இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




கதை - தொடர்
சங்க இலக்கியத் தொடர்கதைகள்

சேயோன்- பகுதி - 3.

வாசுகி நடேசன்


‘புரிக்கணத் தன்ன நாய்தொடர் விட்டு.
முருகன் அன்ன சீற்றத்துக் கருந்திறல்’’(பா.எ.68).

சேயோன் இனக்குழு தலைவனாகிப் பல ஆயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும் சேயோன், கொற்றவை என்ற பெயர்கள் தொடர்ந்தும் தலைமைக்குரியப் பெயர்களாக வழங்கப்பட்டு வருகிறது.

வேட்டைத் தலைமையைப் பெண்கள் சில சமயங்களில் ஏற்ற போதும், ஆண்களேப் பெரிதும் தலைமை ஏற்று வருகிறார்கள். தாய முறைப்படியே இத்தலைமைத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. முதுதாய் என்ற வகையில் கொற்றவை தனது இனக்குழுவுக்குரிய முக்கிய முடிவுகள் எடுப்பதில் பெரும் பங்கு வகித்து வருகிறாள்.

இன்றைய சேயோன் நாற்பது அகவைப் பிராயத்தை அடைந்து விட்டான். ஆனாலும், அவனது உடற்கட்டில் சிறிதும் தளர்ச்சியில்லை. பரந்து விரிந்த உரமேறிய மார்புடன் போரிட்டுப் போரிட்டு உறுதியான உடற்கட்டுடனும் அவன் ஆணழகனாக மிளிர்ந்தான். இதனால் முருகன் என்றும் அவன் அழைக்கப்படுகிறான்.

சேயோனின் தாயாகிய கொற்றவை முதுமையில் கனிந்து விட்டாள். மகவீன்று சில காலமேயான தாயாருடனும் அவரது சிறு மழலைகளுடனும் குடியிருப்பிலேயே இன்பமாகத் தனது பொழுதைக் கழிக்கிறாள்.

சேயோனின் தலைமையில் வேட்டையாடுவது, அவன் குழுவினருக்குக் குறிப்பாக இளைஞருக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்து வந்தது.

பெரும் விலங்குகள் வேட்டையின் போது அகப்படுத்தப்படுகின்றன. கரடி, சிறுத்தை, மான் வரிசையில் யானை கூட வேட்டையாடப்படுகிறது. இளைஞர்கள் மிகவும் செங்குத்தான மலைகளில் கூட லாவகமாக ஏறி மலைத்தேன் எடுத்து வந்தார்கள்.

பெண்கள் மலைச்சாரலில் தினை, சாமை முதலான சிறுதானியங்களைப் பயிரிடக் கற்றுக் கொண்டுவிட்டார்கள. அக்குடியில் உள்ள சிறுமிகள் பயிர் முற்றும் காலங்களில் பறவைகள் ஊறு செய்யாமல் இருக்க தினைப்புனத்தைக் காவல் செய்தார்கள். ஏனைய காலங்களில் அவர்கள் தங்கள் தாயாருடன் சென்று வள்ளிக்கிழங்கையும் பழங்களையும் சேகரித்து வந்தனர். போதிய உணவு கிடைப்பதாலும் பெண்களுக்கு பயிர்த் தொழில் இருப்பதாலும் அவர்கள் இப்பொழுது வேட்டையாடச் செல்வதில்லை.


வேட்டை வாழ்வு முன்பு போல அதிகக் கடினமாக இல்லை. இரும்பாயுதங்கள் இன்று பாவனைக்கு வந்து விட்டன. வேல், வாள், கத்தி, கோடரி, அம்பு முதலியன அவர்களது ஆயுதங்களாக உள்ளன.

இந்த இடைப்பட்டக் காலத்தில் அவர்கள் அடைந்த மாறுதல்கள் மிகப் பெரியவைதாம்.

பெரும் குகைகளையே வாழ்விடமாகக் கொண்ட நிலை மாறி குரம்பைகளும் இறப்பை எனப்படும் தாழ்வாரங்களும் அமைத்து மண்ணால் வீடுகளை அமைக்கப் பழகிவிட்டார்கள்.

நெருப்பின் பயன்பாட்டைத் தெரிந்து கொண்டமை அவர்கள் வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. உணவை நெருப்பு கொண்டு சமைக்கப் பழகிவிட்டார்கள்.

களிமண்ணால் பானை சட்டி செய்து அவற்றை நெருப்பினால் சுட்டு பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள் .

