் பின்பற்றும் சமயங்கள் பல இருப்பினும் அதில் மிக முக்கியமாக இந்து, பௌத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம் ஆகிய சமயங்களே நடைமுறையில் உள்ளன.

இந்து

இந்திய மக்கள் பெரும்பான்மையினர் பின்பற்றும் தொன்மைச் சமயமான இந்து சமய நான்கு வேதங்களையும், உபநிடதங்களையும், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோர் அருளிய பக்தி பாடல்களையும் ஆதாரமாகக் கொண்டது.

சிவன். திருமால், காளி முதலிய பல தெய்வங்களை வழிபட்டாலும் இப்பெயர்கள் யாவம் ஒரே பரம்பொருளைக் குறிக்கின்றன என்பர். இந்து சமயம் பின்னாளில் தோன்றிய நல்ல புதிய கொள்கைகளை விளக்கிப் புதுப்பொலிவோடு வளர்ந்து வரும் இயல்புடையது. எனவேதான் தத்துவ மேதை டாக்டர் இராதாகிருஷ்ணன், ‘இந்து சமயம் தொடர்ந்து நீடிக்கும் ஓர் இயக்கம்’ என்றார்.

பௌத்தம்

புத்தரால் தோற்றுவிக்கப்பட்ட பௌத்தம், உலகம் துன்பமயமானது. துன்பத்திற்கு காரணம், துன்ப நிவாரணம், துன்ப நிவாரண மார்க்கம் ஆகியவற்றைப் பற்றி கூறுகிறது. கொல்லாமை முதலிய பஞ்சசீலத்தை வலியுறுத்துகிறது. துன்ப நீக்கமே இச்சமயத்தின் குறிக்கோளாகும்.

சமணம்

பௌத்த சமயம் போலச் சமணமும் பழமையானது. 24 தீர்த்தங்கரர்களால் வளர்க்கப்பட்ட இச்சமயத்தின் உருவாக்கத்தில், மகாவீரர் முதலிடம் பெறுகிறார். நற்கதியடைய நன்னம்பிக்கை நல்லறிவு, நற்செயல் ஆகிய மும்மணிகளைப் போற்றி நடக்க வேண்டும். எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யக் கூடாது என்பது இச்சமயத்தின் உயர்ந்த நிலையாகும்.

கிறித்துவம்

விவிலியத்தைத் தனக்குரிய வேதமாய்க் கொண்ட கிறித்துவ சமயம், இயேசுபிரானால் தோற்றுவிக்கப்பட்டதாகும். விவிலியத்தின் ஒரு பகுதியான புதிய ஏற்பாட்டில் அவரின் வாழ்வும், வாக்கும் இடம் பெற்றுள்ளன. இறைவனிடமும், பிற மனிதர்களிடமும் அன்பு கொள்ள வேண்டும்.

“பகைவரையும் நேசி, தீமை செய்தவர்க்கும் நன்மை செய்க”

என்று கிறித்துவம் விளக்குகிறது.

இஸ்லாம்

இஸ்லாம் என்னும் அரபிச்சொல் சாந்தி, அடிபணிதல், ஈடேற்றல் எனப்பொருள் தரும். ஆதி மனிதர் ஆதாம் நபி முதலாக வலியறியா மயங்கிய மக்கள் வரை பலருக்கும் இறைவனின் தூதர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் தோன்றி வழிகாட்டிச் சென்றுள்ளனர். அவர்களுள் இறுதித் தூதரான முகம்மது நபி கால மாற்றத்தால் சீர்குலைந்திருந்த இசுலாமியத்திற்கு நிறைவான வடிவம் தந்தார் என்பர்.

“வேண்டுதல் வேண்டாமை இலான் அடிசேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல”

என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கேற்ப விருப்பு, வெறுப்பில்லாத இறைவன், அடி சேர்ந்தார்க்கு எப்போதும் துன்பம் என்ற ஒன்று நெருங்குவதில்லை.

விருப்பு, வெறுப்பு, துன்பங்களின் வாயில்கள் தவிர்க்க இயலாதது. வேண்டாதது வந்தடைவதாலும், வெறுப்பதனாலும், வெறுக்கப்படுவர் வெகுண்டு எழுவதாலும் துன்பம் வரலாம். விருப்பு, வெறுப்பு இல்லாத இறைவனைத் தொழுது வருவதன் வாயிலாகத் துன்பத்தை விரட்டி விடலாம். அதுவே இறைவனின் தன்மைகள் என்று கூறியுள்ளார்.

சங்க காலம் தொட்டு இன்று வரை சமயக் கொள்கையில் அதிக வேறுபாடுகளைக் காணுதல் அரிதேயாகும். மற்ற நாடுகளைப் போன்றல்லாது தத்துவக் கருத்துகளும், இலக்கியங்களும், கட்டிடக்கலையும், சிற்பக்கலையும், ஓவியக்கலையும், சமயத்தை மையமாகக் கொண்டே வரையப்பட்டன. பொது வாழ்க்கைக்கும், சமயக் கருத்துக்கள் பயன்பட்டன.



முடிவுரை

திருக்குறள் அறநூல் மட்டுமின்றி வாழ்க்கைக்குத் தேவையான அறநெறிக் கருத்துக்கள் நிறைந்த சிறந்த இலக்கிய நூலாகவும் விளங்குகின்றது. தமிழிலக்கியங்களில் ஒப்பற்ற ஓர் முழுமணியாய், மணி மகுடமாய் விளங்குவது திருக்குறள் ஆகும்.

சமுதாயச் சிந்தனை என்ற தலைப்பில சமுதாயம் குறித்த விளக்கமும், இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் உள் வேறுபாடு, அரசியல் வாழ்க்கை போன்றவற்றைப் பற்றிக் கூறப்படுகின்றது.

சமயச் சிந்தனையில் இந்து, சமணம், பௌத்தம், கிறுத்துவம், இஸ்லாம் போன்ற சமயத்தையும் விளக்குன்றது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p75.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License