இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

10.ஹிஜ்ரி


சுவரில் தொங்கும் தினசரி நாட்காட்டியிலிருந்து முந்தைய நாள் தேதியைக் கிழித்தான் பர்ஹான் முகமது.

“அத்தா!” அழைத்தான் பர்ஹானின் மகன் ஹம்சா.

“என்ன அம்சா?”

“காலம் நேரம் எல்லாம் நாம உருவாக்குனதா இறைவன் உருவாக்குனதா அத்தா?”

“பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் மட்டும்தான் காலம் நேரம் எல்லாம். பிரபஞ்சங்களையும் உயிர்களையும் படைக்கும் போதே இறைவன் காலத்தையும் நேரத்தையும் படைத்து விட்டான். பூமி தன்னைத்ததானே ஒருமுறை சுற்றி முடிக்க 24மணி நேரமாகிறது. அது ஒரு நாள். பூமி சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 365.25 நாட்களாகிறது. அது ஒரு வருஷம். ஒரு மணி நேரத்தை 60நிமிடங்களாகவும் ஒரு நிமிடத்தை 60நொடிகளாகவும் பிரித்திருக்கிறோம். ஒரு நாளில் பனிரெண்டு மணிநேரம் பகல் பனிரெண்டு மணிநேரம் இரவு...”

“நாம் எந்த வகை காலண்டரை பயன்படுத்தி வருகிறோம்?”

“உலகில் பெரும்பான்மையானவர்கள் கிரிகோரியன் காலண்டரைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். ஜுலியன் காலண்டரை கைவிட்டு அக்டோபர் 1582ல் போப் கிரிகோரி XIII கிரிகோரியன் காலண்டரை அமுல்படுத்தினார். கிரிகோரியன் காலண்டரை சூரியகாலண்டர் எனவும் கூறலாம். கிரிகோரியன் காலண்டரில் 12 மாதங்கள். ஜனவரி (31), பிப்ரவரி (28) - (லீப் வருடத்தில் 29), மார்ச் (31), ஏப்ரல் (30), மே (31), ஜுன் (30), ஜுலை (31), ஆகஸ்டு (31), செப்டம்பர் (30), அக்டோபர் (31), நவம்பர் (30), டிசம்பர் (31)”


“உலகில் எத்தனை வகையான காலண்டர்கள் உள்ளன அத்தா?”

“நாற்பது வகையான காலண்டர்கள் உலகில் புழங்குகின்றன மகனே. ஜுலியன் காலண்டர், இஸ்லாமிக் காலண்டர், ஹிந்து காலண்டர், பெங்காலி காலண்டர், ரோமன் காலண்டர், புத்தக் காலண்டர், ஹிப்ரு காலண்டர், இண்டியன் நேஷனல் காலண்டர், விக்ரம் சம்வாத், பகாய் காலண்டர், நானாசாகி காலண்டர், லூனிஸோனார் காலண்டர், அஸிரிரியன் காலண்டர், கொரியன் காலண்டர், எதியோப்பியன் காலண்டர், ஜப்பானீஸ் காலண்டர், தாய் சோலார் காலண்டர், பெர்பெர் காலண்டர், அர்மீனியன் காலண்டர், திபெத்தியன் காலண்டர், பர்மீஸ், மலையாளம், இரானியன், புராதண கிரீக், பிரன்ச் ரிபப்லிகன் காலண்டர் என காலண்டர்களை பட்டியலிடலாம்…”

“தமிழ் காலண்டரை பற்றி சொல்லுங்கத்தாI”

“தமிழ் காலண்டர் தமிழ் பேசும் எல்லா நாடுகளிலும் புழங்குகிறது. தமிழ்நாட்டில் இலங்கையில் மலேசியாவில் சிங்கப்பூரில் மொரிஷியஸில் தமிழ் காலண்டர் பயன்படுத்தப்படுகிறது. தமிழ் காலண்டர் பண்பாட்டு ரீதியாக மதரீதியாக விவசாய ரீதியாக புழக்கத்தில் இருக்கிறதுI”

“ஓ அப்படியா அத்தா?”

