இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


27. பிற நாடுகளில் பல் மருத்துவக் காப்பீடு

உலகின் மிகச் சுவையான உணவைப் பல் வலிக்கும் போது சாப்பிட்டால் உணவு வாயைக் காயப்படுத்தும் என்பார்கள். என் தந்தை, தனக்குத் தெரிந்த எழுத்தாளர் எழுதிய சிறுகதையினை அடிக்கடி சிரித்தபடி நினைவு கூர்வார்.

ஒரு பிரம்மச்சாரி அறை. அறையில் நான்கைந்து நண்பர்கள். ஒரு நண்பருக்கு நள்ளிரவில் திடீரென பல்வலி வந்து விடுகிறது. பல் வலியின் அசுர வேதனை தாங்காமல் துள்ளத் துடிக்கிறார் நண்பர். விடிந்தால், தான் உயிருடன் இருக்க மாட்டோம் எனக் கருதி தனது பொருட்களை எல்லாம் நண்பர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுத்து விடுவார். ஒரு நண்பனுக்கு தன் காதலியைத் தாரை வார்த்தும் கொடுத்து விடுவார். பல மணி நேர அலப்பறைக்கு பின் பல்வலி நண்பர் தூங்கி விடுவார். காலையில் பல் வலி இல்லாமல் சாதாரணமாக எழும் நண்பர், நண்பர்களுக்குக் கொடுத்தப் பொருட்களை திரும்பப் பிடுங்கிக் கொள்வார். காதலி தானத்தை ரத்தும் செய்வார். இதுதான் அந்தச் சிறுகதை. பல்வலி என்பது அறுபது மாடி கட்டடத்தில் தீப்பற்றிக் கொண்டால் இடைவிடாமல் அலாரம் அடிக்குமே, அதனைப் போல ஒரு மனிதனை பல் வலி அதிரடித்து விடும். தாய்ப்பால் கொடுத்தும் தாலாட்டு பாடி தூங்க வைத்தும் தூங்காமல், தொடர்ந்து அழும் பச்சிளம் குழந்தையைப் போன்று பல் வலி அதிரடித்து விடும்.

மேற்கத்திய உலகில் பல் மருத்துவக் காப்பீடை மிகமிக முக்கியமானதாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்தியாவில் பல் மருத்துவக் காப்பீடுகள், தபால்கள் எடுக்கப்படாத சிவப்புத் தபால் பெட்டிகள் போல தனித்துக் கிடக்கின்றன.


அரசு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் கைகோர்த்துப் பல் மருத்துவக் காப்பீட்டை வீரியமிக்கதாக்க வேண்டும். தடுப்பும் தகுந்த நேர மருத்துவமும் பல் மருத்துவத்தின் இரு கண்கள். முழுமையான உடல் நலம் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை. வாய்வழி நலம் முழுமையான உடல் நலத்தின் ஒரு கிளை தான். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து நாடுகளில் பல் மருத்துவக் காப்பீடு முழுமையாக வெற்றியடைந்துள்ளது.

பல் கவிதை
* பூனையை கடிக்கவா
அம்மா காட்டிய சோறூட்டும் நிலாவைக் கடிக்கவா
ஊசி போடும் நர்ஸம்மாவைக் கடிக்கவா
நாலு குஞ்சு பூச்சாண்டியைக் கடிக்கவா
கன்னத்தைக் காட்டு தாத்தா
நச்புச்சென்று ஒரு கடிமுத்தம் தருகிறேன்.
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்

