இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


40. பல் தொடர்பான கனவுகள்

* துபாயின் புர்ஜ் கலிபா கட்டடத்தின் 163 ஆவது தளத்தில் நிற்கிறீர்கள். உங்களைக் கறுப்பு கோட் அணிந்த கருப்புக் கண்ணாடி மாட்டிய எயிட்பேக் மனிதன் உச்சியிலிருந்து தள்ளி விடுகிறான். சாமர்சால்ட் அடித்து ஆழத் தரையில் விழுகிறீர்கள். திருஷ்டி பூசணிக்காய் மாதிரி சிதறி ரத்தச்சேற்றில் குப்புறக் கிடக்கிறீர்கள்!

* படுக்கையறையில் பிரபலக் கவர்ச்சி நடிகையுடன் காதல் செய்கிறீர்கள்.

* தீபாவளிக்கு உங்கள் பிறந்த ஊருக்குப் போக பேருந்து, ரயில், டாக்ஸி கிடைக்கவில்லை. பறந்து பல நகரங்களைத் தாண்டிப் போகிறீர்கள். வழியில் பல பறவைகள் உங்களை மோதிச் செல்கின்றன.

* ஆதிவாசிகளின் பிடியில் சிக்கிக் கொதிக்கும் அண்டாவில் போடப்படுகிறீர்கள். அண்டாவை ஆட்டிக் கவிழ்த்து விட்டுத் தப்பி ஓடுகிறீர்கள். ஆதிவாசிகள் உங்களைத் துரத்தி வருகிறார்கள். அம்புகள் சீறிப் பாய்கின்றன.

* மிஸ் பல்லழகர் 2025 பட்டம் உங்களுக்கு தரப் போகிறார்கள். விழா தொகுப்பாளினி விளையாட்டாக உங்கள் பற்களைத் தொட ஒட்டு மொத்த 32 பற்களும் கொடகொடவென்று இரத்த நூலுடன் கொட்டுகின்றன.

- இவையெல்லாம் நிஜமல்ல கனவு கண்டிருக்கிறோம் என்பது தூக்கத்திலிருந்து விழித்ததும் உங்களுக்குத் தெரிகிறது.

சரி கனவு என்பது என்ன?

தூங்கும் போது ஒருவர் மனதில் அனிச்சையாக தோன்றும் நினைவுகளின், காட்சி பிம்பங்களின், உணர்வுகளின் தொடர் சங்கிலியே கனவாகும். கனவு என்பது சிக்கலான தோற்றப்பாடாகும். கனவு தகவல்களைச் செயல் ஆக்கம் செய்கிறது. கனவு நினைவுகளை ஒருங்கிணைக்கிறது. கனவு உணர்வுப் பூர்வமான அனுபவங்களை கதை வடிவமாக்குகிறது. சிக்மன்ட் ஃப்ராய்டு விருப்பங்களே கனவுகள் ஆகின்றன என்கிறார்.

விழுந்தவையெல்லாம்...!
“இதழ்கள் ஒரு திரை
அதன் கீழே ஒளிதுணை
பற்கள் சமூகத்தின்
மின் கல்லறைகள்
சிரிப்பு ஒரு வடிகட்டி
வைக்கப்பட்ட நம்பிக்கை
அந்த நொடியில் நீயா, அல்லது
உன் முகமூடா
ஒளி விழுந்ததும் உணர்ச்சி
உருகி மறையும்”
-ஏ. நஸ்புள்ளாஹ், இலங்கை.


ஐந்து வகை தூக்கநிலைகள் உள்ளன.

1. முதல் படிநிலை - மொத்தத் தூக்கத்தில் ஐந்து சதவீதம்

2. இரண்டாம் படிநிலை - மூளையின் வேகமான அதிர்வெண் அலை வடிவங்கள் உருவாகின்றன.

3. மூன்றாம் நிலை - மூளை மின்னலைகளின் வேகம் குறைந்து டெல்டா அலைகள் தோன்றுகின்றன.

4. நான்காம் நிலை - ஆழ்ந்த தூக்கம்.

5. ஐந்தாம் நிலை - ரெம் (REM) எனப்படும் விரைவான கண்ணசைவு நடக்கின்றது.

கனவுகளுக்கு மனோதத்துவ ரீதியான காரணங்கள்

* உள்ளடக்கம் - நிஜ வாழ்க்கை நடப்புகளும் உணர்வு அறிவாற்றலும் உணர்வு ரீதியான அனுபவங்களும் இணைந்து விசித்திரமான லாஜிக் இல்லாத கனவுகளை உருவாக்குகின்றன.

