இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


21. பற்களில் சாயப்பூச்சு

கடந்த சில பகுதிகளில் செயற்கைப் பல் கட்டுவதைப் பற்றிப் படித்தோம்.

இந்தப் பகுதியில் பற்களில் சாயம் பூசுவது குறித்தும், பற்களில் ஓவியம் வரைவது குறித்தும் படிக்கலாம்.

ஆதிமனிதனின் கரும்பலகை பற்கள்தான்.

பற்களின் மீது கருப்பு சாயம் பூசுதல், அதில் பல நிறங்களிலான மெருகுப் பூச்சு பூசுவதையும் நீண்ட காலமாகச் செய்து வந்திருக்கிறான் மனிதன்.

பண்டையக் கலாச்சாரங்களில், பற்களில் கருப்புச் சாயம் பூச்சு பூசிக் கொள்ளும் வழக்கம் இருந்திருக்கிறது.

* தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசனியா நாடுகளில் ஆஸ்ட்ரோனேசியன், ஆஸ்ட்ரோஏசியாட்டிக், கரா-டாய் மொழி பேசும் மக்கள் பற்களுக்குக் கருப்புச் சாயம் பூசியிருந்திருக்கின்றனர்.

* ஜப்பான் நாட்டில் மெய்ஜி காலத்துக்கு முன் இணையை தேடும் இளம்பெண்கள், ஆண்களைக் கவர, தங்களது பற்களில் கருஞ்சாயம் பூசி இருக்கின்றனர்.. அது காலப்போக்கில் திருமணமான பெண்களின் அடையாளமாக மாறிப் போய்விட்டது.

* அமெரிக்கப் பெருநிலப் பகுதியில் வடபெரு மற்றும் ஈக்குவாடர் நாட்டு சூவர் இன மக்கள் பற்களுக்குக் கருஞ்சாயம் பூசி இருக்கின்றனர்.

* மீசோ அமெரிக்க மக்கள் பற்களை விரும்பி மாற்றி அமைத்திருக்கின்றனர்.

* பிலிப்பைன்ஸ் பழங்குடி மக்கள் பற்களைக் கருமைபடுத்தி இருக்கின்றனர்.

பற்களுக்கான குறள்கள்
* வாய் நோய் தடுக்க வழியாம் எயிறையும்
நோயின்றி கூர்ந்து நினை.

* அவரவர் வாய்க்கும் அருமை மெய்க்கும்
அவரவர் பல்லே அணி.
- தஞ்சாவூர் ஹரணி


மேற்காணும் இனக்குழுக்கள், தங்கள் பற்களைக் கருமைப்படுத்த கீழ்க்கண்டக் காரணங்களே முதன்மையாக இருந்திருக்கின்றன.

* தங்கள் திருமணத் தகுதிகளை தங்கள் இனக்குழு ஆண்களுக்குத் தெரியப்படுத்தல்.

* உடல், மனப்பக்குவத்தை தெளிவுபடுத்தல்.

* பற்களிலான கரும்பூச்சு முக அழகை அதிகரிப்பதாக நம்பினர்.

* கரும்பூச்சு பல் சொத்தையைத் தடுத்து, பற்களைப் பாதுகாப்பதாக எண்ணினர்.

* முகத்தின் வெள்ளை பவுடர் பூச்சுக்கு, பற்களின் கரும்பூச்சு எதிர்மறை அழகைத் தருவதாகக் கருதினர்.

கரும்பூச்சுக்கு உதவும் பொருட்களை பழங்குடி மக்கள் ‘மிஸ்ஸி’ என்றனர். இரும்பு மற்றும் காப்பர் சல்பேட், டானின் படிகப்பொருள், நெல்லிக்காய், கடுக்காய் போன்றவைகளைப் பற்களின் கரும்பூச்சுக்குப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

பற்களைக் கருமைபடுத்த சிலர் தேனீரில் இரும்பைக் கலந்து வேதிமாற்றம் செய்வர். பின்னர், அந்தத் திரவத்தில் கிராம்பு, சோம்பு, இலவங்கபட்டை இடித்துப் போட்டு பருகியிருக்கின்றனர்.


தென்கிழக்குப் பகுதி இஸ்லாமியக் கலாசாரத்திலும் பற்களில் கரும்பூச்சு நடந்துள்ளது. கரும்பூச்சு பூசும் மீசி கலவையை நபிகள் நாயகத்தின் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் புனிதம் என அறிவித்ததாக ஒரு நம்பிக்கை உள்ளது.

