இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை
இஸ்லாமியக் கதைகள்

இஸ்லாமிய நீதிக்கதைகள்

ஆர்னிகா நாசர்

47. சஜ்தா


தொழுது முடித்து தொழுகை விரிப்பை மடித்து பத்திரப்படுத்தினார் அறுபது வயது அஹமது கபீர்.

“அஸ்ஸலாமு அலைக்கும் அப்பா!” ராவுத்தர் முஸ்லிம்கள் தாத்தாவை அப்பா என்றே அழைப்பர்.

“வஅலைக்கும் ஸலாம் அப்துல் பத்தா!”

பத்து வயது சிறுவன் ஓடிப்போய் தாத்தாவின் கால்களை கட்டிக் கொண்டான்.

“அப்பா! தொழுகையின் போது நீங்கள் செய்த சஜ்தா பற்றி சில கேள்விகள்!”

“கேள்!”

“சஜ்தா என்றால் என்ன?”

“சுஜுத் என்கிற அரபிவார்த்தை சஜ்தா ஆகியிருக்கிறது. சஜ்தா என்பது முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் இறைவனின் தாள் பணிவது. சஜ்தா ஒவ்வொரு ரக்காயத்திலும் இருமுறை செய்யப்படும். ‘ஏழு உறுப்புகளின் மீது சஜ்தா செய்யும்படி நான் ஏவப்பட்டுள்ளேன். நெற்றி, இருகைகள், இருமூட்டுகள், இரு பாதங்கள் என இவற்றின் மீது சஜ்தா செய்ய வேண்டும்’ என நூல் புகாரியில் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ஒரு ஹதீஸில் எடுத்துரைக்கிறார்!”

“ஓஹோ!”


“நெடுஞ்சாண்கிடையாக வணங்கும் போதும் அந்த வணக்கத்தின் போது இரந்து வேண்டும் போதும் ஓர் அடிமை இறைவன் என்கிற எஜமானனுக்கு மகா நெருக்கமாகிறான்!”

“அடிமை என்கிற வார்த்தை பிரயோகம் சரிதானா அப்பா?”

“பொருளால், பதவியால், அதிகாரத்தால் ஒருவன் உன்னை அடிமையாக்கினான் என்றால் அவனை எஜமானன் என்று ஏற்று அவனின் தாள் பணிவது அவமானமான செயல். உன்னையையும் உன்னை சுற்றி பிரபஞ்சத்தையும் உருவாக்கி நொடிக்கு நொடி உன் மீது ஆளுமையை செலுத்தி வரும் இறைவன் என்கிற ரப்புவுக்கு நான் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாம் அடிமைகள்தானே? அடிமை என்று இறைவன் நம்மை பாவிக்கவில்லை. நன்றியுணர்வுடன் நாம்தான் இறைவனை எஜமானன் என்று பாவிக்கிறோம்!”

“சஜ்தா எப்போது தொடங்கியது?”

“இறைவன் ஆதம் நபிகளை படைக்கும்போது மலக்குகளை ஆதமுக்கு சஜ்தா செய்ய சொல்கிறான். மலக்குகள் சஜ்தா செய்கின்றனர். இப்லீஸ் சஜ்தா செய்ய மறுக்கிறான். அத்துடன் மறுமைநாள் வரைக்கும் ஆதமின் மீதும் ஆதமின் சந்ததிகள் மீதும் போர் தொடுப்பதாக இப்லீஸ் சூளுரைக்கிறான்...”

“ஒரு சந்தேகம் அப்பா!”

“என்ன?”


“சஜ்தா இறைவனுக்குரியதுதானே? மலக்குகள் ஏன் மனிதருக்கு சஜ்தா செய்ய வேண்டும்? அப்படி என்றால் மனிதர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் ஆகி விடுவார்களே?”

“நல்லகேள்வி. ஆதமின் மீதான மலக்குகளின் சஜ்தா மரியாதைக்கும் அங்கீகாரத்துக்கும் உட்பட்டது. அது மனிதத் தோன்றல்களுக்கான ஆதரவு சமிக்ஞை!”

