இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


34. பல் மருத்துவத்தில் மன அழுத்தம்

‘எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு!’

- இந்த வாக்கியத்தை ஆறிலிருந்து அறுபது வயது வரையிலான ஆண் பெண் என்று அனைவரும் சொல்கின்றனர்.

‘STRESS’ என்கிற வார்த்தையை தமிழில் ‘மன அழுத்தம்’ எனக் கூறுவர். மன உளைச்சல், உடல் உளைச்சல், மன இறுக்கம், தகைவு என்கிற சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன.

சரி, மன அழுத்தம் என்றால் என்ன?

மன அழுத்தம் என்பது மனிதன் அல்லது விலங்கு உயிரினத்தில் உண்மையாகவோ அல்லது கற்பனையாகவோ, உடல் ரீதியாக அல்லது மனரீதியாக ஏற்படும் தாக்கங்களுக்கு சரியான முறையில் எதிர்ச்செயலை செய்ய முடியாத நிலை தோன்றுவதன் தொடர்பு விளைவு அல்லது பின் விளைவாகும்.

இந்த மன அழுத்தம் என்கிற சொல்உயிரியல் மற்றும் உளவியல் அடிப்படையில் முதலில் 1930 ஆம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது.

மன அழுத்தத்திற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

* தொடர்ந்து நான்கு பருவத் தேர்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் அல்லது பெரும்பான்மயான பாடங்களில் தோல்வியடைந்து ஐந்தாவது பருவத்தேர்வை ஒரு மாணவன் எதிர் கொள்ளும் போது

* இருபது வருடங்களாக உதவி இயக்குநராக இருந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில், புதிதாகக் குறும்படம் எடுத்த ஒருவன் ‘பான் இந்தியா’ படம் எடுத்து புகழ்பெற்ற இயக்குனர் ஆகும் போது

* தொடர்ந்து நான்கு கருச்சிதைவுகளுக்கு பிறகு ஐந்தாவது கருவாவது தங்க வேண்டுமே என ஒரு பெண் பதைபதைப்பது

* ஆயிரம் பாட்டி வைத்தியங்களை செய்தும் தலைமுடி கொட்டும் போது

- இவைகள்தானென்றில்லை, பயனற்ற சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் மக்கள் மன அழுத்தம் கொள்ளத் தொடங்கி விட்டனர்.


பச்சரிசிப் பல்லழகன்
“அன்று
மழலை மிட்டாய் பார்க்கிற
அதிசயமாய்
ஈறு தெரியச் சிரித்து
அன்பே என்று
நான் நீட்டிய
ரோஜாக்குள்
தெறித்து வீழ்ந்ததொரு
முத்துப்பரல்
கோபத்தில் நீ வீசிய
கன்னத்து அறையில்
நேற்று
நம் குட்டிம்மா
தன் முதல் பால்பல்லை
மண்ணில் புதைக்க
உள்ளங்கைகளில்
ஏந்திக் கொண்டே
ஓடிய போது
நெக்கு விடத் தொடங்கின
ஓராயிரம் பட்டு
ரோஜாக்கள் ”
- எஸ். கயல்

மன அழுத்தங்களில் ஐந்து வகை இருக்கின்றன.

1. உடனடி மன அழுத்தம் (Acute Stress)

உடனடித் தேவை மற்றும் சவால் உடனடி மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ரோலர் கோஸ்டர் சுற்றல் நேர்மறை மன அழுத்தம். சிறு கார் விபத்து எதிர்மறை மன அழுத்தம். உடனடி மன அழுத்தத்தினால் மனிதன் தப்பித்து ஓடு அல்லது தாக்கு என்கிற மனோபாவத்துக்குள் தள்ளப்படுகிறான். விளைவு ஹார்மோன் கூத்தும் உடலியல் மாற்றமும்.

