இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


20. செயற்கைப் பல் விநோதங்கள்

ஒரு பெண் பிறந்தநாள் கொண்டாடினாள். அங்கு அவளுக்கு விநியோகிக்கப்பட்ட காபி நறுமணம் கொண்ட சாக்லேட்டில் யாரோ ஒருவருடைய செயற்கைப் பற்கள் ஒளிந்து கிடந்திருக்கிறது. பொது இடங்களில் முதியோர்களின் செயற்கைப் பற்கள் கழன்று விழுவது பெருத்த அவமானம். அகவை முதிர்ந்தவர்கள் பிறந்தநாள் கொண்டாடும் போது, கேக்கின் மேலிருக்கும் மெழுகுவர்த்திகளை ஊதி அணைப்பர். அப்படி ஊதி அணைக்கும் போதுதான் செயற்கைப் பற்கள் கழன்று விழுந்து விடுகின்றன.


உலகத்தின் தலைச்சிறந்த இயற்பியல் அறிவியலாளர் சர் ஐசக் ந்யூட்டனின் ஒரு பல் கி.பி 1816 ஆம் ஆண்டில் 3633 அமெரிக்கன் டாலர் விலைக்கு விற்கப்பட்டது. விற்கப்பட்ட பல்லை மோதிரமாகச் செய்து 62,000 அமெரிக்கன் டாலருக்கு விற்றுள்ளனர். விலை அதிகம் கொண்ட பல் மோதிரம் அது.

மற்றுமொரு தகவல். ஒரு சிறுவனுக்கு தாடை வலி வந்திருக்கிறது. மருத்துவரிடம் காட்டப் போனான். அவன் வாயைத் திறந்து பார்த்த மருத்துவர் அதிர்ந்து போனார். சிறுவனின் வாயில் 526 குட்டிக்குட்டிப் பற்கள் இருந்தன.

பிரான்ஸின் லா சென் கல்லறை தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலத்தின் வாயில் இரும்பு முள் வைப்பு இருந்தது. தங்கப்பல் பொருத்தி இருந்திருக்கிறாள் அந்தப் பெண். கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் காக்கஸஸ் பகுதிகளிலும் செல்வந்தர்கள் தங்கப்பல் பொருத்தி இருந்திருக்கிறார்கள். தங்கத்தாலான செயற்கைப் பல் செல்வத்துக்கும் அதிகாரத்துக்குமான ஒரு குறியீடாக இருந்திருக்கிறது. பண வசதியுடையவர்கள் நலமாக இருந்த பற்களைக் கூட அகற்றிவிட்டு தங்கப்பல் பொருத்திக் கொண்டனர்.

நெல்லி எனும் ராப் பாடகர் ‘கிரில்ஜ்’ என்கிற பற்கள் தொடர்பான நையாண்டிப் பாடலை பாடியுள்ளார்.


அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி ஜார்ஜ் வாஷிங்டன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் மிகச்சிறந்த ஜனாதிபதிதான். ஆனால் அவர் முகத்தை உம்மென்றுதான் வைத்திருப்பார். காரணம், அவரைச் சிறு வயதில் இருந்து பல் வலி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்திருக்கிறது. அவர், மரத்தாலான செயற்கைப் பல் கட்டிக் கொண்டிருந்தார் எனக் கூறுவர். ஆனால், வரலாற்று ஆய்வாளர்கள், அதனை பொய் என உறுதிப்படுத்துகின்றனர். வாஷிங்டன், மனிதப்பல், பசுப்பல், குதிரைப் பல், யானைத் தந்தம், வெள்ளி, செம்பு, பித்தளையில் செயற்கைப் பல் கட்டிக் கொண்டார் என்றும் சொல்வதுண்டு.

உலகின் கிழக்குப் பகுதியில் மரத்தாலான செயற்கைப் பல் பயன்பாட்டில் இருந்திருக்கிறது. ஜப்பானியக் கைவினைஞர்கள் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டு, மரத்தாலான செயற்கைப் பற்களை உற்பத்தி செய்திருக்கின்றனர். தேன் மெழுகு கொண்டு செயற்கைப் பற்களுக்கான அளவை வார்த்தெடுத்திருக்கின்றனர்.

