இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை - தொடர்
சங்க இலக்கியத் தொடர்கதைகள்

விறலி- பகுதி - 10.

வாசுகி நடேசன்


"மடக் கண், தகரக் கூந்தல், பணைத் தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்" (நற்றிணை - 170. மருதம்)

நல்வெள்ளை முழங்காலில் முகத்தைப் புதைத்துக் கொண்டிருந்தாள். அவள் அழுது கொண்டிருப்பது அவளது உடல் குலுங்குவதில் தெரிகிறது. அதனைக் கண்ட பூதி அவளை நோக்கி மிக விரைவாக வந்து நல்வெள்ளையின் கூந்தலைப் பற்றி தன்பக்கம் திருப்புகிறாள்.

நல்வெள்ளையின் கண்கள் சிவந்தும் கன்னங்கள் உப்பியும் கிடப்பதைக் கண்ட பூதி திகைத்துப் போகிறாள்.

ஒருநாழிகைப் பொழுதின் முன்புதான் பூதியும் நல்வெள்ளையும் வைகை நதிக் கரைக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். அதற்குள் என்ன நிகழ்ந்திருக்கும்? பூதியால் ஊகிக்க முடியவில்லை.

கடல்நீரை உண்ட மேகம் கரு மலைகளாய் மாறிற்று. அவை உயர்ந்து பேரழிகின் இருப்பிடமாய்த் திகழ்ந்த மலைமுகடுகளில் ஒடுங்கிப் பெருமழையாகப் பெய்கிறது.

மழை நீர், அருவி வழி ஓடி வைகையில் கலந்து புதுப்புனலாகக் கரைபுரண்டு ஓடுகிறது. அப்புதுப்புனலை வரவேற்க மதுரை நகரமே தயாராகிவிட்டது. வைகை ஆறு விழாக்கோலம் பூண்டது.

ஆண்களும் பெண்களும் வைகையை வணங்குவதற்காகவும், அதில் நீராடி மகிழ்வதற்காகவும் புறப்பட்டு விட்டார்கள். அவர்கள் ஆராதனைக்கு வேண்டிய பூ ,பொன், மீன் முதலியவற்றை ஏந்தியவராய் கூட்டம் கூட்டமாக ஆற்றங்கரையை அடைந்தார்கள்.

ஆராதனை முடிந்தபின்னர் நீர் விளையாட்டுகள் தொடங்கின. பெண்கள் தம் கணவரோடு நீரைக்குடைந்து விளயாட விரும்பினர். ஆனால், கணவர்கள் சிலரோ தமது காதல் பரத்தையருடன் நீராடும் ஆர்வத்தை மறைக்கமுடியாது திண்டாடினர். தம் மனைவியரில் நின்றும், விலகி சொல்லப்போனால் அவர்களுக்கு ஒளித்து தாம் விரும்பிய பரத்தையரை அடைவதற்கு அவர்களுக்கு நல்வெள்ளை, பூதி போன்ற ஆடல் மகளிரான விறலியரின் துணை தேவைப்பட்டது.

விறலியரும் பாணரும் தம்மைப் பேணுவார் குறைந்து வறுமையில் சிக்கிச் சின்னாபின்னமாகிக் கொண்டிருந்த காலம் இது, குறுநில மன்னர்கள் அழிந்து மூவேந்தர்களின் ஆட்சிக்குள் தமிழகம் முழுவதும் வந்து கொண்டிருந்தது. அரசர்கள் முன்புபோல் பாண்கடன் என்ற வகையில் கலைஞர்களை அதிகம் பேணுவதில்லை. எழுத்தறிவும், நூலறிவும் கொண்ட புலவரும் வடநாடுகளில் இருந்து புதிதாய் வந்து குடியேறும் பார்ப்பனர்களும் மூவேந்தர்களின் விருப்பத்துக்கு உரியவராய் முதன்மை பெறத் தொடங்கி விட்டார்கள். இதனால் ஒரு சிலர் தாம் உயிரெனக் கருதிய கலைகளை விட்டு மீன்பிடித்தல் முதலான வேறு தொழில்களை நாடிப் போய்விட்டார்கள்.