2. நிகழ்வுகள் சார்ந்த உடனடி மன அழுத்தம் (Episodic Acute Stress)

ஒரு மனிதருக்கு அடிக்கடி தொடர்ந்து ஏற்படும் மன அழுத்தங்கள், நிகழ்வுகள் சார்ந்த உடனடி மன அழுத்தம் எனலாம். குழப்பமான ஒழுங்கீனமான வாழ்க்கை முறை கொண்டோருக்கு இவ்வகை மனஅழுத்தம் கட்டாயம் ஏற்படும். இத்தனை மணி நேரத்தில் இவ்வளவு செய்து முடிக்க வேண்டிய கட்டாயம். ஒருவருக்கொருவர் இடையேக் கொள்கை மோதல்கள், கட்டாயக் கடமைகள் இவை மூன்றும் நிகழ்வு சார்ந்த உடனடி மன அழுத்தங்களை ஏற்படுத்தும்.

3. நீண்ட நாட்களாகத் தொடரும் மனஅழுத்தம் (Chronic Stress)

பணியிடச் சிக்கல்கள், உறவுச் சிக்கல்கள், பொருளாதார நெருக்கடிகள் நீண்ட நாள் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் இதய நோய், பதட்டம், மனச்சோர்வு பீடிக்கும்.


4. பயனும் நிறைவும் தரும் மன உளைச்சல் (Eustress)

பதவி உயர்வுக்காக, ஒரு போட்டியில் வெற்றி பெறுவதற்காக, தனிப்பட்ட இலக்கை அடைவதற்காக ஏற்படும் ஒரு நேர்மறையான மன அழுத்தமே பயனும் நிறைவும் தரும் மன உளைச்சல் எனப்படும். இது அதிகமானாலும் உடலுக்கும் மனத்திற்கும் கேடுதான்.

5. அதிர்ச்சி மன அழுத்தம் (Traumatic Stress)

ஒரு அதிர்ச்சியூட்டும் நிகழ்வில் கடுமையாக பாதிக்கப்பட்டு இயல்பு நிலைக்கு வர முடியாமல் தத்தளித்தல்.

நீண்டநாள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் தீராத நோயாலும், ஆறாத காயத்தாலும் அவதியுறுவர். கோபம், பதட்டம், மனச்சோர்வு, துக்கம், தாழ்வு மனப்பான்மை அவர்களுக்குள் தலை விரித்தாடும். பொருளைத் திருட்டு கொடுத்தோர், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டோர், இயற்கைப் பேரழிலில் சிக்கியோர் நீண்டநாள் மன அழுத்தத்தில் உழல்வர். மரபியல் ரீதியாகவும் ஒருவரை நீண்டநாள் மனஅழுத்தம் பீடிக்கும். உடற்பயிற்சி இன்மை, அதிக தூக்கம் அல்லது தூக்கமின்மை நீண்ட நாள் மனஅழுத்தத்தை பரிசளிக்கும். இதய நோய்கள் குடல் நோய்கள் இவர்களுக்கு வரும்.

மனஅழுத்தம் உயிர் கொல்லி நோயா? இல்லவே இல்லை.

உலகில் 18 முதல் 24 வயதினரில் 66 சதவீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், 65 வயதினரில் 25 சதவீதம் பேர்தான் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோரில் 0. 6 சதவீதம் ஆண்களும், 3. 5 சதவீதம் பெண்களும் தற்கொலை பண்ணிக் கொள்கின்றனர்.

மனஅழுத்தத்திற்கு காரணமான ஹார்மோன்கள் இதோ-

* கார்டிசால்

* எபிநெப்ரின் (அட்ரினலின்)

* நார்எபிநெப்ரின் (நார்அட்ரினலின்)

பல் மருத்துவம் சார்ந்த மருத்துவத்தொடரில், மன அழுத்தம் குறித்து எதற்கு என இதனைப் படிப்பவர்கள் கேட்கக்கூடும்.


மனப்பதட்டம், தொடர் சோகம், அவநம்பிக்கை, அன்றாடச் செயல்பாடுகளில் விருப்பமின்மை ஏற்படுத்தும். மனிதரின் வாயிலுள்ள நுண்ணுயிர் கூட்டத்துக்கும் மனித உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. என்.ஒய்.யூ. ரோரி மெய்யர்ஸ் செவிலியர் கல்லூரி தனது ஆய்வில் மனப் பதட்டம் மனிதரின் வாயிலுள்ள நுண்ணுயிரிகள் கூட்டத்தைக் கடுமையாக பாதிக்கிறது என கண்டுள்ளது.