* தூக்கத்தின் படித்தரங்கள் – ரெம் தூக்கம் (ராபிட் ஐ மூவ்மென்ட்) மூளையின் செயல்பாடும் அதிவேக கண்ணசைவும் ஏற்படும்.

* கனவுகள் நினைவுகளை ஒருங்கிணைக்கின்றன - மூளை மிகவும் அவசியமான நினைவுகளைச் சேமித்து தேவையற்றவறை புறம் தள்ளும்.

* உணர்வுகள் செயலாக்கம் – கனவு உணர்வு நிலைகளை ஒழுங்குபடுத்துகிறது. கனவு காண்பவன் எப்போதுமே பாதுகாப்பான அதே நேரம் ஒரு மெய்நிகர் சூழலில் அமர்ந்து கொண்டு தனது உணர்வுகளை அலசிப் பார்க்கிறான்.

* ஆசைகளை நிறைவேற்றல் - நிஜ வாழ்வில் நிறைவேறாத விஷயங்களைக் கனவில் நிறைவேற்றிக் கொள்கிறான் ஒருவன்.

* செயல்படுத்தும் தொகுப்புக் கோட்பாடு - அங்கொன்றும் இங்கொன்றான முறைமை சார்ந்த நரம்பியல் வலைப்பிணையம் வைத்து அதிவேகக் கண்ணசைவு தூக்கத்தில் மூளை சில சித்தரிப்புகளைக் கனவுகளாக முயற்சிக்கிறது.

* கனவுகளும் பிரக்ஞையும் - பல நேரங்களில் பிரக்ஞையுடன் கனவு காண்பது. கனவு காண்பவருக்கு, தான் கனவு காண்கிறோம் என்பது தெரியும். கனவை விரும்பி தொடர்ந்து அவன் காண்பான். இதனை லூசிட் டிரீமிங் (Lucid dreaming) என்பர்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு நாளில் மூன்றிலிருந்து ஆறு கனவுகள் காண்கின்றனர். ஒரு கனவு ஐந்திலிருந்து 20 நிமிடங்கள் வரை நீடிக்கும். நாம் காணும் கனவுகள் 95 சதவீதம் கனவில் இருந்து எழுந்தவுடன் மறந்து போகும். கனவுகள் நீண்டநாள் நினைவுத்திறனை மேம்படுத்துகின்றன. கண்ணில்லாதவர்கள் கண்கள் உள்ளவர்களை விட அதிகம் கனவு காண்கிறார்கள்.


கனவுகளின் பொதுவான தலைப்புகள்

* உயரத்திலிருந்து விழுதல்.

* வகுப்பாசிரியர் மற்றும் அவரின் பாடம்.

* மிருகங்களால் மனிதர்களால் துரத்தப்படுதல்.

* விதவிதமான உணவுகளை ருசித்தல்.

* ஏதாவது ஒரு செயலை தொடர்ந்து செய்ய முயற்சித்தல்.

* காமம் சார்ந்த கனவுகள்.

சரி நண்பர்களே கனவுகளைப் பற்றி நிறைய பேசிவிட்டோம். இப்போது கனவுகளுக்கும் பல் மருத்துவத்திற்கும் இடையே உள்ள தொடர்புகளைப் பற்றி கனவு காண்போம். இல்லையில்லை, உண்மையைத் தெரிந்து கொள்வோம்.

ஒரே ஒரு பல் விழுகிற மாதிரியோ, ஒட்டுமொத்தப் பற்களும் விழுகிற மாதிரியோ, யாராவது நாக்கைப் பிடுங்கி எறிவது மாதிரியோ கனவுகள் வரலாம். பல் தொடர்பான கனவுகளைக் காண்பவர்கள் தன்னைத்தானேத் தாழ்த்தி அபிப்ராயம் கொள்கின்றனர். அது தேவையற்றது.

பல் விழுவது போல கனவு காண்பது எல்லா சமுதாய மக்களுக்கும் நடப்பது தான் என்கிறார் லண்டனின் கனவு ஆராய்ச்சி மைய நிறுவனர் மெலின்டா பவல். உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் வாழ்க்கையில் ஒரு முறையாவது பற்கள் விழுவது போல கனவு காண்கின்றனர் என்கிறார் மெலின்டா. பற்கள் விழுவது அல்லது கொட்டுவது போல ஏன் கனவு காண்கிறோம்? கனவுகள் காண்பது இன்னுமே விஞ்ஞானத்தில் ஒரு தீர்க்கப்படாத மர்மம்.

