இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

11.தக்பீர்


கார் டப்பிங் ஸ்டுடியோ நோக்கிப் பறந்தது.

காரின் பின்னிருக்கையில் டப்பிங் ஆர்டிஸ்ட் அஹமது கபீரும் டப்பிங் இன்சார்ஜ் தாசரதியும் அமர்ந்திருந்தனர்.

“நாம டப் பண்ணப்போற படத்தின் டைட்டில் என்ன சார்?”

“தி பெர்ஷியன் கேட். பல்வேறு இனப்பூனைகள், பூனைகளின் தலைவன் பதவிக்குப் போட்டி போடுவதே... கதை. நீங்க மியாவ்விலேயே ஆயிரம் வெரைட்டி காட்ட வேண்டும். உங்க டப்பிங் வாய்ஸ் ஆங்கில ஒரிஜினலையும் தோற்கடிக்க வேண்டும்!”

‘மியாவ்’ என வாய்க்குள் சொல்லிப் பார்த்தான் அஹமது கபீர்.

“ரொம்ப கஷ்டம் சார் டப்பிங்குக்கு வேற ஆள் பாருங்க சார்!”

“மெஜஸ்ட்டிக் வாய்ஸ் உங்களுடையது. ஹீரோ பூனைக்கு உங்க வாய்ஸ்தான் மகா பொருத்தமாக இருக்கும். நாலு நா வேலை. நல்ல பேமென்ட் வாங்கித் தருகிறேன்!”

போர்டிகோவில் கார் நின்றது.

அமெரிக்காவிலிருந்து பட நிறுவன அதிகாரிகள் சிலர் வந்திருந்தனர். அவர்களிடம் அஹமது கபீர் அறிமுகப்படுத்தப்பட்டான்.


திரையில் ஒரிஜினல் வாய்ஸுடன் கார்ட்டூன் படம் ஓடியது.

தமிழ் டப்பிங் வசனங்கள் அடங்கிய பேடை அஹமது கபீரிடம் கொடுத்திருந்தனர்.

கபீர் டப்பிங் பேசினான்.

டப்பிங் இன்சார்ஜ் உதடு பிதுக்கினான். “சரியா வரல கரீம் சார். உங்களை பூனைகளோட ராஜாவா பாவிச்சிக்கங்க. குரலில் மிடுக்கும் இருக்கனும், மியாவ்வும் இருக்கனும்…”

ஏறக்குறைய நான்கு மணிநேர போராட்டத்துக்கு பின் அஹமதுகபீர் இரண்டாயிரம் அடி படத்துக்கு டப்பிங் பேசி முடித்தான்.

லஞ்ச் பிரேக்.

ஒளு செய்து விட்டு அஹமது கபீர் தொழுதான்.

கபீர் தொழுவதை தாசரதி பார்த்துக் கொண்டே இருந்தான்.

“கபீர் ஒரு சந்தேகம் கேட்கலாமா?”

“கேளுங்கள்!”

“தொழ ஆரம்பிக்கும் போது மும்முறை கை உயர்த்தி தொப்புளுக்குக் கீழ் கோர்த்துக் கொண்டீர்கள். கடவுளின் கவனத்தைத் தொழும் உங்கள் பக்கம் திருப்ப அப்படி செய்கிறீர்களா? உங்கள் செய்கை அதிகாலை சேவல் உலகை எழுப்பக் கூரை ஏறி கூவுவது போலிருந்தது…”

கபீர் சிரித்தான்.

“அதனை நாங்கள் தக்பீர் எனக் கூறுவோம். விரல்களை ஒன்று சேர்த்து இரு கைகளை கிப்லா நோக்கி உயர்த்துவோம். காதுகளில் உயர்த்திய கைபடக் கூடாது. ஒரு நாளின் ஐமுறை தொழுகைகளில் 15 முறை தக்பீர் கூறப்படுகின்றன. தக்பீரின் போது நாங்கள் ‘அல்லாஹுஅக்பர்’ எனக் கூறுவோம்!”

“அல்லாஹுஅக்பர் என்றால் என்ன அர்த்தம்?”

“அல்லாஹு மிகப் பெரியவன் என அர்த்தம்!”

“தக்பீர் பற்றி கூடுதல் தகவல்கள் கூறுங்களேன்...”

“தக்பீர் என்பது இறைவனிடம் முழுமையாகச் சரணடைவதற்கான ஒரு வடிவம். பிரார்த்தனை செய்பவர் தினசரி சலாத்தை வழங்க நிற்கும் போது, அல்லாஹ்வுக்கு பணிந்து அவர் / அவள் காதுகள் / தோள்களில் கைகளை உயர்த்துகிறார்!”

“ஓ அப்படியா?”

