இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

9.அதற்கு என்ன அர்த்தம்?


அறச்செல்வி தனது திறன்பேசியைக் கையில் எடுத்தாள். முகநூல் பக்கத்தைத் திறந்தாள். ஒவ்வொரு பதிவாய்ப் பார்த்துக் கொண்டே வந்தாள்.

பரிமேலழகன் பரி என்பவர் பதிவில்,

ஐந்து அம்ச இம்சை

1. கண்ணீர் என்பது இமையமழை.

2. ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து பயன்படுத்தப்படும் டூத்பிரஷே ஆதிபிரஷ் எனப்படும்.

3. மென்று விழுங்க முடியாமல் துப்பி விடுபவருக்கும் உணவுக்கும் இடையே உள்ள உறவே துப்புறவு எனப்படும்.

4.சோற்றுக்கும் மேக்கப் போட்டால்தான் மதிப்பு கூடும் என்பதற்கு உதாரணமே பிரியாணி.

5. நக்கல் செய்வது விரும்பத்தகாத குணம்தான். ஆனால் கோன் ஐஸ்கிரீம் சாப்பிடும் போது நக்கல் செய்தே ஆக வேண்டும்.

படித்துவிட்டு அறச்செல்வி சிரித்தாள்.


‘சூப்பர்’ என பின்னூட்டம் இட்டாள். அடுத்த முகநூல் பதிவுக்கு போனாள் அதில்-

பெரியகுளம் வடக்கு பள்ளியிலிருந்து ஒரு வபாத் அறிவிப்பு.

ஜெய்புனிஸா நகரைச் சேர்ந்த ஹாஜியார். எஸ். என் கலந்தரின் மகனும் பாத்திரக்கடை அபூபக்கரின் தந்தையுமான ஜனாப் கே. யாசின் இன்று அதிகாலை 3.30மணிக்கு வபாத்தாகி விட்டார். அவரின் ஜனாஸா இன்று மாலை அஸர் தொழுகைக்குப்பின் வடக்குப்பள்ளி கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

அந்தப் பதிவுக்கு மட்டும் 412 பின்னூட்டங்கள்.

பின்னூட்டம் இட்ட பலருக்கு இறந்து போன யாசினை கட்டாயம் தெரிந்திருக்காது. முகநூல் பரிட்சயம் கூட இருந்திருக்காது. ஆனாலும், பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள்.

‘இன்னாலில்லாஹி இன்னா இலைஹி ராஜிவூன்!’

அறச்செல்விக்கு அந்த வாக்கியத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆனால், யாசினின் மரணத்துக்கு அனைவரும் வருத்தம் தெரிவித்திருக்கிறார்கள் என்பதனை புரிந்து கொண்டாள். ஆனாலும் அவளுக்கு உலக ஆச்சரியம்… நானூத்தி சில்லரை மனிதர்கள் வெவ்வேறு விதமாய் வருத்தம் தெரிவிக்காமல் ஒரே மாதிரியா வருத்தம் தெரிவிப்பார்கள்? முஸ்லிம் மக்களின் ஒற்றுமை எனக்குச் சற்றேப் பொறாமையூட்டுகிறது. இந்த ‘இன்னாலில்லாஹி’ வாக்கியத்துக்கு என்ன அர்த்தம்?

முகநூல் தோழி தபஸ்ஸும் ஆசியாவின் ஞாபகம் வந்தது. அவளது பத்து இலக்க எண்ணை அமுக்கினாள் அறச்செல்வி.

எதிர்முனை உயிர்த்தது. “ஹாய் அறச்செல்வி!”

“ஹாய்ஹாய் ஆசியா...”

“என்ன அதிசயமா இன்னைக்குப் போன் பண்ற...?”

“ஒரு தகவல் தெரிஞ்சிக்கத்தான் போன் பண்ணினேன்!”

“சொல்லு...”


“இன்றைக்கு முகநூலை மேய்ந்து கொண்டிருந்தேன். அதில் ஒரு முஸ்லிம் மரண அறிவிப்பு. அந்தப் பதிவுக்குப் பின்னூட்டமாய் அனைவரும் ‘இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்’ போட்டிருந்தார்கள். அதற்கு என்ன அர்த்தம்?”

