இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
இந்து சமயம்

விரதம் - விரதத்தின் முக்கியத்துவம்

முனைவர் ஸ்ரீவாலாம்பிகை


பகுதி - 3

51. பாக்ருத்விதியை

இதுவும் கார்த்திகை சுக்லபட்ச த்விதியையில் அனுஷ்டிப்பதே. இதில் யமுனை யமனை அவன் தேவியுடன் தன்னிடம் அழைத்து வந்து விருந்திட்ட நன்னாள். இதில் உடன் பிறந்தாள் தன் அண்ணனை அவன் மனைவியுடன் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்திட்டு நமதூதர் முதலியோரையும் யமனையும் பூசித்தல் வேண்டும். அவ்வாறு பூசிப்போர் யமபயம் நீங்கிச் சுவர்க்கம் பெறுவர்.

52. த்ருதியை - அட்சய திருதியை விரதம்

இது, வைகாசி மாதம் சுக்ல பட்ச திருதியையில் அனுஷ்டிப்பது. இந்நாளில் எண்ணெயிட்டுக் கொண்டு ஸ்நானஞ் செய்து தர்ப்பணாதிகள் முடித்து, விஷ்ணுவை எண்ணிப் பூசிக்க வேண்டும்.

53. பரசுராம ஜயந்தி

இதுவும் வைகாசி மாதம் சுக்கில பட்சம் திருதியையில் ரேணுகாதேவியிடம் பரசுராமர் பிறந்த இதில் விரதம் இருப்பின் நலமுண்டாம்.

54. அட்சயதிருதியை

வைகாசி மாத சுக்ல பட்சத்தில் அநுஷ்டிக்கும் விரதம். இந்நாளில் பிதுர் தர்ப்பணாதிகள் முதலியன செய்து விரதம் இருத்தல் வேண்டும். இது கிருதயுகாதி, சிவ விஷ்ணு பூசை செய்தல் வேண்டும்.

55. ரம்பா விரதம்

இது ஆனி மாதம் சுக்கில திருதியையில் அனுஷ்டிப்பது.

56. சுவர்ண கௌரி ஷோடச கௌரி விரதம்

இது ஆவணி மாதம் சுக்கில திருதிகையில் அனுஷ்டிப்பது. இது தேவியைச் சோடச உபசாரத்துடன் கலசத்தில் ஆவாகித்துப் பூசிப்பது. இது தேவ கன்னியர் அநுஷ்டிக்கக் கண்ட சந்திர பிரபனால் அனுஷ்டிக்கப்பட்டது. ஸ்ரீஸ்கந்தபுரணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

57. சதுர்த்தி - சங்கடஹர சதுர்த்தி விரதம்

இஃது ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் அனுஷ்டிப்பது. பொன் முதலியவற்றால் கணேசத் திருவுருச் செய்து, கலசந் தாபித்து ஆவாஹித்துச் சந்திரனுக்கு அர்க்கியம் கொடுத்துப் பூசித்துக் கணேசரை நோக்கித் தமது சங்கடம் நீக்க வேண்டிப் பலகாராதிகளும் மற்றும் வைத்துப் பூசிப்பது. இவ்விரதம் கந்தமூர்த்தியால் ரிஷிகளுக்குக் கூறப்பட்டது. பின் கிருஷ்ணமூர்த்தியால் பாண்டவர்க்கும் கூறப்பட்டது.

58. தூர்வாகணபதி விரதம்

இது கார்த்திகை மாதத்துச் சுக்கில சதுர்த்தியில் விநாயகத் திருவுருவை அறுகின் மீது எழுந்தருளுவித்துப் பூசிப்பது.

59. சித்தி விநாயக விரதம்

புரட்டாசி மாதம் சுக்கில சதுர்த்தியில் விநாயக விரதம் அநுட்டிப்பது. இது பிரகஸ்பதியால் கூறப்பட்டது. இது தருமபுத்திரரால் அநுஷ்டிக்கப்பட்டது. அந்த சுக்ல சதுர்த்தியில் சந்திர தரிசனம் நிந்திக்கப்பட்டிருக்கிறது. இத்தோஷத்தால் சியமந்தக மணியின் பொருட்டுக் கிருஷ்ணன் அபவாதத்தினீக்கத்திற்காக விநாயக பூசை செய்தனர்.



60. பஞ்சமி

சித்திரை மாதத்திய சுக்கில பஞ்சமி - விஷ்ணுவைப் பூசித்துப் புஷ்ப ஊஞ்சலிலிட்டு ஆராதனை செய்து விரதம் அநுஷ்டிப்பது.

61. நாக பஞ்சமி விரதம்

இது ஆவணி மாதம் சுக்கில பட்ச பஞ்சமியில், சதுர்த்தியில் ஒரு வேளை உணவு கொண்டு மறுநாள் ஐந்தலை உள்ள நாகத்தின் உருவைப் பொன் முதலிய லோகத்தாலாயினும், மண்ணாலாயினும் செய்வித்து விதிப்படி பூசித்துத் தட்சணாதிகள் கொடுத்து அஷ்ட நாகங்களையுந் துதிப்பது.

62. நாகத்தஷ்ட விரதம்

இதுவும் ஆவணி மாத சுக்கில பட்ச பஞ்சமியில் மேற் கூறியவாறு, மாதம் மாதம் அநுஷ்டித்து முடிந்த ஆவணி மாதத்தில் பூர்த்தி செய்து விஷ்ணுப் பிரீதி செய்வது. இதைச் செய்தவர்கள் நாகபயம் நீங்கி நலம் அடைவர்.

