இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


41. முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை

மனித உடலின் மேற்பகுதியில் ஏற்படும் சில குறைபாடுகளை அறுவைச் சிகிச்சையின் வழியாகச் சரி செய்து கொள்ளூம் சிறப்புச் சீரமைப்பு அறுவை மருத்துவர் (Plastic Surgeon) போன்று, பல் மருத்துவத்தில் தாடை அறுவைச் சிகிச்சை, உதடுப் பிளவு சீரமைப்பு போன்றவைச் சரி செய்து கொள்வதற்கும், புற்றுநோய், விபத்து மற்றும் பிறவியிலேயே ஏற்பட்ட முகக்குறைபாடுகளைச் சரி செய்து கொள்வதற்கும் முகத்தை மறுசீரமைப்பு செய்யும் அறுவைச் சிகிச்சை (Maxillo Facial Surgery) மருத்துவர்களாக, மிகவும் அனுபவம் வாய்ந்த பல் மருத்துவர்கள் இருக்கின்றனர். முகம், தாடை, கழுத்து அல்லது வாயில் தோன்றும் நோய்கள் மற்றும் காயங்களுக்கான சிகிச்சையினையும் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர்களான பல் மருத்துவர்கள் செய்கின்றனர்.

முகக்காயங்கள், தாடைகளின் ஒழுங்கீனம், புற்றுநோய் கட்டிகள், நீர்க் கட்டிகள், வாய்ப் புற்றுநோய், தாடை மூட்டு மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலி மற்றும் செயலிழப்பு (தற்காலிக மண்டை மூட்டுக் கோளாறு) போன்றவைகளும், விபத்தில் சிதைந்த முகத்தைச் சீரமைத்தல், உதட்டுப் பிளவைச் சரி செய்தல், உதடு பழுது, செயற்கைப் பல் பொருத்துதல், தாடை அறுவைச் சிகிச்சை, முக அழகு மேம்படுத்துதல் போன்றவைகளும் முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை எனப்படுகிறது.

முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்கு, விபத்துகள் மற்றும் முக எலும்புகளின் முறிவு மற்றும் காயங்களின் கிழிசல்களை பழுதுபார்த்தல், உதடு மற்றும் மேலண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாடுகளை களைதல், புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி அப்பகுதியைப் புனரமைத்தல், தாடை இணைப்புகளின் வலி நீக்கி முழுமையாக இயங்கச் செய்தல் (Temporo Mandibular Joint Cure), மேல்தாடை கீழ்தாடை முன் நின்றோ பின் தங்கியோ இருப்பதை நேர் செய்தல், தூக்கத்தில் மூச்சுத் திணறலை (Sleep Apnea) சரி செய்தல், பல் எலும்பு ஒட்டுதல் (Dental Bone Grafting), தாடை அறுவைச் சிகிச்சை, செயற்கைத் தாடை பொருத்துதல், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மேல் தாடையை அகற்றுதல் (Maxillectomy), தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், தாடைகள் துருத்துதல், நீண்ட நாள் முக வலி போன்றவை பொதுவான காரணங்களாக இருக்கின்றன.

இவை தவிர, இரண்டு சக்கர, நான்கு சக்கரச் சாலை விபத்துகள், பிறருடன் சண்டை மற்றும் கைகலப்பு, திருவிழா போன்ற கூட்டங்களில் சிக்குதல், தீபாவளி போன்ற பண்டிகைகளில் அபாயகரமாக வெடி வெடித்தல், பற்களால் கண்ட பொருட்களை திறத்தல், கால்பந்து, ரக்பி போன்ற ஆட்டங்களில் காயங்கள், வளர்ப்பு மிருகங்களுடன் விளையாடி முகக்காயப்படுதல், குளியலறை, கழிவறையில் வழுக்கி விழுதல், சட்ட விரோதமாக வெடி மருந்து தயாரித்து விபத்தில் சிக்குதல், தொடருந்து மற்றும் பேருந்துகளில் படிக்கட்டுப் பயணம் போன்றவைகளால் முகத்தில் ஏற்படும் பாதிப்புகளை முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையின் மூலம் சரி செய்திட முடியும்.

குறியீட்டு வரிசை
“சிரிப்பு ஒரு கோப்பின் பெயர்
பற்கள் அதன் வெண்மை
படவணுக்கள்
உண்மை பழைய பதிப்பு
புதியமுகம் வணிகமயமான
வடிவம்
மனிதன் மென்பொருளின்
சிரிப்பு மாதிரி
நிழலில் மட்டுமே தெரியும்
அவனின் உண்மை”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.


முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்யும் பல் மருத்துவர்கள் மருத்துவத்திலும், பல் மருத்துவத்திலும் இரட்டைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Doctor of Dental surgery (DDS) அல்லது Doctor of Dental Medicine (DMD) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Oral and maxillofacial surgery (OMFS) படித்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், சிகிச்சைக்கு முன்பாக, புற்றுநோயியல் வல்லுநர்கள், நரம்பியல் வல்லுநர்கள், சிறப்புச் சீரமைப்பு அறுவை மருத்துவர்களைக் கலந்தாலோசித்திட வேண்டும்.

முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள், முகச் சீரமைப்பு செய்யும் நோயாளிகளிடம் பின் வரும் வழிமுறைகளைப் பற்றித் தெளிவாக விளக்கிட வேண்டும்.

