இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


43. பல் மருத்துவ நோயாளிகளின் உரிமைகள்

மனிதர்களுக்கு வரும் நோய்களைக் கண்டறிந்து, அதற்குச் சரியான சிகிச்சையளித்து, அதன் மூலம் நோயாளிகளைக் குணமடையச் செய்து, அவர்களது துன்பத்தைப் போக்குபவர்களாக மருத்துவர்கள் இருப்பதால், மருத்துவர்களைக் கடவுளாகக் கருதுகின்றனர். இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதுமே இந்நிலை இருக்கிறது.

நோய்களும் நோயாளிகளும் இருப்பதால்தான் மருத்துவர்களின் தேவையும் இருக்கிறது. மருத்துவம் ஒரு சேவையாக இருக்கிறது. ஆனால், உயிர்காக்கும் சில மருத்துவங்களில் சிறப்பு பெற்ற மருத்துவர்கள் (நிறுவனங்கள்), அம்மருத்துவத்தை வணிகமாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், பல் மருத்துவத்தில் பெரிதாக அப்படியொரு நிலை இல்லை.

இவ்வேளையில், பல் நோயாளிகளுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பார்ப்போம்.

* நோயாளி ஆண் - பெண், சிறுவர் - சிறுமியர், ஏழை -பணக்காரர் என்று எந்தப் பாகுபாடுமின்றி, நோயாளிகள் அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்.

* நோய்களுக்கு சிகிச்சை தருவதில் எவ்வித வேறுபாடுகளுமின்றி கவனம் செலுத்த வேண்டும்.

* நோய் கண்டறிதல், சிகிச்சை முறை தெரிவுகள், சிகிச்சைக்கான கட்டணம், அபாய நேர்வு பற்றி முழு தகவல்களையும் ஒளிவு மறைவில்லாமல் நோயாளிகளுக்குத் தெரிவித்தல் வேண்டும்.

* தேவைப்பட்டால் அவசர சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

* பல் மருத்துவரின் குறிப்பிட்ட வகை சிகிச்சையை வலி, பின் விளைவு, கட்டணம் கருதி மறுக்க பல் மருத்துவ நோயாளிகளுக்கு உரிமை இருக்கிறது.

* உயர்தர நெறிமுறை பராமரிப்பு.

* பாதுகாப்பான சூழல்.

-என்று நோயாளிகள் பல் மருத்துவரிடம் தங்களது உரிமைகளைக் கேட்டுப் பெற்றிடலாம்.

இதே போன்று, பல் மருத்துவ நோயாளிகளின் பாதுகாப்பு பற்றிய சில கருத்துகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அவை;

அகழாய்வு
“புன்னகை காலத்தின்
பாறையில் புதைந்த
கலைச்சின்னம்
பற்கள் கல்லாக மாறிய
மௌனங்கள்
ஒரு மொழி அழிந்து போனது.
அதில் அன்பு என்ற சொல்
நிழலாக மீந்தது
நாம் தோண்டுவது வரலாறு
அல்ல
மீண்டும் வடிவம் பெற்ற ஒரு
சிறு காலத்தை”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.


மரியாதை மற்றும் கண்ணியம்

* மரியாதை, கண்ணியம், மனித நேயத்துடன் கூடிய இனம், மொழி, பால், மத பாகுபாடுகள் அற்ற சிகிச்சையும் கவனிப்பும் இருக்க வேண்டும்.

தகவல்

* நோய் கண்டறிதல், முன்கணிப்பு, சிகிச்சைத் திட்டம், ஆபத்துகள், மாற்றுச் சிகிச்சை முறைகள், வசதிகள், சிகிச்சையை செய்து கொள்ளாவிடில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி முழுமையான தகவல்களை பல் மருத்துவர்கள் நோயாளிக்குத் தகுந்த நேரத்தில் தெரிவிக்க வேண்டும்.

தகவலறிந்த ஒப்புதல்

* முழு விவரங்களை கேட்டறிந்த பின் சிகிச்சைக்கு ஒப்புக் கொள்வது அல்லது மறுப்பது. சிகிச்சை தொடர்பான கேள்விகளைக் கேட்டுத் தகுந்தப் பதில்களைப் பெறுவது.

