இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மருத்துவம்
பிற மருத்துவங்கள் - பல் மருத்துவம்

புன்னகை பூக்கும் பற்கள்

டாக்டர் ஆ. நிலாமகன்


39. நாக்குப் புற்று நோய்

உடலின் அசாதாரண செல்கள் கட்டுப்பாடு இன்றி பெருகி அருகில் உள்ள திசுக்களை அழித்து மேலும் உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் ஒரு நிலையே புற்றுநோய்.

புற்றுநோய்களில் பல வகை உண்டு.

* மார்பகப் புற்றுநோய்

* பெருங்குடல் புற்றுநோய்

* மூளைப் புற்றுநோய்

* இரத்தப் புற்றுநோய்

தோலின் எபிடெலியல் திசுக்களில் இருந்து உருவாகும் புற்றுநோயை கார்சினோமா என்பர். எலும்புகள், குருத்தெலும்பு, கொழுப்பு, நரம்பு போன்ற இணைப்புத் திசுக்களில் உருவாகும் புற்று நோயை சர்கோமா என்பர். நோய் எதிர்ப்பு மண்டலத்தின் கூறுகளாக இருக்கும் லிம்போசைட்டுகளில் தொடங்கும் புற்று நோயை லிம்போமா என்பர்.

இரத்த அணுக்கள் முதிர்ச்சி அடையத் தொடங்கும் இடத்தில் அதாவது எலும்பு மஜ்ஜையில் தொடங்கும் புற்றுநோயை லுகேமியா என்பர்.

ஒரு மனிதனின் நாக்கு என்பது வாயின் அடிப்பகுதியில் அமைந்துள்ள ஒரு தசை உறுப்பாகும். நாக்கு சுவைகளை உணரவும், உணவை மெல்லவும், விழுங்கவும், பேசவும், சுவாசிக்கவும் பயன்படுகிறது. நாக்கின் பின்புறம் தொண்டையின் அடிப்பகுதியில் உள்ள ஹையாய்டு எலும்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

விழுந்தவையெல்லாம்...!
“மன்னன் நெடுஞ்செழியனின்
முன் நீதி கேட்டு
கண்ணகி உடைத்தாள்
நான்கில் ஒரு கால் சிலம்பை
சிதறியவை முத்துக்களா?
இல்லை, மாணிக்கப்பரல்களா?
அவளின் ஆங்காரச் சிரிப்பினில்
தெறித்து விழுந்தவையெல்லாம்
அந்த அரசசபை
ஆண்களின் இதயங்களே!”
- அ. ஜன்னத்துல் பிர்தௌஸ்


நாக்கு ஒரு தசை ஹைட்ரோஸ்டாட் ஆகும். அதாவது அதன் வடிவம் மாறும் போது ஒட்டு மொத்த அளவு மாறாமல் இருக்கும். நீர் நிரம்பிய பலூனுடன் நாக்கை ஒப்பிடலாம். நாக்கின் அடிப்பாகத்தை வாய்ப்பகுதிக்குக் கீழே இணைக்கும் ஒரு ஜவ்வு போன்ற அமைப்பை நுண்ணிழுமடி (Frenulum) என்பர்.

நாக்கின் செயல்பாடு உணவை நகர்த்தி வாய்க்குள் தள்ளுவதாகும். இந்த உறுப்பு உணவு எபிக்ளோட்டிஸுக்குள் நுழைய விடாமல் காற்றுப் பாதையை பாதுகாக்கிறது மற்றும் சுவாசிக்க மூச்சுக்குழாயைத் திறந்து வைக்கிறது. நாக்கு என்பது ஈரமான இளஞ்சிவப்பு திசுக்களின் கூட்டம். நாக்கின் இளஞ்சிவப்பு வெளிப்புற பூச்சை சளி ஜவ்வு என வர்ணிப்பர்.

நாக்கின் மேற்பரப்பில் சிறப்பு உணர்வு அமைப்புகள் உள்ளன. இது பாப்பிலாவால் மூடப்பட்டிருக்கும். நாக்கிலுள்ள புடைப்புகள் உணவை பிடிக்கவும் நகர்த்தவும் ஒரு கடினமான மேற்பரப்பை வழங்குகின்றன.

சுவை மொட்டுகள் பாப்பிலாவுக்குள் அமைந்துள்ளன. ஆனால் சுவை ஏற்பிகள் அண்ணம் மற்றும் தொண்டையிலும் உள்ளன.

ஆண்களின் நாக்கு 3. 3 அங்குலம் அல்லது 8. 352 செமீ நீளமும், பெண்களின் நாக்கு 3. 1 அங்குலம் அல்லது 7. 874 செமீ நீளமும் உடையவை.

நாக்கின் முக்கியப் பகுதிகள் எனும் போது,

* வாய் வழிப்பகுதி (Oral Part) இது நாக்கின் முன்புறமாகும். இது உணவை நகர்த்த மெல்ல சுவைக்க உதவுகிறது.

* குரல்வளைப்பகுதி (Pharyngeal Part) இது நாக்கின் பின்பகுதி. இது தொண்டைப் பகுதியுடன் தொடர்புடையது.

* மொழி செப்டம் (Lingual Septum) இது நாக்கின் நீளத்தின் பெரும் பகுதியில் இடது மற்றும் வலது பக்கங்களை பிரிக்கும் ஒரு செங்குத்து திசுப்பிரிவு.

* மொழி பிரனுலம் (Lingual Frenulum) இது நாக்கின் அடிப்பகுதியில் உள்ள மடிப்பு.

இது நாக்கை வாயின் அடிப்பகுதியுடன் இணைக்கிறது.


