இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

82.பாரதி மொழி


உ. ச. எ. முகிலன்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
எஸ். ஆர். என். எம். கல்லூரி, சாத்தூர்.

முன்னுரை

மொழி என்பது வல்லமை பொருந்தியது. எழுத்துக்களின் மூலமாகவும்,. சீரிய கருத்துக்களின் மூலமாகவும் அடைய வேண்டிய இலக்கைத் திறம்பட அடையக்கூடிய திறமை மொழிக்கு உண்டு. அவ்வகையில் தன்னுடைய அளப்பரிய கருத்தாற்றலாலும், மொழி வன்மையினாலும் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பெருமை சேர்த்த பாரதியின் மொழி குறித்து இக்கட்டுரை ஆய்வதாக அமைகிறது.

பாரதியின் இறைமொழி

இன்று மக்கள் இறைவனிடம் வேண்டும் போது, தனக்கு சொத்து, சுகம், நிறைய செல்வம் என அளவில்லாத ஆசை கொண்டு இறைவனை வேண்டுகின்றனர். ஆனால் பாரதியோ, இறைவனிடம் வேண்டும் போது,

‘மனத்திற் சலனமில்லாமல்
மதியி லிருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திடநீ செயல் வேண்டும்”

என்று வேண்டுகிறார். மேலும்,

‘அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னை யாருஞ் சமர்த்தெனக் கருள்வாய்”

என்று வேண்டுவதாகவும்

‘பல பண்ணிற் கோடிவகையின்பம் - நான்
பாடத் திறனடைதல் வேண்டும்”

என்று இறைவனை வேண்டுகிறார்

பெண்மை, மண், உண்மை என்றும் நிலைபெற்று இருக்க வேண்டும் என்பதை,

‘பொன் விடுதலை வேண்டும்
மண் பயனுற வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்”
“ஓம் ஓம் ஓம் ஓம்” என்று

வேண்டுவாய் அவரது மொழி அமைகிறது.



பொதுமைக் குணம்

குருவியிடம் கேள்வி கேட்டு குருவி விடை கூறுவதாய்ப் பாரதி நாட்டு மக்களுக்கு குருவியின் வழியாகப் பொதுமையைப் பறைசாற்றும் விதமாக,

“சின்னஞ்சிறு குருவி - நீ செய்கிற வேலை யென்ன?
வண்ணக்குருவி - நீ வாழும் முறை கூறாய்?”

என்று வினவிய பாரதியார்,

குருவியின் வாய்மொழி வழியாக,

“கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை
மீளா அடிமையில்லை - எல்லோன் வேந்தரெனத் திரிவோம்”

என்று பொதுமை வழிச் சமுதாயத்தைத் தன் மொழியின் வாயிலாக எடுத்துரைக்கிறார்.

நல்வழி கூறும் மொழி

எதைக் கைக்கொண்டு எதை விடுவித்தால் வாழ்வு இனிமையாகும் என்பதைப் பாரதி தன் பாட்டினிலே எடுத்துரைக்கிறார். இதனை,

“சத்தியம் கைக்கொள்ளடா - இனிச் சஞ்சலம் இல்லையடா
மித்தைகள் தள்ளிடடா - வெறும் வேஷங்கள் தள்ளிடடா”

என்றும்,

“அச்சத்தை விரட்டியடா - நல் ஆண்மையைக் கைக்கொள்ளடா
இச் சகத்தினி மேலே நீ - என்றும் இன்பமே பெறுவையடா”

என்று நல்வழி காட்டுவதாக அமைகிறது.



பொதுமையுடைமை

எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கும் நிலையை நோக்கி இவ்வுலகம் எப்போது நடைபோடுகிறதோ அப்போதுதான் இவ்வுலகில் அமைதி பிறக்கும்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்”

என்ற வள்ளலாரின் கூற்றுக்கிணங்க பாரதியும் தன் கவிதையில்

‘பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண்மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்
யாவுமென் வினையா விடும்பை தீர்ந்தே
இன்பமுற் றன்டிட னிணங்கி வாழ்ந்திடவே”

என்று ஓரறிவு முதல் ஆறறிவு வரையான அனைத்து மக்களும் இப்பூமியில் துன்பம் நீங்கி இன்பமுடன் வாழ வேண்டும் என்ற பொதுவுடைமைச் சிந்தனையைப் பாரதியின் மொழியில் காணலாம்.

மேலும்,

‘எல்லோரும் ஓர்குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்”

என்று பொதுமையை முன்னிறுத்தும் மனப்பாங்கைப் பாரதியின் மொழிகளில் காணலாம்.

