இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர்

பண்பாட்டு நோக்கில் பழமொழிகள்

முனைவர் சி. சேதுராமன்


20. அடி, அடித்தல்

‘‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’’ என்பர் தொல்காப்பியர் தமிழ் மொழியில் தான் இத்தகைய சிறப்பு உள்ளது எனலாம். எந்த ஒரு எழுத்தைத் தமிழில் மாற்றி எழுதினாலும் அதன் பொருள் மாறிவிடும். எல்லாச் சொற்களுக்கும் ஏதாவது ஒரு பொருள் உண்டு. வெற்றுச் சொல் என்பபதே தமிழ் மொழியில் கிடையாது என்பது நோக்கத்தக்கது. அடி-என்பதில் ‘அ’விற்குப் பதிலாக, ‘ஆ’என்ற எழுத்தை மாற்றிப் போட்டால் ஆடி என மாறி மாதத்தின் பெயரையோ, ஆடுதல் என்ற வினையையோ குறிக்கும் அதுபோன்று ஒரே சொல் இடத்திற்குத் தகுந்தாற் போன்று பொருள் வேறுபட்டு வழங்கப்படுவதும் நோக்கத்தக்கது.

அடி, அடித்தல் என்ற இவ்விரு சொற்களும் நுட்பமான பொருள்களைக் கொண்டு விளங்குகின்றன. அடி என்பது வேர்ச்சொல்லாக அமைந்து அடி, அடித்தல் என்ற தொழிற்சொல்லாகவும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அடி என்பது ‘தாள்’(காலடி) என்ற பொருளிலும் வழக்கில் ஆளப்படுகிறது. இவ்விரு சொற்களையும் பழமொழிகளில் வைத்து நமது முன்னோர்கள் பல்வேறு தத்துவக் கருத்துக்களையும் பண்பாட்டு நெறிகளையும் விளக்கிச் சென்றுள்ளனர். அவ்வுண்மைகள் நம் வாழ்விற்கு வழிகாட்டுவனவாக அமைந்துள்ளன.



அடியும் – அம்மியும்

மனிதர்களுள் சிலர் எதற்கும் சரி என்று உடனே கூறமாட்டார்கள். பொறுமையாக யோசித்து நீண்ட காலம் எடுத்துக் கொண்டே சரி என்பர். இன்னும் சிலர் தங்களது கொள்கையை எதற்காகவும் யாருக்காகவும், எச்சூழலிலும் மாற்றிக் கொள்ளமாட்டார்கள். மேலும் அத்தகையவர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறினால் முடிவில் அதற்கு அவர்கள் சரி என்று ஒப்புக் கொள்வார்கள். இத்தகைய மனித இயல்பை,

‘‘அடிமேல அடி அடிச்சா அம்மியும் நகரும்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது.

அம்மி கருங்கல்லாலனது. அதனை ஓர் அடி அடித்தால் நகர்ந்துவிடுமா? நகராது. தொடர்ந்து அதன்மீது அடித்துக் கொண்டே இருந்தால் சிறிதளவாவது நகரும். அது போன்றே தங்களது கொள்ளையில் விடாப்பிடியாக இருப்பர். அவர்களிடம் மறுபடி மறுபடி தங்களது கருத்தை வலியுறுத்திக் கூறும்போது அவர்கள் சரி என்று பிறரின் கருத்திற்கு உடன்படுவர். இதனை மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ள கதை தெளிவுறுத்துகிறது.

குருஷேத்திரத்தில் மகாபாரதப்போர் வெகு மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பீஷ்மர் இறந்தவுடன் கௌரவப் படைக்குத் துரோணர் தலைமையேற்றுப் போரை நடத்துகிறார். பதினான்காம் நாள் போர் பகலில் மட்டுமல்லாது இரவிலும் சமிக்ஞைகளை வைத்துக் கொண்டு நடக்கிறது. அப்போது துரோணரின் அஸ்திரங்கள் பாண்டவர்களுடைய படைகளை வீழ்த்திக் கொண்டிருந்தது. இதனால் பாண்டவப்படை பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

இதனைக் கண்ட கிருஷ்ணன், ‘‘அருச்சுனா இந்தத் துரோணரைப் போரில் வெல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. இவரைப் போர்முறைகளினால் வெற்றி கொள்ள முடியாது. தருமத்தைப் புறக்கணித்துவிட்டு ஏதேனும் செய்துதான் தீர வேண்டும். வேறு வழியில்லை. துரோணரின் மகன் அசுவத்தாமன் இறந்ததாகச் கேள்விப்பட்டால் துரோணர் போர்புரிய மாட்டார். துயரத்தினால் ஆயுதங்களைக் கீழே போட்டுவிடுவார். யாராவது துரோணரிடம் சென்று ‘அசுவத்தாமன் இறந்தான்’ என்று சொல்ல வேண்டும்’’ என்று சொன்னான்.

