இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை - தொடர்
சங்க இலக்கியத் தொடர்கதைகள்

கொற்றவை- பகுதி - 2.

வாசுகி நடேசன்


“வெற்றி வேல் போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிற்ப்பிற் இழையோள் குழவி”

- சிறுபாணாற்றுப்படை

முல்லைப் பூக்கள் செறிந்த காட்டின் நடுவே மூங்கில் தடிகளால் உருவாக்கப்பட்ட குடில்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாய்... அவற்றின் கூம்பு வடிவில் அமைந்த ஒற்றைக் கூரைகள் நிலவொளியில் மின்னிக் கொண்டிருந்தன.

முற்றத்தில் நெடிது வளர்ந்திருந்த கொன்றை மரத்தில் சாய்ந்தபடி இருக்கிறாள் நற்செள்ளை. சற்றுத்தூரத்தில் அருவியொன்று சலசலத்து ஓடுகிறது.

நற்செள்ளை, பூங்குன்றனது மகன் சாத்தன்... தன் மடியில் கிடந்த சாத்தனின் அடர்ந்த ஆனால் குட்டையாகச் சுருளாக இருந்த கருங்கூந்தலை நற்செள்ளையின் கைகள் கோதிக்கொண்டிருந்தன. அவள் கை என்ற இழைகள் வழி அன்பு மகனுக்குக் கடத்தப்பட்டடுக் கொண்டிருந்தது.

“அம்மா கதை சொல்லு “

சாத்தன் அண்ணாந்து பார்த்துத் தாயை வேண்டுகிறான்.

கதைகள் தாய்வழி வழங்கப்படும் முதுசங்கள். அவளின் நினைவடுக்குகளில் பொக்கிசமாகப் பேணப்பட்ட நிகழ்ச்சிகள். மறக்கமுடியாத தருணங்கள், கனவுகள் கனத்த இரவுகளின் எகாந்தத்தில் கதைகளாக வடிவம் கொள்ளும்.

நற்செள்ளை, அவள் தாய்க்கு அவளின் தாய் சொன்ன தங்கள் பரம்பரைக்கதையை மகனுக்குச் சொல்லலானாள்.


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதைகள் அவை.

கொற்றவையின் ஒரு கையில் கூர்மையான கல்லாயுதம். அவள் தோளில் அப்பொழுதுதான் வேட்டையாடிய மான் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் கழுத்துப் பாகத்திலிருந்து இரத்தம் சொட்டி அவள் அணிந்திருந்த தோலாடை வழியே சிற்றருவியாக ஓடிக்கொண்டிருந்தது. அவளது மறு கையை அவளது பேரன்புக்குரிய சிறுவன் சேயோன் பற்றிக் கொண்டு வருகிறான்.

கொற்றவை முது தாய். ஆனாலும், அவளிடம் இன்னும் இளமையும் உடல் வலிமையும் குறையவில்லை என்பதை, பார்ப்பவர் எவரும் ஏற்றுக்கொள்வர். அவள் தலைமைக்குக் கீழ் தாயரும் அவர்களின் கணவரும் அவர் பிள்ளைகளுமாய் சிறு கூட்டம் ஒன்று தொடர்ந்து கொண்டிருந்தது. அது, மரங்கள் அடர்ந்த காட்டை நட்சத்திரங்களின் உதவியுடன் இருட்டை ஊடுருவி முன்னேறிக் கொண்டிருந்தது. அவர்களின் முன்னாலும் பின்னாலும் பெரிய வேட்டை நாய்கள் மோப்பம் பிடித்தபடி ஓடுவதும் நடப்பதுமாய்க் காவல் காத்துச் சென்றன.

அக்கூட்டத்தினரில் பெரும்பாலானவர்களின் கைகளில், கூர்மையான கொம்புகளும் கல்லாயுதங்களும் மட்டுமன்றி அன்று அவர்கள் வேட்டையாடிய மரை, முயல், உடும்பு முதலான விலங்குகளும் காணப்பட்டன. கைகளில் ஏந்திய சுமையோ காலை முதல் விலங்குகளின் பின் ஓடியதால் உண்டான களைப்போ அவர்களின் நடையின் வேகத்தைக் குறைக்கவில்லை.

இன்று அவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள். அவர்கள் எதிர்பாராத அளவு விலங்குகள் குறைந்த நேரத்துக்குள்ளாகவேக் கிடைத்துவிட்டன. எப்படியும் ஒரு சில நாட்களுக்கு இந்த ஊண் உணவு போதும். அவர்கள் தங்கள் குகைக் குடியிருப்புக்கு விரைந்து செல்வதற்குக் காரணம் இல்லாமலில்லை. இன்று அவர்கள் தரப்பில் ஒரு உயிர் கூடப் பலியாகவில்லை. இதனை அவர்கள் மிக மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும். கள்ளும் தேனும் அருந்தியும் குரவை இட்டு நடனம் ஆடியும் இந்நாளை அவர்கள் இனிதாக்கிக் கொள்வார்கள்.

கொற்றவை சேயோனைப் பெருமையாக நோக்குகிறாள். வேட்டையின் போது அவன் காட்டிய திறமை அவளுக்கு வியப்பைக்கூடத் தந்தது. பன்னிரண்டு அகவையே சேயோனுக்கு ஆகியிருந்தது. கொற்றவையின் நாற்பது ஆண்டு கால அனுபவத்தில் இவ்வளவு திறமையான வேட்டைக்காரனை அவள் கண்டதில்லை. இலக்கு வைத்து அவன் எறிந்த கல்லாயுதங்கள் குறிதவறாது விலங்குகளைக் கொன்றுவிட்டன. ஒரு நாளில் பத்துக்கு மேலான விலங்குகளை ஒருவனேக் கொல்வது என்பதும் அதுவும் ஒரு குறி கூட பிழையாகாதவாறு கொல்வது என்பதும் அசுர சாதனைதான்,


தனக்குப் பின் இந்தக் கூட்டத்தை வழி நடத்த ஏற்ற வீரமும் வலியும் கொண்ட பெண் வாரிசு இல்லையே என்ற வருத்தம் கொற்றவையைச் சில காலமாக அரித்துக் கொண்டிருந்தது. அந்த வருத்தம் இன்று அறவே நீங்கிற்று.

சேயோன் ஆண் என்றாலும், அவனே இந்தக் கூட்டத்தை வழிநடத்தக் கூடிய தலைவன் என அவள் தீர்மானித்துக் கொண்டாள். உரிய காலத்தில் அவள் சேயோனைத் தலைவனாகத் தன் கூட்டத்துக்கு அறிவிப்பாள்.

(தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/classicalliterature/p2.html


  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License