இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கட்டுரைத் தொடர்
கட்டுரைத் தொடர் - 8

என் பார்வையில்...

முனைவர் மு. பழனியப்பன்
இணைப் பேராசிரியர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை, இராமநாதபுரம் மாவட்டம்.


14. நலமான நான்கு

நல்லவற்றை நாளும் சொல்லவேண்டி இருக்கிறது. ஒரு முறை நல்லதைச் சொன்னால் போதுமே என்ற எண்ணம் கூடத் தோன்றலாம். இன்றைக்கு உலகம் புதிதாக வளர்கிறது. புதிய உயிர்கள் தோன்றுகின்றன. புதிய நிகழ்வுகள் நடக்கின்றன. புதிய புரிதல்கள் ஏற்படுகின்றன. இன்று புதிதாய்ப் பிறக்கிறோம். சென்றது மீளாது. நேற்று சொன்னது நேற்றோடு நின்றுவிடுகிறது. எனவே இன்றும் சொல்லவேண்டி இருக்கிறது. என்றும் நல்லவற்றைச் சொல்லிக் கொண்டே இருக்கவேண்டும். கேட்பதற்கான தேவையும் அவசியமும் இருந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக இளைஞர்களுக்குச் சொல்லித் தர வேண்டிய செய்திகள், ஒழுக்கங்கள், உயர்பண்புகள் நிறைய இருக்கின்றன. ஒருமுறை திருநெல்வேலியில் பெரிய மாநாடு நடைபெறுகிறது. அம்மாநாட்டில் திருக்குறள் பற்றிப் பேச சோழவந்தான் என்ற ஊரைச் சார்ந்த சண்முகனார் அழைக்கப் பெற்றிருந்தார். அவர் புகைவண்டியில் வருவதாக பயணத்திட்டம் இருந்தது.

இவரை வரவேற்க இரு மாணவர்களை அனுப்பியிருந்தார்கள். அவர்களிடம் புகைவண்டியின் இரண்டாம் வகுப்புப் பெட்டியில் ஒரு புலவர் வருவார். அவரை நீங்கள் அழைத்து வரவேண்டும் என்று குறிப்பிடப்பெற்றது. இம்மாணவர்கள் இருவரும் சென்றனர் புகைவண்டி வந்தது. இரண்டாம் வகுப்புப் பெட்டியின் அருகிலும் அவர்கள் நின்றார்கள். ஆனால் பெட்டியில் ஒருவரையும் காணவில்லை. எங்கே புலவர், எங்கே புலவர் என்று இரு மாணவர்கள் தேடிக் களைத்துப் போய் மாநாடு நடக்கும் இடத்திற்குச் சோர்வுடன் வந்து சேர்ந்தார்கள். விழாக்குழுவினருக்கு இது ஏமாற்றத்தை அளித்தது. புலவர் சண்முகனார் வராமல் நின்றுவிட்டாரோ என்ற கவலை அவர்களுக்கு.

சில மணித்துளிகளில் இடுப்பில் நான்கு முழ ஆடை, மேலே பழுப்பேறிய துண்டு, முகத்திலே நடுத்தரமான மீசை, அதற்குப் மேல் பொடியெறிய மூக்கு என்ற வடிவமைப்பில் ஒருவர் வந்து சேர்ந்தார். அவரே சோழவந்தான் அரசன் சண்முகனார். யாரையும் எதிர்பார்க்காமல் தன் காலே தனக்கு உதவி என்று மாநாடு நடக்கும் இடம் அறிந்து வந்திருக்கிறார் புலவர். அவரின் எளிமைக்கு அளவில்லை. அவரின் தமிழுக்கு அளவே இல்லை. அவரை நான்காம் தமிழ்ச்சங்கத்தை நிறுவிய பாண்டித்துரை அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார். அவர் தலைமையில் தான் புலவர் அன்று பரிமேலழகரின் திருக்குறள் உரை பற்றிப் பேசினார். இனிமையான இரண்டரைமணி நேரப் பொழிவாக இருந்தது அந்தப் பொழிவு. இது தமிழகம் அலையும் கலையும் என்ற நூலில் குறிக்கப் பெறுகிறது. இந்நூலை எழுதியவர் ரா. பி. சேதுப்பிள்ளை. இவரே மாநட்டுக்கு குழுவின் சார்பில் புலவரை அழைத்து வர அனுப்பபட்ட மாணவர் என்றால் நம்ப முடிகிறதா. இதில் ரா. பி சேதுப்பிள்ளையின் இளமைக் காலத் தொண்டைப் பாராட்டுவதா அல்லது அரசஞ் சண்முகனாரின் எளிமையைப் பாராட்டுவதா, விழா நடத்திய விழா அன்பர்களைப் பாராட்டுவதா. இப்படித்தான் பல நிகழ்வுகள் பல அனுபவப் பாடங்களைக் கற்றுத்தருகின்றன.



எளிமை அழகு, இனிமை, சிறந்த பண்பு என்று எத்தனை முறை சொன்னாலும் இந்த நிகழ்ச்சி வாயிலாகப் புரிந்து கொள்ளும் போது மிக்க மகிழ்வை அளிக்கிறது என்பது உண்மை. எனவேதான் மூத்தோர் சொற்கள் அமுதங்கள் ஆகின்றன.