இந்தியாவில் 1981 ஆம் ஆண்டில், முதன்மையான நலக் காப்பீடுகள் மக்கள் முன் கடை விரித்தன. பதினேழு காப்பீடு நிறுவனங்கள் சந்தையில் குதித்தன. காப்பீடு நிறுவனங்கள் 2006 முதல் 2007 ஆம் ஆண்டில் 94.96 சதவீத வளர்ச்சி பெற்றன. பிரிமியம் 3500 கோடி வசூலானது. இந்த நிறுவனங்கள் பல் மருத்துவத்துக்கான தனிக்காப்பீடு கொள்கைகள் எதையும் கொண்டு வரவில்லை. பதிலாக, மற்ற கொள்கைகளுடன் பல் மருத்துவத்தைச் சேர்த்திருக்கின்றன. பல நிறுவனங்கள் பல் மருத்துவத்தைக் காப்பீட்டுக் கொள்கைகளில் இணைக்கப் பல நிபந்தனைகளை விதித்தன. உலக அளவில் பல் மருத்துவக் காப்பீடுகள் எப்படி உள்ளன?

அமெரிக்காவில் பல் மருத்துவக் காப்பீட்டை அமெரிக்கப் பல் மருத்துவக் கழகம் ஒழுங்குபடுத்தி உள்ளது. 1960 ஆம் ஆண்டில் 45 இலட்சம் அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தனர். 1980 ஆம் ஆண்டில் பத்து கோடி அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தனர். 2006 ஆம் ஆண்டில் பல் மருத்துவத் திட்டங்களின் தேசியக் கழகம் 20 கோடி அமெரிக்கர்கள் பல் மருத்துவக் காப்பீடு எடுத்திருப்பதாக அறிவித்துள்ளது. இது அமெரிக்க மக்கள் தொகையில் 57 சதவீதம் என்பது கவனிக்கத் தககது. அமெரிக்காவில் இரு வகையான பல் மருத்துவக் காப்பீடுகள் செய்யப்படுகின்றன. அதில் ஒன்று, முன்னாள் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் கொண்டு வந்த ஒபாமா பராமரிப்பு (Obama Care). இது மே 2007 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. இதன் நோக்கம், பல் மருத்துவத்தில் சேவைக் கட்டணமும், நிர்வகிக்கப்பட்ட பராமரிப்புத் திட்டமும் இணைந்தது. இத்திட்டம் ஒவ்வொரு அமெரிக்கருக்கும் பல் மருத்துவத்தை வீட்டின் கதவைத் தட்டி அளித்தது.


சுவீடனின் தேசியச் சுகாதார கழகம் 1938 ஆம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவர்களுக்குச் சிறப்பான பல் பராமரிப்பு நிகழ்ச்சி நிரலை அமுல்படுத்தியது. இந்த நிகழ்ச்சி நிரல் 6-16 வயதுக் குழந்தைகளுக்கு மாதாந்திரப் பரிசோதனை, இலவசச் சிகிச்சை, ஆண்டுப் பல் பராமரிப்புகளைப் பரிசளித்தது. 17 முதல் 19 வயதினருக்கு சிகிச்சை செலவில் சலுகை கொடுக்கப்பட்டது. இளம் வயதினருக்கு நிர்ணயிக்கப்பட்ட பல் மருத்துவக் கட்டணம், கருவுற்ற பெண்களுக்குப் பல் மருத்துவக் கட்டணம் 75 சதவீதம் திருப்பியளிக்கப்பட்டது. பொது மனித உடல் நலம் சுவீடன் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இங்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. 1973 ஆம் ஆண்டில் சுவீடன் இருபது வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்குப் பல் மருத்துவக் காப்பீடு கட்டாயம் எனச் சட்டம் கொண்டு வந்தது. அண்மைய அரசியல் மாற்றம் காரணமாக சுவீடனில் தனியார் பல் மருத்துவர்கள் பெருகி விட்டனர்.

