இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
பிற சமயங்கள் & பிற கருத்துகள்

பௌத்தம் சிறு நினைவுகள்

கிருஷ்ணன், சிங்கப்பூர்.


இந்தியாவில் தோன்றிய பழையன சமயங்களில் பெளத்த சமயமும் ஒன்று. இந்த பெளத்த தோற்றம் இரண்டாயிற்று ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்பது சரித்திர ஆய்வாளர்கள் கருத்து. காலம் கடந்து நிற்கும் குறிக்கோள், இனம், நிலம், மொழி ஆகியவற்றை கடந்த மக்கள் நலம் பெற வேண்டும் என்ற தரும நெறியினைக் கொண்டது பெளத்த சமயம்.

அது தமிழர்களின் வாழ்க்கை நெறியாக இருந்துள்ளது என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும், இலக்கிய சான்றுகளும் பல உண்டு. பிற சமயங்களின் கோட்பாடுகளை ஒப்பு நோக்க, பெளத்த நெறியின் சிறப்பையும் நம்மால் உணர முடியும். நான், எனது என்னும் செருக்கை அறுத்து, ஆரா இயற்கை ஆவாவை நீக்கி, பேதமை அகற்றி, தீயவைக்கு அஞ்சி, எண்ணத்தில் தூய்மை கொண்டு, வினைத் தூய்மையையும் மேற்கொண்டு, மூத்த அறிவுடையார் தொடர்பில் இணைந்து வாழ ஒருவனை ஊக்குவிப்பதே புத்தரின் கொள்கையாக விளங்கியது.

பிணி, மூப்பு, சாக்காடு ஆகிய துன்பங்களிலிருந்து மனிதன் விடுபட்டு, பேரின்பப் பெருநிலையை எய்தப் புத்தன் பெருமான் கண்ட வாழ்க்கை நெறியாகும். சாதி, இன வேற்றுமை இன்றி, தகுதி மிக்க சான்றோர்கள் ஏற்றுக் கொண்ட சங்கம், உலகில் நன்னெறிகளைப் பரப்பத்தான் இந்த பெளத்தம் என்று பௌத்த சங்க தருமங்கள் கூறுகிறது.

தனி மனிதனின் முன்னேற்றமே சமுதாயத்தின் முன்னேற்றம். தனி மனித வாழ்வில் ஏற்படும் மேன்மைக்கு அடிப்படையாகும். இதனை தொடர்ந்தே வீடு. நாடு, உலகம் என்ற அளவிலும் தனி மனிதனின் நல்ல, தீய செயல்கள் விளைவுகளைச் சமைக்கின்றன.



ஒரு மொழியின் ஒப்பற்ற இலக்கியமாகப் போற்றப்படும் இலக்கியம் ஒன்றில் சொல்லப்படும் கருத்துக்கள், நெறிகள், வாழ்க்கை வழிமுறைகள் அந்த இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே சமுதாயத்தில், மக்கள் வாழ்க்கையில் எத்தனை செல்வாக்கு பெற்றிருந்தன என்பதற்கு தக்க சான்று. அந்த வகையில் தமிழகத்திற்கும் தமிழ் மொழிக்கும் பெளத்தம் உடன்பாடாக இருந்துள்ளது. மானுட சமுதாயத்தில் தேவைப்படும் அடிப்படைத் தத்துவங்கள் பல புத்தர் கண்ட பௌத்த சமயத்திலிருப்பதால், இடம் பெற்றுள்ளதால் இன்றுவரை வளர்ந்தோங்கியுள்ளது. பிற சமயங்களின் தாக்குதல்களை எல்லம் சமாளித்து, தன் உள் வலிமை மூலம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றலும் திறமையும் பெளத்த சமயத்துக்கு இன்னும் இருக்கிறது.