“வாவ்!”

“சஜ்தா இறை நம்பிக்கையாளர்களையும் நாத்திகர்களையும் இனம் கண்டு பிரிக்கிறது. சஜ்தா உடல் ரீதியான பணிவு. சஜ்தா ஆன்மரீதியான தூய்மை படுத்தல். சஜ்தா இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சைகை. சஜ்தா இறைவனின் கருணையை கோரும் ஆன்மிக ஆலாபனை. தொழுகையில் ஒவ்வொரு சஜ்தாவின் மீதும் ‘சுபான ரப்பியல் ஆலா’ என மும்முறை ஓத வேண்டும். இதன்பொருள் ‘மகத்தான இறைவனுக்கே எல்லாப்புகழும்’ என்பதே!” முறுவலித்தான் அப்துல் பத்தா.

“தொழுகையின் ஆன்மா சஜ்தா. சஜ்தா பற்றி திருக்குர்ஆனின் 14சூராக்களில் விரிவாக கூறப்பட்டுள்ளது. சூரா அல் அராப், சூரா அல் ராத், சூரா அல் நபி, சூரா அல் இஸ்ரா, சூரா மர்யம், சூரா அல் ஹஜ், சூரா அல் சஜ்தா, சூரா சாத், சூரா அல் இன்ஷிகாக், சூரா அல் அலாக் முதலியன அந்த சூராக்கள். மிகமிக அதிகமாக நபிகள் நாயகத்தின் வாழ்க்கையில் அன்றாடம் செயல்படுத்தப்பட்ட வழிமுறை சஜ்தாதான்!”

“சஜ்தா பற்றிய ஒரு சூராவை முழுமையாகக் கூறுங்க அப்பா!”

“மீண்டும் அவனுக்கு எப்போதும் அடிபணியாதீர்கள். ஓ நபியே! மாறாக அல்லாஹ்வுக்கு நெருக்கமாக நின்று சஜ்தாவை தொடருங்கள்!”

“ஓவ்!”

“ஆதம்நபிகள் சஜ்தாவின் ஆயத்தை ஓதி சஜ்தா செய்கிறார். அதனைக் கண்ட ஷைத்தான் ‘சஜ்தா ஆயத்து ஓதிய ஆதமுக்கு சொர்க்கமும் ஓதாத எனக்கு நரகமும்’ எனக் கூறி தலைதெறிக்க ஓடுகிறான்!” சிரித்தான் அப்துல்பத்தா.

“ஷைத்தான் ஓடுவதை மனக்கண்ணில் காட்சிபடுத்தினால் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது அப்பா!”

“சஜ்தா இறைவனுக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்தல். சஜ்தா ஒரு பக்தி வழிபாடு. சஜ்தா சலாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. சஜ்தா ஒரு நல்லொழுக்க செயல்பாடு...”

“சஜ்தா எதாவது ஒரு விதத்தில் இறைவனுக்கு தேவையான ஒன்றா?”

“இல்லவே இல்லை. இறைவன் தேவைகளற்றவன். ஒருதாய் மகனிடம் எதாவது எதிர் பார்ப்பாளா? மகன்தான் தாய் கேட்காமலே தாய்க்கான நன்றிக் கடனை நிறைவேற்றுகிறான். அது போலதான் இதுவும். சஜ்தாவில் கைகளை நாய் போல் விரிக்ககூடாது. ‘உங்களின் ஒருவர் சஜ்தா செய்யும்போது தனது முட்டு கால்களை வைப்பதற்கு முன் தனது கையை வைக்கட்டும். ஒட்டகம் அமர்வது போல அமர வேண்டாம்’ என்கிறது சுனன் நஸயீ 1079...”

“தர்காக்களில் மண்ணறைகளில் சஜ்தா செய்யலாமா?”

“சஜ்தா செய்யக்கூடாது முத்தமிடலாம்!”

“சஜ்தா எதன் மீது கூடும், எதன் மீது கூடாது?”