“அதற்கு ‘இறைவனிடமிருந்து வந்தோம், இறைவனிடமேத் திரும்பிச் செல்கிறோம்’ என அர்த்தம். கூடுதலாய், ‘எல்லாம் வல்ல அல்லாஹ் இறந்தவரின் பிழைகளை மன்னித்து புதைகுழியில் சங்கடங்களை இலேசாக்கி மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை கொடுத்து அருள் புரிவாயாக ஆமீன்’ எனவும் பொருள்படும். இந்த ‘இன்னாலில்லாஹி’ வாக்கியம் திருக்குர்ஆனில் உள்ள ஒரு வரிதான்!”

“ஓ!”

“இந்துக்களில் ஒரு சக இந்து இறந்துவிட்டால் என்ன சொல்வார்கள்? ‘அவரின் ஆன்மா சாநதியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’, ‘இறைவனடி சேர்ந்தார்’, ‘இறைவனின் ஜோதியோடு கலந்தார்’, ‘வைகுண்ட பதவி அடைந்தார்’, ‘சிவபெருமானின் திருவடி நிழலை அடைந்தார்’, ‘பரமபதம் அடைந்தார்’, ‘முக்தி அடைந்து விட்டார்’, ‘பிறவிக்கடல் நீந்திக் கடந்து விட்டார்’, ‘வீடு பேற்றினை அடைந்து விட்டார்’, எல்லாவற்றுக்கும் மேலாக, சுருக்கமாக ‘ஓம் சாந்தி’ எனவும் கூறுவர்!”

“உண்மைதான்!”

“கிறிஸ்துவர்களில் ஒரு சக கிறிஸ்துவர் இறந்துவிட்டால், ‘கர்த்தருக்குள் அவர் நித்திரை அடைந்து விட்டார்’, ‘நித்திய இளைப்பாறுதலுக்கு சென்றுவிட்டார்’ எனவும் கூறுவர்”

“அப்படியா?”

“புத்த மதத்தினருக்கு மனம், ஆன்மா, சுயத்தில் நம்பிக்கை இல்லை, அதனால் சகபுத்த மதத்தினர் யாராவது இறந்துவிட்டால், ‘நிர்வாணா நிலை’ அடைந்துவிட்டதாகக் கூறுவர்!”

“டெரிபிக்!”

“உங்க ரிக்வேதம் 10.16/19 சொல்வதைப் பார்ப்போம். அக்னி அவனை எரித்துவிடாதே, அவனை எரித்து விடாதே. அவனுடைய உடம்போ அவனுடைய தோலோ சிதறிவிடாதே. எல்லா நெருப்பையும் உடையவரே நீ அவனைப் பக்குவபடுத்தியதும் அவனை பித்ருக்களிடம் அனுப்பு. அக்னியை உடையவனாய் அவனை ஆயத்தபடுத்தி அவனை பித்ருக்களிடம் ஒப்படைத்து விடு. அவனைக் காத்துக் கொண்டிருக்கும் ஜீவனை அடையும் போது, அவன் தெய்வீக சித்தத்துக்கு அடி பணிவான். சூரியன் உன் கண்ணைப் பெறுகிறது. காற்று உன் பிராணனை (சுவாசம்) உனது தகுதியின்படி பூமிக்கோ வானத்திற்குகோச் செல். உனது பங்காக இருந்தால் தண்ணீருக்குப் போ. நீ போய் உன் அங்கத்தினர் அனைவரோடும் செடிகளில் உன் வீட்டை உருவாக்கு!”

“எனக்கு ரிக்வேதம் தெரியாது!”

“என்னால் முடிந்த அளவு பிற மதங்களைப் பற்றியும் படித்திருக்கிறேன். நல்ல விஷயங்களை எடுத்து என் மனதில் சேமித்து வைத்திருக்கிறேன்!”

‘கிரேட்!”

“இஸ்லாமில் மரணத்தைப் பற்றி சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவர் இறைவனிடம் ‘மரணத்தை தா, இறைவா’ என வேண்டக்கூடாது... தற்கொலை கூடவே கூடாது. இஸ்லாமியர்கள் யாரும் தங்களைத் தாங்களேக் காயப்படுத்திக் கொள்ளக் கூடாது. மரணம் நமக்கு எதிரி அல்ல, அதனைக் கண்டு நாம் பயப்படக் கூடாது”

“நல்ல விஷயம்!”