காசிக்கு வடக்கே ரோஹினி நதிக்கரையில் கபிலவஸ்து என்கிற நகரம் உள்ளது. அதைத் தலைநகரமாகக் கொண்டு சுத்தோதனர் என்கிற அரசர் ஆண்டு வந்தார். அவருக்கு இரண்டு மனைவிமார்கள். இவர்களில் மூத்தவர் மாயாதேவி. அவர் கர்ப்பவதி ஆனார். பிரசவத்திற்காகத் தாய் வீட்டுக்குப் போனார். பரிவாரத்தினர் புடை சூழ்ந்து வர, உயரமான சால மரங்களின் கிளைகள் தாழ்ந்து வரவேற்றன. அதன் கிளைகளிலும் ஐந்து ஐந்து தாமரை மலர்கள் தோன்றின. பறவைகள், கீதமிசைத்து இனிய குரலில் பாடின. மெல்லிய பூங்காற்று வீசிற்று. மரகிளைகள் தாழ்ந்து அரசியைச் சுற்றித் திரைகள் உண்டாயின. போகும் வழியில் லும்பினி தோட்டத்தில் ஓர் மகவை ஈன்றார். வைகாசி மாதம் பெளர்ணமி அன்று இந்தப் பூமியின் நலனுக்காகப் புத்தர் அவதரித்தார். இது நடந்தது கி.மு. 563ல். சுமார் [இன்றைக்கு] 2500 ஆண்டுகளுக்கு முன்பாக நிகழ்ந்த இந்த நிகழ்வைத் தொடர்ந்து ஒரு துன்பம் வந்தது. மகவு பிறந்த ஏழாம் நாள் அன்னை மாயாதேவி மரணமடைந்தார்.

சித்தார்த்தன் என்று பெயரிடப்பட்ட அந்தக் குழந்தையைச் சிற்றன்னைதான் எடுத்து வளர்த்தார். சீரும் சிறப்புமாக அரண்மனை வாசம் செய்து வந்த சித்தார்த்தனுக்கு கோலிநாட்டு மன்னன் மகள் யசோதராவைத் திருமணம் செய்து வைத்தார்கள். இவ்வாறு பத்து ஆண்டுகளை, யாதொரு கவலையுமின்றி, சித்தார்த்தன் சுகபோகத்தில் கழித்தான். இன்பமயமான வாழ்க்கையில் சில எதிர்பாராத சந்திப்புகள் நிகழ்ந்தன. அவை வாழ்க்கை நீரோட்டத்தைத் திசை திருப்பி விட்டன. புத்தர் பெருமானுடைய வாழ்க்கை தியாகம் நிறைந்த வாழ்க்கையாகும். அன்பையும் அறிவையும் அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை. துன்புறும் உலகுக்கு பெரும்பணி என்று கூறி, அதற்கு முதலிடம் கொடுத்து, மதத்தின் இதர நடைமுறைகளை ஒதுக்கி விட்டார்.
பேரின்ப நிலையை அடைய விரும்பும் ஒருவன் முதலில். நான்கு பேருண்மைகளை அறிவது அவசியம் ஆகும். அவை:

* துக்க காரணம்.

* துக்க நிவர்த்தி

* துக்க நிவர்த்திக்கு உரிய வழிகள்.

அதேபோன்று எட்டு வித சீலங்களால், ஒருவன் அறிவு விளக்கத்தைப் பெற முடியும் என்றார். அவை:

1. நற்காட்சி

2. நல்லெண்ணம்

3. நல்வார்த்தை

4. நற்செய்கை

5. நல்வாழ்க்கை

6. நன் முயற்சி

7. நல்லவற்றை கடைப்பிடித்தல்

8. நல்லோர் உறவு

-இந்த எட்டு சீலங்களும், துன்பத்தைத் துடைத்துப் பேரின்பத்தைக் கொடுக்கும் வாயில் ஆகும்.



