இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


42. குழந்தைப் பல் மருத்துவம்

குழந்தைப் பருவம் முதல் பதின்ம வயது வரையிலான குழந்தைகளின் வாய்வழி ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பல் மருத்துவத்தின் ஒரு சிறப்புப் பிரிவே, ‘குழந்தைப் பல் மருத்துவம்’ எனப்படும்.

குழந்தைகளின் சொத்தைப் பற்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்தல், பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் சரியான விதத்தில் முளைப்பதை உறுதி செய்தல் குழந்தைப் பல் மருத்துவரின் முக்கியப் பணியாகும். குழந்தை உளவியல், வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய அக்கறை குழந்தைப் பல் மருத்துவருக்கு இருக்க வேண்டும்.


குழந்தைகள் பல் மருத்துவத்தின் தந்தை என்று ராபர்ட் புனான் என்பவர் அழைக்கப்படுகிறார். 1816 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கான பல் மருத்துவமனையைத் திறந்த ராபர்ட் புனான் ஒரு பிரெஞ்ச் பல் மருத்துவர். அவர் குழந்தைகள் பல் மருத்துவத்திற்குத் தேவையான சிறிய, கச்சிதமான, நுணுக்கமான பல் மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடித்தார். அவர் இளம் வயது பல் பராமரிப்பையும், பல் நோய் ஆரம்பத் தடுப்புகளையும் வலியுறுத்தினார். 1823 ஆம் ஆண்டு ராபர்ட் புனான் ‘மேனுவல் டி ஓடன்டல்ஜி’ (Manual d’ Odontalgie) எனும் குழந்தைகள் பல் மருத்துவப் புத்தகத்தை வெளியிட்டார்.

ராபர்ட் புனான்தான் முதல் முதலில் குழந்தைகளுக்கான பல் தூரிகைகளையும், பற்பசைகளையும் வடிவமைத்தார். புனான் பால்பற்கள் தானாக விழும் வரை அவற்றைப் பாதுகாக்க திட்டவறை தயாரித்தார். குழந்தைகளுக்குப் பேசத் தொடங்கியவுடனே பல் நலத்தைப் பாதுகாக்கச் சொல்லிக் கொடுக்க வேண்டுமென வற்புறுத்தினார் புனான்.


குழந்தைகள் பல் மருத்துவத்தின் தந்தை என இவரை அழைப்பது போன்று, குழந்தைகள் பல் மருத்துவத்துன் தாய் என்று கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த பல் மருத்துவ உதவியாளர் மின்னி இவான்ஜலின் ஜோர்டான் என்பவர் அழைக்கப்படுகிறார். இவர், உலகில் முதன்முறையாக லாஸ் ஏஞ்சல்ஸில் குழந்தைகளுக்கான பல் மருத்துவமனையைத் திறந்தார். ஜோர்டான் குழந்தைகள் பல் தொடர்புடையப் பிரச்சனைகளை ஆய்வு செய்யவும், தகுந்த சிகிச்சை வழங்கவும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தார்.

பல் மருத்துவத்தில் விதி ஏழு என சில மருத்துவ விழுமியங்கள் பிரித்துச் சொல்லப்படுகின்றன. ஒரு குழந்தை ஆணோ, பெண்ணோ அதன் ஏழாவது வயதில் முதல் பல் சீரமைப்பு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். அது பல் ஆரோக்கியத்துக்கான தூர அளவுகள் பற்றிய நினைவூட்டலாய் அமையும். குழந்தைகளுக்கு நிரந்தரப் பற்களும், கடைவாய்ப் பற்களும் முளைக்கும் தருணமே பல் சீரமைப்பு மதிப்பீடுக்கு உகந்த நேரம்.

அந்த வேளையில்தான் குழந்தைகள் பல் மருத்துவர், குழந்தைகளின் வாயைப் பரிசோதித்து ஒழுங்கற்ற விதத்தில் பற்கள் கூட்டமாய் முளைப்பது பற்றியும், கடிப்பது பற்றியும் கண்டறிவார். குழந்தைகளது ஏழு வயதில்தான் பால் பற்களை இழக்கத் தொடங்கியிருப்பர்.

