இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


மருத்துவம்
இயன்முறை மருத்துவம்

குதிகால் வலி - குறைக்கும் வழி

டாக்டர் க. கார்த்திகேயன்


பூனை நடை நடந்து புன்சிரித்து மேடையில் வலம் வரும் மாடல்களைப் பார்த்து உயரமான குதிங்கால் செருப்பு அணிந்து ஒய்யார நடை நடக்க விரும்பும் யுவதியா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கும் இந்தச் செய்திக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

இன்றைக்கு ஆண்களை விடப் பெண்களை அதிகம் பாதிக்கும் நோய்களுள் முன்னிலையில் இருப்பது குதிகால் வலி. குறைந்தபட்சம் நூற்றுக்கு இருபது பேராவது இதனால் அவதியுற்று இயல்பான வேலைகளைச் செய்யமுடியாமல் வலியின் வேதனையால் துன்பப்படுகின்றனர். உலக அளவில் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் ஆண்களை விடப் பெண்களே குதிகால் வலியால் அதிகமாக பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றன .

மனித உடலில் பாதத்தில் 26 எலும்புகள் உள்ளன. நடக்கும்போது அல்லது ஓடும் போது மனித உடலின் எடை முழுவதையும் தாங்கும் அளவிற்கு ஏற்றவகையில் பாத எலும்புகள் வடிவமைப்பைப் பெற்றுள்ளன. இப்பாத எலும்புகளில் குதிகால் எலும்பானது மற்ற எலும்புகளை விடப் பெரியதாகவும், உறுதியாகவும் அமைந்துள்ளது. குதிகால் எலும்புடன் சேரும் பாதத்தில் உள்ள தசை நார்கள் அழற்சியடைவதால் பொதுவாகக் குதிகால் வலி உண்டாகிறது. அதுமட்டுமில்லாமல் வேறு சில காரணங்களும் குதிகால் வலிக்குக் காரணிகளாக அமைகின்றன.

அவை;

1. பாத எலும்பு மூட்டுகளில் ஏற்படும் வாத நோய்கள்

2. நோய்த் தொற்றுக்கள்

3. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு

4. விபத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

5. அதிக உடல் எடை

6. பாதங்களில் உள்ள நரம்புகளில் பாதிப்பு

7. நோய்த்தொற்றின் காரணமாக பாதத்தில் உள்ள தசை நான்களில் வீக்கம் மற்றும் அழற்சி

8. கணுக்கால் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் அழுத்தப்படுவது

9. பாத எலும்புகளில் ஏற்படும் சிறு எலும்பு முறிவுகள்

10. எலும்புச்சிதைவு நோய்

11. குதிகால் மற்றும் பாதங்களில் ஏற்படும் கட்டிகள்

12. ரத்தத்தில் யூரிக் அமிலம் அதிகமாகிப் படிமங்களாக பாத எலும்புகளில் படிவது

13. சர்க்கரை நோயினால் ஏற்படும் எலும்பு, நரம்பு பாதிப்புகள்

14. கீல்வாதம்

இதைத்தவிர மிக முக்கியமான இன்னொரு காரணம் உண்டு. அது நாகரிகம் எனும் பெயரில் அதீத உயரத்திற்குக் குதிகாலை உயர்த்தும் அளவிலான காலணிகளை அணிவது.



அறிகுறிகள்

1. குதிகால் வலி

2. பாத எலும்புகளிடையே வீக்கம்

3. தூங்கும் போதோ அல்லது ஓய்வு நிலையிலேயோ தாங்கமுடியாத வலி

4. சில நேரங்களில் காய்ச்சல்

5. நடப்பதில் சிரமம்

6. பாதங்களை கீழ்நோக்கி அசைப்பதில் சிரமம்

பரிசோதனைகள்

1. எக்ஸ் -ரே

2. ரத்தப்பரிசோதனைகள்

3. MRI, CT ஸ்கேன்

இயன்முறை சிகிச்சையின் அவசியம்

பொது மருத்துவ சிகிச்சையில் வலிகுறைப்பிற்கான மருந்துகள் மற்றும் Cartigo Steroid பயன்படுத்தப்படுகிறது. பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சையும் சிலநேரங்களில் மேற்கொள்ளப்படுகிறது .ஆனால் இயன்முறை சிகிச்சையின் வழியாக,

1. பாத எலும்புகளில் வலியைக் குறைக்க, வலு குறைந்துள்ள கணுக்கால், பாத தசைகளை வலுப்படுத்துவது

2. நரம்பு பாதிப்பினைச் சரி செய்வது

3. நரம்பில் ஏற்படும் வலியினைக் குறைப்பது

4. நடைத்தோரணையைச் சரிசெய்வது

5. நோயாளியின் அன்றாட நிகழ்வுகளை மேம்படுத்துவது



இயன்முறை சிகிச்சை

1. குதிகால் எலும்பில் ஏற்படும் வலியினைக்குறைக்க Ultra sound therapy மற்றும் ஐஸ் தெரபி முறைகள் ஆரம்ப நிலையில் உள்ள பாதிப்பிற்கு அளிக்கப்படுகிறது

2. நாட்பட்ட வலியினைக் கொண்ட நோயாளிகளுக்கு Short wave diathermy மற்றும் பாத வலியினைக் குறைக்க மின் தூண்டுதல் சிகிச்சையான TENS சிகிச்சை அளிக்கப்படுகிறது

3. தசைகளை வலுப்படுத்த, கணுக்கால் மற்றும் பாதத் தசைகளுக்கு உடலியக்கப் பயிற்சிகள் இயன்முறை மருத்துவரால் அளிக்கப்படுகின்றது

4. குதிகால் வலியால் பாதிக்கப்பட்டவர்கள் நன்கு ஒய்வு எடுக்க வேண்டும். ஓடுவது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பது, கடினமான தரைப்பகுதியில் காலணிகள் இல்லாமல் நடப்பது போன்ற பாதத்திற்கு மிகுந்த அழுத்தம் தரும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்

5. வலிகுறைய மிருதுவான காலணிகளை (MCR ,MCP வகை காலணிகள்) அணியவேண்டும்

6. பெண்கள் குதிகால் உயர்த்திய நிலையில் உள்ள காலணிகளைத் தவிர்க்க வேண்டும்

7. பாத எலும்புகள் அழுத்தமில்லாமல் இருப்பதற்கும், வலியைக் குறைக்கவும் மருத்துவரின் ஆலோசனைப்படி பாதப்பட்டை (HeelPad) அணிவது நல்ல பலனைத் தரும்

ஒழுக்கமான நடத்தை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு நடையில் ஒழுங்கும் முக்கியம். அதற்குக் குதிகால் வலி வராமல் தவிர்ப்பதும், வலி வந்துவிட்டால் உரிய இயன்முறை சிகிச்சைகளைச் செய்து கொள்வதும் அவசியம் என்பதை உணர்ந்து நடந்தால் குதிகால் வலியின்றி குதித்தோடி மகிழலாம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/medicine/physiotheraphy/p17.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License