“யூதர்களுக்கு நரகத்தின் மீதும், சொர்க்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை. யூதர்கள் நம்பிக்கையின்படி இறப்புக்குப் பின் உயிர்கள் தூய்மைபடுத்தப்படுகின்றன. தூய்மைப்படுத்தப்பட்ட உயிர்கள் ‘ஓலம் ஹா-பா’ ல் பாதுக்கப்படுகின்றன. மீட்பாளர் வரும் நாளில் அனைத்து உயிர்களும் ஒன்று சேருகின்றன. துக்கம் இல்லை, போர் இல்லை, தீமை இல்லை, பூரணமான அமைதி நிலவும்...”

“இந்த விஷயத்தை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை!”

“பொதுவாக ஒரு மனிதர் இறந்து விட்டால் அவர் நமக்கு செய்த தீமைகள் நம் முன் விஸ்வரூபித்து தலைவிரித்து ஆடும். ‘அயோக்கியப்பாவி... தொலைஞ்சிட்டான்டா… அவன் எனக்குச் செய்த கெடுதிகளுக்கு இறைவன் தக்கக் கூலி கொடுத்திட்டான்டா’ எனக் கூத்தாடுவோம். அல்லது ‘அவன்தான் இறந்தான் நான் நூத்தி சில்லரை வருடங்கள் உயிரோடு இருப்பேன்’ என ஆணவத்தால் கொக்கரிப்போம் அல்லது ஒரு மரத்திலிருந்து ஒரு இலை விழுந்ததாக அல்லது பழுத்த பழம் விழுந்ததாகக் கருதி அந்த மரணத்தை இயல்பாகக் கடப்போம். ஆத்திகத்தில் முத்துக் குளித்தவர்கள் அவரவர் ஆன்மிக அனுபவத்துக்கு ஏற்ப இறந்தவர்கள் அடைய வேண்டிய இடத்தை ஆலாபிப்பார்”

“ஆமா!”

“மனிதனின் உடலும் உயிரும் அமானிதம். கொடுத்தவன், எப்போது வேண்டுமானலும் எடுத்துக் கொள்வான். இறந்தவனின் மீது நம் சுயநலம் சார்ந்த தீர்ப்புகளை கொட்டக் கூடாது. இறந்தவனின் பத்துப் பிழைகளை மன்னிக்க இறைவனை வேண்டினால் இறைவனும் அந்தப் பத்துப் பிழை மனிதனை மன்னித்தால் பதினோரு பிழை உள்ள நம்மையும் மன்னிக்காமலா விட்டு விடுவான்? ஒரு சக முஸ்லிம் இறந்து விட்டால் முஸ்லிம் வாயால் உரக்க ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ கூறுவான். எழுதும் நேரத்தில் ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ’எழுதுவான். அவனது ஆன்மாவும் இறந்தவனுக்காக, ‘இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்’ கூறும் இஸ்லாமில் ஒருவர் இறந்து விட்டால் உயிரோடு இருப்பவர் என்ன கூற வேண்டும் என்கிற தெளிவான விதிமுறை இருக்கிறது. அந்த விதிமுறையைப் பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் பின்பற்றுவது எளிதான விஷயம்தானே? இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!”


“உங்கள் கட்டுக்கோப்பான மதத்தில் நாத்திகர்கள் இல்லையா?”

“அப்படியும் சில சதவீதம் பேர் இருப்பார்கள். வெளியில் காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஆற்றில் மீன் மட்டுமா நீந்தும்! சருகுகளும்தானே மிதக்கும்!”

“நல்ல உதாரணம்!”

“சந்தேகம் தீர்ந்ததா, போனை வைக்கவா...?”

“இறுதியாக ஒரு சந்தேகம்!”

“என்ன?”

“அந்த மரண அறிவிப்புக்கு நானென்ன பின்னூட்டம் இட...?”

“ஆழ்ந்த இரங்கல்கள்’ அல்லது ‘என் இதயப்பூர்வமான வருத்தங்கள்’ எனப் போடு. அதுதான் யதார்த்தமாக இருக்கும்!”

“நன்றி”

“யாராவது நமக்கு இரங்கல் செய்தி வெளியிடும் வரை அல்லது ‘இன்னாலில்லாஹி’ கூறும் வரை நாம் நம் சமூகத்துக்குப் பயன்படும் வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோமாக...!”

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p9.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License