சுகபோகத்தில் அழுந்திக் கிடப்பதும் தக்க பலனைத் தராது; கடும் தவம் புரிவதும் தக்க பலனை தராது. தீவிரமான இந்த இரு போக்குகளையும் புத்தர் பெருமான் ஒதுக்கி விட்டார். ஆசைப் பேய்க்கு அடிமையாகாமலும், உடலையும் உள்ளத்தையும் துன்புறுத்தி வாட்டி வதைக்காமலும் ஆனந்த நிலையை ஒவ்வொரு ஜீவனும் சுயமுயற்சியால் அடையக் கூடிய ஒரு வழியைப் புத்தர் பெருமான் கண்டறிந்தார். புத்தர் கண்ட ஞானத்துக்கு மத்திய மார்க்கம் என்று பெயருண்டு.
கொல்லாமை, கள்ளாமை, காமமின்மை, பொய்யாமை, புறங்கூறாமை, வன்சொல், பயனில மொழியாமை, வெஃகாமை, வெகுளாமை, நற்காட்சி முதலிய தசசீலங்களைப் புத்தம் கூறுகிறது. துக்கத்திற்கும், துன்பத்திற்கும் அடிப்படைக் காரணமே நமது ஆசைகள்தான் என்பதை வலியுறுத்தினார். ஆசையில், இன்பத்தில் நாட்டம் கொண்டு, உயிர்கள் அலைந்து திரியும் போது, இன்பத்தை மட்டுமா அவை அடைகின்றன? அனுபவிக்கின்றன? இல்லை. அவை துன்பத்தையும் கூடவே அனுபவிக்க நேருகின்றன.

நரை, திரை, மூப்பு, நோய், சாக்காடு முதலியன உடலைச் சாடித் துன்புறுத்துகின்றன; கோபம், பொறாமை, ஏக்கம், கவலை, வறுமை, அகந்தை, தற்பெருமை முதலியன மனத்தைச் சாடித் துன்புறுத்துகின்றன. எங்கு பார்த்தாலும் நிலையாமையின் ஆற்றல் மிகுந்து நிற்கிறது. பிணி, மூப்பு, சாக்காடு என்னும் மூன்றும் உயிர்களைப் பாதிக்கிறது. ஆகவே துக்கமே இல்லாத நிர்வாண நிலையை அடைய முயல்வது அவசியமாகும்'' என்று ஒரு முடிவுக்கு வந்தான் சித்தார்த்தன். இன்பத்தைத் தேடி மனிதன் அங்கும் இங்கும் அலைந்து திரிந்த போதிலும், முடிவில் அவன் அடையும் பயன் துன்பந்தான், சாவுதான்.

இவைப்பற்றி இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் சிந்திக்கத் தொடங்கினார். தாம் வாழும் அரண்மனை வாழ்வும், தம் மனைவி மக்களும் தமது சிந்தனைக்கு இடையூறாக, தடையாக இருப்பதை உணர்ந்தார். ஆகவே, அவர் அரச வாழ்வைத் துறந்தார். மனைவி மக்களைத் துறந்தார்; காடு சென்று தவமும் தியானமும் செய்து சிந்திக்கத் தொடங்கினார். அந்த சிந்தனையின் பயனாய், வாழ்க்கையின் அரிய சில முடிவுகளைக் கண்டு, மனத்தெளிவை, அதாவது ஞானத்தை அடைந்தார். தாம் அடைந்த அனுபவ அறிவை, ஞானத்தை மக்களிடையே பரப்பினார்.

''யாம் பெற்ற இன்பம் பெறுக் இவ் வையகம்'' என்னும் உயர் நோக்கோடு, தாம் கண்ட உண்மை நெறிகளை மக்களுக்கு போதித்தார். இதுதான் இன்று பௌத்த மதமாக உயர்ந்து நிற்கிறது.

கெளதம புத்தரையும் அவருடைய போதனைகளையும் பற்றி சுவாமி விவேககானந்தர் கூறிய கருத்துக்கள்:

1. பெளத்த சமயத்தின் செல்வாக்குக்கு உட்படாத நாகரிகம் எதுவும் உலகில் இல்லை.

2. புத்தருடைய போதனைகளுள் கடவுள் பற்றிய பேச்சு இல்லை. ஆன்மா பற்றிய பேச்சு இல்லை. கருமம் செய்வது குறித்து மட்டுமே உள்ளது.

3. புத்தரைக் கடவுள் அவதாரம் என்று இந்தியா வழிபடுகிறது. 4. ஏழை எளிய மக்களுக்கு அவரவர் மொழியிலேயே மத போதனை செய்ய வேண்டும் என்று புத்தர் பெருமான் வலியுறுத்தினார்.

5. ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தி உபதேசம் செய்தவர்களுள் புத்தர் பெருமானுக்கு இணையான ஒருவரை இதுவரை உலகம் காணவில்லை.

6. முழுமையான ஒழுக்க நெறிகளை உலகுக்கு வகுத்துக் கொடுத்த முதல் மனிதர் புத்தர்.