இதைக் கேட்ட அருச்சுனன் திகைத்தான். நெறிதவறிய வழியினை ஒப்புக் கொள்ள அவன் விரும்பவில்லை. கூட இருந்தவர்களும் மற்றவர்களும் மாட்டோம் என்றார்கள். கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தருமனைப் பார்த்துத் தருமா நீதான் கூற வேண்டும். நீ கூறினால் துரோணர் நம்பிவிடுவார் மறுக்காதே’’ என்று கூறினான். ஆனால் தருமனோ, ‘‘கிருஷ்ணா எதற்காகவும் நான் தருமத்தைவிட்டு விலகமாட்டேன். நான் பொய் கூற மாட்டேன்’’ என்று கூறினான்.



கிருஷ்ணனோ விடாது தருமனை வற்புறுத்தினான். அப்போதும் தருமன் மறுக்கவே, கிருஷ்ணன், தருமா நான் கூறியதை மட்டுமே கூறு. நீ ஏன் பொய் கூறுகிறாய். அசுவத்தாமன் என்ற யானையைப் பீமன் கொன்றான்’’ இது உண்மை. இதனைத் துரோணர் காதில் விழும்படி கூறுவாயாக’’ என்று வற்புறுத்தவே தருமனுக்கும் வெற்றியின் மீது ஆசை வர சரி நீ கூறியது போலக்கூறி நான் இந்தப் பாவ காரியத்தைச் செய்கிறேன் என்று கூறினான்.

கிருஷ்ணனது ஏற்பாட்டின்படி, ‘‘பீமன் அசுவத்தாமன் என்ற யானையைக் கொன்றான்(பீமா அசுவத்தாமா ஹதக குஞ்சரக). என்று உரக்கக் கூறினான். அப்போது துரோணரின் காதில் அசுவத்தாமன் இறந்தான் என்பது மட்டுமே கேட்டது.

துரோணர் போர் செய்வதை விடுத்துத் தருமனைப் பார்த்து, ‘‘என் மகன் இறந்தானா? உண்மையா?’’ என்று கேட்டார். மூவுலக ஆட்சி கிடைத்தாலும்கூடத் தருமன் பொய் சொலா்லமாட்டான் என்று நம்பியே துரோணர் கேட்டார். அப்போது கிருஷ்ணன் மிகுந்த மன வேதனை அடைந்தான். தருமர் தருமத்தைப் புறக்கணிக்கப் பயப்பட்டாரானால் பாண்டவர்களுடைய அழிவு உறுதி. துரோணருடைய பிரம்மாஸ்திரம் வீணாகாது என்று கருதினான். தருமனனோ உண்மைக்குப் புறம்பாகப் பேச அஞ்சித் தயங்கினான். இருப்பினும் கிருஷ்ணனது வற்புறுத்தலும் வெற்றியின் மீது இருந்த ஆரைசயும் அவரை விடவில்லை.

தருமன் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, ‘‘அசுவத்தாமன் என்ற யானை இறந்தது உண்மை’’ என்று தாழ்ந்த குரலில் கூறினான். தருமன், ‘என்ற யானை’ என்று கூறியபோது கிருஷ்ணன் தனது கையிலிருந்த பாஞ்சசன்யம் என்ற சங்கினை ஊதினான். அதனால் துரோணரின் செவியில் ‘அசுவத்தாமன் இறந்தது உண்மை’ என்ற சொல் மட்டும் விழுந்தது.

இதனை நம்பிய துரோணர் ஆயுதங்களைக் கீழே போட்டுவிடடுத் தேர்த்தட்டின் மீது யோகநிலையில் அமர்ந்தார். அப்போது பாண்டவர்களின் படைத் தலைவனான திட்டத்துய்மன் (திருஷ்டத்யும்னன்) கத்தியை எடுத்துவந்து அவரது தலையை வெட்டி வீழ்த்தினான். இங்ஙனம் கிருஷ்ணன் வற்புறுத்தியதால் (அடிமேல் அடிஅடித்ததால்) தருமன் தன் கருத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது (அம்மி நகர்ந்தது). துரோணரும் உயிரிழந்தார்.