தனி உரிமை மற்றும் இரகசியத்தன்மை

* ஒரு பிரபல நடிகர் அல்லது தொழிலதிபர் அல்லது முக்கியமானவர்கள், ஏன் எந்தவொரு நோயாளியின் பல் சிகிச்சை குறித்தத் தகவல்களையும் வெளிப்படுத்திவிடாமல் ரகசியமாக வைத்துக் கொள்வது அவசியம்.

* நோயாளியின் சிகிச்சை விவரங்கள் நோயாளியின் அனுமதியின்றி சமூக ஊடகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஊடகங்களிலும் வெளியிடக் கூடாது.

அமெரிக்காவின் ஆரோக்கியக் காப்பீடு பெயர்வுத் திறன் மற்றும் பொறுப்புக் கூறல் சட்டம் 1996 நோயாளிகளின் அந்தரங்கத்தை பாதுகாக்கிறது. இந்தச் சட்டத்தை ஆங்கிலத்தில் Health Insurance Portability and Accountablity Act 1996 என்பர். இதனைச் சுருக்கமாக, HIPAA என்கின்றனர்.


நோயாளியின் பங்களிப்பு

* பல் மருத்துவரின் முடிவுகளில் கலந்து சம்மதித்தல்

தெரிவு

தனது பல் மருத்துவ பிரச்சனைக்குச் சிகிச்சையளிக்கும் பல் மருத்துவரைத் தேர்ந்தெடுத்தல். தேர்ந்தெடுத்த மருத்துவரிடம் அவரின் ஆலோசனை நேரத்தை முன் பதிவு செய்தல்.

மருத்துவ ஆவணங்கள் அணுகும் உரிமை

* பல் மருத்துவப் பிரச்சனைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களைப் பார்வையிடும் உரிமை.

பாதுகாப்பு

பாதுகாப்பான, ஆரோக்கியமான, நோய்த் தொற்றை உரிய முறையில் தடுக்கக்கூடிய சூழலில் மருத்துவம் பெறும் உரிமை.

அவசர மருத்துவக் கவனிப்பு

அவசரப் பல் மருத்துவச் சிகிச்சைகளுக்கான வாய்ப்பு.

வெளிப்படைத்தன்மை

பல் மருத்துவச் சிகிச்சையில், சிகிச்சை முறைகளில், சிகிச்சைக் கட்டணங்களில் வெளிப்படைத் தன்மை மிக முக்கியம்.


பல் மருத்துவரின் பொறுப்புகள்

* துல்லியமான மருத்துவத் தகவல்களை நோயாளிகளுக்குத் தெரிவித்தல்.

* உடன் செயல்படும் மருத்துவர்களுக்கும், துணை மருத்துவ உதவியாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் மரியாதை தருதல்.

* அளிக்கும் சிகிச்சையின் நிவாரணம் எந்த அளவில் இருக்கும் என நோயாளியிடம் தெரிவித்தல்.

* சிகிச்சை கட்டணம் மற்றும் நிதிக் கொள்கைகள் பற்றி நோயாளிக்கு அறிவித்தல்.

தரமான பல் மருத்துவ சிகிச்சைக்கான அடிப்படைகள்

* குறித்த நேரத்தில் பாதுகாப்பான நெறிமுறை சிகிச்சை அளிக்கும் பல் மருத்துவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை.

* சிகிச்சையளிக்கும் பல் மருத்துவரின் கல்வித்தகுதி மற்றும் அனுபவத்தை தெரிந்து கொள்ளல்.

* தனது பல் நோய் மற்றும் சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பார்வையிடுதல்.

* அவசர மருத்துவச் சிகிச்சைக்கான வசதிகள்.

* ஒரு பல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின் நோயாளி விரும்பினால் இன்னொரு பல் மருத்துவரிடம் இரண்டாவது கருத்துகளையும் கேட்டுப் பெறலாம்.

* ஒரு பல் மருத்துவரின் சிகிச்சையில் அதிருப்தி அல்லது மருத்துவக் குறைபாடு இருந்தால் நோயாளிக்குப் புகார் செய்யும் உரிமை உண்டு.

* நோயாளிகள் அனுமதியின்றி நோயாளியை மருத்துவ ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தக் கூடாது.

