இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


35. நரம்பியல் சிதைவு நோய்

மனித மூளை பொதுவாக மூன்று பவுண்ட் அல்லது 1300 முதல்1400 கிராம் எடை இருக்கும். ஓர் ஆண் அல்லது ஒரு பெண்ணின் உடல் எடையில் இரண்டு சதவீத எடை கொண்டது மூளை. மூளையின் எடை தனி மனிதர், பாலினம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் சிறிய அளவில் மாறும். ஒரு பெண்ணின் மூளை, ஆணின் மூளையை விட 200 கிராம் எடை குறைவாக இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தையின் மூளை எடை 350 முதல் 400 கிராம் வரை இருக்கும். ஒரு மனித மூளையில் 86 பில்லியன் ந்யூரான் செல்கள் இருக்கும். மனித மூளையின் நினைவுத்திறன் 2.5 பீட்டாபைட்ஸ் (2.5 மில்லியன் ஜிஹாபைட்ஸ் அல்லது 250கோடி மெஹாபைட்ஸ்) எனும் அளவில் இருக்கும். இது 300 வருடம் தொடர்ந்து விடியோ பதிவு செய்வதற்குச் சமம்.

நியூரான்கள் மின் மற்றும் வேதியல் சமிக்ஞைகள் மூலம் மூளை மற்றும் உடல் முழுவதும் தகவல்களைப் பரப்புகின்றன. நியூரான்கள் மூளையின் தகவல் செயலிகள். எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் முதல் இயக்கம் மற்றும் உணர்வு வரை அனைத்தையும் செயல்படுத்தும் சமிக்ஞைகளை அனுப்புதல் பெறுதல் மற்றும் தொடரச் செய்தல் ஆகியவை நியூரான் பணிகளாக இருக்கின்றன.

நியூரான்களின் கீழ்க்காணும் மூன்று வகைகளில் தங்கள் செயல்களைச் செய்கின்றன.

* புலன் நரம்புகள் - இந்த நியூரான்கள் கண்கள், காதுகள், தோலில் உள்ளவை போன்ற உணர்வு ஏற்பியிலிருந்து தகவல்களை மூளைக்கு எடுத்துச் செல்கின்றன.

* மோட்டார் ந்யூரான்கள் - இந்த நியூரான்கள் மூளையில் இருந்து தசைகளுக்கு சமிக்ஞைகளைக் கடத்துகின்றன. இதனால் இவை சுருங்கி இயக்கத்தை உருவாக்குகின்றன.

* இன்டர் நியூரான்கள் - இந்த நியூரான்கள் மூளை மற்றும் முதுகுத் தண்டுக்குள் உள்ள மற்ற நியூரான்களை இணைத்து, சிக்கலான சுற்றுகளில் இடைத்தரகராகச் செயல்படுகின்றன.


நியூரான்கள் நான்கு வகைப்படும்.

* ஒரு முனைப்போக்கு நியூரான் (Unipolar)

* இரு முனைப்போக்கு நியூரான் (Bipolar)

* பல முனைப்போக்கு நியூரான் (Multipolar)

* போலி ஒரு முனைப்போக்கு நியூரான் (Pseudo Unipolar)

எப்படி...?
”இரண்டே இதழ்களால்
இத்தனைப் பூக்களை
எப்படி நீ விரிக்கிறாய்?
அத்தனைப் பூக்களிலும்
அன்பின் வண்ணத்தை
எப்படித்தான் குழைக்கிறாய்?
ஒற்றைச் சிரிப்பாலே
கொத்துப் பூக்களை
எப்படி நீ உதிர்க்கிறாய்?”
- அல்லி பாத்திமா

மனித மூளையை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.

1. பெருமூளை (Cerebrum)

2. சிறுமூளை (Cerebellum)

3. மூளைத்தண்டு (Brainstem)


பெருமூளை இரு அறைக் கோளங்களாய்ப் பிரிக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு பிரிவுகளாகப் பிரிந்துள்ளன.

* முன்மடல் பெருமூளை (Frontal Lobe) - ஆளுமை, முடிவெடுக்கும் திறன், விருப்பமுள்ள இயக்கம்.

* உச்சிப்பக்கமடல் பெருமூளை (Parietal Lobe) - தொடு உணர்ச்சி, வலி, தட்பவெப்பம், புலன் சார்ந்த செய்திகள்.

* பக்கவாட்டு மடல் பெருமூளை (Temporal Lobe) - ஒலி உணர்தல், நினைவுத்திறன் மற்றும் மொழி உணர்வு.

* பிடரி மடல் பெருமூளை (Occipital Lobe) - பார்வை.

சிறுமூளை மூளையின் பின்பக்கம் அமைந்துள்ளது. நகர்ச்சியை ஒருங்கிணைக்கிறது. தோரணை மற்றும் உடல் சமநிலை பேணுகிறது.

