இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரை
கருத்தரங்கக் கட்டுரைகள்

தமிழ்ச் சிந்தனை மரபுகள் - பன்னாட்டுக் கருத்தரங்கம்

      

98.குறுந்தொகையில் வரலாற்றுச் சிந்தனைகள்


அ. வினோதினி
ஆய்வியல் நிறைஞர்,
கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர், நாமக்கல் மாவட்டம்.

முன்னுரை

பண்டைய கால வரலாற்றை அறிய நமக்குப் பெரிதும் உதவுபவை சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் மன்னர்களின் வரலாறு, ஆட்சிமுறை, போர், கொடைச்சிறப்பு, அவர்களின் வீரத்தன்மை ஆகியவற்றை நமக்குப் படம் பிடித்துக் காட்டும் காலக்கண்ணாடி ஆகும்.

குறுந்தொகைப் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகளவில் இடம் பெற்றுள்ளன. சங்க காலம் தொட்டு தமிழ்நாட்டு வரலாற்றை ஆய்பவர்க்கு இது பெரிதும் துணை செய்கிறது. உரையாசிரியர்கள் இக்குறிப்புகளுக்குத் தக்க விளக்கங்கள் தந்துள்ளனர். அதியமான், ஓரி, ஆய் அன்டிரன், பாரி, காரி ஆகிய வள்ளல்கள் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.

போரின் சிறப்பு மற்றும் ஆட்சி சிறப்பு

போரிலே புறங்கொடுக்காத யானைப் படைகளை உடையவன். பெரிய தோளையும் உடையவன். அவனுடைய போர்க்களத்தின் பக்கத்திலே உள்ள ஊரில் வாழ்கின்றவர்கள் இராக்காலத்திலே தூக்கமில்லாமல் விழித்திருப்பார்கள். அச்சமே அவர்களுக்கு உறக்கத்தைக் கெடுக்கும் என்று அதியமான் அஞ்சியின் சிறப்புகளை இப்பாடல் அடிகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

அதியமான் அஞ்சியின் கொடைச் சிறப்பைப் பற்றி சிறுபாணாற்றுப்படையிலும் அறிய முடிகிறது.

“கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக்கடல் தானை அதிகனும்”

அதியமான் நெடுமான் அஞ்சி, அதியன், அஞ்சி என்ற பெயர்களைக் கொண்ட அதிகன், தன் பெருமைமிக்க மலையில் மலர்கள் மணம் கமழும் பக்கமலையில் அமிழ்து போன்ற சுவையான நீண்டநாள் வாழும் தகைமை வாய்ந்த நெல்லிக்கனியைத் தான் உண்டு நீண்டநாள் வாழவேண்டுமென்று நினைக்காது, ஔவையார் என்ற புலவருக்குக் கொடுத்தான். வலிமையும் சினமும் நன்னெறியும் ஒளி பொருந்திய நீண்ட வேலையுடையவன் ஆரவாரமுடைய கடல் போன்ற படையையும் கொண்டவன்.



வல்வில் ஓரி மற்றும் அவன் சிறப்புகள்

ஓரி கடையெழு வள்ளல்களில் ஒருவன், சிறந்த வில் வீரன், கொல்லிமலைக்கு உரிமையானவன். அம்மலையின் மேற்புறம் அழகிய கொல்லிப்பார்வை இருந்தது என்பதை,

“வல்வில் ஓரிக் கொல்லிகுடைவரைப்
பாவையின் மடவந்தனளே
மணத்தற்கு அரிய பணைப்பெருந்தோளே”