இது போன்ற நல்ல பண்புகளை நாளும் நினைவுபடுத்த வேண்டி இருக்கிறது. ஒரு நான்கு நல்லவற்றை இன்று அறிவோம். நான்மணிக்கடிகை என்னும் நூல் நான்கு நல்ல மணிகளை ஒவ்வொரு பாடலிலும் அமைத்து அறிவூட்டும் இலக்கியமாகும். அதில் ஒரு பாடல் சிறந்தது என்று சாமி. சிதம்பரனார் சங்கப் புலவர் சன்மார்க்கம் என்ற தன்னூலில் காட்டியுள்ளார். அந்தப் பாடல்;

“திருஒக்கும் தீதுஇல் ஒழுக்கம். பெரிய
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனைக்
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலைஒக்கும்
போற்றாதார் முன்னர்ச் செலவு”

இந்தப் பாடலில் நான்கு நல்ல நயமான கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம்

தீமையைத் தராத நல்ல ஒழுக்கம் செல்வம் போன்றது என்கிறது இப்பாடலடி. இவ்வடியில் செல்வம், செல்வமின்மை, ஒழுக்கம், ஒழுக்கமின்மை என்ற இரு இணைகளை முன்வைத்து எழுதப் பெற்றுள்ளது. மிகுந்த செல்வம் என்பது ஒழுக்கம் என்றால் ஒழுக்கம் இருப்பவரிடத்தில் செல்வம் இருக்காது என்பது பொருளாகிறது. மிகுந்த செல்வம் உடையவரிடத்தில் ஒழுக்கம் இருக்குமா என்ற ஐயத்தையும் இது கிளப்பிவிடுகிறது. செல்வம் என்பது தீமை தராத நிலையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொருள் கொள்ள வேண்டும். ஒழுக்கம் என்பது நன்மையாக இருந்தால் அது செல்வத்தை ஈட்டித் தரும் வழி என்று புரிந்து கொள்ளவேண்டும். நடந்து செல்பவர் இடத்தில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் அவர் மகிழ்வுந்தில் செல்ல முயற்சி செய்கிறார். நடப்பது நன்மை என்ற அவரின் உடல் நன்மையும் கெடுகிறது. பணம் வந்துவிட்ட காரணத்தால் அவர் மகிழ்வுந்தில் செல்ல எண்ணுவதால் செலவும் கூடுகிறது. நடந்து செல்பவர் செல்வம் வந்த போதும் நடந்தே சென்றால் பணமும் செலவாகாது. ஒழுக்கமும் பாழ் படாது. இதுவே திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் என்பது.



பெரிய அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல்

ஒருவர் பெரிய பெரிய அறங்களை எல்லாம் செய்யவேண்டாம். தன் கடமையைச் சரிவர ஒழுக்கமாகச் செய்தால் அதுவே அறம் என்கிறது நான்மணிக்கடிகை. கடமைகளைச் சரிவரச் செய்பவன் வேறு அறங்களைச் செய்யவேண்டுவது இல்லை என்று குறிக்கிறது இப்பாடலடி. ஆசிரியர் ஒருவர் தன் ஆசிரியக் கடமையைக் குறைவில்லாமல் செய்யவேண்டும். மாணவர் தான் படிக்கும் கடமையைக் கீழ்படியும் கடமையை மறவாமல் ஆற்றவேண்டும். மருத்துவர் தம்மிடம் வந்த நோயாளியைக் காக்கவேண்டும். நீதிபதி சரியான நீதி வழங்கவேண்டும். அவரவர் அவரவர் கடமையை ஆற்றினால் அதுவே மிகச் சிறந்த அறம் என்கிறது நான்மணிக்கடிகை.

பிறனைக் கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல்

நண்பர் ஒருவரை தம்முடன் இணைத்துக்கொண்டு பின்பு அவனை விட்டு நீங்குதல் என்பது உயிர்க்கொலை புரிந்ததற்குச் சமமாகும். நண்பர்களை ஆராய்ந்து நட்பு கொள்ளவேண்டும், நட்பு கொண்டபின் அந்நண்பனை விட்டுவிடுதல் என்பது மிகப்பெரும் குற்றம். நாடாது நட்டலின் கேடில்லை. நட்டபின் வீடில்லை என்கிறார் வள்ளுவர்.



போற்றார் முன் செல்லுதல் இழிவாகும்

தம்மை போற்றாதவர்கள் முன்னர் செல்வது இழிவைத் தரும். தம்மை மதிக்காதவர்களிடத்தில் மதிப்பினை எதிர்பார்ப்பது தவறு. மதியாதவர்கள் தலை வாசகல் மிதியாமை கோடி பெறும். மதிக்காதவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து நாம் விலகி விடுவது என்பது நமக்கு நன்மையைத் தரும். அவர்களும் நன்மை பெறுவார்கள். வெறுப்பவர்கள் என்று சொல்லாமல் ஏன் போற்றாதவர்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. வெறுப்பவர்கள் என்ற நிலைக்கு யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் உள் கருத்தாகும். நல்ல ஒழுக்கமுடன் இருத்தல், கடமையைத் தவறாமல் செய்தல், நண்பர்களை என்றும் நட்புடன் அமைத்துக் கொள்ளுதல், போற்றாதவர் பக்கம் செல்லாதிருத்தல் என்பன நான்மணிக் கடிகை காட்டும் நான்கு நற்குணங்கள் ஆகும். இந்த நற்குணங்களை நாளும் நினைந்து நாம் நடக்கவேண்டும். மற்றவர்களுக்கும் இதனை அறிவித்து அவர்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். விளம்பி நாகனாரின் நான்மணிக்கடிகை பல நல்ல கருத்துகளை வழங்கிச் சென்றுள்ளது.



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/essay/serial/p8n.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                           


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License