மக்களுக்கான மொழி

தன் பெண்டு, தன்பிள்ளை, தன் வீடு என்று சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு வாழ்பவர்களுக்கு மத்தியில் பாரதி தம் கவிதையில் இம்மாநிலம் பயனுற வேண்டும் என்பதற்காகச் சிவசக்தியிடம்

‘நல்லதோர் வீணை செய்து - அதை
நலங்கெடப் புழுதியி லெறிவ துண்டோ?
சொல்லட சிவசக்தி - எனைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

என்று தன் சிந்தனையையும், அறிவையும் தனக்கென கொண்டு வாழாது இம்மாநிலம் தழைக்க வித்திட்டது பாரதியின் மொழி.

மேலும்,

“... ... ... ... ... என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாவித்திட வேணும்”

என்றும் பாடுகிறார்.



சாதி களையும் மொழி

ஏழை - பணக்காரன், உயர்ந்தோன்- தாழ்ந்தோன், ஆண்டான்-அடிமை என்று சாதீய ஏற்றத்தாழ்வுகள் ஓங்கி இருந்த காலத்தில் தன் ஆற்றல்சார் மொழியால் சாதி என்னும் கொடிய வேரை, வேரோடுப் பிடுங்கி சாதி என்னும் நஞ்சை மேலும் பரவ விடாது தடுத்தவர் பாரதியார்.

‘காக்கை குருவி யெங்கள் சாதி - நீர்
கடலு மலையுமெங்கள் கூட்டம்”

என்றும்,

“கேளடா மானிடவா - எம்மில் கீழோர் மேலோர் இல்லை”

என்றும்,

“சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே
தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்”

என்றும்,

“ஆயிர முண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகலென்ன நீதி
ஒன்றுபட் டாலுண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கிடி லனைவர்க்கும் தாழ்வே”


என்று சாதியைத் தகர்த்து எறிந்து மக்களிடத்தே ஒற்றுமை உணர்வை வளர்த்தெழச் செய்தது பாரதியின் மொழியாகும்.

மேலும்,

“சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
தன்னிற் செழித்திடும் வையம்”

என்று உலகம் அன்பால் மட்டுமே தழைக்கும் என்ற உண்மையையும் தன் மொழியால் பறை சாற்றிச் சென்றார்.

தனி மனிதப் பிரச்சினைகள் குறித்து இன்று யாரும் வாய்திறக்க முன்வருவதில்லை. ஆனால் பாரதியோ தன் மொழியில்

“இனியொரு விதி செய்வோம், அதை
எந்த நாளும் காப்போம்.
தனியொருவனுக்கு உணவில்லை யெனில்
ஜகத்தினை யழித்திடுவோம்”

என்று பெருமுரசு கொட்டியவர் பாரதி.

சட்டங்களும், நீதிகளும் ஏழைகளின் பக்கம் சாயாதிருக்கும் வேளையில் தனிமனித உரிமை குறித்துப் பேசியது பாரதியின் புரட்சி மொழியாகும்.

பெண்ணடிமை நீக்கும் மொழி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், பெண்ணடிமை என்று ஒழிகிறதோ அன்று தான் இவ்வையம் தழைக்கும் என்பதை

“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி இவ்வையம் தழைக்குமாம்”

என்று கூறுகிறார்.

பெண்மை தான் இவ்வுலகுக்கு அச்சாணி என்று எடுத்துரைத்து

“பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா
பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா”

என்றும்,

“உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்பமாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”

என்றும் கூறுகிறார்.

ஆண், பெண் என்ற ஏற்றத்தாழ்வு நீங்கி சரிநிகராய் வாழ வேண்டும் என்பதையும், கற்பு என்னும் பெயரால் பெண்ணை அடிமைப்படுத்தக் கூடாது என்பதையும் விளக்கும் நோக்கில்

“கற்பு நிலையென்று சொல்ல வந்தால் - இரு
கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்”

என்று பெண்மையின் குரலாக விளங்குகிறது பாரதியின் புரட்சிமொழி.

முடிவுரை

மொழியால் ஆளும் உலகை மாற்றியவர் பாரதி. உள்ளத்து உணர்ச்சிகளை மொழியில் காட்டி, பெண்ணடிமை, சாதிப் பாகுபாடு, தீண்டாமை, ஏற்றத்தாழ்வினைப் போக்கி, சுதந்திரம், விடுதலை, சுயமரியாதை, பெண் உயர்வு, மொழிப்பற்று போன்றவற்றை உருவாக்கி மக்களை மக்களாக வாழச் செய்தது பாரதியின் மொழி எனில் அது மிகையில்லை.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p82.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License