இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


36. தெற்றுப் பற்கள்

ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் போது, முதலில் எதிரிலிருப்பவரின் முகத்தைப் பார்ப்போம். அதனைத் தொடர்ந்து, அவர்கள் என்ன சொல்கிறார்? என்பதைக் கவனிப்பதற்காக, அவர்களது வாயைக் கவனிப்போம், வாயைக் கவனிக்கும் போது, அவர்களது பற்கள் பார்வைக்குத் தெரிகின்றன.

பொதுவாக, சிறு குழந்தைகளுக்கு மேல் வரிசையில் பத்துப் பற்களும், கீழ் வரிசையில் பத்துப் பற்களும் என்று மொத்தம் இருபது பால் பற்கள் இருக்கும். இளம் வயதினருக்கு 32 பற்கள் இருக்கும். மனிதரின் பற்களுக்குச் சரி, விங்குகளுக்கு... என்று நீங்கள் நினைப்பதும், எனக்குத் தெரிகிறது.

கவசம் உடைய சிற்றுயிரிக்கு 100 பற்கள், ராட்சச வெள்ளை நிறச் சுறாவிற்கு 35000 பற்கள், உப்பு நீர் முதலைகளுக்கு 80 பற்கள், பாட்டில் மூக்கு டால்பின்களுக்கு 250 பற்கள், பூனை மீன்களுக்கு ஆயிரம் பற்கள், சிறிய பழுப்பு நிற வௌவாலுக்கு 38 பற்கள், ஊதாக் கடல் அர்ச்சினுக்கு ஐந்து வரிசைகளில் பற்கள், புல்லுரு தவளை மீனுக்கு 100 பற்கள், யானைக்கு வாழ்நாளில் மிகப்பெரிய எடை கூடிய ஆறு செட் கடைவாய்ப்பற்கள், எறும்புத் தின்னிகளுக்கு, பறவைகளுக்கு, கடல் குதிரைகளுக்கு, பிளாட்டிபஸ்ஸுக்கு, மண்புழுவுக்கு, திமிங்கலங்களுக்கு, ஜெல்லி மீனுக்கு, ஆக்டோபஸ்களுக்கு, நட்சத்திர மீன்களுக்கு, ஆமைகளுக்கு, பவளப்பாறை உயிரிகளுக்கு, சிலந்திகளுக்கு, வாத்துகளுக்கு, விலாங்கு போன்ற மீன்களுக்குப் பற்கள் கிடையாது.

ஒரு இளம் வயது ஆணுக்கோ, பெண்ணுக்கோ 32 பற்களுக்குக் கூடுதலாய்ப் பற்கள் இருந்தால் அதனை ஹைபர்டான்சியா (Hyperdontia) என்பர். ஒரு வாலிப வயது ஆணுக்கோ ஒரு பெண்ணுக்கோ 32 பற்களுக்கு குறைவாய் பற்கள் இருந்தால் அதனை ஹைபோடான்சியா (Hypodontia) என்பர். ஒருவருக்கு குறைவான கூடுதலான பற்கள் ஒரே வாய்க்குள் அமைந்திருந்தால் அதனை ஹைபோ ஹைபர்டான்சியா (Hypo Hyperdontia) என்பர். இதனை Oligo-Pleiodontia எனவும் அழைப்பர். இரண்டு துருவ வகைப் பிரச்சனைகளும் உள்ளவர்கள் ஜனத்தொகையில் 0. 002 - 3. 1 சதவீதம் பேர். ஹைபர்டான்சியா உள்ளவர்கள் உலக மக்கள் தொகையில் 0. 15 சதவீதம். மூன்றாவது கடைவாய் பற்கள் இல்லாத ஹைபோடான்சியா நபர்கள் ஜனத்தொகையில் 1. 6 சதவீதத்திருந்து 9. 6 சதவீதம் பேர் உள்ளனர்.


ஹைபர்டான்சியா சராசரிக்கு கூடுதலாய் பற்கள் ஒருவருக்கு அமைய கீழ்க்கண்ட காரணங்கள் இருக்கலாம்.

* மரபியல் காரணம் - குடும்ப உறுப்பினர்களிடையே பரவலாய் காணப்படும்.

* ஜெனிடிக் சின்ட்ரோம்கள் கார்டனர் சின்ட்ரோம் (Gardener Syndrome) – தோல் கட்டி, மலக்குடல் வளர்ச்சி, மண்டையோடு வளர்ச்சியுடன் கூடுதல் பல் வளர்ச்சி தொடர்புடையது. கிளைடோகிரானியல் டைசோஸ்டோசிஸ் (Cleidocranial Dysostosis)

வைரப்புன்னகை
”காலைக் கதிரவன் தொட்டால்
உன் பற்கள் –
வைரத் துளிகள் போல
மின்னுகின்றன.

புன்னகை விரியும் தருணம் –
என் இதயத்தில்
ஒளி பொங்கும் திருவிழா.