* நோயாளி பேசும் மொழி தெரியாத மருத்துவர் மொழி பெயர்ப்பாளர் வைத்து நோயாளியுடன் பேசலாம்.

* காது கேளாத, வாய் பேசாத நோயாளிக்கு சமிக்ஞை மொழியில் பேசக்கூடிய மொழி பெயர்ப்பாளர் அமர்த்தலாம்.

நோயாளி மொழி பெயர்ப்பாளர் சேவைக்கு தனி கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இம்மொழிபெயர்ப்புகள் மூன்று வகைப்படும்.

1. ஒரே நேர மொழிபெயர்ப்பு

2. தொடர்ச்சியான மொழிபெயர்ப்பு

3. நேரடி பார்வை மொழிபெயர்ப்பு

பல் கொட்டும் கனவுகள்

ஆ. சுந்தரேசன், கிருஷ்ணகிரி.

பல் மருத்துவம் சேவையா அல்லது தொழிலா அல்லது வணிக நிறுவனங்களில் ஒன்றா...?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

பல் மருத்துவத்தில் சேவை 50 சதவீதமாகவும், தொழில் 50 சதவீதமாகவும் கொள்ளலாம். சேவை மனப்பான்மை, சகிப்புத் தன்மை, தொழில்நுட்பத்தை மேம்படுத்தல், பொதுமக்களிடம் சிறப்பான தகவல் தொடர்பு இல்லாமல் ஒரு பல் மருத்துவர் வெற்றி பெற முடியாது. உலகில் சேவை என்று குறிப்பிடப்பட்ட பல தொழில்கள் வணிகமயமாகிவிட்டன. பல் மருத்துவமும் சில பெரிய நகரங்களில் வணிகமயமாகச் செயல்படுகின்றன. பல இடங்களில் பல் மருத்துவர்கள், சிறிய அளவில் சேவையாகச் செய்து கொண்டிருக்கின்றனர். பல் மருத்துவத் தேவைகளுக்கேற்ப நாம் இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்.


ஒரு நோயாளிக்கு 10 வகையான உரிமைகள் உள்ளன.

* சகல உரிமைகளுடன் கூடிய நோயாளி (Right patient)

* சரியான மருந்து (Right drug)

* சரியான அளவில் மருந்து (Right dose)

* சரியான வழிமுறை (Right route)

* சரியான நேரம் (Right time)

* சரியான விதத்தில் சிகிட்சையை ஆவணப்படுத்துதல் (Right documentation)

* குறிப்பிட்ட சிகிட்சையை நோயாளி மறுக்கும் உரிமை (Right to refuse)

* சரியான காரணம் (Right reason)

* சரியான மறுமொழி அல்லது எதிர்வினை (Right Response)

* சிகிட்சை பற்றிய சரியான மதிப்பீடு (Right assessment / evaluation)

தமிழ்நாட்டில் பல் மருத்துவ நோயாளிகளுக்கான அடிப்படை உரிமைகளை தேசிய வழிகாட்டும் முறைகள் நெறிப்படுத்துகின்றன.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 மற்றும் 2019 பல் மருத்துவ நோயாளிகளைப் பாதுகாக்கிறது.

தமிழ்நாடு பல் மருத்துவக் குழுவில் பல் மருத்துவர்களுக்கான நடத்தை விதிகள் வரையறுக்கப்பட்டிருக்கின்றன.

* பல் மருத்துவர் சட்டம் 1948 பிரிவு 34 பல் மருத்துவர்களின் தகுதிப் பதிவை கட்டாயப்படுத்துகிறது.

* பல் மருத்துவர் திருத்த சட்டம் 1955, 29.03.1948 தேதிக்கு முந்தையப் பல் மருத்துவம் படிக்காத, ஆனால் அனுபவம் வாய்ந்த பாரம்பரிய பல் மருத்துவர்கள் தங்கள் பெயர்களைத் தகுதிப் பதிவு செய்வதை அனுமதிக்கிறது.

பல் மருத்துவ நோயாளிகளின் நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் சில சமயங்களில் தவறாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அது குறித்து அடுத்த பகுதியில் பார்ப்போம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p43.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License