இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகத் தொடர்கள்
தெய்வீக்த் திருவிளையாடல்கள்

சொர்க்கம் போக மறுத்தவர்!

ஜெயவிகா


அடர்ந்த காட்டில் சலசலக்கும் அழகிய நீரோடையை ஒட்டி அமைந்திருந்த அந்த அழகான குடிலில் கணவன் மனைவி மற்றும் ஒரு குழந்தை என்று அளவான குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் குடும்பத்தில் வறுமையின் அடையாளம் சற்று தெரிந்தாலும், எளிமையான வாழ்க்கையால் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை.

குடும்பத் தலைவரான முத்கலனை சிறந்த ஞானி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ஒழுக்கமும், அறிவாற்றலும் மிக்கவராகத் திகழ்ந்தார்.

ஒருநாள்

“சுவாமி...” வாசலில் நின்று கொண்டு யாரோ ஒருவர் குரல் கொடுக்க, சத்தம் வந்த திசையை நோக்கி எட்டிப் பார்த்தார் முத்கலர். குடிசைக்கு வெளியே மாமுனிவர் துர்வாசர் நின்று கொண்டிருந்தார்.

“வாருங்கள் துர்வாசரே... தாங்கள் இங்கு வருகை தந்தது நான் செய்த பாக்கியம்” என்று கூறி அவரை மனமார வரவேற்றார் முத்கலர்.

“எனக்கு உன்னால் விருந்து படைக்க முடியுமா?” துர்வாசரின் வார்த்தைகளில் அதிகாரம் தெரிந்தது.

“என்ன சொல்லி விட்டீர்கள் சுவாமி? உங்களுக்கு நான் விருந்து படைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது என் கடமை. ஆனால்...”

“என்ன ஆனால்...?”



“என்னிடம் இருப்பதைக் கொண்டுதான் உங்களை உபசரிக்க முடியும். தாங்கள்தான் அதை பெருந்தன்மையுடன் ஏற்று எனக்கு அருள்புரிய வேண்டும்...”

“அப்படியே ஆகட்டும்!” என்றார் துர்வாசர்.

தொடர்ந்து, முத்கலர் தனது மனைவியிடம் பத்து நாட்களுக்குப் போதுமான தானியங்களைக் கொடுத்தார். சிறிது நேரத்தில் நறுமணம் கமழ சமையல் தயாரானது. சுவையான அந்த உணவை ஒட்டு மொத்தமாக சாப்பிட்டு விட்டு, அந்த ஏழைத் தம்பதியருக்கு ஆசி கூட வழங்காமல் சென்றார், துர்வாசர்.

பத்து நாட்களுக்கு தேவையான உணவை அவர் மொத்தமாக சாப்பிட்டு விட்டதால், அவர்களுக்கு அடுத்த பத்து நாட்களுக்கு அரையும் குறையுமாக தான் வயிறு நிறைந்தது.

11வது நாள் சமைக்கத் தேவையான தானியங்களைச் சேர்த்துக் கொண்டு வீட்டிற்கு வந்தார் முத்கலர்.

“இன்று நாம் முழுவேளை உணவு சாப்பிடப் போகிறோம்...” என்கிற திருப்தியுடன் வீட்டிற்கு வந்தவர், மனைவியிடம் அந்தத் தானியங்களைக் கொடுத்தார்.

சிறிது நேரத்தில் சுடச்சுட உணவு தயாரானது. சமையலில் இருந்து தவழ்ந்து வந்த மணம் வாசல் வரை வந்து, சற்றே கண்ணயர்ந்த முத்கலரை எழுப்பியது. அதேவேளையில், அங்கு வந்த துர்வாசரின் குரலும் அவரை திடுக்கிட வைத்தது.

“வாருங்கள் சுவாமி...” என்று அன்புடன் அழைத்து, தயாரான உணவை அவருக்கு விருந்து படைத்தார் முத்கலர்.

இந்த முறை விருந்தில் பங்கேற்ற துர்வாசருக்கு ஒரே ஆச்சரியம். முத்கலரை பார்த்தார். அவரது முகத்தில் எந்தவித வருத்தமும் இல்லை. அவரது மனைவி மற்றும் மகனின் முகத்திலும் எந்தவித சலனமும் தென்படாதது அவருக்கு மேலும் ஆச்சரியமாக இருந்தது. இருந்தாலும், அந்த ஆச்சரியத்தை வெளிக்காட்டாமல், விருந்து உண்டபின் அவசரமாக கிளம்பிச் சென்றார். இந்த முறையும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு அவர் ஆசி வழங்கவில்லை.