மரத்தாலான செயற்கைப் பற்கள் 14 ஆம் நூற்றாண்டில் வ்ழக்கத்தில் இருந்திருக்கின்றன. கி.பி 1700 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் யானைத் தந்தத்தாலான செயற்கைப் பற்கள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. யானைத் தந்தம், நீர் யானைப் பற்கள், கடற்குதிரை தந்தம் முதலியவை செயற்கைப் பற்கள் உருவாக்கக் கட்டப் பயன்பட்டிருக்கின்றன. கீழ்த்தாடைக்கு ஒன்று, மேல்தாடைக்கு ஒன்று என இரு வகையான செயற்கைப் பற்கள் தயாரித்துப் பொருத்தியிருக்கின்றனர். செயற்கைப் பற்கள் பொருத்த, பியானோ கட்டு கம்பிகள், பட்டு நூல்கள் போன்றவைகளைப் பயன்படுத்தி இருந்திருக்கின்றனர்.

பற்களுக்கான குரல்கள்
**பிடித்தேன்
மனிதர்களை
மனிதநேய புன்னகையை வீசி!

* சிந்தும் புன்னகை
இரு உள்ளங்கை குவிப்பில்
ததும்புகிறது சிநேகம்.
- ரிஷிவந்தியா


யானைத் தந்தத்தாலான செயற்கைப் பற்களில் சில குறைபாடுகளும் இருந்திருக்கின்றன. ஆம், இந்தச் செயற்கைப் பற்களைச் சுத்தம் செய்வது மிகவும் கடினம். இவ்வகையான செயற்கைப் பற்கள் எளிதில் சிதைந்து நலிவுறுகின்றன. வாய் நாற்றமெடுக்கும். இருப்பினும் பணக்காரர்கள், தங்களிடமிருக்கும் பணத்தின் பெருமையினைப் பற்களின் வழியாகக் காட்ட இந்த நாற்றம் கொண்ட யானைத் தந்தத்திலான செயற்கைப் பற்களுடன் வலம் வந்திருக்கின்றனர். இதில் வேடிக்கையாக, தனக்குத் தேவையான செயற்கைப் பற்களுக்காக, பிறரது பற்களை விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்தியிருக்கின்றனர்.

கி.மு 2500 ஆம் ஆண்டில் எகிப்தியர்களும் எட்ரஸ்கன்களும் இறந்தவர்களின் பற்களை எடுத்துக் செயற்கைப் பற்களைத் தயாரித்துப் பயன்படுத்தி இருக்கின்றனர். குதிரை, பசு போன்ற விலங்கினங்களின் பற்களும் செயற்கைப் பற்களாக மாற்றம் செய்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

1800 ஆம் ஆண்டுகளில், பிரஞ்ச் கடை வீதிகளில், போர்க்களங்களில் இறந்து கிடக்கும் வீரர்களின் பற்களை எதிரி வீரர்கள் பிடுங்கிப் பயன்படுத்தி இருக்கின்றனர். கூர் முனைப்பல், கோரைப்பல், கடைவாய்பல் என்று இறந்த வீரர்களின் பற்களைத் திருடியிருக்கின்றனர். இது போன்ற பற்கள் சிறப்பானவையாக இருந்திருக்கின்றன. நெப்போலியன் தோற்ற வாட்டர் லூ போரில் பல் திருட்டு பயங்கரமாய் நடந்தேறி இருக்கிறது. அதனால் வாட்டர்லூ போரை, வாட்டர்லூ பல் போர் என்றேக் கூறலாம்.

இதேப் போன்று, மோசமான செயற்கைப் பற்களைப் பொருத்திக் கொண்ட சில தகவல்களும் இருக்கின்றன.

ஆஞ்சி பார்லோ என்பவர் தொழில் முறையில், பிரச்சனை தீர்வாளர் பணி செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு பிரிட்டிஷ் பெண்மணி. அவருக்குப் பற்கள் விழுந்து கொண்டிருந்தன. மருத்துவம் செய்து கொள்ள தகுந்த பல் மருத்துவரிடம் செல்லாமல் சயனோ அக்ரிலேட் வகை பிசினை வைத்துப் பற்களை ஒட்ட வைத்தார். அவரிடம், நீங்கள் ஏன், பல் மருத்துவரிடம் சென்று உங்கள் பல் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளவில்லை என அவரிடம் கேட்கப்பட்டது.

அசைவம் சாப்பிடுபவர்களுக்குப் பல் பாதிப்பு அதிகமாகுமாமே...!