“தமிழ் வருடத்துக்கு பொது ஆண்டு 365நாட்கள் (8760 மணிகள் அல்லது 525600 நிமிடங்கள் அல்லது 31536000நொடிகள். நெட்டாண்டுக்கு 366நாட்கள்…”

“தமிழ் மாதங்கள் எத்தனை?”

“பன்னிரெண்டு. சித்திரை (31), வைகாசி (31), ஆனி (32), ஆடி(31), ஆவணி(31), புரட்டாசி (31), ஐப்பசி (29 அல்லது 30), கார்த்திகை (29 அல்லது 30), மார்கழி (29), தை (29அல்லது 30), மாசி (29அல்லது 30), பங்குனி(31)”

“சூப்பர்”


“தமிழ் காலண்டர் அறுபது வருட சுழற்சி கொண்டது. பிரபவ, விபவ, சுக்கில, ப்ரமோதூத, ப்ரஜோத்பத்தி, ஆங்கிரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதான்ய, பிரமாதி, விக்கிரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய, சர்வ சித்து, சர்வதாரி, விரோதி, விக்ருதி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஹேவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விசுவாசுவ, பரபாவ, பிலவங்க, கீலக, சௌமிய, சாதாரண, விரோதகிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, ராட்டசச, நள, பிங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரௌத்ரி, துன்மதி, துந்துபி, ருத்ரோத்காரி, ஏக்தாட்சி, குரோதன, அட்சய ஆகியனவாகும்”

“அப்பாடி எவ்வளவு பெரிய பட்டியல்?”

“27நட்சத்திரங்கள் மற்றும் 12ராசிகளின் அடிப்படையில்தான் தமிழ்மாதங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.”

“முஸ்லிம்களுக்கென்று உள்ள காலண்டர் பெயர் எது அத்தா?”

“ஹிஜ்ரி காலண்டர்”

“அதனை பற்றி சொல்லுங்கத்தா”

“நபிகள் நாயகம் மரணத்துக்கு பின் இரண்டாவது கலிபாவாக பதவியேற்றார் உமர் இப்னு அல் கத்தாப். இவர் கிபி 634-644 வரை ஆட்சி செய்தார். இஸ்லாமியருக்கென்று ஒரு நாட்காட்டி வேண்டுமென்று உமர் முடிவு செய்தார். மார்க்க அறிஞர்களுடன் கூடி ஆலோசித்தார். அவர்கள் நான்கு தெரிவுகளை உமர் முன் வைத்தனர். இஸ்லாமிய நாட்காட்டி கீழ்க்கண்ட நான்கு நிகழ்வுகளின் ஒன்றில் ஆரம்பிக்கலாம் என்றனர்”

“அந்த நாலு நிகழ்வுகள் என்னென்ன?”

“நபிகள் நாயகம் பிறப்பு (ஒன்று), நபிகள் நாயகம் நபித்துவம் பெற்ற நாள்(இரண்டு), நபிகள் நாயகமும் நபி தோழர்களும் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு புலம் பெயர்ந்த நாள் (மூன்று), நபிகள் நாயகத்தின் மரணம் (நான்கு)”

“எந்த நிகழ்வை தெரிவு செய்தார் இரண்டாவது கலிபா?”

“நபிகள் நாயகமும் நபிதோழர்களும் மெக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த நாளை உமர் தேர்ந்தெடுத்தார். இஸ்லாமிய நாட்காட்டிக்கு ‘ஹிஜ்ரி’ என பெயர் சூட்டப்பட்டது. ஹிஜ்ரி சந்திரனை அடிப்படையாக கொண்ட காலண்டர்…”

“இஸ்லாமிய நாட்காட்டி எந்த வருடம் ஆரம்பித்தது?”