“தங்கம், வெள்ளி, திராட்சைதோட்ட இலைகள், பழுக்காத அரைவெட்டு காய்கள் உண்ணும் பொருட்கள் மீது சஜ்தா கூடாது!”

“அப்டின்னா பிரயாணி தேக்ஸா மீது சஜ்தா கூடாது!”

“சீரியசா பேசிக்கிட்டு இருக்கும்போது ஜோக் அடிக்கக் கூடாது!”

“சாரி அப்பா!”


“புல், வைக்கோல், சுண்ணாம்பு, ஜிப்சம், செங்கற்கள் மீது சஜ்தா கூடும்!”

“சஜ்தாவில் வகைகள் உண்டா?”

“உண்டு. மூன்று வகைகள் இருக்கின்றன. நன்றி தெரிவிக்கும் சஜ்தா. பாராயணம் செய்யும் சஜ்தா. தொழுகையின் போது எதாவது ஒன்றை நிறைவேற்ற தவறிவிட்டால் அதற்கு நிவாரணமாக மறதி சஜ்தா. தொழுகையில் ரக்காயத்து கணக்கை மறந்து விட்டால் மறதி சஜ்தா செய்யலாம்!”

“மற்ற மதங்களில் சஜ்தா உண்டா?”

“அருமையான கேள்வி. திருக்குறளில் ‘கடவுள் வாழ்த்து’ என்கிற அதிகாரத்தில் பத்து திருக்குறள்கள் உள்ளன.

அவற்றில் ஒன்று இதோ-

"கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"

இந்த திருக்குறள் இறைவனின் தாள் அல்லது திருவடி பணிவதைப் பாடுகிறது!

“ஆஹா!”

“கடவுள் வாழ்த்தின் முதல் திருக்குறளை தவிர மீதி ஒன்பது திருக்குறள்களும் இறைவனின் தாள் பணிவதை பற்றித்தான் பாடுகின்றன!”

“சபாஷ்!”


“இந்து மதபாடல் ஒன்றில் ‘நாதன்தாள் வாழ்க!’ என்கிற வரி வருகிறது. சைவநெறியில் இறைவனின் மலரடியும் திருவடியும் தொழுவாரின் குறி. தவிர இந்து மதத்தில் ‘சாஷ்ட்டாங்க நமஸ்காரம்’ என்று ஒன்று உண்டு. தரையில் எட்டு அங்கங்கள் பதியுமாறு வணங்குதல். தரையில் குப்புறபடுத்து கைகளை தலையில் மேல் குவித்து உடலின் எட்டு அங்கங்களான நெற்றி, இருதோள்கள், இருகைகள், மார்பு, இருகால் முட்டிகள் தரையில் பதியும் வண்ணம் வணங்குதல். இந்த சாஷ்ட்டாங்க நமஸ்காரம் இந்து மற்றும் புத்தமதத்தில் உண்டு. கிழக்கு ஆர்தடக்ஸ் மற்றும் ஓரியன்டல் ஆர்தடெக்ஸ் தேவாலயங்களில் மெட்டோனியா என்கிற வழிபாட்டு முறை உண்டு. சீன கலாசாரத்தில் மன்னர்களுக்கும் மூத்தவர்களுக்கும் அடிபணியும் கவ்லோ முறை உண்டு. பஹாய் மதத்திலும் புராதன கிரீஸ் நகரத்திலும் தாள் பணியும் வழக்கம் இருந்திருக்கிறது!”

“மொத்தத்தில் சஜ்தா பல்வேறுவடிவங்களில் பல்வேறு மதங்களில் இறைவழிபாட்டு முறையாக இருந்து வருகிறது!”

“சஜ்தா ஐவேளை தொழுகையுடன் இணைந்து ஓர் உன்னதமான வழிபாட்டு முறையாக இஸ்லாமின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக பிரகாசிக்கிறது. இஸ்லாமிக் சஜ்தா இஸ் எ யுனிக் ஒன்!”

அப்துல் பத்தா சிரித்தான். ஓடிப்போய் அப்பாவை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமழை பொழிந்தான்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/islamstories/p47.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License