சிறு குடியினர் தங்களுக்கு உணவு கிடைக்காமல் பசியால் வாடும் போது தங்களிடம் உள்ள யானைத் தந்தத்தை விலைக்கு விற்பார்கள். அத்தந்தத்தின் அருமையை அறியாமல் வந்த விலைக்கு மலிவாக விற்று விடுவார்கள். அத்தந்தம் விற்றுக் கிடைத்த விலையைக் கொண்டு உணவுப் பொருளை வாங்கி உண்பார்கள். இத்தகையவர்கள் வாழ்கின்ற கொல்லிமலை வலிமையான வில்லையுடைய ஓரி என்னும் வீரனுக்கு உரிமையுள்ளது. அந்த மலையின் மேற்குப் பக்கத்திலே உள்ள கொல்லிப் பாவையைப் போன்ற அழகுடையவள் என் காதலி அவளுடைய நல்ல தோள்களை இனித் தழுவ முடியாதென்றே நினைக்கின்றேன். இன்னும் நான் இங்கே காத்திருப்பதில் பயனில்லை. நமது இடத்துக்குத் திரும்ப வேண்டியது தான் என்று தலைவன் கூறுவதாக இப்பாடல் அமையப் பெற்றுள்ளது.

“நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்துக்
குறும்பொறை நன்னாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக்குதிரை ஓரியும் எனவாங்கு”

வல்வில் ஓரி ஆதனோரி என்று அழைக்கப்பெறும் ஓரி கொல்லிமலைத் தலைவனாக விளங்கியவனாவான். சுரபுன்னை மரங்கள் மிகுதியாக உள்ள மலை, நெருங்கிய கிளைகளில் மணம் மிகுந்த மலர்கள் நெருக்கமாக அச்சுரபுன்னை மரங்களில் பூத்திருந்தன. பலசிறு மலைகளை (பொற்றைகளை) யுடைய தனது நல்லவளமுடைய நாட்டைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தவன் ஓரி. அவன் காரிக் குதிரையையுடைய மலையமான் திருமுடிக்காரியுடன் போரிட்ட ஓரிக் குதிரையையுடைய ஓரி என்ற செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது.



ஆய் அண்டிரன் மற்றும் அவனுடைய சிறப்புகள்

ஆய் அண்டிரன் பொதியமலையின் தலைவன் என்பதையும் மலையில் வேங்கையும், காந்தளும் மலர்ந்து மணம் வீசும் என்பதையும் அறிகிறோம். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்,

“கழல்தொடி ஆ அய்மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி”

என் மகள் மீது எப்பொழுதும் நறுமணம் வீசிக் கொண்டேயிருக்கும். ஆய் என்னும் வள்ளளுக்கு உரிமையான பொதிகை மலையிலே உள்ள வேங்கை மலரும், காந்தள் மலரும் மிகவும் நறுமணம் கமழ்கின்றவை. அவற்றின் நறுமணத்தை என் மகளிடத்திலே காணலாம். அன்றியும், ஆம்பல் மலரைக் காட்டிலும் குளிர்ச்சியான மேனியை உடையவன். அவன் இன்றிரவு என் அண்டையிலே படுத்திருந்த போது அன்புடன் அவளை அணைத்து முத்தமிட்டேன் என்ற செய்தியை அறியமுடிகிறது.

மேலும் சிறுபாணாற்றுப் படையில் ஆய் அண்டிரனின் சிறப்பியல்புகள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

“நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வர்க்கு அமர்ந்தனன் கொடுத்த
சாவம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நன்மொழி ஆயும்”

வேள் ஆய், ஆய் அண்டிரன் என்றும் அழைக்கப் பெற்றான் ஆய். வில்லைத் தாங்கிய சந்தனம் பூசிய திண்மையான தோள்களையுடையவன் ஆய். நற்சொற்களை விரும்பி பேசுபவன். கல்லால நிகலில் இருந்த இறைவன் சிவனுக்கு மகிழ்வோடு நாகம் ஈன்ற நீல மணியையும், ஆடையையும் கொடுத்துத் தன்னுடைய கொடைத் தன்மையை புலப்படுத்தியதையும் அறிய முடிகிறது.



சேரர்கள் பற்றிய குறிப்புகள்

கொல்லிமலை சேரர்கட்குச் சொந்தமானது. கொல்லிப்பாவை அம்மலையில் அமைந்திருந்தது.

