இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


4. நாக்கு நலம்

இந்தப் பகுதியில் வாய்க்குள் இருக்கும் துணை உறுப்புகளில் ஒன்றான நாக்கைப் பற்றிப் பார்க்கலாம்.

“நாக்கின் நலமே பற்களின் நலம்; பற்களின் நலமே நாக்கின் நலம்” என்று நாம் உறுதியாகச் சொல்ல முடியும்.

வாய்ப் பகுதியின் நடுவில் இருக்கும் நாக்குக்கு முப்பத்திரண்டு பற்கள்தான் பெரும் பாதுகாப்பு.

நாக்கு என்கிற வார்த்தையைக் கேட்டதும் உங்களின் காதுகளில் விஜய் ஆண்டனியின் பாடல் ஒன்று ஒலிக்கத் தொடங்கிவிடும்.

“மாடு செத்தா மனுஷன் தின்னான்
தோலை வச்சு மேளம் கட்டி
அர்ரார்ரா நாக்கமுக்க
நாக்க முக்க நாக்கமுக்க”

- என்று உங்கள் கால்கள் தொடர்ந்து நான்கு நிமிடங்கள் குத்தாட்டம் போட்டே நிற்கும்.

எங்கள் ஊர் பக்கம் ஒரு சொலவடை சொல்வார்கள். இஸ்லாமியப் பெருமக்களின் சொலவடை அது.

“வாயை மூடினால் ஸலாமத்து
வயிற்றைக் கட்டினால் ரஹ்மத்து”


பற்களுக்கான குறள்கள்
* பல்லிற்கும் உண்டு அடைக்கும் தாழ்
பற்சொத்தை பாதரசத்தால் அடைக்கப்படும்.

* பெற்றோர் மகற்காற்றும் நன்றி பல்நோய்கள்
இல்லா திருக்க பழக்கல்
- தேஜஸ் சுப்பு என்கிற கனலி

எடின்பரோ பல் மருத்துவப் பள்ளியின் பல் சீரமைப்பு மருத்துவப் பிரிவு ஆய்வு செய்து, ஆண்களுக்கு நாக்கின் நீளம் 3.3 அங்குலம் (அ) 8. 5 செமீ. என்றும், பெண்களுக்கு நாக்கின் நீளம் 3.1 அங்குலம் (அ) 7 9 செமீ. என்றும் அறிவித்தது.


ஆரோக்கியமான நாக்கு இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் காணப்படும். ஆனால், சிலருக்கு வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு, கறுப்பு, ஊதா, பழுப்பு, பச்சை, நீல நிறங்களில் என்று நாக்கின் நிறம் வேறுபடுகிறது.

பூஞ்சைத் தொற்று உள்ளவர்கள், நீரிழிவு நோய் (Diabetes Mellitus)பாதிப்பு உள்ளவர்கள், செயற்கைப் பல் (Denture) கட்டியவர்கள், இளைப்பு எனும் மூச்சுத் தடை நோய்க்கு (Asthma) ஊக்க மருந்து (Steroid) எடுத்துக் கொள்பவர்கள் என்று சிலருக்கு நாக்கு வெள்ளை நிறமாக இருக்கும்.

கிருமிகளின் அதீத வளர்ச்சியுடையவர்கள், புகையிலைப் பழக்கமுடையவர்கள், காளாஞ்சகப்படை (Psoriasis) மற்றும் மஞ்சள் காமாலை (Jaundice) பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு நாக்கு மஞ்சள் நிறமாக இருக்கும்.

போலிக் அமிலம் குறைபாடுடையவர்கள், உயிர்ச்சத்து (Vitamin) பி 12 குறைபாடு உடையவர்களுக்கு நாக்கின் நிறம் சிவப்பாக இருக்கும்.

மோசமான பல் பராமரிப்பு கொண்டவர்கள், நாள்தோறும் நுண்ணுயிர்க் கொல்லி மருந்து (Antibiotics) உட்கொள்பவர்கள், இருதய நோயுடையவர்கள் , வேதிச்சிகிச்சை (Chemotherapy) செய்து கொள்பவர்கள், செங்காய்ச்சல் (Scarlet Fever) கொண்டவர்களின் நாக்கு நிறம் கறுப்பு நிறமாக இருக்கும்.


ஒரு நாக்கின் உள்ளும் புறமும் ஆராய்ந்தால் வாய்ப் புற்றுநோயை கண்டுபிடித்து விடலாம்.

ஆரோக்கியமான நாக்கு ஒருவருக்கு இருப்பது போல, அடுத்தவருக்கு அமையாது. வெவ்வேறு தோற்றங்களுடன் ஆரோக்கியமான நாக்குகள், வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.

நோயுற்றவர்களின் நாக்கை நிறத்தைக் கண்டறிந்து, கீழ்க்கண்ட மருத்துவத்தால் நோயைச் சரி செய்து, நாக்கின் நிறத்தை மீட்டெடுக்கலாம்.

* செங்காய்ச்சலுக்கு அதிக சக்தி வாய்ந்த நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளை உட்கொள்ளச் செய்யலாம்.

* பூஞ்சைத் தொற்றுக்கு பூஞ்சைக்கு எதிரான மருந்துகளைக் கொடுக்கலாம்.

* உணவுக்கு பின் விழுங்க உயிர்ச்சத்து பி 12 மாத்திரைகள் தரலாம்.

* போலிக் அமில மாத்திரைகள் தரலாம்.