பிரதிபலிப்பு
“நீ சிரிக்கவில்லை
கண்ணாடி சிரித்தது
பற்களின் ஒழுங்கு சமூகத்தின்
வரைபடம்
ஒளி தட்டியபொழுது உணர்வு
படியும்
அது ஒரு புகைப்படம் அல்ல
உணர்ச்சியின் உறைந்த ஒலி”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.


* அமெரிக்கப் பல் சீரமைப்புக் கூட்டமைப்பு, ஒரு குழந்தையின் முதல் பல் சீரமைப்பு மதிப்பீட்டை ஒரு குழந்தையின் ஏழாவது வயதில் செய்வது மேலானது என்கிறது.

* ஒரு குழந்தையின் ஏழாவது வயது பற்கள் விஷயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வயதில்தான் குழந்தைகளுக்கு கடைவாய்ப்பற்கள் முளைக்கின்றன, சில பால்பற்கள் விழுகின்றன. சில நிரந்தரப் பற்கள் எழுகின்றன.

* குழந்தையின் ஏழு வயதில்தான் பல் மருத்துவர்கள் கீழ்க்கண்ட பல் பிரச்சனைகளை இனம் கண்டு கொள்கின்றனர்.

* நிரந்தரப் பற்கள் வளர தாடையில் போதுமான இடம் இல்லாததால் பற்கள் நெரிசலாய் முளைக்கின்றன. இதனை ஆங்கிலத்தில், Teeth Crowding என்கின்றனர்.

* மேற்பற்கள் கீழ்பற்களை அதிகமாக மறைப்பது. இதனை ஆங்கிலத்தில், Overbite என்கின்றனர்.

* தாடைச் சீரமைப்பில் உள்ள குறைபாடு அல்லது கீழ்ப்பல் முந்தி இருப்பது. இதனை ஆங்கிலத்தில், Under Bite or Class III Malocclusion என்கின்றனர்.

* பல் வளைவுகளின் பக்கவாட்டு தவறான சீரமைப்பு. இதனை ஆங்கிலத்தில் cross bite என்கின்றனர்.

குழந்தைப் பருவத்திலேயே பல் பிரச்சனைகளைக் கண்டுபிடித்து, தகுந்த சிகிச்சை அளிக்கும் நிலையில் அந்தப் பல் பிரச்சனை தொடக்கத்திலேயே தவிர்க்கப்படும்.

பிற பல் நலத்திற்கான விதிகள் 7 நிலைகள் எனப்படுகிறது. அதாவது,

* குழந்தையின் ஏழாவது மாதத்தில்தான் முதல் பல் முளைக்கும் என்பதால், ஏழு மாதக் குழந்தையின் வாய்க்குள் விரலை விட்டு விளையாடக் கூடாது.

* ஏழாவது மாதத்தில் ஒரு குழந்தைக்கு ஒரு பல் இருக்கும். 11 வது மாதத்தில் அதே குழந்தைக்கு நான்கு பற்கள் முளைத்திருக்கும். இதனை, குழந்தைப் பற்களின் 7+4 விதிகள் எனப்படுகின்றன.

* உண்ணும் உணவில் இருந்து அமிலம் உற்பத்தியாகி பல் மேற்பூச்சைச் சேதப்படுத்த வெறும் ஏழு நிமிடங்கள் போதும்.

*குழந்தைக்கு பிஹெச் அளவு 7 என்றிருக்க வேண்டும். வாயின் பிஹெச் அளவு ஏழுக்குக் கீழிறங்கினால் வாய்க்குள் அமிலம் உருவாகி, பற்சொத்தையை உருவாக்கும்.

* ஒரு குழந்தைக்கு ஏழு வயதாகும் போது, அந்தக் குழந்தையின் 20 பால் பற்கள் விழுந்திருக்க வேண்டும்.

குழந்தையின் ஏழு வயது ஒரு கட்டாயக் கால அளவு. இந்தக் காலக்கட்டத்தில் பால் பற்களிலிருந்து நிரந்தரப் பற்களுக்கு நிலை மாற்றமடைதல் நிகழ்கிறது.