அவர்கள் குடி கிளைகள் பல பரப்பி, மிக ஆழமாக அந்த அழகிய ஆதி மலை நிலத்தில் வேரூன்றத் தொடங்கிவிட்டது. அதனைக் கட்டிக்காக்கும் பொறுப்பை சேயோன் திறம்படச் செய்து வருகிறான். தனது குடியைப் பாது காக்கவும் பெருகிவரும் மக்கட் பெருக்கத்துக்கு வேண்டிய நிலத்தை விரிவுபடுத்தவும் அவன் தலைமை தாங்கி வேறு இனக்குழுக்களுடன் சிலபோர்களை நடத்தி அதில் தன் குடிக்கு அதிகச் சேதமில்லாது வெற்றிகளைக் கண்டிருந்தான். அதிலும் சூரனோடு போரிட்டு வெற்றிகொண்டது மிகவும் பேசப்படுவதாக இருந்தது.

ஆதி மலையில் வாழ்ந்த சேயோன் குடியை வெற்றி கொள்ள முதுமலையைச் சேர்ந்த சூரனது குடியினர் பல காலம் திட்டமிட்டிருந்தனர். சூரன் மிகச்சிறந்த வீரன் என இனக்குழுக்கள் பலவற்றில் பேசப்பட்டு வந்தது. சூரனிடம் இருந்த படை மிகவும் பெரியது. அவன் பல குடிகளை ஏற்கனவே கொடுமையாகப் போரிட்டு வெற்றி கொண்டிருந்தான். ஆனால் சேயோனை வெற்றி கொள்வது கடினமானது என பலர் சொல்லக் கேட்டு சேயோன் மீது காழ்ப்புணர்வு கொண்டிருந்தான்.

சேயோனின் குடிகள் கள்ளுண்டு மயங்கியிருந்த ஒர் இரவுப் பொழுதினை அவர்கள் தாக்குதலுக்குத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஆதி மலைக்குள் ஊடுருவிக் காத்திருந்தனர்.

ஆனால், சேயோன் ஆயிரங்கண்களோடு என்றும் விழித்திருப்பவன் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆதிமலை மிகவும் பெரியது. அடர்ந்த காடுகளால் சூழப்பட்டது. அதனுள் பகை உணர்வோடு புகுந்தவர்கள் உயிரோடு திரும்புவதென்பது முடியாததாக இருந்து வந்தது.

மலையில் ஆங்காங்கே கண்காணிப்பு பறன்கள் அமைக்கப்பட்டு வீரர் சிலர் எப்பொழுதும் காவல் காத்திருப்பர். அவர்கள் விலங்கு போலக் குரலெழுப்பி எதிரியின் வருகையை அறிவிப்பார்கள்.

அன்றும் அவர்கள் எழுப்பிய ஒலி கேட்ட சேயோன் மது போதையில் இருந்தவர்களுக்கு போதையைத் தெளிவிக்கும் பச்சிலையை வழங்குமாறு கட்டளையிட்டான்.

போதை தெளிந்த ஆணும் பெண்னும் சில நிமிடங்களிலேயேப் போருக்குத் தயாராகி விட்டார்கள்.

சேயோனே தலைமை தாங்கி போருக்குச் சென்றான். சில மணிகளே நீடித்தது கடும் போர். அம்பு மழைபோல் இருபக்கமும் பொழிந்தது. படைகளில் சில மற்போர் நிகழ்த்தின. வாள் போரில் வீரர் பலர் வீழ்ந்தனர். சூரனின் படை இத்தகைய மூர்க்கமான தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. அப்படை நிலைகுலைந்து போனது. தப்பியோட முயன்றவர்கள் தாம் சேயோனின் படைகளால் முற்று முழுதாகச் சூழப்பட்டிருப்பதை உணர்ந்து திகைத்தனர்.

சூரனுக்கும் சேயோனுக்கும் நேரடியாகப் போர் நிகழ்ந்தது. ஒரு சில கணப்பொழுதிலேயே சிறந்த வீரனான சூரன் சேயோனின் வாள்வீச்சினால் தலையறுபட்டு நிலத்தில் வீழ்ந்தான். தலைவனை இழந்த படைகள் சேயோனிடம் மண்டியிட்டன.


ஆதி மலையுடன் முதுமலையும் சேயோனின் தலைமைக்குள் வந்தது. இந்தப் போர் சேயோனின் வரலாற்றில் மறக்கப்படாத போராக மாறியது.