“ஜுலைமாதம் 15ஆம்தேதி கிபி 622ஆம்ஆண்டு ஹிஜ்ரி காலண்டர் தொடங்கியது”

“ஹிஜ்ரி காலண்டரின் மாதங்களின் பெயர்களை கூறுங்களேன்”

“முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜுமாதா அல் ஊலா, ஜுமாதா அல் உக்ரா, ரஜப், ஷஅபான், ரமலான், ஷவ்வால், துல்கஅதா மற்றும் துல்ஹஜ்ஜு. பனிரெண்டு மாதங்களில் ரஜப், துல்காயிதா துல்ஹஜ்ஜு, முஹர்ரம் சிறப்பானவை. ரபியுல் அவ்வல் மாதபிறை 12திங்கட்கிழமை நபிகள் நாயகம் பிறந்தார்கள். அவரது பிறந்தநாளைதான் ‘மீலாது நபி’ என கொண்டாடுகிறோம். ரஜப் மாதத்தில் போரிடுவது தடுக்கப்பட்டிருக்கிறது. அம்மாதத்தில்தான் நூஹ் நபி கப்பல் கட்டி மக்களை பிரளய வெள்ளத்திலிருந்தது காப்பாற்றினார். ஷஅபான் மாதத்தில் தான். ஈஸா நபிக்கு இன்ஜீல் வேதம் இறக்கப்பட்டது. ரமலானின் கடைசி பத்து நாட்களில் தான் குர்ஆன் இறக்கப்பட்டது. பன்னிரெண்டாவது மாதம் துல்ஹஜ்ஜில் ஐந்தாவது கடமையாக ஹஜ்யாத்திரை நாம் மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் எல்லா மாதங்களும் நல்ல மாதங்களே எல்லா நாட்களும் நல்ல நாட்களே...”

“இன்று இஸ்லாமிய நாட்காட்டி தேதி என்ன?”

“ஹிஜ்ரி 1445 முஹர்ரம் ஆறு”

“ஒரு முக்கியமான கேள்வி அத்தா”

“கேளு”

“உலகில் 200 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக கூறியுள்ளீர்கள். முஸ்லிம்கள் எல்லாரும் இஸ்லாமிய காலண்டரை பின்பற்றுகின்றனரா?”

“அரபு நாடுகளில் இஸ்லாமிய காலண்டர் பின்பற்றபடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அறவே இல்லை என கூறலாம். ஆங்கில கிரிகோரியன் காலண்டரை தான் நாம் அனைவரும் பின்பற்றுகிறோம்...”

“வாட் எ பிட்டி”

“மதரஸாக்களில், நிக்காஹ் பதிவேட்டில், நிக்காஹ் அழைப்பிதழ்களில், பள்ளிவாசல்களில் இஸ்லாமிய காலண்டர் தேதிகளை குறிப்பிடுகிறார்கள்”

“எனக்கு எதாவது அறிவுரை சொல்ல விரும்புகிறீர்களா, அத்தா?”


“ஆமாம்... உலகமக்களோடு ஒட்டி வாழ ஆங்கில காலண்டரை இடது கையில் வை. தமிழ்நாட்டில் வசிக்கும் இந்தியர் நாம். நம் தாய்மொழி தமிழ். அதனால் தமிழ் காலண்டரை வலதுகையில் வை. இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்திருக்கிறோம் நாம். இறைவன் மீதும் நபிகள் நாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆகவே, ஹிஜ்ரி காலண்டரை உன் இதயத்தில் வை...”

“டெரிபிக் அறிவுரை அத்தா”

“இது உனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்துக்கும் பொருந்தும்…”

“கரக்ட்”

“மகனே, வருகிற வெள்ளிக்கிழமை சனிக்கிழமை முஹர்ரம் 9, முஹர்ரம் பத்து ஆஷுரா நோன்பு நோற்போம்”

“ஓகே... டன் அத்தா” வலது கட்டை விரல் உயர்த்தினான் ஹம்சா.

“எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்” என்றான் பர்ஹான் முகமது.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p10.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License