இங்கிலாந்தில் 1948 ஆம் ஆண்டுக்குப் பின் பல் மருத்துவம் தேசிய உடல்நலச் சேவையில் (NHS) இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை மக்கள் மீதான வரி ஈடுகட்டுகிறது. மூன்று வகையான பல் மருத்துவ காப்பீடுகள் இங்கிலாந்தில் புழங்குகின்றன. அவையாவன;

1. பொதுப் பல் மருத்துவச் சேவை (General Dental Service – GDS)

2. சமுதாயப் பல் மருத்துவச் சேவை (Community Dental Service – CDS)

3. மருத்துவமனைப் பல் மருத்துவஅ சேவை (Hospital Dental Service – HDS)

பொதுவாக, பெரும்பான்மையான இங்கிலாந்து மக்கள் பொதுப் பல் மருத்துவச் சேவைகளையேத் தேர்ந்தெடுக்கின்றனர். பதினெட்டு வயதுக்குக் குறைவானவர்களும், கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கட்டணமில்லாப் பொதுப் பல் மருத்துவச் சேவை பெறுகின்றனர். சமுதாயப் பல் மருத்துவச் சேவை சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. பொதுப் பல் மருத்துவச் சேவை ஏழைகளுக்கு முழுமையாக பயன்படுகிறது. உடனடி பல் மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பொதுப் பல் மருத்துவச் சேவை துணை நிற்கிறது.

பல் மருத்துவக் காப்பீடு - மாற்று வழி

சு. தமிழ்ச்செல்வி, பந்தல்குடி.

நடுத்தர மக்களுக்குப் பயன் தரும் வகையில் பல் மருத்துவக் காப்பீட்டுக்கு மாற்று வழி ஏதாவது இருக்கிறதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

ஒரு பல் மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளும் முன் மாதாந்திர கட்டணம் எவ்வளவு வரும்? வருடம் எவ்வளவு பணம் கட்ட வேண்டியிருக்கும் என்று சிறிய அளவில் கணக்குப் போட்டுப் பார்க்க வேண்டும். நமது பல் நலம் எப்படி இருக்கிறது? என நமக்கேத் தெரியும். ஆண்டுக்குப் பல் மருத்துவத்துக்கு ஆகப்போகும் செலவைக் கணித்திட வேண்டும். அந்தச் செலவை விடப் பல மடங்கு அதிகம் கட்ட நேர்ந்தால், அதனால் எந்தப் பயனுமில்லைதானே? மாதம் ரூபாய் 500/- வீதம் ஐந்து ஆண்டுகளுக்கு (60 மாதங்கள்) நிரந்தர வைப்புத்தொகையாகச் செலுத்துங்கள். திடீரென, ஒரு பெரிய பல் மருத்துவச் செலவு வந்தால் வைப்புத்தொகையினை முறித்து மருத்துவச் செலவை ஈடு கட்டுங்கள். சில வைப்புத் தொகைத் திட்டங்களில், கடன் பெறும் வசதியுமிருக்கும். குறைவான மருத்துவச் செலவு இருப்பின் அதில் கடனாகப் பெற்றுக் கொள்ள முடியும். எவ்விதப் பாதிப்புமில்லாத நிலையில், ஐந்து ஆண்டு முடிவில் வட்டியுடன் குறிப்பிட்ட அளவில் பணம் கிடைத்துவிடும்.



ஆனால், இந்தியாவிலோ எல்லாம் தலைகீழ்தான். உயிர் போகும் பல்வலியின் அசாதாரண சூழலில்தான் நோயாளிகள் பல் மருத்துவரை அணுகுகின்றனர்.

‘ஆனாக்க அந்தமடம்
ஆவாட்டி சந்தமாடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி
பிளாட்பாரம் சொந்த இடம்’

என்கிற பாட்டு நமக்குள் ஓடுகிறது.

இந்தியர்கள் பல் மருத்துவத்தில் வரும் முன் காப்பில் ஈடுபடுவதில்லை. வந்த பின் சொற்ப பாதிப்புடன் தப்பிப்பது என்கிற மனோநிலையில் உள்ளனர். இந்தியச் சந்தைகளில் விலை உணர்திறன் அதிகம். ஐம்பது பைசா கூட இருந்தாலும் ஒரு பொருளை வாங்க மாட்டார்கள். பல் மருத்துவக் காப்பீடு ஒரு பயனுள்ள சிறு முதலீடுதான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p27.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License