வேட்டையில் பெருவிலங்குகள் கிடைத்த போது எல்லாம் அதனைக் கொண்டாடும் களியாட்டங்களும் அதிகம் நடக்கின்றன. போர் வெற்றி பெறும்போது அக்களியாட்டம் உச்சநிலையை அடையும். ஊண் உணவு நெருப்பில் வாட்டப்பட்டு மலைத்தேனுடன் தாராளமாக உண்ணப்படுவதுடன் மிகவும் புளிக்க வைக்ககப்பட்டு சுவை ஊட்டப்பட்ட தேறலும் ஆண்களாலும் பெண்களாலும் அருந்தப்படும். பல்லிழந்த முது பருவத்தினர் சுடப்பட்ட இறைச்சியின் மென்மையான பாகத்துடன் தினைச்சோற்றைக் குருதியுடன் கலந்து உண்கின்றனர்.

இந்த முன்னேற்றத்துக்கெல்லாம் சேயோனின் தலைமையேக் காரணம் என அக்குடி நன்றாக உணர்ந்தது. அது நன்றியுணர்வாக குடியினரின் ஆழ்மனத்தில் உறைந்து கொண்டது.

குரவையிட்டு ஆடும் போது, அவர்களில் குரல் வளமும் பாட்டிசைக்கும் திறனும் கொண்ட சிலர் பாடத் தொடங்கினர். சில பாடல்கள் வேட்டையின் போது அவர்கள் ஆற்றிய வீர தீரச்செயல்களை விபரிப்பனவாக இருக்கும். சில பாடல்கள் போர் வெற்றி பற்றிய செய்திகளை விபரிப்பனவாக இருக்கும். இப்பாடல்கள் பலவற்றில் தம்மைச் சிறப்பாக வழிப்படுத்தும் சேயோனின் பெருமை உயர்வாகக் கூறப்பட்டிருக்கும்.

அவர்கள் காதல் பாடலகளைப் பாடுவதிலும் மிகவும் உற்சாகத்தைக் காட்டுவார்கள். அதில் சில தம் தலைவன் சேயோனதும் வள்ளியினதும் காதல் பற்றியனவாக இருக்கும். பெரும்பாலனவை பாடுபவர்களது சொந்தக் காதலை விபரிப்பனவாக இருக்கும். அப்பாடல் பாடும் இளைஞன் தனது காதலிக்கு தன் காதலின் ஆழத்தை எடுத்துரைப்பான். தன் காதலி தன்னைத் தனிமையில் சந்திக்க வரவேண்டிய இடத்தைக் குறிப்பாக உணர்த்துவான். அவளும் அதற்கு எதிர்ப்பாட்டு பாடுவாள். ஆனால் அவர்கள் செய்தி பரிமாறிக்கொள்வது மற்றவர்களுக்கு புலப்படாதிருக்கும் அப்பாடல்களை அவர்களில் குறிப்பாக முதியோர் வெறும் காதல் பாடல்களாகக் கருதி மிகவும் இரசிப்பார்கள். குறிப்புப் பொருளை உள்ளுறுத்திக்கூறுவதற்கு அவர்களின் அபாரமன சூழலியல் அவதானமும் அறிவும் உறுதுணையாக இருந்தன.

காட்டில் மூங்கல்களில் எற்பட்ட துளை வாயிலாக உண்டான இன்னிசையைக் கண்டு குழல் கருவியையும், வில்லைப் வளைத்து நாணேற்றிய போது எற்பட்ட ஓசை இனிமை தர அதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி எளிமையான யாழ் போன்ற ஒரு கருவியையும், விலங்கின் தோல் கொண்டு மத்தளத்தையும் உருவாக்கி இசைப் பாடலுக்கு இணையாக இசைக்கவும் சில இளைஞர்கள் தொடங்கினர். இந்தச் சில இளைஞர்கள் யுவதிகளிடம் இருந்த ஆர்வமும் திறமையும் மற்றவர்களால் மிகுதியும் வரவேற்புக்கு உள்ளாகின. அவர்கள் தந்த உற்சாகம், அவர்கள் தம் திறமையை வளர்த்துக் கொள்ள உதவின.

அவர்கள் அறியாத வகையிலேயே அங்கு கலைகள் உருவாகி வளர்ந்து கொண்டிருந்தன.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/classicalliterature/p3.html


  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                 


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License