“பெரும்பூண் பொறையன் பேஎழுதிர் கொல்லிக்
கடுங்கண் தெய்வம் குடவரை எழுதிய
நல்லியல் பாவை … … … … … ”

கொல்லிமலை சிறந்த அணிகலன்களையுடைய சேரனுக்கு உரிமையுள்ளது. அந்த மலையிலே வாழ்கின்ற தெய்வம் பிறருக்கு அச்சத்தைத் தரும் தன்மையுடையது. கரிய கண்களையுடையது அத்தெய்வம் என்பதை அறிய முடிகிறது.

தொண்டி மேற்கு கரையில் உள்ள நகரம் இதுவும் சேரர்களுக்குச் சொந்தமானது என்பதை,

“திண் தேர்ப் பொறையின் தொண்டி முன்துறை”

என்ற பாடல் அடிமூலம் அறிய முடிகிறது.



சோழர் பற்றிய செய்தி

உறையூர் என்பது உறந்தை என்று அழைக்கப்படுகிறது. இது சோழர்களின் தலைநகர். இதற்குப் பக்கத்தே காவிரியாறு ஓடுகிறது என்பதை,

“வளங்கெழு சோழர் உறந்தைப் பெருந்துறை”

என்ற பாடல் அடிமூலம் அறியமுடிகிறது.

பாரியின் சிறப்புகள்

கடையெழு வள்ளல்களில் பாரியும் ஒருவன் ஆவான்.

“பாரி பறம்பில் பனிச்சுனைத் தெண்ணீர்”

பாரி வள்ளல் வாழ்ந்த மலை பறம்பு மலை ஆகும். அந்த மலையிலே இருந்த சுனைநீர் மிகவும் இனிமையாகவும், குளிர்ச்சியும் உடையது. அதுவும் தை மாதத்துக் குளிர்ச்சியான நீரைக் கொடுத்தாலும், அது உமக்குப் பிடிக்கவில்லை என்ற செய்தியை அறியமுடிகிறது.

பாரியின் கொடைத்தன்மை பற்றியும், சிறப்புகளையும் சிறுபாணாற்றுப்படை காட்டுகிறது என்பதை,

“நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுங் முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
பறம்பின் கோமான் பாரியும்”

பறம்பு மலைத் தலைவன் பாரி, பல அருவிகள் விழும் வளமுடையது அம்மலை. சுரபுன்னையையும் முல்லைக் கொடிகளையும் உடையது அம்மலை. வண்டுகள் உண்ணும் தேன் பிலிற்றுகின்ற சிறிய மலர்களையுடைய முல்லைக் கொடி கொழுகொம்பு இன்றிப்படரத் தவித்தது தன் பெரிய தேரையே அக்கொடி படரக் கொடுத்த வள்ளல் பாரி என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மலையோன் திருமுடிக்காரி

கடையெழு வள்ளல்களில் மலையன் என்பானும் ஒருவன். இவனுடைய முழுப்பெயர் மலையமான் திருமுடிக்காரி என்பதாம்.

“… … … … … அடும்போர்
எஃகு விளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும்… … … … … ”

பகைவரைக் கொள்ளும் வேற்படையையுடையவன் மலையமான் திருமுடிக்காரி என்பவன். அவனுடைய முளிர்க் கானம் சிறந்த செல்வங்களையுடையது. செழிப்புள்ளது அக்கானத்திலே வளர்ந்த சந்தன மரங்கள் மிகுந்த நறுமணம் தருவன என்ற செய்தியை அறிய முடிகிறது.

முடிவுரை

குறுந்தொகையில் வரலாற்றுச் செய்திகள் என்ற கட்டுரையில் கடையெழு வள்ளல்களில் இடம் பெறுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய் அண்டிரன், அதியமான் போன்றோரின் கொடைத்தன்மை, வீரம், போர்ப்படைகளின் சிறப்பு, பண்பு நலன்கள் ஆகிய செய்திகள் கூறப்படுகின்றன.

வேளீர், கொங்கர் மற்றும் இது போன்ற குறுநில மன்னர்களின் சிறப்புகள் இந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/seminar/s3/p98.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License