மனிதரின் வாய்க்குள் பேக்டீரியா, வைரஸ், பூஞ்சைகள் கூட்டம் நிறைந்திருக்கும். வாய் நுண்ணுயிரிகள் கூட்டத்துக்கும் மனஅழுத்தத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பைக் கண்டுபிடித்து விட்டால் மனித மன இறுக்கங்களை எளிதில் குணப்படுத்தி விடலாம் என்கிறார் ரோரி மெய்யர்ஸ் செவிலியர் கல்லூரி துணை புல முதல்வர் பெய் வூ. 2009 ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுக்குள் 18 அல்லது 18 வயதுக்கு மேற்பட்ட 15000 அமெரிக்க இளைஞர்களிடம் அந்த செவிலியர் கல்லூரி கேள்விகளை தந்து பதில்களைப் பெற்றது.

நுண்ணுயிர்கள் தொகுப்பு வாயில் குறைவாக உள்ளவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருத்தனர். புகைப்பிடித்தல், வேறு நோய்களுக்கு மருந்து உண்ணல், உணவுப் பழக்கவழக்கம், மது அருந்தல் மற்றும் மோசமான பல் பராமரிப்பு வாயில் நுண்ணுயிரிகள் தொகுப்பை வெகுவாகக் குறைக்கும். இதேப் போன்று, வாய் நுண்ணுயிரிகள் ஏற்ற இறக்கத்தால் டிமென்சியா நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

பல் மருத்துவப் பட்டப்படிப்பு தேவைதானா?

க. சின்னதாஸ் , போடிநாயக்கனூர்.

நாள்தோறும் நான்கு முறை பல் துலக்குபவருக்கு மன அமைதியுடன் நல்ல உடல் நலமும் ஏற்படும் என்பது உண்மையா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

பொதுவாக, மன அழுத்தம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எதையும் செய்ய வேண்டும் என்கிற ஈடுபாடு சிறிதும் இருக்காது. சுய சுத்தம் பேண மாட்டார்கள். பிறரைக் கவரும் வகையில் ஆடைகள் அணிய மாட்டார்கள். கவனமாய், முழுமையாய்ப் பல் துலக்க மாட்டார்கள். ஒவ்வொரு முறை உணவு உண்ட பின் வாயைக் கொப்பளித்து, காலை, இரவு பல் துலக்கி நாக்கைச் சுத்தபடுத்தி மிடுக்காக இருந்து பாருங்கள். உங்களுக்கு வாழ்க்கையில் வரும் பிரச்சனைகளைச் சாதாரணமாக, எடுத்துக் கொண்டு செயல்படுவீர்கள். வாழ்க்கையில் பல வெற்றிககளை அடைவீர்கள்.


மன அழுத்தம் உள்ளவர்களுக்கும், பல் தொடர்பான பிரச்சனைகள் ஏராளமாய் வரும். அதனைத் தவிர்க்க;

* உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இயங்குதல் நல்லது.

* முடியாதவைகளைத் தேவையில்லை என்று ஒதுக்கி விட வேண்டும்.

* சரிவிகித உணவு உண்ணல் சிறப்பு.

* போதுமான தூக்கம்.

* சுயப்பராமரிப்பு தேவை.

* நேர நிர்வாகம் அவசியம்.

* பணிக்கிடையே ஓய்வு தேவை. மாதம் ஒருமுறை சிற்றுலா செல்லலாம்.

* தனக்கான எல்லைகளை வகுத்தல்.

* தினம் இருமுறை பல் துலக்கல், ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவர் ஆலோசனை பெறுதல் நலம்.

* தியானம், யோகா, மூச்சுப்பயிற்சி.

என்று பல், வாய் நலம் காத்து மன அழுத்தம் போக்கலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p34.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License