மனித நாக்கின் முக்கிய பாகங்கள் எனும் போது,

* நாக்கின் நுனி (Tip)

* மேற்பகுதி (Dorsum)

* அடிப்பாகம் (Base/Root)

நாக்கின் பின்புறம் கசப்பு சுவை. இடது மேல் புறம் புளிப்பு சுவையும் இடது கீழ்புறம் உவர்ப்பு சுவையும் வலது மேல் புறம் புளிப்பு சுவையும் வலதுகீழ்புறம் உவர்ப்பு சுவையும் உணரப்படும்.

நாக்கில் பல வகை நோய்கள் வருகின்றன. குறிப்பாக,

* நாக்குப் புற்றுநோய் (Tongue Cancer)

* நாக்கின் நிறமும் நெளிவுகளும் மாறும் ஜியாகிராபிக் டங்க் (Geographic Tongue )

* சூடான உணவை உண்டாலோ தவறுதலாக பற்களை கடித்துக் கொண்டாலோ டங்க் ட்ராமா (Tongue Trauma)

* மஞ்சள் நாக்கு (Yellow Tongue) தோல் வியாதி, மஞ்சள் காமாலை நோய் பீடிப்பால் நாக்கு மஞ்சளேறும்.

* ஸ்ட்ராபெரி குறி. Infantile Hemangiomass - ஒரு வயது பெண் குழந்தைகளுக்கு அதிகம் வரும்.

* நாக்கு முடிச்சு (Ankyloglossia)

* அளவில் பெரிய நாக்கு (Macroglossia )

* அளவில் சிறிய நாக்கு (Microglossia )

* இரண்டாய் பிரித்த நாக்கு (Bifid Tongue)

ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளியின் நாக்கைப் பரிசோதித்து பார்த்து ஈறுநோய் மற்றும் நாக்கு புற்றுநோயை உறுதி செய்துவிடுவார். பல் மருத்துவர் நோயாளியின் நாக்கைப் பரிசோதிக்கும் போது, நாக்கின் நிறம், இழை அமைப்பு (Texture), நாக்கின் வெண்படலத் திட்டை அவதானிப்பார்.

வாய்ச் சுத்தத்திற்கு நாள்தோறும் இரு முறை பல் துலக்கினால் மட்டும் போதாது. நாக்கையும் சுத்தப்படுத்த வேண்டும். வாய் அமைப்பு கச்சிதமாக அமைய நாக்கும் ஒரு முக்கிய காரணம். நாக்கில் புற்றுநோய் அறிகுறி தெரிந்தால் பல் மருத்துவர் உடல் திசு ஆய்வுக்கு (Biopsy) அனுப்பி வைப்பார்.

நாக்கு மற்றும் வாய்ப் புற்று நோய்கள்

பா. தீனதயாளன், விழுப்புரம்

வாய்ப்புண்கள் அடிக்கடி வந்தால் நாக்குப் புற்றுநோய் அல்லது வாய்ப் புற்று நோய் வரும் என்கிறார்களே, உண்மையா?

மருத்துவர்கள் ஆ. நிலாமகன் மற்றும் பஹிமா:

சாதாரண வாய்ப்புண்கள் அடிக்கடி வந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் ஆறாத புண், நாக்குப் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரத்திற்கு மேல் ஒரு வாய்ப்புண் இருந்தால், அதை ஆபத்து என்று கொள்ள வேண்டும். ஒழுங்கற்ற வடிவம் மற்றும் சிவப்பு வெள்ளை நிறத் திட்டுகள் சிக்கலானவை. காயங்களிலிருந்து இரத்தம் ஒழுகினாலும் அபாயம்தான். கழுத்தில் கட்டி, உணவு விழுங்குவதில் சிரமம், வாயில் உணர்ச்சியற்ற தன்மை போன்றவை இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி, உண்மை நிலையை அறிந்து, நாக்குப் புற்றுநோய் அல்லது வாய்ப் புற்று நோயிலிருது தற்காத்துக் கொள்ள வேண்டும்.



இந்தியாவில் நாக்குப் புற்றுநோயால் வருடத்திற்கு 1,35,000 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர். 75000 உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

புகையிலை அதக்குதல், வெற்றிலை பாக்கு போடுதல், போதை பானம் அருந்துதல், புகைப்பிடித்தல் நாக்கு புற்றுநோய்க்கான முக்கியமான காரணங்கள்.

நாக்குப் புற்றுநோய்க்கு;

* மருந்து உட்கொள்ளுதல் (Medication)

* கதிரியக்கச் சிகிச்சை (Radiotherapy)

* அறுவை சிகிச்சை (Laryngectomy)

* குரல்வளை நீக்கம் (Neck Dissection)

* கழுத்து அறுத்தல் வகைப்பாடு (Glossectomy) * நாக்கு நீக்கம்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சிகிச்சை

என்பது போன்ற சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாக்கை தாண்டாத (Localized Tongue Cancer) உள்ளவர்கள் 88 சதவீதம் பேர் ஐந்து வருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நாக்குப் புற்றுநோய் மற்ற உடலுறுப்புகளுக்கு பரவி இருந்தால் 70 சதவீதம் பேர் ஐந்து வருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். நாக்கு புற்றுநோய் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் பரவி இருந்தால் 39 சதவீதம் பேர் ஐந்துவருடங்கள் வரை உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். தொடக்க நிலையில் நாக்குப் புற்று நோயைக் கண்டுபிடித்தால் முழுமையாகக் குணப்படுத்தி விடலாம்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/dental/serial/serial1/p39.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License