கிழக்கு இமயப்பகுதி, நேபாளம், மேகாலயா, அஸ்ஸாம், நாகலாந்து பழங்குடியின மக்கள் மரப்பிசினைப் பயன்படுத்தி, பற்களைக் கருப்பாக்கி உள்ளனர்.

குறிப்பிட்ட சில நூற்றாண்டுகளைச் சேர்ந்த இந்து மக்களும் பற்களைக் கருப்பாக்கியுள்ளனர். 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மாலிக் முஹம்மது ஜெயாசி என்கிற கவிஞர் 13 ஆம் நூற்றாண்டில் சித்ரோகரை ஆண்ட பத்மாவதி ராணியின் புன்னகையைப் புகழ்ந்து பாடிய பாடலில், ‘கருப்பு இதழ்களில் வைரப்புன்னகை கொண்ட ராணியே!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பற்களுக்குக் கருப்புச் சாயம் பூசுவது நல்லதா? கெட்டதா? என்று பார்த்தால், அபூர்வமாகச் சில நேரங்களில் நல்லதும் நடந்திருக்கிறது.

லாவோ மற்றும் வியட்னாமின் கம்மு இனப்பெண்கள் நியூகினியா வால்நாட் கொட்டைகளையும் குரோட்டன் தோட்டசெடி தண்டுகளையும் கிராட்டோ ஜைலம் பூஞ்செடியின் அடிமரத்தையும் சுட்டுச் சாம்பலாக்கிப் பற்களில் பூசி உள்ளனர். பரிசோதனைக் கூட ஆய்வில் நியூகினியா வால்நட் சாம்பல் வாயின் எச்சிலில் பெருகும் கிருமிகளை பெரும் அளவில் கட்டுபடுத்துவதாகக் கண்டுபிடித்துள்ளனர்.

பண்டைய ஜப்பானில் மணப்பெண்கள் ஒககுரோ எனும் (Ohaguro) சடங்கைச் செய்திருக்கினறனர்.

பற்களில் கனிமிஜுன்டோ திரவத்தை பூசியிருக்கின்றனர். அந்தத் திரவத்தில், பெர்ரிக் அசிடேட், வினிகர், டானின் கலந்திருக்கின்றனர்.

பண்டைய எகிப்தில் எகிப்திய மக்கள் படிமக்கல்லும், வினிகர், ஒயினும் கலந்த பானத்தைக் குடித்துப் பற்களை வெண்மைபடுத்தி இருக்கின்றனர்.

ரோமர்கள் சிறுநீரைக் குடித்து பற்களை வெண்மைபடுத்தி இருக்கின்றனர்.

சில ஆசிய மக்கள் தேங்காய் ஓடை எரித்துச் சாம்பலாக்கி, பற்களில் பூசியுள்ளனர்.

வியட்நாமியர்கள் ஒரு சிறுபூச்சியின் உமிழ்நீரிலிருந்து எடுக்கப்பட்ட சிவப்புப் பிசினைப் பயன்படுத்தி, பற்களை கருப்பாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

1870 ஆம் ஆண்டில் ஜப்பானிய அரசாங்கம் ஒககுரோ பற்களை கருப்பாக்கும் முறையைத் தடை செய்தது. இருப்பினும், ஜப்பானிய நாடக நடிகர்களும், திரைப்படக் கலைஞர்களும் கருப்புச் சாயத்தைப் பயன்படுத்திக் கொண்டுதானிருக்கின்றனர். கெய்சா மாவட்டத்தில் நடைபெறும் ஜப்பானியத் திருவிழாக்களில் கபுக்கியில் ஒககுரோ காணப்படுகிறது. ஜப்பானிய சாமுராய் மக்களின் அடையாளம் கரும்பூச்சுப் பற்கள்தான். அவர்கள் வெள்ளைநிறப் பற்கள் மிருகங்களுக்கு தீயசக்திகளுக்கு காட்டுமிராண்டிகளுக்கு உரியவை என நம்பினர்.

ஆனால், பல் மருத்துவர்கள் கருப்பு நிறப் பற்களை பல் ஆரோக்கியச் சீர்கேடு என்கின்றனர். பண்டைய மூட நம்பிக்கைகளைத் தூக்கி எறிந்திட வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.


ஒரு ஆணுக்கோ, ஒரு பெண்ணுக்கோ பற்கள் கருப்பாக இருக்கக் கீழ்க்கண்ட காரணங்களை கூறலாம்.