ஆனால், நல்வெள்ளை, பூதி முதலியோரின் குடும்பங்கள் தம் கலைக்கு முழுக்குப் போட்டுவிட விரும்பவில்லை. கலை அவர்கள் நாடி நரம்புகளில் எல்லாம் ஊடுருவி இரத்ததில் கலந்து விட்டிருந்தது. கலைகள் அவர்களுக்கு மகிழ்ச்சியை தந்ததோடு வேறு தொழில்கள் எவற்றையும் அவர்கள் அறியாதவர்களாகவும் இருந்தனர். இந்த நிலையில்தான் மருத நிலத்து இளைஞர்கள் இவர்களது கலைக்கு ஆதரவு அளித்தனர். இவர்களது வறுமையைப் போக்கவும் உதவினர். அவர்களது பரத்தையருக்கும் கலைகளில் ஈடுபாடு மிகுதியாய் இருந்தது. அவர்களும் கூத்துக் கலைகளையும் இசைக்கலையையும் கற்க விரும்பினார்கள். இந்தத் தொடர்பு காரணமாக, பூதியும் நல்வெள்ளையும் கீரன் முதலிய பாணரும் புதுப்புனல் விழாவில் இசையும் நடனமுமாய் இவர்களோடு பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது ஓம்பூரில் மிகவும் பிரபலமான பெரும் நிலக்கிழான் மாறன் தனது காதல் பரத்தையான மருதியை தாம் நீராடிக்கொண்டிருந்த இடத்துக்கு அழைத்துவருமாறு பூதியை கேட்டுக்கொண்டான். பூதி மருதியைத் தேடிச்சென்றுவிட்டபோதுதான் நல் வெள்ளைக்கு ஏதோ நிகழ்ந்திருக்க வேண்டும்.

பூதியைக் கண்டவுடன் நல்வெள்ளை அவள்மடியில் சாய்ந்து மேலும் அழுகிறாள்.

பூதியால் பதட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

“என்ன நல்வெள்ளை... என்ன நடந்தது?”

நல்வெள்ளை தனது அழுகையைக் கட்டுப்படுதியவளாய் கண்களை அழுத்தித் துடைத்துக் கொள்கிறாள்.

“பூதி, நாங்கள் விறலியராய் பிறந்திருக்கக் கூடாது. பிறந்திருந்தாலும் தன்மான உணர்வுடன் பிறந்திருக்கக்கூடாது” என்றாள் நள்வெள்ளை.

“இப்பொழுது எங்கள் தன்மான உணர்வுக்கு என்ன கேடு வந்துவிட்டது?”

“அழுகையின் காரணத்தைச் சொல்லாது புதிராக நல்வெள்ளை பேசுவது பூதிக்கு எரிச்சலைத் தருகிறது”

“எங்கள் அன்னை இளவெயினி எத்தனை சிறப்பாக இருந்தார் என்பது உனக்குத் தெரியும்தானே?”

ஆமாம் இளவெயினி அன்னை கூத்தில் சிறந்தவர். ஆடுகளத்தில் அவர் குரவையிட்டு ஆடத்தொடங்கியதும் கூட்டம் அலை மோதும். அது மட்டுமா அவர் பாடவும் வல்லவராயிற்றே... வஞ்சி நகர வேந்தன் கடுங்கோவே இவரது பாடலால் மகிழ்ந்து அணிகலங்களையும் பொற்தாமரையையும் வழங்கிப் பெருமை செய்தது கூட நினைவில் நிற்கிறது. நள்ளை, அதற்கும் நீ அழுததற்கும் என்ன தொடர்பு?” பூதி கேட்டபடியே அவளை உற்று நோக்குகிறாள்.


அவர்கள் காலத்தில் நம்பெண்கள் முல்லை சான்ற கற்புடையவராய் போற்றப்பட்டார்கள். ஆனால், இன்று நாம் எப்படி மற்றவர்களால் பார்க்கப்படுகிறோம் தெரியுமா…?

பூதி அவளைக் கதைக்கவிட்டு மௌனமாக இருக்கிறாள்.