ரோஜா நிற ஈறுகளின் மென்மை
மலரின் இதழைப் போல்,
உன் சுவாச நறுமணம்
வானவில் வர்ணம் போல
என் உள்ளத்தை நிரப்புகிறது.
- செயற்கை நுண்ணறிவு நுட்பம் தந்த கவிதை

* ஜெனிடிக் பிறழ்வுகள் - பற்கள் முளைப்பதற்கான ஜீன்களின் மாற்றம்.

* கர்ப்பக்காலத்தில் நோய்த்தொற்று.

* சுற்றுப்புறச் சூழல் நச்சுகள்.

* பல் தசைச்சவ்வின் அதீத முனைப்பு.

* மூதாதையர் பண்பு வெளிப்பாடு (Atavism)

* உதட்டு பிளவு மற்றும் மேலண்ண பிளவு.

* எலர்ஸ் டானியோஸ் சின்ரோம் (Ehlers Danios Syndrome)

* ஜி எல் ஏ மரபணு பிறழ்வால் ஏற்படும் பேப்ரி நோய் (Fabry Disease)

* மண்டை ஓடு, முகம், பற்கள் பாதிக்கும் மரபணு பிறப்புக் கோளாறு (Crouzon Syndrome)

* உபரி 21 குரோமோசோம் உள்ள டவுன் சின்ட்ரோம் (Down Syndrome)


ஹைபர்டான்சியா ஐந்து வகைப்படும்

1) இணை நிறைவான கூடுதல் பல் (Supplementary)

2) பீப்பாய் வடிவ கூடுதல் பற்கள் (Tuberculate)

3) கூட்டு தீங்கற்ற கட்டி (Compound Odontoma)

4) சிக்கலான அதே நேரம் தீங்கற்ற கட்டி (Complex Odontoma)

5) நுனி கூர்ப்பான அடி பற்கள் கனத்த கூடுதல் பற்கள் (Conical Shaped)

ஹைபர்டான்சியாவின் அறிகுறிகள் என்னென்ன?

* ஒரு இருக்கையில் முண்டியடித்து பத்து பேர் அமர்ந்திருப்பது போல பல் நெரிசல்.

* தொடர் வலி மற்றும் அசௌகரியம்.

* மெல்லுவதில் சிரமம்.

* கடிப்பதில் சிரமம்.

* பேச்சில் சிரமம்.

* பால் பற்களை முளைக்க விடாமல் தடுப்பு.

ஹைபர்டான்சியாவை வரும்முன் தடுக்க முடியாது. ஆனால் அதன் அறிகுறிகளை முன்னமே கண்டு தகுந்த சிகிச்சை தரலாம்.


ஹைபர்டான்சியாவுக்கான சிகிச்சைகள்

* அறுவை சிகிச்சை செய்து கூடுதல் பற்களை அகற்றுதல்.

* பற்சீரமைப்பு மற்றும் தாடை குறைபாடை சரி செய்தல்.

* முகத்தோற்றத்திற்கோ தினசரி செயல்பாடுகளுக்கோ எந்த சிரமமும் தராத கூடுதல் பல்லை அப்படியே விட்டுவிடலாம். அப்படியே விட்டுவிட பல் மருத்துவர் ஆலோசனை தேவை.

* ஒன்றுக்கும் மேற்பட்ட சிகிச்சைகளை ஒருங்கிணைத்தல்.

தெற்றுப்பற்கள் அகற்றலாமா?

எஸ். மஹதி, திண்டுக்கல்

எனக்கு மேல் வரிசைப் பற்களின் இரண்டு பக்கங்களிலும் தெற்றுப்பற்கள் இருக்கின்றன. அவற்றை அகற்றலாமா வேண்டாமா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

பற்களை அகற்றுவது பற்றி நீங்கள் ஒரு பல் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. தங்களுடையப் பற்களை எண்ணிம முறையில் எக்ஸ்ரே எடுப்பார். ஒட்டு மொத்தப் பற்களையும் அதன் நிலைகளையும் பல் மருத்துவர் ஆய்வு செய்து, பல் அகற்றுவதின் சாதக பாதங்களைக் கண்டறிவார். அதன் பின்பு, மருத்துவர் அந்தப் பற்களை அகற்றலாமா? வேண்டாமா? என்பது குறித்துச் சொல்வார். மருத்துவர் அகற்றலாம் என்று சொன்னால் மட்டுமே அகற்ற வேண்டும். நல்ல பல் மருத்துவரைச் சந்தித்து, பல் அகற்றுவது குறித்து முடிவு செய்யுங்கள்.


உங்களுக்கு ஒரு மெய்யான ஹைபர்டான்சியா நோயாளியைப் பற்றிக் கூறுகிறேன்.

பிரேசிலை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஹைபர்டான்சியா இருந்தது. அதாவது அவருக்கு 81 பற்கள் இருந்தன. அவரை பலவிதமாக சோதித்தனர்.

மரபியல் காரணமில்லை. சின்ட்ரோம்கள் ஏதுமில்லை. பல் சீரமைப்பு நிபுணர்களும் பல் கட்டும் மருத்துவர்களும் சேர்ந்து அச்சிறுமியின் கூடுதல் பற்களை அகற்றினர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p36.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License