ஆர் பத்மகுமார் ஷோரனூர்

அசைவம் உண்பவர்களுக்கு பற்கள் நாற்பது வயதில் விழுந்துவிடும். ஆனால், சைவ உணவு உண்பவர்களுக்கு எண்பது வயதானாலும் பல் விழாது என்கிறார்களே, இது உண்மையா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

அசைவம் சாப்பிடுபவர்கள் எலும்பு உள்ளிட்ட இறைச்சியின் கடினமான பாகங்களைக் கடிப்பார்கள். அதனால், மாமிசங்களின் தசைநார்கள் பற்களுக்கு இடையேச் சிக்கி விடும். அசைவ உணவு பற்களின் பாதுகாப்புக்கு ஒரு சவால்தான். அசைவம் சாப்பிடும் பல முதியவர்களின் பற்கள் விழாமல் வலுவாக இருப்பதையும் நாம் அறிவோம். சைவமோ, அசைவமோ பற் சுத்தம் என்பது மேலானது. ஆனால், அதைவிட மேலானது, ‘பல் பராமரிப்பு’. சுத்தம் செய்தலைச் சரியாகச் செய்வதுடன், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சிறந்த பல் மருத்துவரிடம் பல்லைப் பராமரித்துக் கொண்டால், அசைவம் சாப்பிட்டும் பற்களைப் பாதுகாக்கலாம்...



அதற்கு அவர், ஒரு தடவை பார்லோவின் அம்மா, அவருடைய சொத்தைப் பல்லை அகற்றப் பல் மருத்துவரிடம் போயிருக்கிறார். பல் மருத்துவர் பார்லோவின் அம்மாவுக்கு தொண்டைப் புற்றுநோய் என அறிவித்திருக்கிறார். தொடர்ந்து பார்லோவின் அம்மா அவரது 34 வது வயதில் இறந்து போயிருக்கிறார். தானும் பல் மருத்துவரிடம் போனால், தனக்கும் தொண்டை புற்று நோய் இருப்பதாகப் பல் மருத்துவர் அறிவித்து விடுவாரோ என பார்லோ பயந்தார்.

தொடர்ந்து பார்லோ தனது பற்களை ஒட்ட சயனோ அக்ரிலேட் பிசின் பயன்படுத்தி இருக்கிறார். அதனால் பல் பிரச்சனைகள் தீவிரமாகி அவரது மேல்தாடை எலும்புகள் 90 சதவீதம் சேதமடைந்து போயின. ஒரு கட்டத்தில் அவரது 48 வது வயதில் பார்லோ பல் மருத்துவரைச் சென்று பார்த்திருக்கிறார்.

பல் மருத்துவர்கள் அவர் வாய்க்குள் அடைந்து கிடந்த சயனோ அக்ரிலேட் பிசினை முழுமையாக அகற்றி உள்ளனர். டைட்டானியம் செயற்கை பல் உள் வைப்புகளை பொருத்தி அவரது புன்னகைக்கு நிரந்தர வழி ஏற்படுத்தி தந்துள்ளனர்.

படித்தவர்களுக்கு இடையேயும் பல் நலம் பற்றிய அறியாமை இருக்கத்தான் செய்கிறது.


கனடிய வேட்டைக்காரர் பிரான்சிஸ் வார்டன் ஒரு மானை வேட்டையாடி உள்ளார். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வனப்பகுதியில் வசித்த இவர் பல் மருத்துவரிடம் செல்ல விரும்பவில்லை. தான் வேட்டையாடிய மானின் பற்களில் இருந்து ஒரு செயற்கைப் பற்களைத் தயாரித்து கட்டிக் கொண்டார். 1950 முதல் 1960 வரை, அந்தச் செயற்கைப் பற்களுடன்தான் செயல்பட்டார். அந்தச் செயற்கைப் பல்லை வாயில் ஒட்ட வீட்டு பயன்பாட்டுச் சிமென்ட்டைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். மூன்று வருட மான் பல்செட் பயன்பாட்டுக்கு பிறகு அதனை விட்டெறித்தார். அதன் பிறகு, பல் மருத்துவரிடம் சென்று, செயற்கைப் பற்களைக் கட்டிக் கொண்டார். வார்டன் பயன்படுத்திய மான் பற்களிலான செயற்கைப் பற்கள் இப்போது கிங்ஸ்டன் மேம்பாடு அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p20.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License