மூளைத்தண்டு மூளையையும் முள்ளந்தண்டு வடத்தையும் இணைக்கிறது.

சுவாசம், இதயத்துடிப்பு, இரத்த அழுத்தம், தூக்கம் – விழிப்பு சுழற்சி, அனிச்சைச் செயல்கள், இருமல் தும்மல் மற்றும் விழுங்கல் போன்ற பணிகளைக் கவனிக்கிறது.


மனித மூளையின் ஒட்டுமொத்தச் செயல்பாடுகள் எனும் போது,

* நினைவுகளை கட்டுப்படுத்துகிறது.

* நினைவுத்திறன்

* உணர்வுகள்

* தொடு உணர்ச்சி

* பார்வை

* சுவாசம்

* பசி

மற்றும் உடல் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துகிறது.

பல் மருத்துவம் சார்ந்த கட்டுரைத் தொடரில் மனித மூளையைப் பற்றி இவ்வளவு செய்திகள் ஏனென்று கேட்கலாம்.

அல்சைமர் நோய் அல்லது நரம்பியல் சிதைவு நோய் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

நரம்பியல் சிதைவு நோயின் ஏழு அறிகுறிகள் இருக்கின்றன.

* தினசரி வாழ்க்கையை பாதிக்கும் வண்ணம் நினைவுத்திறன் இழப்பு

* திட்டமிடுதலில் அல்லது பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் குழப்பம்.

* வேலைகளை முடிக்க திணறுதல்

* இடம் நேரம் பற்றிய குழப்பம்.

* காட்சி படிமங்களை புரிந்து கொள்வதில் திணறல்.

* வார்த்தைகளில் சிக்கல்.

* பொருட்களை தவறுதலாக வைத்து தொலைத்தல்.

நரம்பியல் சிதைவு நோய்

ராம் பிரசாத், கோவை.

நரம்பியல் சிதைவு நோய் வந்த ஒருவரை குணப்படுத்த பல் மருத்துவத்தில் மருந்து இருக்கிறதா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

அல்சைமர் நோயைக் குணப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பல் மருத்துவம் சார்ந்த மருந்துகள் ஏதுமில்லை. Donepezil, Galantamine, Rivastigmine, Memantine மற்றும் மனநோய் தடுப்பு, பதட்ட குறைப்பு, வலிப்பு எதிர்ப்பு மருந்துகளும் பொது மருத்துவத்தில் நோயாளிக்குக் கொடுப்பர். இதில் வாய் சார்ந்த பக்க விளைவுகள் உண்டு. வரும்முன் காப்பே நல்லது. வாய் சுத்தம் பேணி நரம்பியல் சிதைவு நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது சிறந்தது.


அல்சைமர் நோய் டிமென்ஷியா நோயின் ஒருவகையாகும். நரம்பியல் சிதைவு நோய்க்கு மரபியல் தொடர்ச்சி, தனிமனித வாழ்க்கை முறை, சுற்றுப்புறச் சூழல் காரணிகள் காரணமாக இருக்கலாம். அதை விட மிக முக்கியமானது ஈறு நோய். ஈறுநோய் நரம்பியல் சிதைவு நோய்க்கு ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறது. நரம்பியல் சிதைவு நோய் பொதுவாக 60 வயது அல்லது 60 வயதுக்கு மேற்பட்டோரைத் தாக்குகிறது. அந்த நோயால் தாக்கப்படுபவர்கள் வாய்ச் சுத்தம் இல்லாதவர்களாக இருப்பர். வாயில் காணப்படும் பேக்டீரியாக்களில் ஒன்று போர்பைரோமோனாஸ் ஜிஞ்சிவாலிஸ் (Porphyromonas Gingivalis). ஈறுநோய் தொற்றின் வீக்கமுற்ற மூலக்கூறுகளும் போர்பைரோமோனாஸ் ஜிஞ்வாலிஸ் கிருமியும், மூளைக்குப் பயணித்து நரம்பியல் வீக்கத்தை உருவாக்குகின்றன.


பொதுவாக, பல் மருத்துவர்கள் பற்குழிகளை நிரப்ப மெர்க்குரி நியூரோடாக்ஸின் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவர். மெர்க்குரி வகை பற்குழி நிரப்பிகள் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. போர்பைரோமோனாஸ் ஜிஞ்வாலிஸ் கிருமி முடக்குவாதத்தையும் உருவாக்கும். பல் சுத்தம் பேணாது இந்தியாவின் 88 லட்சம் நரம்பியல் சிதைவு நோயாளிகளில் ஒருவர் ஆகாமலிருக்க, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பல் மருத்துவரிடம், பல் மருத்துவச் சோதனை செய்து கொள்வது அனைவருக்கும் நல்லது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p35.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License