“தக்பீர் அகந்தை அகங்காரம் நீக்கி மனத்தாழ்மை வளர்த்து சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கு அடிபணிய மட்டுமே. அல்லாஹுஅக்பர் பணிவின் தொடக்கம் இறைவனின் வல்லமை…”

“நைஸ்!”


“தொழுகையின் போது, தொழுகை அல்லாத செயல்களை தடுப்பது தக்பீர் தஹ்ரிமா (முதல் தக்பீர்). மீண்டும் மற்ற விஷயங்களை ஆகுமாக்குவது ஸலாம் கொடுத்தல்!”

“ஓஹோ!”

“தக்பீர் தஹ்ரிமாவுக்கு முன் நிய்யத் மிக முக்கியம். நிய்யத் என்றால் இறையச்சத்துடன் கூடிய தொழும் நோக்கம். நின்ற நிலையில் மட்டுமே தக்பீர் கூறப்பட வேண்டும். அல்லாஹு அக்பர் என்கிற இரட்டை வார்த்தை சொல்லாமல் தக்பீர் கட்ட முடியாது. தனியாகத் தொழுவது அவசியத்தின் பேரில். தக்பீர் தஹ்ரிமா பள்ளிவாசல் இமாம் உடைய தக்பீர் தஹ்ரிமா உடன் சேர்ந்து இருந்தால் நிறைய நன்மை கிடைக்கும்!”

“யா... யா...”

“அல்லாஹ் மிகப்பெரியவன் என்கிற வாக்கியம் எல்லா மதத்தினருக்கும் பொதுவானது. கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து மிகப்பெரியவர் எனலாம். இந்துக்கள் தங்கள் தெய்வம் மிகப்பெரியது எனலாம். மொத்தத்தில் இறைவன் மிகப் பெரியவன்!”

“சரியாகச் சொன்னீர்கள் கபீர்!”

“தக்பீர் தொழுகையின் போது மட்டும் சொல்லப்படவேண்டிய ஒன்றா?”

“இல்லை. தொழுகையில், இன்பத்தில், துன்பத்தில், பிறப்பு இறப்புக்குப் பின், மகிழ்ச்சி மற்றும் நன்றியுண்ர்வின் போது, ஈத் பண்டிகையின் போது, ஹஜ் யாத்திரையில், புரட்சியில், போரில் தக்பீர் கூறப்படுகிறது. முஸ்லிம் அரபுகளால் பயன்படுத்தப்படும் அரபு வெளிப்பாடு தக்பீர். தக்பீர் முழக்கத்தை அரபு கிறிஸ்துவர்களும் பயன்படுத்துகின்றனர்!”

“நல்ல தகவல்!”

“வங்கதேசத்தில் 2013ல் சபார் கட்டடம் இடிந்து 1129பேர் இறந்தனர். பதினேழு நாட்களுக்கு பின் கட்டட இடிபாடுகளிலிருந்து ரேஷ்மா பேகம் உயிருடன் மீட்கப்பட்டார். அப்போது மீட்பாளர்கள் அல்லாஹு அக்பர் எனக் கோஷமிட்டனர். அரபு கால்பந்து வர்ணனையாளர்கள் வர்ணனையின் போது, அல்லாஹு அக்பர் கூறுகின்றனர். ஈரானிய புரட்சியில் தக்பீர் கூறப்பட்டுள்ளது. இந்திய ஒவைசி அபுதாஹிர்கள் பதவி பிரமாணத்தின் போது, அல்லாஹு அக்பர் எனக் கோஷமிட்டனர். பாலஸ்தீனியக் கிறிஸ்தவர்கள் தக்பீர் கூறுகின்றனர்”

“தக்பீரின் பெருமைகள் இவ்வளவு இருக்கா?”

“ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு கொடியில் அல்லாஹுஅக்பர் உள்ளது. ஈரான் இஸ்லாமியக் குடியரசின் அரசியலமைப்பின் 18வது பிரிவின் படி ஈரான் கொடியில் அல்லாஹு அக்பர் 22முறை எழுதப்பட்டுள்ளது. ஈராக் கொடியிலும் அல்லாஹு அக்பர். பாகிஸ்தானின் வஜிரிஸ்தானில் பிரிட்டீஸாரை எதிர்த்த எதிர்ப்பு இயக்கம் அல்லாஹு அக்பர் பொறிக்கப்பட்ட சிவப்புக்கொடி ஏந்தியது. ஏமனில் ஹுதிகள் பயன்படுத்திய கொடியில் அல்லாஹுஅக்பர் பச்சை நிறத்தில்…”

“தொழும் போது தக்பீர் கூறிவிட்டுக் கைகளை எங்கு வைக்க வேண்டும்?”