* பற்கறைகள் - க்ரோமோஜெனிக் பேக்டீரியாக்களான ஆக்டினோமைசிஸ், பிரிவோடெல்லா மெலானினோஜெனிக்கா பற்கறைகளை ஏற்படுத்துகின்றன.

* பெர்ரிக் சல்பேட் போன்ற இரும்பு படிவுகள் பற்களைக் கருமைப்படுத்துகின்றன.

* காப்பி, தேநீர், ஒயின் பருகுதல் பற்களுக்கு நிற மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் கேடுகளையும் விளைவிக்கின்றன.

* புகைப்பிடித்தல் மற்றும் புகையிலையை வாயில் போட்டு சுவைத்தல் போன்றவை பற்களில் கறைகளை ஏற்படுத்துகின்றன.

* சில வேளைகளில் ஈறுகளின் தேய்மானத்தால் பற்களின் வேர்ப்பகுதி வெளியில் தெரிகிறது. அந்நிலையில் வேர்பகுதி நுனிப்பகுதியை விடக் கருமையாகக் காணப்படும்.

* பற்சொத்தையால் பற்களின் மேற்பூச்சு சிதைவடைந்து, மஞ்சள் நிறமாகத் தெரியும்.

* மரபியல் ரீதியாகவும் பற்கள் ஆரோக்கியமற்று மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

* வயது முதிர்வால், பற்கள் நிறம் வெள்ளை நிறத்திலிருந்து சற்று மஞ்சள் கலந்த கருப்பு நிறத்திற்கு மாற்றமடைகிறது.

* டெட்ராசைகிளின் போன்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகள் பற்களின் நிறத்தை மாற்றுகின்றன.

* விபத்துகளும் காயங்களும் பற்களின் நிறத்தை மாற்றுகின்றன.

* பற்சிப்பி குறைவளர்ச்சி (Enamel Hypoplasia), பற்திசு பகுதி அழுகல் (Pulp Necrosis), அழுகிய அல்லது சிதைந்த பற்கள், ஈறு அழற்சி போன்றவைகளும் பற்களின் நிறத்தை மாற்றிவிடுகின்றன.

* கால்சியம் குறைபாடு பல்வேறு பல் பிரச்சனைகளை உருவாக்குகிறது. பற்களில் காணப்படும் வெண்புள்ளிகள் பற் சொத்தைக்கான தொடக்கம் எனலாம்.

அசைவ உணவு உண்பவர்களின் பற்களுக்கு ஆயுள் குறைவு!

எம்.முத்துப்பாண்டி, மதுரை.

அசைவம் உண்பவர்களுக்கு பற்கள் நாற்பது வயதில் விழுந்துவிடும். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு எண்பது வயதானாலும் பல் விழாது என்கிறார்களே, இது உண்மையா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

உங்கள் பெற்றோரின் பற்களில் மஞ்சள் நிறமிருந்தால் உங்களுக்கும் மஞ்சள் நிறப் பற்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. நல்ல பல் மருத்துவரை அணுகுங்கள். அவர்கள், உங்கள் பற்களை லேசர் முறையில் சுத்தம் செய்து, பற்களை பெராக்ஸைடு ப்ளீச் செய்து, பற்களை வெண்மைப்படுத்துவர். நாள்தோறும் இரு முறை பல் துலக்கினால் போதும். கூடுதலாகப் பல் துலக்கி, உங்களது பற்களையும், ஈறுகளையும் பலவீனப்படுத்த வேண்டாம்.



கால்சியம் குறைபாடால் பற்கள் எளிதில் உடையும் ஈறுகளில் அரிப்பு ஏற்படும், வாயைச் சுற்றி மரத்துப் போகும், விழுங்குவதில் சிரமம் ஏற்படும், விரல் நகங்கள் நொறுங்கும்.

பற்களைப் பலப்படுத்த கால்சியத்தை அதிகளவு உட்கொள்ள வேண்டும். பால், கீரை பருப்பு வகைகள், சில வகை மீன்கள், கால்சியம் மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். கால்சியம் கலந்த பற்பசைகள் நல்லது. அமில இனிப்பு வகைகளைத் தவிர்ப்போம். குளிர்பானம் வேண்டவே வேண்டாம். பல் மருத்துவர் ஆலோசனைப்படி ப்ளூரைடு சிகிச்சையினை மேற்கொள்ளலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p21.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License