* நிணநீர் கணு நோய்க் குறிக்கு ஒவ்வாமை எதிர்ப்பு மாத்திரைகளைத் தரலாம்.

உணவை நக்குதல், சுவை பார்த்தல், விழுங்குதல், மூச்சு விடுதல், பேசுதல் என்று நாக்கின் தினசரி வேலைகளைச் சொல்லலாம்.

பெண் கருவுற்ற காலத்தில், நான்காவது மாதக் கருவிலேயே நாக்கு உருவாகி விடுகிறது. நாக்கில் எலும்புகள் இல்லை, நாக்கு தசைகளால் ஆனது. நாக்கைச் சுற்றிச் சளிச்சவ்வு படர்ந்துள்ளது. தவிர, நாக்கு பலவகை காம்புக் குமிழ்களாலும், சுவை அரும்புகளாலும் நிரப்பப்பட்டவை. நாக்கு அடுக்கமைவு செதில் போர்வை மேலணியால் செய்யப்பட்டது. நாக்கு ஒரு செரிமான உறுப்பு. நடுக்கழுத்தின் உவையுரு நாவெலும்பில் நாக்கு ஆரம்பித்து வாயின் முன் உள்பகுதி வரை நீண்டிருக்கிறது.


நாக்கின் உள்ளுறுப்புகள் எனும் போது,

1. குடை அரும்புகள் (Filiform Papillae) - நாக்கின் முன் பகுதி. மூன்றில் இரண்டு பங்கு நாக்கில் இவை நிரம்பியுள்ளன. மெலிதான நூல் வடிவம் கொண்டது.

2. காளான் வடிவ முகிழ்ப்புகள் (Fungiform Papillae) - நாக்கின் பக்கவாட்டிலும் ஓரத்திலும் இவ்வகை நுண்காம்புகள் இருக்கின்றன. இதில் 1600 சுவை அரும்புகள் இருக்கின்றன.

3. அகழியறும்புகள் (Circumvallate Papillae) - பின் நாக்கில் சிறுபுடைப்புகளாய் இருக்கின்றன. இவற்றில் 250 சுவை அரும்புகள் இருக்கின்றன.

4. இலை போன்ற மெல்லிய தாள்கள் (Foliate) - பின் நாக்கின் இரண்டு பக்கமும் கடின மடிப்புகளாய் இவை இருக்கின்றன. இருபது இலை போன்ற மெல்லியதாள்கள் இதில் அடங்கியுள்ளன. பல்வகை சுவை அரும்புகள் இங்கே நிரம்பியுள்ளன. உண்ணும் உணவின் சுவையை சுவை அரும்புகளின் நரம்பணுப் பின்னல்கள், மூளைக்குப் புலன் சார்ந்த செய்திகளை அனுப்புகின்றன.

நாக்கின் அனைத்துப் பகுதிகளும் உணவின் அனைத்துச் சுவைகளையும் உணரும் தன்மையுடையன. நாக்கானது பொதுவாக, இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, எரிப்பு என்று ஐந்து வகையான சுவைகளையும், அதனுள் அடங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான துணைச் சுவைகளையும் கண்டறியும் திறன் பெற்றது.

முக அழகு கேள்வி பதில்
சு. மணிமாலா:

பல் மருத்துவம் பற்றியும் சில மூட நம்பிக்கைகள் இருக்கின்றதே...?
மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

* சமணர்கள் பல் பிடுங்கும் போது மயக்க மருந்து ஊசி போட்டுக் கொள்வதில்லை.

* உயர் வகுப்பு மக்கள், தாழ்ந்த வகுப்பு மருத்துவரிடம் மருத்துவம் பார்ப்பதில்லை.

* விழுந்தப் பல்லைப் பெற்றோரோ, சிறுவர்களோ எடுத்து, கல்லுக்கு அடியிலோ வீட்டுக் கூரைக்கு மேல், எலி வளைக்குள் பாதுகாக்கின்றனர். அப்படிப் பாதுகாத்தால் மீண்டும் முளைக்கும் பல் எலிப் பல் போன்று படு உறுதியாக இருக்கும்.

* பிறக்கும் போதே குழந்தைக்குப் பல் இருந்தால், அது குழந்தையின் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து என நம்புகின்றனர்.

- இப்படி ஆயிரம் மூட நம்பிக்கைகள் இந்தியச் சமூகங்களில் உலவுகின்றன. அவற்றையெல்லாம் புறந்தள்ளி அறிவியல் வழியிலான நம்பிக்கைகளை மட்டும் நம் மனதில் கொள்வது நல்லது.



உலகத்திலேயே நீளமான நாக்கு யாருக்கு இருக்கிறது?

அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டோபெரி (Nick Stoberi) என்பவருக்கு 3.97 அங்குலம் அல்லது 10.1 செமீ நீளமுள்ள நாக்கு இருக்கிறது. இவரது நீளமான நாக்கு கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

இவர் நாக்கால் ஓவியம் வரைவார். ஓவியமேதை பிக்காஸோ பெயரைச் சிறிது மாற்றி, இவரைக் கேலியாக, லிக்காஸோ (நக்கிப் படம் வரைபவர்) என்று பட்டப் பெயர் வைத்திருக்கிறார்கள்.

மனிதர்களுக்கு மட்டும்தான் நாக்கு இருக்கிறதா? மற்ற உயிரினங்களுக்கு நாக்கு இல்லையா? என்று கேட்கலாம்.

விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட மற்ற உயிரினங்களின் நாக்கைப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்க்கலாம்...!

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p4.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License