* நோயாளியை முழுமையாகப் பரிசோதித்த பின், நோய் தீர்மானம் மற்றும் சிகிச்சை குறித்து முறையான சிகிச்சைத் திட்டம் தயாரிக்க வேண்டும்.

* அறுவைச் சிகிச்சைக்கு முன்பாகத் தேவையான இரத்தப் பரிசோதனை, பல் மருத்துவ எக்ஸ்ரே, இருதயத்துடிப்பு வரைவி போன்றவைகளைச் செய்திடல் வேண்டும்.

* நோயாளிக்கு நீண்டகால நோய்த் தொற்றுகள் ஏதாவது இருந்தால், அது குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். நோயாளி தொடர்பான கூடுதல் தகவல்களை இருதய நோய் வல்லுநர் அல்லது நோயாளியின் குடும்ப மருத்துவரைக் கலந்தாலோசித்திட வேண்டும்.

இவை தவிர, முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்வதற்கு முன் கீழ்க்கண்ட வழிமுறைகளை பல் மருத்துவ வல்லுநர் பின்பற்றிட வேண்டும்.

* நோயாளியின் குடும்ப நண்பர், பாதுகாவலர் அல்லது பெற்றோர் அல்லது உடன் பிறந்தோர் அல்லது கணவன் மனைவி மருத்துவமனைக்கு அழைத்து வரச் செய்தல் வேண்டும்.

* அறுவைச் சிகிச்சையின் போது, மருத்துவர் பொதுவான மயக்க மருந்து கொடுத்து நோயாளியை அறுவை சிகிச்சை முடியும் வரை மயக்க நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.


* நோயாளி மயக்கத்தில் இருக்கும் போது, பல் மருத்துவ வல்லுநர் தேவைப்படும் இடத்தில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கீறல்களை இடக்கூடும்.

* அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுநர், அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான கிருமி நீக்கம் செய்யப்பட்ட சிறிய சிறப்புக் கருவிகளைப் பயன்படுத்திட வேண்டும்.

* அறுவைச் சிகிச்சை செய்யும் வல்லுநர், அறுவைச் சிகிச்சைக்குப் பின்பு, கீறல்களுக்குத் தையலிட்டு அதனை மூடி, பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்.

* முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையினைச் செய்து கொள்பவருக்கு இரத்தப் போக்கு (bleeding), முக நரம்புகள் சேதம், நோய்த் தொற்று, சிறு தீற்றல்கள் (brushing), உலர் சாக்கெட் (இரத்த உறைவு தோன்றாமை) , வீக்கம் (Swelling),வாய் மற்றும் முகம் மரத்துப் போதல், பல் வேரின் சிறுபகுதி சாக்கட்டில் தங்குதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படலாம் என்றும், அறுவைச் சிகிச்சை முடிவுற்ற தகவல், அறுவைச் சிகிச்சைக்குப் பின், அதிலிருந்து முழுமையாகக் குணமாகத் தேவையான நாட்கள், பின்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகளை அறுவைச் சிகிச்சை வல்லுநர்கள் விளக்கிட வேண்டும்.

பல் கொட்டும் கனவுகள்

பரந்தாமன், வேலூர்.

முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கு அதிகப் பணம் செலவாகும் என்கிறார்கள், உண்மையா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குத் தற்போதைய நிலையில், அவர்களுடைய சிகிச்சைக்கேற்ப 50 ஆயிரம் ரூபாயிலிருந்து 30 இலட்சம் ரூபாய் வரை செலவாகும். மேல் தாடை அல்லது கீழ்தாடை அறுவை சிகிச்சையாக இருப்பின், ரூபாய் 1.50 இலட்சம் முதல் 3 இலட்சம் வரை செலவாகிறது. இதே போன்று, இரண்டு தாடைகளுக்கான அறுவைச் சிகிச்சைக்கு 7 இலட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அறுவைச் சிகிச்சை முறை, செயற்ப்கை பல் அல்லது தாடை பொருத்துதல், பொருத்தமான மயக்க மருந்து பயன்படுத்துதல், மருத்துவமனையில் தங்கல், அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தையக் கவனிப்பு போன்றவை மேலும் செலவை அதிகரிக்கும். சில வகை முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குக் காப்பீடுகள் இருக்கின்றன. இதனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். பல்வேறு வசதிகள் கொண்ட மிகப்பெரிய மருத்துவமனைகளில் இச்செலவுத் தொகை அதிகமாக இருக்கும்.



மேலும், முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் போது,

* துருத்திய தாடைகளும் துருத்திய பற்களும் முகவலி, தலைவலி மற்றும் பல் வலியைப் பரிசளிக்கும். முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை மூலம் இந்த வலிகளை முழுமையாக நீக்கலாம்.

* முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின் கடித்தல், மெல்லுதல், பேசுதல் போன்ற செயல்பாடுகள் மேன்மையடையும்.

* முகத்தில் அல்லது வாயில் ஏற்பட்ட நோய்த் தொற்றை அல்லது பழுதைக் களைய, முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை தேவையாக இருக்கும்.

* முக மறுசீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்வதன் மூலம், பல் வரிசை நேராக ஒழுங்குபடுத்தப்படுவதுடன் முகத்தின் அழகு மேம்படும்.

என்பதையும் விளக்கி முகச் சீரமைப்பு அறுவைச் சிகிச்சையினை நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்களின் பயத்தை முற்றிலுமாகப் போக்கிட வேண்டும்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p41.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License