7. யாரும் உங்களுக்கு உதவ முடியாது, உங்களுக்கு நீஙகளே உதவி செய்து கொள்ளுங்கள், உங்கள் ஈடேற்றத்தை நீங்களே தேடிக்கொள்ள வேண்டும் என்றும் புத்தர் பெருமான் போதித்தார்.

8. ஞானத்தாலும் இறை பக்தியாலும் தவத்தாலும் ஒருவர் அடையும் பூரண நிலையை, இவை இல்லாமல் புத்தர் பெருமான் அடைந்திருக்கிறார். 9. அறியாமையும் சாதிப் பிரிவுகளுமே துன்பம் அனைத்துக்கும் காரணம் என்று புத்தர் கூறுகிறார்.

10. சில துறைகளில் பெளத்த சமயம் மேன்மை வாய்ந்த ஒரு சமயம். வேதாந்தத்தோடு சேர்த்து அதைக் குழப்பக்கூடாது.

11. அற்புதமான தார்மீக வலிமை புத்த சமயத்துக்கு இருந்த போதிலும் உருவ வழிபாட்டை தீவிரமாகக் கடைப்பிடித்து, முன்பு நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகளை அது கடுமையாக எதிர்த்தது. ''இது கூடாது அது கூடாது'' என்பதிலேயே அது தன் சக்தியைச் செலவழித்தது. இவற்றின் விளைவாகத்தான் பிறந்த நாட்டிலேயே அது மறைய நேர்ந்தது.



ஆற்றல் மிக்க அறிவு நெறியாக, உலக உயிர்க் குலத்தின் துயர் துடைத்து, துன்பம் போக்கிதூய நெடியாக, மனித இன அமைதியைக் கட்டிக் காத்த அருள் நெறியாக பெளத்தம் விளங்கியது. தமிழர்கள் புத்தரை, தயாவீரன், தர்மராஜன், அருளறம் பூண்டோன், அறத்தகை முதல்வன், பிறவிப் பிணி மருத்துவன், போதி மாதவன், மன்னுயிர் முதல்வன், புத்த ஞாயிறு எனப் பற்பல பெயர்களில் போற்றிப் புகழ்ந்துரைத்து வந்துள்ளனர். கோவலன் தந்தை மாசாத்துவர் பெளத்தர். மாதவியின் மகள் மணிமேகலை பெளத்த பிக்குணியானார். மணிமேகலை பெளத்த நூலே என்றுரைக்கும் திரு வி க, " மணிமேலைச் சொல்லெலாம் அறம், பொருளெலாம் அறம், மணிமேகலையின் நாடெல்லாம் அறம், காடெல்லாம் அறம், புத்தர் பெருமானைத் தமிழில் காட்டும் ஒரு மணி நிலையம் மணிமேகலை" என்று கூறிச் சென்றுள்ளார்.

"பொய்யில் மெய்யைக் கற்பனை செய்துகொண்டு,
மெய்யில் பொய்யைக் காணும் மருளுடையார்
மெய்ப்பொருளை ஒருபோதும் அடைவதில்லை,
அவர்கள் வெறும் ஆசைகளைத் தொடர்ந்து அலைவார்கள்"
மானுட ஜாதியின் மகோன்னத ஞானி கெளதமபுத்தரை இந்துக்கள் ஒரு அவதாரம் எனக் கொள்வார்கள். மணிமேகலையின் செய்யுளோடு புத்தரின் நினைவுகளை நிறைவு செய்வோம்.

பேதமை சார்வா, செய்கை யாகும்
செய்கை சார்வா உணர்ச்சி யாகும்
உணர்ச்சி சார்வா அருவுரு வாகும்
வாயில் சார்வா ஊறா கும்மே
ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும்
நுகர்ச்சி சார்ந்து வேட்கை யாகும்
வேட்கை சார்ந்து பற்றா கும்மே
பற்றிற் ஒன்றும் கருமத் தொகுதி
கருமத் தொகுதி காரண மாக
தோற்றம் சார்பின் மூப்புப் பிணி சாக்காடு
அவலம், அரற்று கவலை, கை யாறெனத்
தவலில் துன்பம் தலைவரும் என்ப.

-மணிமேகலை

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/others/p3.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License