இப்பழமொழி எக்காரணத்தைக் கொண்டும் நம்மிடம் உள்ள நல்ல கொள்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது என்ற வாழ்வியல் நெறியையும் நமக்கு வழங்குகின்றது.

அடியும் – அண்ணனும்

அனைவருக்கும் துணைபுரிவது இறைவனது திருவடியே ஆகும். யார் உதவி செய்யா விட்டாலும் இறைவனது திருவடியை அடைக்கலமாகிவிட்டால் இறைவன் தக்க தருணத்தில் உதவுவான். அண்ணன் தம்பி என்ற உறவுகள் கைவிட்டாலும்கூட இறைவன் கைவிடமாட்டான். அதனால் இறைவனது திருவடியைச் சரணடைந்தால் பல்வேறு துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்ற அரிய கருத்தினை,

‘‘அடி உதவுறது மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள்’’

என்ற பழமொழி தெளிவுறுத்துகிறது. இப்பழமொழி இறைவனது திருவயடி உதவுவது போல அண்ணன் தம்பியர் உதவமாட்டார்கள் என்று இறைவனின் சிறப்பினை உணர்த்துவதாகவுள்ளது. இப்பழமொழியை, அடி, உதை உதவுவது போல அண்ணன் தம்பிகூட உதவமாட்டார்கள் என்று மாற்றிப் பொருள் கூறுவர். ஆனால் இப்பொருள் இப்பழமொழிக்கு ஒவ்வாத பொருத்தமான பொருளன்று மேற்கூறிய பொருளே சரியானதாகும்.



யானையும் – அடியும்

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களும் எதிலாவது தவறுவது இயல்பாகும். இத்தகைய மனித இயல்பினைக் குறிக்கும் வகையில்,

‘‘யானைக்கும் அடிசறுக்கும்’’

என்ற பழமொழி அமைந்துள்ளது. பெரிய யானையாக இருந்தாலும் அதன் காலடிசறுக்கி விழுந்துவிடும். அது உலக இயல்பாகும். இதனை ஔவையார் குறித்த கர்ணபரம்பரைக் கதை ஒன்று தெளிவாக விளக்குகிறது.

ஒருமுறை ஔவையார் காட்டுவழியில் நடந்து ்சென்று கொண்டிருந்தார் வழியில் இருந்த நாவல் மரத்தில் ஆடுமாடு மேய்க்கும் ஒரு சிறுவன் ஏறிப்பழம் பறித்துத் தின்று கொண்டிருந்தான். அம்மரத்திற்கருகில் வந்த ஔவையாருக்கு நாவல் பழமட் திண்பதற்கு ஆசை. மரத்தின் மேலிருந்த அச்சிறுவனைப் பார்த்து,

‘‘தம்பி எனக்குச் சிறிது பழம் பறித்தத்துருவாயா?’’ என்று கேட்டார். அச்சிறுவனும் சரி என்று கூறிவிட்டு, ‘‘பாட்டி சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?’’

என ஔவையாரைப் பார்த்துக் கேட்டான். ஔவையாருக்குப் பழுத்த பழத்தைத்தான் சிறவன் சுட்ட பழம் என்கிறான் என்று நினைத்து அச்சிறுவனைப் பார்த்து, ‘‘அப்பா எனக்குச் சுட்டபழமே பறித்துத் தா’’ என்று கூறினார்.

சிறுவன் மரத்தில் இருந்து பழங்களைப் பறித்துக் கீழே போட்டான். பழங்கள் மண்ணில் விழுந்தன. அதை எடுத்துச் சாப்பிட முயன்ற ஔவையார் பழத்தில் மண் ஒட்டி யிருந்ததைக் கண்டு வாயால் அதனை ஊதி ஊதி மண்ணை நீங்கிவிட்டுத் திண்றார்.

மரத்திலிருந்த சிறுவன், ‘‘என்ன பாட்டி பழம் சுடுதா?’’ என்று கேட்டான். ஔவையாருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அட மாடுமேய்க்கும் சிறுவன் நம்மை வென்றுவிட்டானே! என்று எண்ணி வருந்தினார்.

மரத்திலிருந்து இறங்கி வந்த சிறுவன் முருகனாக ஔவையாருக்குக் காட்சியளித்தார். அதனைக் கண்ட ஔவையார் வணங்கினார். இக்கதை எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவரும்கூட சிறிது தவறித் தவறிழைப்பர். அதனால் நாம் பெரியவர் என்று கருதி கவனமின்றி இராது எதிலும் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நன்னெறியினையும் இப்பழமொழி புகட்டுவதாக உள்ளது.