கனவுகள் தூக்கத்தில் அங்கொன்றுமான இங்கொன்றுமான ந்யூரான் கிளர்ச்சிகள் உருவாக்கும் முட்டாள்தனமான குப்பை என்கிறார் செல்டர்மேன். செல்டர்மேன் கனவுகளின் தொடர்ச்சிக் கோட்பாட்டை நம்புகிறார். கனவுகள் எதிர்காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண ஒரு வழிகாட்டியாகச் செயல்படுகிறது எனவும் யூகிக்கிறார்.

டாக்டர் கெல்லி பல்க்கேலே கனவு ஒரு கற்பனை விளையாட்டு என்கிறார். தூக்கத்தில் நாம் புற உலகிலிருந்து விடுதலை பெறுகிறோம். நமது மனமும் கற்பனையும் சுதந்திரமடைகின்றன. அன்றைய நடப்புகளைக் கடந்த கால நிகழ்வுகளுடன் பிசைந்து கனவுகளை பிரசவிக்கிறோம் என்கிறார்.

பல் கொட்டும் கனவுகள்

ஆர். பாத்திமா மேரி, கோயம்புத்தூர்

நான் 15 வயது மாணவி. கனவில் பல் துலக்குகிறேன். என் பற்கள் கொடகொடவென இரத்தத்துடன் கொட்டுகிறது. விழித்துப் பார்த்தால் பிரச்சனை ஒன்றும் இல்லை. எனக்கு அடிக்கடி இந்தக் கனவு வருகிறது என்ன செய்யலாம்?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

இது போன்ற கனவுகள், தங்கள் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இருக்கலாம். இருப்பினும், இதனை ‘வரும் முன் காப்போம்’ என்கிற எச்சரிக்கையாகக் எடுத்துக் கொள்ளலாம். வெளியில் சைக்கிளில் போகும் போது சாலை விபத்துகள் ஏற்படாமல் கவனமாக இரு. கடினமான மூடிகளைக் கடித்துத் திறக்காதே. சக மாணவிகளுடன் சண்டை போடாதே. மாடிப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கும் போது கவனமாய் இரு. அப்படியே, ஒரு முறை எங்களது பல் மருத்துவமனைக்கு வந்து உன் பற்களை முழுமையாகப் பரிசோதித்துக் கொள்ளவும். மல்யுத்த போட்டிகளை, ரக்பி ஆட்டங்களைப் பார்க்காதே. நல்லி எலும்புகளை ராஜ்கிரண் போல் கடித்துத் துப்ப முயற்சிக்காதே. இரத்தம் குடிக்கும் ட்ராகுலா படங்களை பார்க்காதே. பல் பராமரிப்பின் மீது தேவைக்கதிகமான கவனம் செலுத்தாதே. உடன் படிக்கும் மாணவிகளுடன் உன் பற்களை ஒப்பிடாதே. அவ்வளவுதான், உன் பற்கள் கனவுகளிலும் மின்னும்...!



கனவுகளில் பற்கள் விழுவது பற்றி சிலபல கணிப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று;

‘பல் விழுவதாக கனவு காண்பவர் உண்மையில் தன்னை அவலட்சணமிக்கவராக கருதுகிறார்!’

இன்னொரு கருத்து:

‘ஒரு மனிதனின் வாழ்க்கையில் பற்கள் இருமுறை விழுகின்றன. ஒன்று பால்பற்கள் விழுவது. இன்னொன்று வயோதிகத்தில் விழுவது. அதனால் பற்கள் வயோதிகத்தையும் வளர்ச்சியையும் குறிக்கும் ஒரு விஷயம் ஆகையால் பற்கள் விழுவது போல கனவு காண்பது வளர்ச்சி, சரிவு மற்றும் உணவு ஊட்டப் பற்றாக்குறை போன்றவற்றை சுட்டும் கருவி!”


செயல் மற்றும் உணர்ச்சியில் மூழ்கிப் போன முடங்கிப் போன மனிதர்கள் பற்கள் விழுவது போன்று கனவு காண்கிறார்கள். பல் விழுவது போல கனவு கண்டவருக்கு ஓய்வும், உணவு போஷாக்கும் தேவை.

ஈறுகளில் இருந்து இரத்தம் கசிவது போலக் கனவு கண்டால் ஓய்வும், புதுப்பிப்பும் அவசியம். நண்பர்களே! பற்கள் விழுவது போலக் கனவு கண்டால் பீதி அடையாமல் கண்ணாடி முன் நின்று பற்களைச் சோதித்து ஆறுதல் அடையுங்கள்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p40.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License