நான் எனது காதலன் பாணன் கீரனை எதிர்நோக்கி நின்றேன். அப்பொழுது மருத நில மங்கையர் சிலர் என்னைக் கண்டவுடன் முகத்தில் கோபமும், அதேசமயம் மருட்சியும் கொண்டவர்களாய் என்னை உற்று நோக்கினார்கள். அவர்களுள் ஒருத்தி கூறிய வார்த்தைகள் என்னெஞ்சை குத்தி வருத்தத்தை ஏற்படுத்தின” என்ற போது நள்ளையின் கண்களில் மீண்டும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.

“அப்படி உன் மனம் நோகும் வண்ணம் அவர்கள் என்னதான் கூறினார்கள்?” அவசரப்படுத்தினாள் பூதி.

“விறலியரான நாங்கள் அழகிய கண்களையும் அடர்ந்த கூந்தலையும் பருத்த தோள்களையும் நேர்த்தியான பற்களையும் திரண்ட நெருங்கிய தொடையையும் உடையவராய் தழையுடை அணிந்து திருவிழாவில் பொலிவுடன் வந்து நிற்கிறோமாம்...”

நள்ளை முடிக்கும் முன் பூதி அவசரமாகத் தலையிடுகிறாள்.

“அவர்கள் கூட எம் அழகை இரசிக்கும் அளவுக்குப் பேரழகிகளாக் இருக்கிறோம் என்பதற்காக மகிழ்ச்சியடைவதை விடுத்து நீ கவலையடைகிறாயே?”

“அவர்கள் எங்கள் அழகை ரசித்தால் எனக்கும் மகிழ்ச்சிதான், ஆனால் அவர்கள் எங்கள் நடத்தையையல்லவா விமர்சிக்கிறார்கள்”

பூதிக்கு நள்ளை கூற முனைவது புரியாதவளாய் புருவங்களைச் சுருக்கி நோக்குகிறாள்.

“நாங்கள் அவர்களது காதலர்களை மேலும் மேலும் புதிய பரத்தையர்களிடையே அழைத்துச் செல்லாதவாறு காதலர்களை அழைத்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொள்வோம் என எனது காதுபடச் சொல்லிவிட்டு மிக விரைவாகத் தமது காதலர்களை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டார்கள்”

பூதிக்கு இப்பொழுது நள்ளையின் அழுகைக்கான் காரணம் முழுமையாகப் புரிந்துவிட்டது.

அவள் வாய்விட்டுச் சிரிக்கிறாள்.

“நள்ளை, இதற்காகவா அழுதாய்.! அவர்கள் கணவர்களுக்கு மன அடக்கமில்லை. அல்லது அவர்களை அடக்கியாளும் திறன் இந்தப் பெண்களிடம் இல்லை. எய்தவன் இருக்க அம்பை நோகும் இவர்கள் சொன்னார்கள் என்றா இந்த அழுகை அழுகிறாய்”

“இல்லைப் பூதி பல சமயங்களில் நாமும் மருத நில ஆடவருக்கு பரத்தையர் விடயத்தில் உதவத்தானேச் செய்கிறோம். மருத நில ஆடவர்கள் அதற்காகத் தரும் பொருள் கொண்டு வாழத்தானே செய்கிறோம். நாமும் பெண்கள் பரத்தையரும் பரிதாபத்துக்குரிய பெண்கள். மருதநிலத் தலைவியரும் பெண்கள். இந்த மூவரையும் ஏதோ ஒரு வகையில் மருத நில ஆடவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றாள் நள்ளை.


“அது உண்மைதான். அதற்கு நாம் என்ன செய்வது? நமது கலைகளுக்கு முன் போல் மக்கள் செல்வாக்கும், அரசனின் செல்வாக்கும் கிடைக்குமானால் செல்வச் செழிப்புக் காரணமாய் தடுமாறும் ஆடவர்களைப் பின்தொடரும் இழிநிலைக்கு ஆளாகுவோமா?”

“நாளை இந்த நிலை மாறுமா?” விடை தெரியாத கேள்விக்குள் சிக்கியவளாய் மௌனமாகிறாள் நள்ளை.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/classicalliterature/p11.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License