அடியும் – மாடும்

மனிதருள் சிலர் அன்பாகச் சொன்னால் கேட்டுக் கொள்வர். சிலர் கேட்கமாட்டார்கள். அத்தகையோரை அடித்தால் மட்டுமே சொன்னபடி கேட்பர். இதனை,

‘‘அடியாத மாடு படியாது’’

என்ற பழமொழி எடுத்துரைக்கிறது.

சில மாடுகள் எந்த வேலையும் செய்யாது சண்டித்தனம் செய்து கொண்டு முரட்டுத்தனமாக இழுத்துக் கொண்டும், பாயவும் வரும் அத்தகைய மாடுகளை நன்கு அடித்து அச்சுறுத்தி வேலைகளுக்குப் பழக்குவர். அடித்து அச்சறுத்தினால் மட்டுமே கீழ்த்தரமாக நடந்து கொள்வோர் கேட்பர். அவர்களை அடித்துத்தான் திருத்த வேண்டும் என மனிதர்களின் இயல்பினைத் திருத்துவதற்குரிய முறைமையினை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.

அடித்தலும் – கூடலும்

குடும்பத்தில் கணவன் மனைவி, இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் ஏற்படுது இயல்பு. இக்குடும்பச் சண்டையே சில சமயம் குடும்ப வன்முறையாக மாறி இருவரும் மணமுறிவு வாங்கிக் கொள்ளும் அளவிற்குப் போய்விடுவதுமுண்டு. கணவன் மனைவிக்குள் இவ்வாறு சண்டைகள் வந்தால் மூன்றாவது நபருக்கு இடங்கொடுக்காது அவர்களே அதனைத் தீர்த்துக் கொக்ள வேண்டும். அதுவே சிறந்தது.

சிலர் ஒருவருக்கொருவர் பேசாதிருந்து கொள்வதும் உண்டு. ஒரு சில நாள் இது நீடித்தால் ஏற்றுக் கொள்ளலாம். பல நாள்கள் நீடித்தால் அது வாழ்க்கையை வீணடித்துவிடும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்டுக் குடும்பம் குலைந்துவிடும்.

கணவன் மனைவிக்குள் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு சண்டை சச்சரவு ஏற்பட்டாலும் உடனே அது முடிவுக்கு வந்துவிடவேண்டும். நீடிக்கக் கூடாது. இதனை,

‘‘அரிசி அரிக்கையில் அடிச்சுக்கணும்
சோறுஉண்கையில் (உண்ணும்போது) கூடிக்கணும்’’

என்ற பழமொழி எடுத்துரைக்கின்றது.

சோறு வடிக்கும் முன்னர் அரிசியைக் கல்இல்லாது களைந்து அரித்து எடுத்துச் சோறு ஆக்கி உண்ணும்போது கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கு முடிவுக்கு வந்துவிடவேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வளம் பெறுகும். இல்லை எனில் குடும்பத்தில் குழப்பமும் வறுமையுமே ஏற்படும். இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற இல்லற நெறியைக் கணவன், மனைவி ஒற்றுமையை இப்பழமொழி நமக்கு எடுத்துரைக்கின்றது.

நீரடித்தலும் – விலகலும்

உறவுகள் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. இவற்றுக்குள் மோதலும் உண்டு. காதலும் உண்டு. சில சமயங்களில் உறவுகள் முறிந்து ஒட்டாமலேயே போவதும் உண்டு. உறவுகளுக்குள் பிரச்சனைகளோ சிக்கல்களோ ஏற்படின் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துப் பொறுத்துப் போனால் உறவுகள் நிலைத்து நிற்கும். சிலர் உறவுக்குக் கைநீட்டினால் மற்றவர் அதனை ஏற்காது முறிந்தது முறிந்ததுதான் என்று இருந்துவிடுவர். இருதரப்பினரும் தங்கள் தங்களது யெல்பாடுகளைப் பரிசீலித்துச் செயல்பட்டால் உறவுகளுக்குள் எந்தச் சிக்கலும் வராது. அப்படியே சிக்கல்கள் ஏற்பட்டாலும் அவை நீர்த்துப் போய்விடும் எனவே விட்டுக் கொடுத்து நடந்து கொள்வேண்டும் என்பதனை,

‘‘நீர் அடிச்சு நீர் விலகுமா?’’