63. ரிஷிபஞ்சமி விரதம்

இது புரட்டாசி மாதத்தில் சுக்ல பட்சத்தில் மத்யானத்தில் பஞ்சமி திதி இருக்கையில் அநுஷ்டிப்பது. இதில் ரிஷி பஞ்சமி விரதத்தின் பொருட்டுப் பஞ்சகவ்ய, யமுனை பூசைகள் முடித்துக் கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விச்வாமித்ரர், கௌதமர், ஜமதக்னி, வசிட்டர், அகஸ்தியர், அருந்ததி முதலியவர்களையும் சகல ரிஷிகளையும் பூசித்து உத்தயாபனஞ் செய்வது. இது ரஜஸ்வலையானவள் போஜன பாத்திரங்களைத் தீண்டுவதாலும், புருஷ்ன் ரஜஸ்வலையானவளுடன் பேசுவதாலும் தீண்டுவதாலும், உண்டான பாவம் நீங்க அநுஷ்டிப்பது. இதனை வைதர்ப்ப தேசத்தவனான உதங்க நாம வேதியன் மருமகள் அநுட்டித்தனள். பின்னும் சுமித்திரன் மனைவி ருது பீடையுடன் பாண்டஸ்பர்சனஞ் செய்து பெண்ணாயாகி இவ்விரதத்தால் சாபம் நீங்கினாள்.

64. மாசி சுக்லபஞ்சமி விரதம்

மாசி மாதம் சுக்ல பட்ச பஞ்சமியில் விஷ்ணுவை நோக்கி விரதமிருப்பது.

65. ஷஷ்டி - லலிதா விரதம்

புரட்டாசி மாதம் சுக்ல பட்ச ஷஷ்டியில் பரமேஸ்வரியை எண்ணி விரதமிருந்து உத்யாபனஞ் செய்வது. இது கூர்ஜ்ஜர தேச வழக்கு.

66. கபிலாஷஷ்டி

இது புரட்டாசி மாதம் கிருஷ்ண பட்ச ஷஷ்டியில் சூரியன், குஜன் ரோஹிணி நட்சத்திரத்துடன் கூடிய நாள். இதில் சூரியன் பூசிக்கப்படுவன். பின்னும் கபிலைப் பசுவை ஆபரணாதிகளால் அலங்கரித்துப் பூசிப்பது.

67. சம்பா ஷஷ்டி விரதம்

மார்கழி அல்லது புரட்டாசி மாதத்திய சுக்ல ஷஷ்டியில் அநுஷ்டிப்பது.

68. சப்தமி - சைத்ர சுக்ல சப்தமி விரதம்

இது சித்திரை மாதத்தில் சுக்ல சப்தமியில் கங்கையைப் பூசித்து விரதமிருப்பது.



69. சீதலா விரதம்

இது ஆவணி மாதம் கிருஷ்ணபட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது.

70. அமுக்தாபாண விரதம்

இது புரட்டாசி மாதத்திய சுக்கில பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. உமாமஹேச்வர பூஜை செய்து பன்னிரண்டு முடி கொண்ட கிரந்தி பூசை இயற்றி வந்தித்வ நிவர்த்தியாய்ப் புத்ர பௌத்ர விருத்தியின் பொருட்டும் எல்லா சௌபாக்கிய சித்தியின் பொருட்டும் தட்சிணகரத்தில் நோன்பு முடி கொண்ட கயிற்றினைக் கட்டிக் கொள்வது. இது கிருஷ்ணமூர்த்தி தரும புத்திரருக்குக் கூறியது.

71. சரஸ்வதி விரதம்

இது ஐப்பசி மாதத்தில் சுக்ல பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. உதய வியாபினியாகிய மூல நட்சத்திரத்தில் புஸ்தக ஸ்தாபனஞ் செய்து திருவோண நட்சத்திரத்தில் முடித்தல் வேண்டும்.

72. ரத சப்தமி விரதம்

இது மாசி மாதம் சுக்கில பட்ச சப்தமியில் அநுஷ்டிப்பது. இதில் அருணோதயமாகிய தனத்தில் திதித்வயமாகி ஷஷ்டி சப்தமி யோகமாகிய பத்மயோகத்தில் பொன், வெள்ளி, தாமிர பாத்திரமாகிய பாண்டத்தில் நெய் விளக்கிட்டச் சிரத்தில் தாங்கிக் கொண்டு சூரியனை மனத்தில் தியானித்து மந்திரஞ் செபித்துத் தீபத்தைச் சலத்தில் விட்டு 7 எருக்கிலை அல்லது 7 இலந்தை இலைகளைத் தலையிற் கொண்டு கங்கை முதலியன சுமந்து வரும் புண்ய தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்து விரதமிருப்பது. பொன் முதலியவற்றால் ரதஞ்செய்து அதில் சூரியனையும் சாரதியையும் பிரதிஷ்டித்துப் பூசித்துக் தானாதிகள் செய்து விரதம் இருப்பது. இவ்வாறு செய்யின் ஒரு பிறவியில் செய்த பாவம் நீங்குமெனக் கர்க்கர் கூறுகினறனர்.

73. அசலா சப்தமி

மாசி மாத சுக்கில பட்ச சப்தமியில் அநுட்டிப்பது.



74. அஷ்டமி - சைத்திர சுக்கிலாஷ்டமி விரதம்

இதில் பவாநி யாத்திரை காசிகாண்டத்திற் கூறப்பட்டது.

75. அசோகாஷ்டமி விரதம்

சித்திரை மாதத்தில் புதனோடு புனர்பூச நட்சத்திரம் கூடிய அஷ்டமி திதியில் விடியற் காலையில் ஸ்நாநாதிகள் முடித்து விரதமிருந்தவர்கள் வாஜபேயபலம் அடைவர்.

தொடரும்...


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/hindu/p187b.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License