பல் கொட்டும் கனவுகள்

டி. அருள்மொழிவர்மன், அரக்கோணம்.

ஆண் மருத்துவர்களை விட, பெண் மருத்துவர்களே குழந்தைகளுக்கான பல் மருத்துவத்துக்குச் சரியானவர்கள் என்கிறார்களே...?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

குழந்தைகளைப் பராமரிப்பதில் பெண்கள் எப்படி சிறப்புடையவர்களோ, அப்படியே பொது மருத்துவத்திலும், குழந்தை மருத்துவத்திலும் பெண் மருத்துவர்களே சிறப்பானவர்கள் எனலாம். குழந்தையின் விளையாட்டுக்கும், அதன் போக்குகளுக்கும் உடன்பட்டு, அவர்கள் அச்சப்படாமல் சிகிச்சையளிக்கப் பெண் மருத்துவர்களே சரியானவர்களாக இருக்கின்றனர். ஆண் மருத்துவர்களில் சிலர் குழந்தைகளுடன் நன்றாகப் பழகி, சிகிச்சையளிப்பவர்களும் இருக்கிறார்கள். பொதுவாக, பல் மருத்துவத்தில் பல் மருத்துவர்கள் பொறுமையுடன் செயல்படுபவது அவசியம்.



குழந்தைகளுக்கு ஏழு வயதாகும் போது, குழந்தைப் பல் மருத்துவரிடம் அழைத்துச் சென்று, குழந்தைகள் பல் மருத்துவமனையில் இடம் பெற்றிருக்கும் குழந்தைப் பல் நலத்திற்கான படங்களைக் காண்பித்து விளக்க வேண்டும். அதன் பின்னர், குழந்தைப் பல் மருத்துவரைச் சந்தித்து, குழந்தைகளுக்கான பல் மற்றும் வாய் குறித்து முழுமையான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். குழந்தைப் பல் மருத்துவர் குழந்தைகளுக்கு பற்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பார். அத்துடன், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குழந்தைக்கும் பெற்றோருக்கும் பரிந்துரைப்பார்.

வழக்கமான பல் பரிசோதனைகள் மூலம் பற்குழி, ஈறு நோய், ஒழுங்கீனப் பற்கள் பிரச்சனைகளை கண்டறியலாம். பல் பிரச்சனைகளை முன் கூட்டியே சரி செய்து கொண்டால் பெரும் பிரச்சனை வராமல் தடுத்துக் கொள்ளலாம். தொடக்கத்தில் ஒரு பற்குழியை நிரப்பினால் பின்னாளில் அப்பிரச்சனை மேலும் பெரிதாகாமல் தடுக்கலாம்.

உரியமுறையில் பல் துலக்கும் விதங்கள், பல் தழுவும் முறைகள் (flossing) போன்ற குழந்தைப் பல் பராமரிப்பு குறித்துக் கற்றுத் தரலாம். இளம் பருவத்தில் பல் நலத்தைப் பராமரிக்கச் சொல்லிக் கொடுத்தால், அது முதுமை வரை தொடர்ந்து இருக்கும்.

குழந்தைகளின் பல் ஆரோக்கியம் பற்றி பெற்றோர் அதிகம் கவலைப்படுவதுண்டு. குழந்தை கை சூப்பியாக இருப்பதையும் அல்லது அழும் குழந்தையைச் சமாதானப்படுத்த தணிப்பி எனப்படும் ரப்பர் நிப்பிளை பயன்படுத்துவதின் சாதகபாதங்களையும் அலசுவதாய் இருக்கும்.

முன்னதாக நேர்மறை பல் மருத்துவ அனுபவங்கள் குழந்தையின் பல் நலத்தை அதிகரித்து பதட்டத்தைக் குறைக்கும்.

உலக அதிசயங்களில் மட்டுமில்லை, குழந்தைகள் பல் மருத்துவத்திலும் 7 என்பது வியக்க வைக்கக்கூடியதாகவே இருக்கிறது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p42.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License