என்ற பழமொழி உணர்த்துகிறது.

அணையிலிருந்து வெளிவரும் தண்ணீர் ஏற்கனவே பள்ளத்தில் கிடக்கும் தண்ணீரை அடிப்பது போல் விழுந்தாலும் பள்ளத்தில் கிடந்த நீர் விலகாது இரண்டும் ஒன்று சேர்ந்து கால்வாயில் ஓடும். அதுபோல் உறவினர் யாரேனும் தவறுகள் செய்தாலும் அதனைப் பொறுத்துக் கொண்டு பொறுமையுடன் நட்புப் பாராட்டி வாழ வேண்டும் என்ற அரிய உறவுகளைப் பேணும் முறையினை இப்பழமொழி தெளிவுறுத்துகிறது.



அடித்தல் – ஒடித்தல்

எந்தக் குழந்தையும் வளர்க்கின்ற முறையிலேயே மிகப் பெரியவர்களாக உருவாகின்றனர். அதுபோன்றே மரங்களையும் முறையுடன் வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு விதமாக வளரக் கூடியவை. அந்தந்த முறைப்படி அம்மரங்களை வளர்த்தால்தான் அது நல்ல பலனைக் கொடுக்கும். இத்தகைய கருத்துக்களை,

‘‘பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்
முருங்கையை ஒடிச்சு வளர்க்கணும்’’

என்ற பழமொழி விளக்குகறிது. இப்பழமொழியை,

‘‘அடிச்சு வளர்க்காத பிள்ளையும்
முருக்கி வளர்க்காத மீசையும் ஒண்ணுக்கும் உதவாது’’

என்றும் வழக்கில் வழங்குவர்.

அடிக்கிறபோது பிள்ளையை அடித்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் குழந்தை பணிவுடன் ஒழுக்கமாகவும் வளரும். முருங்கை நல்ல பலன் கொடுக்க வேண்டுமெனில் ஒடித்து வளர்க்க வேண்டும். மீசையை உருவி முருக்கி விட்டால் மட்டுமே நாம் வளைப்பது போன்று வளைந்து நின்று அழகுதரும். குழந்தையும் இவ்வாறே வளர்த்தால் எதிர்காலத்தில் பணிவுடன் நல்லவனாக வளர்ந்து சமுதாயத்திற்குப் பயனுள்ளவனாவான் என்று இப்பழமொழி அறிவுறுத்துகிறது.

அடித்தலும் – அணைத்தலும்

சிலர் எப்பொழுது பார்த்தாலும் பிறரிடம் கடுமையாக நடந்து கொள்வர். தனது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் ஆகியோரிடம்கூட முரட்டுத்தனமாக நடப்பர். குழ்தைகளை அடித்தோ கிள்ளியோதான் கொஞ்சுவர். எதற்கெடுத்தாலும் இப்படி இருக்கின்றாரே? இவருக்கு மற்றவர்கள் மீது அன்பு துளியும்இல்லையா? எனில் அவ்வாறு கருத முடியாது. அவர் தனது அன்பினை முரட்டுத்தனமாக வெளிப்பட்துகிறார் என்றே கூற முடியும்.

பிறருக்கு ஏதேனும் துன்பம் நேரும்போது உடனே சென்று முதலில் இவரே உதவுவார். இத்தகையவர்களின் இயல்பினை,

‘‘அடிக்கிற கைதான் அணைக்கும்’’

என்ற பழமெழி தெளிவுறுத்துகிறது. எந்தக் கை அடித்ததோ அதே கை அன்பைப் பிறர் மீதும் தம்மவர்கள் மீதும் பொழியும் என்பதை இப்பழமொழி நவில்கிறது.

இறைவனது திருவடி அனைத்தையும் நல்கும் ஆற்றல் வாய்ந்தது. பிறர் திரும்பத் திரும்பக் கூறும் கருத்துக்களுக்குச் செவி சாய்க்காது நம்முடைய நல்ல கொள்கையிலிருந்து தவறுதல் கூடாது. கணவனும் மனைவியும் அன்புடன் இருந்து நல்லவிதமாகக் குழந்தைகளை வளர்க்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு பண்பாட்டு நெறிகளை அடி, அடித்தல் குறித்த பழமொழிகள் நமக்கு நல்குகின்றன. பண்பட்ட நெறி வாழ்ந்து பாரோர் போற்ற வாழ்வோம்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p5t.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License