இரண்டாவது முறையாக துர்வாசருக்கு விருந்து படைத்ததால் அடுத்த பத்து நாட்களுக்கு முத்கலருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் வழக்கம்போல் அரைகுறை சாப்பாடுதான். அடுத்த பதினோறாவது நாள் அவர் தானியங்கள் சேகரித்தவுடன், மூன்றாவது முறையாக வந்து நின்றார் துர்வாசர்.

இப்போதும் மனம் கோணாமல் அவருக்கு விருந்து அளித்தார் முத்கலர். வழக்கம் போல் சாப்பிட்டு விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பினார் துர்வாசர்.

இப்படியாக முத்கலர் தானியங்களை சேகரிக்கும் பதினோறாவது நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தார் துர்வாசர். அவரும் எந்தவித மனஸ்தாபமும் இல்லாமல் நிறைவான மனதுடன் அவருக்கு குறையில்லாமல் விருந்து உபசரித்து வந்தார். அவரும், அவருடைய குடும்பத்தாரும் வயிறார சாப்பிட்டு மாதக்கணக்கானது.

அன்றையதினமும் தானியங்கள் சேகரித்த பதினோறாவது நாள் வந்து சேர்ந்தார் துர்வாசர். அவருக்கு விருந்து பரிமாறப்பட்டது. மனைவி, மகனுடன் புன்னகை மாறாமல் உபசரித்துக் கொண்டிருந்தார் முத்கலர். ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக, ஆச்சரியத்தை வெளிப்படுத்திய துர்வாசர், அதை வார்த்தைகளாக காட்டினார்.

“முத்கலரே..! உனது விருந்தோம்பலில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். முதல்நாள் போன்று என்றும் மாறாமல் உபசரித்த உன் உள்ளத்தை மெச்சுகிறேன். அதற்கு கைமாறாக உனக்கு ஒரு பரிசு தர இருக்கிறேன். இப்போதே வாசலில் நிற்கும் தங்கத் தேரில் சொர்க்கத்துக்குச் செல். அங்கு உன்னை வரவேற்கத் தேவதைகள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்...” என்றார்.



ஆனால், முத்கலர் முகத்தில் எந்தவித பரபரப்பும், ஆச்சரியமும் இல்லை. வழக்கம்போல் அமைதியாகவே பேசினார்.

“சுவாமி... உங்கள் கருணைக்கு மிக்க நன்றி. ஆனால், ஒரு சிறிய வேண்டுகோள். எனக்குத் தாங்கள் சொன்ன சொர்க்கம் என்ன என்பதுதான் புரியவில்லை. தாங்கள் தயவு செய்து அதை எனக்கு உபதேசிக்க வேண்டுகிறேன்...”

“முத்கலரே! நீ வாழ்ந்து கொண்டு இருப்பது கர்மபூமி. சொர்க்கம் என்பது போக பூமி. நீ இங்கு செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் எல்லாம் அங்குதான் உனக்கு கிடைக்கப் போகிறது. அங்கு நீ இதுவரை காணாத இன்பத்தை அள்ளி அள்ளிப் பருகலாம். இந்த பூமியில் நல்ல செயல்களைச் செய்து வருபவர் மட்டுமே அங்கு செல்ல முடியும்”

“சரி சுவாமி.. அங்கு குறைகள் என்று ஏதாவது உள்ளதா?”

“குறைகள் என்றால், ஒன்று மட்டுமே உள்ளது. நீ அங்கு சென்றால் தரும செயல்கள் எதுவும் செய்ய முடியாது. ஏற்கனவே நீ செய்த புண்ணியங்களுக்கான பலன்கள் மட்டுமே கொடுக்கப்படும் இடம்தான் சொர்க்கம்.”

“சுவாமி... தரும காரியங்கள் செய்யும்போது கிடைக்கும் இன்பம் தான் எனக்கு வேண்டும். வெறும் போகம் தரும் இடம் எனக்கு தேவையில்லை. நான் இங்கேயே வாழ்ந்து கொள்கிறேன்” என்று சொர்க்கம் செல்ல மறுத்த முத்கலரை வியப்போடு பார்த்தார் துர்வாச முனிவர்.

“பணம்... பணம்...” என்று அலையும் இன்றைய மனிதர்களில் முத்கலர் போன்ற ஒருவரைக் கூட அடையாளம் காண முடியாது என்பது நாம் சிந்தனை செய்ய வேண்டிய ஒரு விஷயம்தான்!.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p2o.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                              


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License