“தொப்புளுக்கு மேல் தக்பீர் கட்டுவதே சரியான முறை. ஹனபி வகை முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழேக் கைகளைக் கட்டிக் கொள்கின்றனர். வஹாபி வகை முஸ்லிம்கள் மார்பில் கைகளைக் கட்டிக் கொள்கின்றனர். ஆப்பிரிக்க முஸ்லிம்கள் கைகளைக் கட்டிக் கொள்ளாமல் தொங்க விடுகின்றனர்!”

“கைகளை எங்கு மடக்கினால் என்ன? பிச்சைப் பாத்திரத்தை மனிதர்களிடம் நீட்டாமல், இறைவனிடம் நீட்டினால் சரி”

“லிபியாவின் 1969-2011 தேசியகீதம் அல்லாஹு அக்பர். 1977ல் எடுக்கப்பட்ட ஒரு மலையாள படத்தின் டைட்டில் அல்லாஹு அக்பர். ஈரானில் ஒரு கிராமப் பகுதிக்குப் பெயர் அல்லாஹு அக்பர். பிராண்ட் நுபியனின் 1993 ஆல்பம் அல்லாஹு அக்பர். லூனஸ் மத்தப் அல்லாஹு அக்பர் என்கிற பாடலைப் பாடியுள்ளார். வடதுருக்கி மலையில் அல்லாஹு அக்பர் தக்வான் பகுதி உள்ளது”

“மேற்கத்திய நாடுகள் இஸ்லாமை எதிரி நம்பிக்கையாகக் கருதுவது ஏன்?”

“இஸ்லாமின் கட்டுகோப்பு அவர்களைப் பயமுறுத்துகிறது. குடி, விபச்சாரம், வட்டி, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான இஸ்லாம் உலகக் கார்ப்பரேட்களின் ட்ரில்லியன் வருமான வழிகளை அடைக்கிறது”

“இருக்கலாம்!”

“வேறு எதாவது கேள்விகள்?”

“மொஹரம் ஊர்வலத்தில் “நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்” எனக் கோஷமிடுகிறார்கள். அதன் அர்த்தம் என்ன?”

“நஃரதுன் என்றால் உரக்கச் சப்தமிடுதல் எனப் பொருள். நஃரா எனவும் பொருள்படும். நகரா என்பது முரசு வாத்தியம். ‘யா அல்லாஹ் ஜாதி மதம் இனம் யாவும் தேவையில்லை. அல்லாஹ்வின் கருணை மட்டும் வேண்டும்’ என்பதே நாரே தக்பீர் அல்லாஹு அக்பரின் பொருள்!”

“ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் ‘அல்லாஹு அக்பர்’ எனக் கோஷமிடுகிறார்களே?”

“அவர்களின் கொடூரமான வன்முறைகளை மறைக்க அல்லாஹு அக்பர் கோஷமிடுகின்றனர். அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல. அவர்களின் செயல்களை தூய்மையான முஸ்லிம்கள் ஆதரிப்பதில்லை. அந்த மனித மிருகங்கள் அல்லாஹு அக்பரை நாஜி சல்யூட் பாணியில் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு எங்கள் வலிமையான கண்டனங்கள்!”

“தக்பீர் முழக்கம் காதில் கேட்டால், நாகூர் ஹனிபாவின் பாடலைக் கேட்டிருக்கிறேன். கபீர்… அற்புதமான பாடல். மத நல்லிணக்கத் தேவதை நாகூர் ஹனிபா...”

“மத நல்லிணக்கத் தேவனாக டைரக்டர் ஏ பி நாகராஜனையும் வரிக்கலாம்!”


“இந்து மதத்தில் பிள்ளையாரைக் கவர பக்தர்கள் தலையில் குட்டிக் கொள்வார்கள், உக்கி போடுவார்கள். காண்டாமணியை அடிப்பார்கள். நாம்தான் இறைவனின் கவனத்தைப் பெற முயற்சிக்கிறோம். மீன்தொட்டி மீனை சிறுவன் இடைவிடாது வேடிக்கை பார்ப்பது போல, இறைவன் நம்மை நொடிக்கு நொடி கண்காணிக்கிறான். மனித நேயத்துடன் கூடிய இறைபக்தியே இறைவனுக்கு உவப்பானது!”

“உண்மைதான் தாசரதி!”

“அல்லாஹ் மிகப்பெரியவன் என்கிற கோஷத்தைப் போலவே நானும் கோஷமிட விரும்புகிறேன். சிவாய நமஹ! ஓம்சிவாய நமஹ!”

“லக்கும் தீனுக்கும் வலியதீன். உங்கள் மார்க்கம் உங்களுக்கு. எங்கள் மார்க்கம் எங்களுக்கு. பரஸ்பரம் மதித்து அங்கீகரித்து மகிழ்ச்சியாக வாழ்வோமாக!”

மீண்டும் டப்பிங் ஆரம்பித்தது “மியாவ் நானே ராஜா!” என்றான் அஹமது கபீர்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p11.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License